https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 17 அக்டோபர், 2022

அடையாளமாதல் * பதவி, உதவியாளன்,ஆகப்பெரியவரும் *

  



ஶ்ரீ:



பதிவு : 645  / 835 / தேதி 17 அக்டோபர்  2022



* பதவி, உதவியாளன்,ஆகப்பெரியவரும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 41 .




கட்சி அரசியல் காரணங்களுக்காக நான்வில்லங்கம்ஏன் முதல்வரின் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்த சொன்ன எந்தக் கருத்தையும் அவன் கேட்பதாக இல்லை. அரசியல் பற்றி அவனுக்கு அக்கரையில்லை. “வில்லங்கம்அவனுக்கான எல்லா பாதைகளையும் முடக்குவார் என அஞ்சினான். அதற்காக அவர் அங்கு வருவதை தடுக்கும் எதையும் செய்ய அவன் யோசிக்கவில்லை அந்த அச்சம் அர்த்தமுள்ளதே. அதன் பின்னர் தான் எனக்கு கரூர் பாஸ்கரிடம் இது பற்றி பேச வேண்டும் என்கிற எண்ணம் அழுத்தமாக எழுந்தது. இதற்கு பின்னால் மாறன் நிறைய உள்வேலைகள் செய்திருப்பதை உணரமுடிந்தது. நான் அது யாரை முன்நிறுத்தி நடந்திருக்கும் என ஊகித்ததால் கரூர் பஸ்கரனிடம் நேரடியாக பேசி அதை சரிசெய்யலாம் என நினைத்தேன். நான் பாஸ்கரனிடம் பேசுவதை மாறன் விரும்பவில்லை. இதில் மாறனின் விருப்பப்படி நான் முடிவு செய்ய முடியாது. அரசியலில் ஒரு பெரும் தவறு நடக்க இருப்பதை நட்பை காரணமாக நிராகரிக்க முடியாது. நான் பதற்றமடைந்திருந்தேன். கரூர் பாஸ்கரனிடம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றபோது மாறன் அங்கிருப்பானென்று நினைத்தேன் அவனங்கு இல்லாமலிருந்தாலும் அவன் பாஸ்கரனிடம் நான் வரும் காரணத்தை முன்பே சொல்லியிருப்பான். இந்த முயற்சியில் எனக்கு எவ்வகையிலும் அவர் உதவவில்லை என்றாலும் நான் பேச வேண்டியதை பேசியாக வேண்டும். அரசியலில் இது நடக்கக் கூடாத தவறு. இன்று உடனடியாக அதை சரிசெய்ய இயலாமல் மோனாலும் பின்னர் ஏதாவதொரு புள்ளியில் அதை மீளவும் சரி செய்ய வாய்ப்பு வரும். நான் அஞ்சும் நூறு விஷயத்தில் பத்து நடந்தாலும் அதை சுட்டியாவது மேலும் நிகழவிருப்பதை தடுக்க இந்த பேச்சு வார்த்தையை அப்போது உபயோகப்படும் என நினைத்தேன்


பாஸ்கரனை அவரது ஹோட்டல் அறையில் சந்தித்தோது அவரிடம் மாறனின் செல்வாக்கு அவரது உடல் மொழியில் இருந்தது . நான் என்ன சொன்னாலும் அதை மறுக்கப் போகிறார் . என் மீதிருக்கும் நன்மதிப்பால் அதில் மென்மை இழையக்கூடும். நான் அவரிடம் வைத்திலிங்கத்தின் செயலாளர் பாஸ்கரனின் இடம் பற்றியும் அன்று அவர் அன்றாட உருவாகும் அரசாங்க சிக்கலை பற்றி விரிவாக சொன்னேன்.ஒவ்வொரு  அரசாங்கம் பதவியேற்ற கொண்டாட்டங்கள் முடிவிற்கு வரும் அந்த நொடி முதல் அதன் செல்வாக்கை இழக்கத் துவங்குகிறது . மெல்ல மெல்ல சட்டமன்ற உறுப்பினர்களின் அவநம்பிக்கையை மட்டுமே அதனால் அடையும் . நிர்வாக சிக்கல்கள் மிக ஆழமானவை. எல்லாமே காலக் கணக்குடன் விரிக்கப்படத் துவங்கும் போது அது நிகழ்ந்து விடுகிறது. அது போல ஒன்றை உருவாகாமல் தடுத்ததும் அவரை மீறி எழுந்தபோதெல்லாம் தயங்காமல் நசுக்கியதன் பின்னால் முதல்வரின் செயலாளர் பாஸ்கர் இருந்தார். எதையும் நேரடியாக கையாண்டார். மிகத் திறமையான ஊழியர்கள் வழியாக அது நிகழ்ந்தது. முதல்வரின் உறவினர் என்கிற அடையாளம் அவரது வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து பிறர் அஞ்சும் ஆளுமையாக உருவானார் . அரசாங்க அதிகாரிகள் அரசியலுக்கு புதியவர்கள் இல்லை. அதை மிகத் திறமையாக செய்தே உயர்பதவிகளை அடைகிறார்கள்


