https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

மாமலர் வெப்பத்துளை - பதிவு



மாமலர் வெப்பத்துளை - பதிவு



மாமலரின் 16 முதல் 20 வரையிலான பதிவுகளில் வரும் சம்பவங்களை திரு.ஜெயமோகன் அவர்கள்  கூறு முறையில் இதுவரை கையாண்ட பாணியில் இது ஒரு பெறும் பாய்ச்சலை எனப் பார்க்கிறேன் . இது போன்றவற்றை "பௌரானிக " மரபில் திகழ்த்து கலையில் ஒரே விஷயத்தை பல்வேறு மூலநூல்களின் ஊடாக சொல்லப்படும் விளங்கிக் கொள்ள இயலாத ஆனால் பல அடுக்குத் திறப்புகளை கொண்ட நிகழ்வுகளின் இணைவுகள் மற்றும் தொடர்புகளை நிகழ்த்துவது போல் இந்த பகுதிகளில் காண்கிறேன். மூளையின் மடிப்புக்களை அவை சொடுக்குவதை உணர்கிறேன். அதன் விளைவாக தோன்றுவதை இப்படி தொகுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் .
ஒருமுறை சம்பவித்தது மறுமுறையும் சம்பவிக்கும் என்பதற்கு இன்று இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே சாட்சி என ஜகத் சிருஷ்டி பற்றி ஶ்ரீமத் பாகவதத்தில் ஒரு வரி வரும். கீதையில் கண்ணன் தனக்கும் அரஜுணனுக்கும் பல பிறவிகள் கழிந்திருப்பதையும் தான் இன்னும் எடுக்க இருக்கும் பிறவிகள் குறித்து தனக்கு தெரியும் என்றும் , 'அர்ஜுணா உனக்கு சிறு பிரியத்தில் நடந்தவைகளை நீ மறந்து விட்டாய் என்பது போல வரும்.இது "ஸ்டிங் தியரி" போல பிரமாண்ட ஆர்வத்தை விதைப்பதில் திரு.ஜெயமோகன் அவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளார் .
'இனை உலகம்' கருதுகோல் போல பீமனை புரூரவஸின் இடத்தில் வைத்தல்லாமல் தன் பூர்வ ஜன்ம நினைவுகளாக புனைவது எதிர்பாரத யுக்தி முண்டனை ருத்ரனாக்கி அவனுடன் பயனிக்க வைத்துள்ளார் .
இந்த கோணத்தில் கல்யாண சௌகந்திக வாசம் திரௌபதியின் எதைக் பற்றிய குறியீடு என விளங்கவில்லை . எதிர்கால கணக்கில் இதை எங்கு முடிவார் என புரியவில்லை .....அற்புதம்
வலக்கையிலொரு சிறு வெண்மலரை. இடக்கையில் ஒரு கூழாங்கல். அதை பீமன் முன் நீட்டினான். “இது விண்ணிலிருந்து உதிர்ந்த மலர். இது அவளை நாடிச்செல்லும் ஒரு மானுடன். இதைத் தொடுக!” என்றான். பீமன் கை நீட்டி அந்தக் கூழாங்கல்லை தொட்டான். “செல்க!” என அவன் சொன்னான். 
அது ஒரு கனவென்று அவன் எண்ணினான். கனவுக்குள் என அவன் குரல் ஒலித்தது. “செல்க…” பீமன் இனிய துயிலில் என உடல்தளர்ந்தான். ஆம் கனவேதான் என்று சொல்லிக்கொண்டான். “செல்க!” என மீண்டும் எங்கோ முண்டனின் குரல் ஒலித்தது
உலகின் சேவல்கள் கோவென....கருக்கலில் கூவுவது அதன் கோவான சூரியனை நோக்கி என்பதாக இளவேனில் எழுந்ததும் முதற்சேவல் மரக்கிளையில் ஏறி நின்று செங்கனல் கொண்டையைச் சிலிர்த்து சிறகடித்து “எங்கோ எழுந்தருளாயே! எங்கோ எழுந்தருளாயே!” என்று கூவியது.
சேவலுக்கு முன் துயிலெழ வேண்டிய நாகணவாய் பின் எழுகிறது . அரசன் இருக்க  தேர்பாகனை முன் சொல்லி நாள் திறப்பு வழமையல்ல என்பதை
கீழ்வான் விளிம்பில் அருணனின் தேர்ப்புரவிகளின் குளம்புத் தடங்கள் சிறு செந்நிறத் தீற்றல்கள் எனத் தோன்றலாயின. “வருக, எம் தேவா!” என்று கூவியபடி நாகணவாய்கள் துயிலெழுந்தன. தேர்முகம் தெளிந்து கிழக்கே ஒளியரசன் வானிலெழுந்து செங்கதிர்முடி துலங்கி வந்தான்.
துயிலில் விலகும் இடமும் காலமும் தன்னிலையும் நினைவும் , "துயக்கு மயக்கு மறப்பு " என நுண்மான் நுழைபுலம்  விலகிப் பொதிவது அவனை விட்டு விலக்கியும் துயில் மீள்கையில் எழுந்து உறக்கத்தில் விட்டு விலகியவை மீண்டும் நொடியில் இறங்கி நிறைகின்றது.
கற்றலின் நின்றவை ,வாழ்வு கணங்களின் தொகுப்புகள் என உறங்கி வழித்ததும் ,அதற்கு முன் அவை அவனிடமில்லை எங்கு சென்று உறைந்திருந்து மீண்டது , எழுந்தவுடன் அனைத்தும் துலங்கி எழுகிறது. இதுவும் 'நைமித்திக பிரளயமான'  எனும் மரணத்திற்கு வெகு அருகில் சென்று மீள்கிறது
அவன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இடமும் காலமும் தன்னிலையும் துயிலின்போது விலகி நின்று விழிப்பிற்குப்பின் மெல்ல வந்தமைவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். அவை விழிப்பின் மூன்று நிலைகள் மட்டுமே என கற்றிருக்கிறான்.
இது வேரொரு கணமென்று இங்கு சொல்லப்படுகிறது. முண்டனை சூதன் பாணன் போல திரு.ஜெயமோகன் அவர்கள் பயன்படுத்துவார் என நினைக்கையில் அவனை மட்டுமின்றி நம்மையும் நினைக்கவியலாத உலகில் கொண்டு செல்கிறார்.
புருவம் சுருங்க அவள் “யார்?” என்றாள். “என் கனவில் எழுந்த ஒருவன்… இன்னும் வாழ்ந்திராதவன்” என்றான். “விந்தைதான்” என்று அவள் சொன்னாள். 
வாழ்ந்திராதவன் ஆம் அது உண்மை ஆனால் அண்டத்தின் வேரொரு 'சதுயுகத்தில்' வாழ்ந்தவனை இந்த 'சதுர்யுகத்தில் ' இன்னும் வாழ்திராதவன் என சொல்லுகிறாரா? .......சிருஷ்டி கிரமத்தின் மர்மத்தின் திரை விலகுவது  போல பிரமிப்பு  .....என நினைக்கத் தோன்றும் இடம் இது.

