https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 ஜூலை, 2019

அடையாளமாதல் - 451 * இருப்பை உணருதல் *

ஶ்ரீ:



அடையாளமாதல் - 451

பதிவு : 451 / 628 / தேதி 15 ஜூலை  2019

* இருப்பை உணருதல் 


எழுச்சியின் விலை ” - 53
முரண்களின் தொகை -03 .





நிலையழிதலின் போது அவரின் இவ்வகை பேச்சு வழமையான ஒன்று என்றாலும் . அவர் அன்று எடுத்து விமர்சித்த அனைத்தும் தன்னிடமிருந்து அரசியல் ரீதியில் நிலை பிறழ்ந்த மனிதர்களைக் குறித்த வெறுப்பாக வெளிப்பட்டது.ஆனால் அது அத்தனையும் அவரை நோக்கி திரும்புவதை பொருட்படுத்தாதது என்னை துணுக்குற வைத்தது. இதுவும் அரிதான சூழலில் முன்பும்  நிகழ்வதுதான் . ஆனால் அவற்றின் பின்னால் சரியான அரசியல் காரணம் இருந்ததை அப்போது உணர்ந்திருக்கிறேன் .அது அவரது குற்றமே என்றாலும் தனது அரசியல் முன்னெடுப்புகளுக்கு தடையேற்படுத்துபவர்களின் பொருளற்ற போக்கை விமர்சிப்பவை மற்றும் அவர்களுக்கான எதிர்வினை அற்றுவது குறித்ததாக இருக்கும்  என்பதால் ,தலைவர் என்கிற முறைமைகளுக்குள் அதை இயற்ற அவருக்கு அதிகாரமிருப்பதை ஏற்பவன் நான் .

இன்றும் பொறுப்புள்ள அரசியல் தலைமையின் அடைப்படையாக அதை உணர்கிறேன் .அவை தர்க்கப் பூர்வமானவை. அரசியல்  சூழ்தல் எண்ணி எண்ணி எடுக்கப்பட்டவை . அவரை எதிர்த்து விவாதிப்பவர்கள் கூட ஒரு எல்லைக்கு மேல் இறுக்கமடைந்து விடுவார்கள் .ஆனால் இன்று இது புலம்பல் .தலைவர் தனது மாண்பிழந்திருப்பதை அவரது சொற்கள் அடிக்கோடிட்ட அடையாளம் காட்டின . தனது அரசு சூழ்தல் தனக்கு உட்படும் போது அதை துல்லியமாக விவரிப்பவர் , அது  முரண் கொள்கையில் அதன் யதார்த்த விளவுகளை புரிந்து அமைதியாகிவிடுபவர் , இன்று இரண்டுமற்ற ஒன்றென  அவரது சொற்கள் அர்த்தமிழந்து வெளிறி நின்றதால் எனக்கு அவை வெற்றுப் புலம்பலாக பலகீனமாக ஒலித்தது. இம்முறை நான் பழைய நினைவுகள் எதையும் கருதாது போனேன் . எது நிகழ்ந்தாலும் , இவரின் பொருட்டும் கசப்படைவதில்லை என்பது  வாழ்நாள் உறுதிப்பாடு . ஆனால் மனம் கசந்து போனேன் .

அவர் தனது முதல்வர் பதவியை இழந்த போது அவரது அனுக்கர்கள் பலரும் அவரைவிட்டு வெளியேறினர். முதல்வராக அவரது செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை .அவரது நிலைப்பாட்டினால் பிறிதெவரையும் விட அவரின் தீவிர ஆதரவாளனாக நான் கடும் பாதிப்பிற்குள்ளானேன். எனது  வாழ்நாள் கனவான இளைஞர் கங்கிரஸ் தலைவர் பதவி கைநழுவி போனது அவர் சர்வ வல்லமையுடைய முதல்வர் என்கிற பொறுப்பில் இருந்த போதுதான் என்றாலும், அவரை விட்டு கொடுக்க எப்போதும் நான் தயாரில்லை . கட்சி தலைமை அவருக்கு மீண்டும் கொடுக்கப்பட வேண்டுமென தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் அம்பிகாசோனியுடன் நானும்  எனது நண்பனும் போராடியிருக்கிறோம். அதிஷ்டவசமாக அவர் மீண்டும் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