அவரால் ஒவ்வொரு சிக்கலை அது சார்ந்த அரசியல் இடத்தை அதை செயல்படுத்துவதில் உள்ள செரிவு போன்றவை மீண்டும் அத்தகைய சிக்கல் உருவாகாமல் பார்த்துக் கொண்டார் . அந்த அரசாங்கம் தினம் ஒரு சிக்கலை சந்தி்தாலும் ஐந்தாண்டு இருந்தது. ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் ஒரு அரசாங்கம் புணர் ஜென்மம் அடைகிறது . காரணம்அதற்கு பின்னால் இருக்கும் சமரசம் அத்தனை எடைகொண்டது. பலவித பேரங்கள் வழியாகவே அது நிலைகொள்ளும் இதற்கும் அன்றைய முதல்வருக்கும் நேரடி சம்பந்தமும் இல்லை என்பது யாருக்கும் அதிர்வை தரக்கூடியது . இங்கு திட்ட செலவீனங்கள் என்பது அரசு ஊழியர் சம்பளம் மட்டுமே. அனைத்து சிக்கலும் பிற எவரையும் போல  முதல்வருக்கு தகவலாக சொல்லப்பட்டன. செயலாளர் பாஸ்கரன் முதல்வருக்கு பின்னால் நின்று தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டவரல்ல . தனது தனித்திறமையால் முதல்வரை தாண்டித் தெரிந்தார். வெற்றிகரமான மந்திரிசபை செயலாளராக இருந்தார் ஆனால் அவராலும் இறுதிவரை கட்சி அமைப்பிற்குள் நுழைய முடியவில்லை. காரணம் அதன் மேல் கீழ் அடுக்கு உள்விவகாரங்களை  அவர் அறிந்ததில்லை அவரை சுற்றி அமர்ந்திருந்த கூட்டம் ஒவ்வொரு எளிய தொண்டனையும் அவரிடமிருந்து வலக்கி வைத்தது


கட்சி என்பது ஒரு தொகை மட்டுமல்ல. சமூகத்தின் ஆழ்மனம் போல அதை ஒவ்வொரு தனிமனிதனும் மிகத் துல்லியமாக அந்தத் தொகையின் உட்கூறுகளை வெளிப்படுத்துகிறான். தேர்ந்த அரசியலாளன் மட்டுமே அதை பிரித்து அறிந்து கொள்ள முடியும். காரணம் அவன் அங்கிருந்து உருவாகி வருபவன், பிறிதொருவன் அங்கிருந்து உருவாகி வராமல் பார்த்துக் கொள்பவன். கட்சியின் தனிமனித ஆதரவை ஒருவர் பெறுவது மிக சிக்கலானது. காரணம் எப்போதும் அது பதவியை வைத்தே அடையாளம் காணப்படுவது. பதவிகள் எப்போதும் சமரசங்களின் வழியாக கொடுக்கப்படுவது. சமரங்களுக்கு உட்படாதவன் தனிமனிதன்,ஆனால் அவன் பதவியை அடைந்தவனை விட நுட்பமானவன். எனவே அவன் ஒருபோதும் தனக்கு மேலாக ஒருவனை நிலையாக வைத்துக் கொள்ளவதில்லை. இடம் காலம் என அது மாறிக் கொண்டிருப்பது. அவனை சரியாக புரிந்து வைத்திருக்கும் அமைப்பு வெற்றிகரமானது. துரதிஷ்டவசமாக பதவி அல்லது அதிகார எடை அந்த நுட்பத்தை உருவாக்குவதில்லை. உருவாகி வருவதை அறிந்து கொள்வதுமில்லை


அரசாங்க சிக்கலும் கட்சியின் தனிமனிதன் கொண்டுவரும் கோரிக்கையும் இணையான முக்கியத்துவம் கொண்டது. இன்று அரசு சிக்கலாக உருவெடுத்திருப்பது அனைத்தும் என்றோ ஒரு தனிமனிதன் தனது கோரிக்கயாக முன்வைத்தது கவனிக்கப்படாமல் போனது . இந்த இரண்டு புள்ளிகளும் அவற்றின் முணையில் இருக்கும் ஒத்திசைவை அவற்றின்  இடையே உள்ள அணுக்க ஒற்றுமையை அல்லது முரணை உய்த்தறிபவன் ஆகச்சிறந்த நிர்வாகியாக அறியப்படுகிறான். நிர்வாக சிக்கலும் அதன் தீர்வும் எங்கோ ஒரு புள்ளியில் ஒரு தனிமனிதனை மட்டுமே சென்றடைய முடியும். அந்த பாதையை அறிவது நிர்வாக அரசியல். ஒரு தனிமனிதனிடம் இருந்து அந்த சிக்கல் உருவகாமல் தடுப்பவன் ஆகச் சிறந்த தலைவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...