கானாடலில் அவனுக்கு முதற்படைத்துணை என இடம் நின்று உடன் வருபவன் அணுக்கனாகிய ருத்ரன். குற்றுடலும் இரட்டை மண்டையும் குரங்குக் கண்களும் கொண்ட முண்டன். அவன் சிறுமைந்தனாக இருக்கையிலேயே உடன் வந்த விளையாட்டுத்தோழன்.சிறுவனாகவே உடல் எஞ்சிவிட்டதனால் உள்ளத்தையும் அவ்வாறே அமைத்துக்கொண்டவன். அவனுடன் பேசும் அனைவரையும் சிறுவர்களென்றாக்கும் ஊக்கம் கொண்டவன். ஆனால் சொல்கடந்து நுண்புலம் தேரவும் அவனால் இயலுமென புரூரவஸ் அறிந்திருந்தான். ஆக இது ஒரு இரு வழி பாதை போல புரிதல் ஏற்படுத்தி இரண்டிற்கும் இனைவு கொடுத்தது. 'வெப்பதுளை' கருதுகோள் என பின்னிவிடுகிறார். இது வாசிப்பவர்களை மயக்கமுற செய்வது. 
அதில் நான் பிறிதொருவனாக இருந்தேன்” என்றான். ருத்ரன் அவனருகே வந்து “அரசனாகவா?” என்றான். புரூரவஸ் குழம்பியபின் “அரசனைப்போல. ஆனால் அரசன் அல்ல. ஐந்து உடன்பிறந்தாரில் இரண்டாமவன் என எவரோ சொன்ன நினைவுள்ளது” என்றான்.

