https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அடையாளமாதல் * விரும்பாத நுழைவு *

 



ஶ்ரீ:



பதிவு : 655  / 845 / தேதி 30 டிசம்பர்  2022



* விரும்பாத நுழைவு *


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 50 .






பின்னால் அமரலாம் என நான் சொன்னதை மறுத்து காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். அழைத்துக் கொண்டு புதுவை கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் ஏதோ சரியில்லை என தோன்றிஏன் காற்று நேரடியாக உள்ளே வருகிறதுஎன்றார். நான் விபத்தில் கண்ணாடி உடைந்ததை சொன்னேன். அவர் விமான பயணத்தில் முழு அளவு குளிரூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு அந்த மேலதிக இரவு குளிர் தாங்கவில்லைகாரை சற்று நேரம் நிறுத்தி பெட்டியை திறந்து தனது வேட்டி ஒன்றை எடுத்து தலையை சுற்றிக் காதை மறைத்து கட்டிக் கொண்டார். பயணம் தொடர்ந்தது. தலைபாகையுடன் அவரை பார்க்க வேடிக்கையாய் பொருத்தமாய் இருப்பதாக தோன்றியது . வண்டி சென்னையின் முக்கிய பகுதிகளை தாண்டுவதற்குள் என்னையும் மாறனையும் சாப்பிட இறங்கச் சொன்னார். எனக்கு நல்ல பசி. சம்பிரதாயத்தற்கு மறுத்தேன். ஆனால் உறுதியாக நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என சொல்லி ஒட்டுனரிடம் தனியாக 200 ரூபாய் கொடுத்து அவரையும் சாப்பிட சொன்னார். எனக்கு சில வாரங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு அவரையும் நாராயணசாமியையும் இணைத்து நினைவிலாடியது


தில்யில் இருந்து புதுவைக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோதிலால் ஓராவை அழைக்க சென்னை விமானநிலையைம் சென்று அவரை வரவேற்கும் போதுதான் தெரிந்தது உடன் நாராயணசாமியும் வருவது. பின் எங்களை எதற்கு அனுப்பினார் என்கிற கேள்வி எழாமல் இல்லை. என்னைக் கண்டதும் அவர் உள்ளே ஓடுவதை வெளியே கண்ணாடி போல தெரிந்தது.உடன் கலியனும் இறங்கினார். அவரைக் கண்டதும் நான் உஷ்ணமானேன் அவர் புதுவையின் இடைத் தரகர்களில் ஒருவர். அமைச்சர் கண்ணனின் கட்சி பொருளார் மாணிக்கசாமி அனுககர். மாணிக்கசாமி பல பெரிய நில ஊழல்களின் வழக்கில் பெயர் அடிபடுபவர். காங கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் வருகையில் அவருடன் கலியன் போன்ற வருவரை அழைத்து வருவது அரசியல் நெறிகளுக்கு எதிரானது. கண்ணன் மற்றும் மாணிக்கசாமியின் ஊழலகளை பெரிதாக இளைஞர் காங்கிரஸ் எடுத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அந்த சூழலில் அதில் சம்பந்தப்பட்ட ஒருவருடன் தில்லியில் இருந்து வருவது நாராயணசாமியின் போக்கை என்னால் எதிர்க்காமல் இருக்க முடிநவில்லை. என்னை அவர் அங்கு எதிர் பார்ககவில்லை. முகத்தை கடுமையாக்கிக் கொண்டு என்னை வெறுமனே கடந்து சென்றார்


இரவு 9:00 மணி. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாராயணசாமியின் கார் சட்டென கிழக்கு கடற்கரை சாலை நோக்கி வேகமெடுத்தது. உடன் வந்திருந்த விநாயகமூர்த்திக்கு தாங்கவில்லை. என்ன அரி சாப்பிட்டாயா என கேட்க வேண்டாம் ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் விருட்டென கிளம்புவதற்கு நாம் எதிற்கு பாண்டியில் இருந்து வர வேண்டும். புலபம்பித் தள்ளினார். வண்டி போக்குவரத்து நெரிச்சலில் சிக்கி கிடைத்த சிறிது நேரத்தை பயன்படுத்தி பிஸ்கெட் மற்றும் பழங்களை வாங்கி வந்தேன். அன்று இரவு ஏகாதசி.