அதன் பிண்ணனியில் தற்செயலாக நாங்கள் அம்பிகா சோனியை சந்தித்ததும் முக்கிய காரணி என பின்னர் அறிந்து கொள்ள நேர்ந்தது . அது தனக்கான கடைசி வாய்ப்பு என தலைவரும் அறிந்திருந்தார்.அவர் ஆற்ற வேண்டியது அடிப்படையை இழந்து போயிருந்த மாநில கட்சி அமைப்பை மாற்றி அமைக்கப்படுகிற வாய்ப்பை பற்றியது . அது  குறித்து எனக்கு சொன்னவர் அவர்தான் .அதற்கான சாத்தியகூறுகள் மிக பிரகாசமாக இருப்பதை பார்த்தேன் .ஆனால் பின் எங்கோ ஒரு தருணத்தில் தன்னை இழந்து மௌனமானார்.

அரசு நிர்வாகம் அவருக்கு பிடிபடாத ஒன்றாக மாறியிருந்ததை என்னால் அவர் முதல்வராக பொறுப்பேற்ற தருணத்தில் புரிந்து கொள்ள முடிந்தது . அதில் அவர் தோல்வியுற்று விலகிய போதும் அவரின் இயலாமை என்னுள் பரிதாபம் எஞ்சியிருந்தது.அந்த இயலாமையும் சமரசமற்ற அவரின்  போக்கை , அவரது மாண்பென்றே புரிந்திருந்தேன் .ஆனால் கட்சி அமைப்பு அவரது உள்ளங்கை போல .அவருக்கு புரியாத அல்லது முற்றும் எதிர்நோக்காத ஒன்று அதிலிருந்து எழுந்து வந்தது என்பது போல , அவர் கை உதரி அதை விட்டு விலகி நின்றபோது ,அவரை மன்னிக்க நான் தாயாரில்லை.

முதல் முறையாக அவரிடம் மிகக் கடுமையாக விவாதித்தது அப்போதுதான் .AV.சுப்ரமணியத்திடம் தனது தலைமைப் பதவியை இழந்து போது என்னை விட அவர்தான் மிகவும் நிலையழிந்திருந்தார் .அதை ஒருவித எள்ளல் பேச்சால் கடக்க முயல்வது அவரது வழமை.எங்கோ ஒரு புள்ளியில் நான் சீண்டப்பட்டேன். காரணம் அவர் புதுவை முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து , அவரின் முரண் வெளிப்படையாகி இருந்தது .அவரின் இப்புதிர் போக்கால் ,அவருடன் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுக்கமாக இருந்த இரண்டாம் நிலை தலைவர்கள் ஏறக்குறைய அனைவருமே மனம் கசந்து அவரை விட்டு விலகியிருந்தனர் .அரசியல் ரீதியாக சண்முகம் தோற்று நாரயணசாமி வென்றது இந்த தருணத்தில் .இதில் நாராயணசாமியின் அரசியல் சூழ்தல் என ஒன்றில்லை.தலைவருக்கு நெருக்கமனவர்கள் அவரைவிட்டு துரதிஷ்டவசமாக விலகியது அவரது வீழ்ச்சிக்கு முக்கிய காரணியானது .

அவர்களை இப்போது கசந்து அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு பொறுப்பேதும் இல்லை என்பது போல அவர் பேசியதும்,அவரது குற்றச்சாட்டுகள் அவருக்கும் பொருந்தும் என்கிற யதார்த்தை அறியாதவர் போல நடந்து அதன் இழிவை வலிந்து தன்மீது திணித்து  கொள்கிறார் என நான் அவரிடம் சொல்லி , அவரது குற்றச்சாட்டை யாரை நோக்கி இதை முன்வைக்கிறார் என்கிற எனது கேள்வியால் சீண்டப்பட்டு, அடுக்கடுக்கான கடந்த கால நிகழ்வுகளையும் அதை அவர் எடுத்தாண்ட முறைமைகளையும் பற்றி பேசி தான் அனைத்தையும் எதிர் நோக்கிய இருந்ததாக சொன்னது தன்னை தற்காத்துக் கொள்ளவது . அது அவரது கூர்மையான சொல்லாடல் பாணி . அந்த பாணியால் பலரும் ஒரு கட்டத்திற்கு மேல் , அமைதியடைந்து விலகிவிடுவர் . அது அவர்களை வென்றதாக அனைவரலும் கருதப்பட்டுவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...