https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 29 நவம்பர், 2022

அடையாளமாதல் * அமரவியலாத பதவி *

 


ஶ்ரீ:



பதிவு : 650  / 840 / தேதி 29 நவம்பர்  2022



* அமரவியலாத பதவி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 46 .




 

முதலவரின் தனிச் செயலாளராக வில்லங்கம் பொறுப்பிற்கு வருவது பிற எவரையும் விட சண்முகத்திற்கே மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதை கடந்து அவரை வேண்டாம் என நினைக்க சண்முகத்திற்கு பல முக்கிய காரணம் இருந்தது. அது நிர்வாக ரீதியிலான சிக்கல். முதல்வரின் செயலாளராக அவர் அமராமல் போகும் வாயப்புப் பற்றி ஆரம்பத்தில் எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. காரணம் அவர் விலக்கி வைக்கப்பட கூடும் என நான் ஊகித்திருக்கவில்லை. காரணம் சண்முகம் தன்மனநிலை சார்ந்த முடிவுகளை அதற்கு உகக்கும் ஒற்றை காரணத்திற்காக செய்வதில்லை. பொது நிகழ்வில் தன் தனிப்பட்ட விருப்பத்தை முன் வைப்பதில் பெரிய தயக்கம் கொண்டவர். நானும் வில்லங்கமும் அந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியைற்பு நிகழ்விற்கு நாள் குறித்து பின்னர் துணைநிலை ஆளுனர் மாளிகையில் முன் தோட்டத்தில் மேடை அமைக்கும் இடம் தேர்வு செய்ய ஆளுனர் மளாகைக்எஉ சென்ற போது அங்கு மொத்த அமைச்சரவையும் பதவியேற்க இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆளுனர் மாளிகையுள்ளே நிகழ்த்த இடம் போதாது என்பதால் வெளியே நடத்த இடம் ஒருங்கி இருந்தார்கள். சுமார் 1500 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என கணக்கிட்டிருந்தோம். சட்டசபையில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு அமைச்சர்களின் அறை சாவிகளை பெற்று போகச் சொன்னார்கள். சாவிகளைப் பெற சட்டமன்றம் செல்லும் போது பழைய நினைவுகள் எழுந்தன. 1994ல் அன்றைய முதல்வர் வைத்திலிங்கம் பாலனுக்கு சாதகமாக இளைஞர் காங்கிரஸை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்க சிபாரிசு செய்த போது எழுந்த மன உளைச்சலை இப்போது நினைவு கூர்கிறேன். பிரச்சனை முதல்வர் தலையிட்டு சமாதானம் அவரது அலுவலகத்தில் நிகழ்ந்தது.பொருந்தாத ஒப்பந்தத்திற்கு பிறகு மிகுந்த மனக் கொந்தளிப்பில் அவரது அறையைவிட்டு வெளிவந்தபோது எழுந்த பெரும் நிலையழிவையின் அடிப்படையில் இனி எனக்கான உரிய இடம் அமையாமல் சட்டமன்றத்தினுள் நுழைவதில்லை என்கிற வெஞ்சின் எடுத்திருந்தேன். ஐந்தாண்டுகள் சட்டமன்றத்தினுள் நுழையவேயில்லை. அந்த வெஞ்சினம் ஒரு வேடிக்கை போல

அதற்கு என்னிடம் எந்த அடிப்படை பலமோ எதிர்காலம் குறித்த தெளிவான திட்டமோ இல்லை அன்று அது ஒரு ஆற்றாமை மட்டுமே. அனைவராலும் கைவிடப்படப்படும் ஒரு சூழலில் நிராதரவாக விடப்பட்டவனின் குமுறல்இன்று இதோ சட்டமன்ற செயலாளரால் அழைக்கப்பட்டு நான் அந்த அறை சாவிகளை வாங்க அந்த சட்டமன்றத்தினுள் நுழைகிறேன். காலம் அதன் கனிவுவுறுதல் குறித்த  இனம்புரியாத அந்த எழுச்சியை வாழ்கையில் பெரும் நம்பிக்கையை கனவு போல உருவாக்கிய நிகழ்வு இது. ஆழ்மனதின் இடைவிடாத இறைஞ்சல் தெய்வங்களால் கேட்கப்படுகின்றது போலும் அது ஒரு காலத்தில் அதற்கு பதில் சொல்லுகிறதுஅதை கேட்டும் இடத்தில் நம்மை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நமக்கு நாமே விதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பல சந்தர்பங்களில் எனது கனவுகள் அப்படியே நிகழ்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் காலம் அல்லது எனது மனத்தால் நான் அங்கிருந்து வெளியேறியிருப்பேன் . ஆனால் நான் நினைத்தது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. அது ஒருவகையில் மனநிறைவை அளிக்கிறது