அவள் சுவையை எண்ணி இதழூறி வழிய சொல்லிலா குதலைமொழிகளுடன் அவன் அவள் அருகே இருந்தான். அப்போது அவன் அந்த மலர்மணத்தை அறிந்தான். அதுவரை அறியாததாக இருந்தது அது. பிறிதொன்றிலாது வந்து சூழ்ந்துகொண்டது நல்லவேளை பாலி பூமியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை எப்போதோ சொன்ன குரங்குகளில் பொதிந்து 'கிலி' ஏற்படுத்தியபடி ஏதும் சொல்லாது விட்டார் .
வேட்டுவேளா குளவி ரீங்கரித்து சுழன்று சுழன்று கொட்டி கொட்டி அது தன் புழுவையும் குளவியாக்குகிறது என்பார்கள். சூதர்கள் பாடிப்பாடி வேடர்களை அரசர்களாக்குகிறார்கள் என்று என் தந்தை சொன்னார்” என்றாள். அவன் சற்றே சினம்கொண்டு “அனைத்து வேடர்களும் அரசர்கள் ஆகிவிடுவதில்லை” என்றான். “ஆம், ஆனால் அரசர்கள் அனைவரும் வேடர்களாக இருந்தவர்களே” என்றாள் சியாமை. வெறுப்பேற்றுவதின் உச்சம்
அவ்வாறுதான்… பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றாள். “நன்று! வெற்றுடலுடன் ஒளியில் உன்முன் தோன்றமாட்டேன்” என்றான் புரூரவஸ். “இம்மலரின் நறுமணத்தை எண்ணி ஆணையிடுங்கள்” என்றாள். “அவ்வாறே ஆணையிடுகிறேன்” என்று அவன் சொன்னான். அதை மின்னலில் வெளிப்படுத்தியது ஒவ்வொன்றையும் நினைவில் எடுத்து மீட்டுவது ஆசகாயத்தனம்
ஆயுஸ் வெறுமனே நோக்கியபடி நின்றான். “நான் பாண்டவனாகிய பீமன்… இது என் சோலை…” என்றான் புரூரவஸ். ஆயுஸ் திரும்பி நோக்கியபோது மிக அப்பால் படைத்தலைவனின் செந்நிறச் சிறுகொடி தெரிந்தது. அவன் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றான். புரூரவஸ் மீண்டும் அந்த நீர்நிலையருகே அமர்ந்தான். அவன் விழிமறைந்து நின்று ஆயுஸ் நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து துயில்கொள்பவன் போலிருந்தான் புரூரவஸ். ஆயுஸ் எண்ணியிராது ஓர் ஐயத்தை அடைந்தான். அங்கிருப்பவன் பிறிதொருவன்தானா? எப்படி அறியக்கூடும்? மானுட உடலை மட்டுமே அறிய வாய்க்கிறது. உள்ளே குடிகொள்வது எது? அது இடம்மாறிவிட்டதென்றால் அது உரைப்பதன்றி வேறு சான்றுதான் எது? முன்பே நிகழ்த்திய நுழைபுலம் எனும் கருதுகோளை இங்கு இருவழி பாதையாக்கி முடிக்கிறார்

ஆயுஸ் ஒரு நறுமணத்தை உணர்ந்தான். பாரிஜாதம் எனத் தோன்றிய மறுகணமே செண்பகம் என்றும் தோன்றியது. மிக அருகே அந்த மணம். இல்லை, மிக அப்பால் அலைபெருகி விரிந்த நறுமணப்பெருக்கின் சிறு துளியா?சரி இந்த ஆயுஸாவது அந்த காலமடிப்பில்
நிற்கப்போகிறானா ............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...