எனக்கு அந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்று. அதிகாரபூரவமற்று செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வெளிப்படையாக களமிறக்க நேரம் பார்த்துக் கொண்டருந்தேன். இறுதிவரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சண்முகத்திற்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவு அரசியல் ரீதியாக தற்கொலை. கட்சித் தலைவராக அவர் எல்லா வாய்ப்புகளையும் கொண்டு முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதல் முறையாக அனைத்து உப அமைப்புகளும் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என ஏக மனதான தீர்மாணம் நிறைவேற்றியிருந்தன. சண்முகம் மிகவும் பலவீனமடைந்திருந்ததை அது வெளிப்படுத்தியது. கட்சி சார்பாக பிறருக்கு வாய்ப்பளிப்பவரை மறுத்து அவரது அரசியலில் அவரை முட்டு சந்தில் கொண்டு நிறுத்திவிட்டது. அவர் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறுவது மட்டுமே அன்று அவர் செய்யக்கூடுவது. கட்சி தலைவராக  அந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பின்னர் நாங்கள் திரளாக அவரிடம் சென்று பேசி சமாதானமடைந்தது எல்லாம் பிறகு நிகழ்ந்தது


வேட்பாளராக சண்முகம் மேலிடத்தால் மறுக்கப்பட்டது எனக்குள் உஷ்ண் அலையை கிளப்பியது. அதிகாலை அவரை சென்று சந்திக்கும் வரை என்னிடம் எந்த திட்டமும் இல்லை. ஆனால் எதிர்ப்பை மிகத் தீவிரமாக பதிவு செய்ய நினைத்தேன். அவரை சந்தித்த போதும் பெரிதாக எதுவும் பேசி விரும்பவில்லை. “செத்தவரிடம் என்ன துக்க விசாரிப்புஎன்பது போல பட்டது. செய்தி அறிந்து மெல்ல எனது நண்பர்கள் கூடத் துவங்கினர். காலை பத்து மணிக்கெல்லாம் முழு அமைப்பு கூடிவிட்டது. மெல்ல தீவிர எண்ணம் வெளிப்பட , நான் மூத்த தலைவர்களுக்கு முன் கட்சி மேலிடத்திற்கு எங்கள் எதிர்ப்பை காட்ட அவர்கள் அனைவரையும் புறக்கணைக்க முடிவு செய்தேன். எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட பூட்டும் சங்கிலியையும் கொணடு அவரது வீட்டி நுழைவாயில் இரும்பு கிராதிக் கதவு இழுத்து பூட்டப்பட்டது. யாரை உள்ளே விட வேண்டும் எனகிற அதகாரம் மெல்ல என் கைகளில் வந்தது. காலை 9:30 மணி அதற்குள் 600 பேருக்கு மேல் கூடிவிட்டார்கள். கூட்டம் கட்சி மேலிடத்திற்கு எதிராக கோஷமிட ஆரம்பித்ததும் சண்முகம் பதற ஆரம்பித்தார் . பல வகையில் வெளிய வர முயறசித்தவரை எனது நண்பர்கள் கடைசீவரை விட வில்லை. கம்பி கதவிற்கு உள் பக்கம் நின்று கொண்டு உரத்த குரலில் என்னை எச்சரித்தார். நாங்கள் எதுவும் கேட்பதாக இல்லை. ஒரு கூட்டம் மரைக்காயரை காட்டமாக எதிர்த்து கோஷமிட ஆரம்பித்தது. பின்னர் அது மெல்ல நாராயணசாமிக்கு எதிர்பான அலையாக மாறத் துவங்கியது. துவக்கத்தில் நான் அதை இயல்பாக எடுத்துக் கொண்டேன். பலர் கூடிய இடத்தில் ஆரம்பத்தில் அதன் மீதிருக்கும் கட்டுப்பாடு நேரம் கடக்க கடக்க மெல்ல இழந்து போவதையும் புரிந்து கொள்ளக் கூடியது. உணர்ச்சி மயமாக சிலர் அதன் தீவிரத்தை உயர்த்தும் போது அதை தடுப்பது முட்டாள்தனமானது. அது நமக்கு எதிராக திரும்பிவிடும். கொண்டாட்ட மனநிலைக்கு வந்து அதில் திளைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டு அவிழ்ந்து போகும் மீறல் அனைவரையும் களிவெறி கொள்ளச் செய்யும். தன்னிலை மறந்தநிலை புத்திபூர்வமான எதுவும் அதன் முன் எடுபடாது. நான் அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த நினைத்து செய்த சில முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த தீவிரத்தை நான் ஓரளவிற்கு தேவை என நினைத்தேன். உடன் இருந்த நண்பர்கள் சண்முகம் இல்லத்தில் நாராயணசாமிக்கு எதிர்பான குரல் எழுவது நடந்தாக வேண்டும்.இருவருக்குமான பிளவை சில மாதங்களுக்கு முன்பாக நாராயணசாமி வெளிப்படுத்த துவக்கி இருந்தார். நாராயணசாமி அங்கு திடீரென வந்த து மொத்த கூட்டத்தையும் வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன் பின் அங்கு வரும்பத் தகாத நிகழ்வுகள் நிகழ்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...