அமைச்சரவை பதவியேற்ற மறுநாள் சட்டமன்றத்திற்குள்  நுழைந்த போது வில்லங்கம் அங்கு இல்லாமையை அறிந்து கொண்டேன். தனி செயலாளராக காரைக்கால் நெடுங்காட்டைச்  சேர்ந்து பன்ணீர்செல்வம் நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிய்தது . அது ஒரு தீயூழ் என நினைத்தேன இறுதியில் அதுவே நிகழ்ந்தது மாறனிடம் தொடர்பு கொண்டு பேசிஎன்ன நடக்கிறது என கேட்ட போதுசற்றுப் பதட்டமடைந்தான் நேரில் வந்து சொல்லுவதாக் கூறினான். நேரில் சந்தித்த போது என்னிடம் மாறன் வில்லங்கம் பற்றி எதிர்மறையாக சொன்ன அனைத்து விஷயங்களும் மறுக்க முடியாத நிஜம். எனக்கு அவன் சொன்ன விஷயங்கள் எனது நிலைப்பாடும் அவனக்கு மிக அனுக்கமானது. ஆனால் அரசியலில் அதிகாரப் பதவிக்கு திறமை முதன்மைத் தகுதி அதை விருப்பு வெறுப்பினால் முடிவு செய்வதில்லை. முதல்வராக வந்திருக்கும் சண்முகத்தின் வயது மற்றும் அரசு நிர்வாகத்தில் அவருக்கு இருந்த நீண்ட இடைவெளி அரசு நிர்வகத்தில் சமகால யுக்தி அதில் உள்ள இளைய அதிகாரிகளின் அரசிலுக்கு ஈடு கொடுப்பது போன்றவை உருவக்கும் சிக்கலை நான் மாறனுக்கு எவ்வளவு எடுத்துக் கூறுயும் அதை அவன் ஏற்பதாக இல்லை. தனது செயல்பாடுகளை வில்லங்கம் முடக்கிவிடுவார் என்கிற ஒற்றைபடை சிந்தனையால் அஞ்சினான். இந்த விஷயத்தில் காரைக்கால் நெடுங்காடு முருகையன் மாறன் கரூர் பாஸ்கர் என மூவரும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை துவங்க்கி வைத்தது நிச்சயமாக மாறனாக இருக்க வேண்டும். முருகையன் மாறனைவிட வில்லங்கத்தின் மீது கடும் குரோதம் கொண்டவர் ஆனால் சண்முகத்திடம் பேசும் ஆற்றலற்றவர். மாறன் அதை தலைவரிடம் நேரடியாக சொல்வதை தவிற்து கரூர் பாஸ்கரை பேச வைத்திருக்க வேண்டும். கரூர் பாஸ்கர் இதுபற்றி பேசி சண்முகத்தின் மனதில் அந்த மாற்றத்தை கொண்டுவந்திருந்தார் . மாறன் மற்றும் முருகையான் அதிற்கு பின்னால் இருப்பது மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதுஅரசு அதிகாரத்தை தன்னை மிஞ்சி வில்லங்கம் செல்லக்கூடும் என்பது குறித்த சண்முகம் முன்னமே கவலை கொண்டிருந்தார் அவருக்கு முக்கியத்துவமில்லாத பதவி கூட கொடுக்க முடியாது என்பது அடிப்படை.   


1996 ஆட்சி மாற்றத்தில் வில்லங்கத்தின் பங்கு இருந்ததை அறிந்த திமுக முதல்வர் ஜானகிராமன் கோபம் கொண்டிருந்தார். வில்லங்கத்தை மாஹேவிற்கு மாற்றம் செய்து அவர்மீது துறை ரீதியான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த நிர்பந்து அங்கேயே அவர் கணக்கை முடிப்பதாக திட்டம். அவர் தனது அரசு வேலை மூலம் கிடைக்க வேண்டிய அத்தனை பலன்களையும் கிடைக்கவிடாமல் செய்யும் முயற்சிகள் துவங்கி

கொண்டிருப்பதை வில்லியங்கம் தனது அரசுத்துறை நண்பர் மூலம் அறிந்து கொண்டார் . மாஹிக்கு இடமாற்றம் செய்தபோது அமைதியாக அங்கு சென்று ஓரிரு மாதங்களில் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்தார். அரசு அவரை அவ்வளவு லேசில் விடுவாத இல்லை மிக நீண்ட அரசின் இழுபறிக்கு பின்னர்  வேலையில் இருந்து விலக அனுமதித்தது அந்த அரசு. சண்முகம் அவர் அரசு பதவியில் இருந்து விலகியதை காரணம் சொல்லி அவருக்கு செயலாளர் கொடுப்பதற்கில்லை என சொல்லி அனைவரையும் திகைக்க வைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...