https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 26 அக்டோபர், 2022

மணிவிழா -7


ஶ்ரீ:



மணிவிழா - 7

26.10.2022



ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டியை நான் உருவாக்குவது குறித்த  பெரிய கனவும் அதை ஒட்டி நிகழ்த விரும்பிய தத்துவ கல்வி மற்றும் செயல்பாடுகளும்   அதற்காக முன்னெடுத்த முயற்சிகளும் துவக்கத்தில் உருவான சில தடைகளால்   முற்றாக கைவிட்டு வெளியேறி இருந்தேன். சில காலம் கழித்து சிலர் என்னை அனுகி அதை மீண்டும் தொடங்க   வேண்டும் என கேட்ட போது மிக உற்சாகமாக அதற்கான ஒரு கமிட்டி கூட்டத்தை என் வீட்டில் ஒருங்கி இருந்தேன். பத்து பதினைந்து பேர் கலந்து கொள்வார்கள் என கணக்கிட்டிருந்தேன்   முப்பது பேர்களுக்கும் மேலாக வந்து கலந்து கொண்டனர். நான் சிலர் முக்கியமாக அதில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தவர்களில் ஆனந்த ரங்கரவிச்சந்திரன் மிக முக்கியமானவர் . கூட்டம் துவக்கி அவர் வந்து கலந்து கொண்டு முதலில் பேசியது  நாலைந்து பேர் கலந்து கொள்வார்கள்  என நினைத்தேன் என்றார்  .  புதுவையின் முக்கிய ஆளுமைகளை கொண்டு நன்கு வடிவைக்கப்பட அவர் செய்த உதவி மிக முக்கியமானதுசில வருடம் தீவிர பங்களிப்பை தந்தாலும்  மெல்ல ஒதுங்கி கொண்டார். அவருக்கான தனிப்பட்ட காரணத்திற்கு பின்னால் இங்குள்ள ஜாதிய மேட்டிமை . அதை அகலாது அணுகாது தீ காய்வார் போல என்னை வைத்துக் கொண்டேன் . நான் எனது திட்டத்திற்கு மத்தியில் அவற்றை கொண்டு வைக்க முடியாது . அதற்கு இப்போது நேரமில்லை


தனது இரண்டாவது மக்களின் திருமணத்திற்கு மறுநாள் சட்டென மண் மறைந்து அதிர்வை ஏற்படுத்தி இருந்தது . அது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக சிறப்பு மிக்க நாள் பங்குனி உத்திரம் அது கொடுத்த புரிதல்கள் அலாதியானது நீண்ட நாட்களுக்கு பின்னர் கோஸகன் பட்டாச்சாரியாரை அங்குதான் சந்தித்தேன் . பொதுவாக பேச்சின் நடுவே எனது மணி விழா குறித்த பேச்சு வந்ததும் நான் அது நிகழ இருப்பதை விஜி நிவாஸ் அதற்கான வேலைகளில் இருப்பதை சொன்னேன் . அந்த இடத்தில அதை சொல்லலாமா என்கிற எண்ணம் முதலில் எழுந்தாலும்  அது பற்றி பேசுவது குற்றமில்லை என தோன்றியது முதன்மை காரணம் அந்த நாள் பிறிதொன்று மணி விழா குறித்த எண்ணத்தை எனக்குள் முதலில் விதைத்தவர் அவர். அவருடைய பங்கங்களிப்பை உறுதி செய்து அங்கிருந்து மேலும் ஒரு படி முன்னகர உதவினார் . ஏறக்குறைய மணிவிழா அனைத்தும் அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக நகர துவங்கியது.


அதன் துவக்கப் புள்ளியை இப்போது நினைவுறுகிறேன் இனி வாழ்வில் புதிதாக ஒருவர் பற்றி எனது தனிப்பட்ட மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதை கைவிட்ட துவங்கி நெடு நாட்களாகிறதுயார் என்ன சொல்கிறார்களோ அது அவர்களின் நோக்கம் குறித்து ஆராயாது அவரின் கருத்தை அப்படியே ஏற்க துவங்கி இருந்தேன் ஆரம்பத்தில் மிக கடுமையான மன அழுத்தத்தை கொடுத்தாலும் பின்னர் ஒரு புள்ளியில் மனம் அமைதி கொள்வதை உணர முடிந்தது . அந்த முடிவின் அடைப்படை காரணம் புதிதாக அல்லது ஒருவர் பற்றிய துல்லிய மதிப்பீடுகள் வழியாக செல்லும் இடம் அதனால் உருவாகும் கசப்பை தவிர்க்க நினைத்தேன் . இங்கு யாரை பற்றியும் யாருக்கும் மதிப்பில்லை நேரில் சந்திக்கும் போது பேசும் சம்பிரதாய பேச்சினால் ஆவது ஒன்றில்லை அவர்களது நடிப்பை ஊடுருவி அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என புரிந்துகொள்ள முயல்வதுமயிர் கருக்கி கரி எடுக்கும் வேலை” . அந்த மனநிலை கொடுத்த விடுதலை அலாதியானது













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...