https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 27 மார்ச், 2017

அடையாளமாதல் - 16 (அரசியல் களம் - 14 பதிவுகளின் நோக்கமும் மையமும்)

ஶ்ரீ:

அடையாளமாதல் - 16
அரசியல் களம் - 14
பதிகளின் நோக்கமும் மையமும்


நட்பு ரீதியாக நானும் பாலனும் மிக நெருக்கமாக உணர்ந்த காலம் , என் இயல்பே அதுவாகத்தான் இருந்தது . அடுத்தவர்களின் பயன்பாட்டில் இருப்பது குற்றமாக நான் கருதியதில்லை . தன்மனசாட்சிக்கெதிரான சுரண்டப்படுதலை ஒருகாலமும் பொருத்ததில்லை . இந்தப் பதிவுகளை பற்றி நான் நீண்ட யோசனையில் இருந்த போது , அவ்வப்பொழுது எழும் உணர்வுகளின் அடிப்படையில் சில பதிவுகளை எழுதி அது பாதியில் நின்று போனது . காரணம் அவை என் சுயசரிதை போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கத் துவங்கியது. பதிவுகள் எக்காரணம் கொண்டும் அந்த வழியில் செல்ல நான் அனுமதிக்கப் போவதில்லை . இதை நான் தொடங்கும் போது பொது வாழ்வில் என்ன நடந்தது , நான் கடந்து வந்த பதையினூடாக ஏற்பட்ட புரிதலுக்கும் அறிதலுக்குமான அவதானிப்பில் இருக்கிறேன் .

கடந்த மூன்று வருடங்களாகவே என் இருபத்தி ஐந்து வருட மதிப்பீடுகளை மறுவரையறை செய்து இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . தர்க்க புத்தி அதன் சட்டகத்தை வடிவமைத்து விட்டது .அதில் பெரிய மாறுதல் இருக்கப்போவதில்லை , ஆனால் நடைமுறையில் அதை பொருத்துவதற்கான  தர்கிப்பதை நிறுத்திக்கொள்ளாது அதனை அக புற வயமாக பெறுபுத்தியை நிர்வகிக்கத் துவங்கியது . என் புறவயமான தேவைகளுக்கான கட்டுப்பாட்டு தகர்ந்துவிட்டது , ஏனெனில் ஒதுக்குதல் இயல்பதாக நடப்பவை.

தலவர் திரு.சண்முகம் ஒரு அரசியல் ஆளுமை சர்ச்சையின் மத்தியில் இருப்பவர் . புதுவையின் அனைத்து அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக அவரது தாக்கம் இல்லாது அறுபது ஆண்டு காலம் ஒருநாள் கடந்ததில்லை . அதை தொடர்ந்தே இப்பதிவு முன்னும் பின்னும் நகர்ந்து அவைகளை விளக்க இயலுமா என பார்க்கிறேன் . சரியாக சொல்வதானால் அது அவரது அரசியல் ஆளுமையை பற்றியதாக வெளிப்படுமானால் மிக மகிழ்வாக இருக்கும .

அடையாளமாதல் பதிவுகளில் அரசியல் களத்தை எடுத்திருக்கிறேன் , என் பார்வைக்கும் கருத்துக்குமாக திரு.சண்முகம் அவர்கள் கூறியது.கேள்விப்படுதல் மற்றும் பிறர் வாயிலாக என்னை வந்தடைந்த விஷயங்களின் தொகை , அவற்றில் பிறரின் கோணம் , பிற்பாடு மற்றொரு சமயத்தில் திரு.சண்முகம் அவர்களே அதை கூறிச்சென்ற கணங்கள் என பல உள்ளடுக்கு விஷயங்களின் பதிவே இது.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...