https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 நவம்பர், 2020

அடையாளமாதல் * கொள்கையும் பாதையும் *

  

ஶ்ரீ:



பதிவு : 547  / 740/ தேதி 20 நவம்பர்  2020


* கொள்கையும் பாதையும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 25.







சுதந்திரப் போராட்ட பெரியவர்களிடம் உரையாடியது புதுவை சுதந்திர போராட்டக்குழுக்களுக்கு இடையேயான ஆரம்பக் கால முரண் குறித்து மிக புரிதல் ஆழமானதாக, அதன் போராட்ட காலம் மற்றும் முந்தைய , பிந்தைய காலங்களில் நிகழ்ந்தவை , எப்படிப்பட்ட அரசியலை உருவாக்கி இருந்தது என்பதை ஊகிக்க முடிந்தால் , புதுவை அரசியல் வரலாறு குறித்து புதிய பரிமாணம் கிடைக்கலாம் என்பதாக அது இருந்தது. நான் இங்கு காந்தியை மிக அனுக்கமாக புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். கால சூழலை ஒட்டி மனித மனம் இயங்கும் விசையை யாராலும் கணிக்க இயலாதது . பல வித மத இன கலாச்சாரங்களின் ஊடுபாவு சிக்கல்கிளல் இருந்த இந்திய மனங்களை வென்றெடுத்து , அவர்களை விடுதலை போருக்கு இட்டு சென்ற அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முயல்வதைப் போல ஒரு கற்றலை பிறிதொன்று கொடுக்க இயலாது .



தங்கள் மீதான தடை 1940 களில் நீக்கப்பட்டதை அடுத்து பிரெஞ்ச் இந்திய அரசாங்கம் நட்புக் கரம் நீட்ட சுப்பையாவின் கம்யூனிஸ்ட் இயக்கம் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையை எடுத்தது . ஒரு பத்து வருட காலத்தில் அதன் அரசியல் கருத்தியலின் நிலைக் குறித்து முன்னும் பின்னுமாக நகர அதற்கு இடம் கொடுத்தது எது? . 1940 களில் துவங்கி 1947 வரை நீடித்த இரு தரப்பிற்குமான உடன்பாடு தவிர்க இயலாததாக இருந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் தங்களது அரசியலின் இருத்தலியல் காரணமாகவும் அதன் குறுகிய கால லாபம் குறித்தும் அப்படி முடிவெடுத்திருக்கலாம். அல்லது அதுதான் தங்களின் போராட்ட முதற்காரணத்தின் விடையாகமுதல் வெற்றியாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் . அதற்கான காரணத்தை , அதன் பின்புலத்தை வேறுவிதமாகத்  தொகுத்துக் கொண்டால் பிழை புரிதல் அடையாமல் இருக்கலாம் என நினைக்கிறேன் . பிரெஞ்ச் அரசிற்கு எதிரான போராட்டம் என்பது ஒருவகையில் உள்ளூர் பிரமுகர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து துவங்கியது என்பது அடிப்படை காரணமாக இருந்திருக்க வேண்டும் . பிரெஞ்ச் அரசாங்கம் பொது மக்கள் உள்ளூர் பிரமுகர்களால் சுரண்டப்படுவதை கண்டுகொள்ளாததாலும் , குபேர் போன்றவர்களின் செயல்பாடுகளுக்கு கொடுத்த வெளிப்படையான ஆதரவும் , அவர்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டையும் செவிகொள்ள மறுத்ததும்  அதை எதிர்த்து அணிதிரண்டு ஒரு புள்ளியில் பொதுவான கருதுகோளை நோக்கி அது நகர்ந்திருக்க வேண்டும். புதுவை சுந்திரப் போர் இந்திய சுதந்திர போராட்டம் போல நீண்ட கால வரலாறு அதற்கு இல்லை. காந்தியின் எழுச்சிக்கு பிறகே புதுவை சுதந்திரப் போராக மாற்றியமைக் படுகிறது . இந்திய சுதந்திரப் போருடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது தங்களை புறக்கணிக்க இயலாத சூழலை உருவாக்குவதற்காக இருந்திருக்கலாம் . ஒரு கட்டத்தில் அறவழிப் போராட்டம் மீது நம்பிக்கை இழக்க பிரெஞ்ச் இந்திய அரசின் நெருக்கடி காரணமாக இருந்திருக்க வேண்டும் . அவர்களின் உடனடித் கோரிக்கைகளுக்கு நீண்டநாள் நாள் காத்திருக்கும் அறவழி போராட்டம் பொருமைர இழக்கச் செய்து ஆயுதப் போராட்டமாக திரும்பியது . அதன் விளைவின் உச்சமாக 1938 ல் பிரெஞ்ச் அரசு ஆதரவாளர் செல்வராஜூலு செட்டியாரின் படுகொலை நிகழ்ந்தது. அதை ஒட்டி கம்யூனிஸ இயக்கம் தடை செய்யப்பட்டது.


ஆதிக்க சக்திக்கு எதிராக துவங்கி பிரெஞ்ச் இந்திய விடுதலை பின்னர் விடுதலை போராட்டமாக உருவெடுத்தது. புறநகர் பகுதிகளில் வேரூன்றி இருந்த காங்கிரஸ் இயக்கம் கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் கரணமாக கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து செயல்படுவதை விரும்பாததற்கு அதன் தொடக்கமும் அதன் ஊசல் மனநிலையும் காரணமாக இருந்திருக்கலாம் . இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்த இழுபறி நிலையே நீடித்தது . 1940 களில் பிரெஞ்ச் இந்திய அரசு தனது தடையை நீக்கி கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி பிரெஞ்ச் அரசு நட்புக்கரம் நீட்டிய அரசியல் விநோதத்தின் உச்சம் , அதைவிட கம்யூனிஸ இயக்கம் அதற்கு உடன்பட்டது இன்னும் திகைப்பைக் கொடுக்கக் கூடியது . காந்திய வழியில் இருந்து வெளியேறிய சுப்பையா தங்களின் கட்சியை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீட்சியாக உருவாக்கிக் கொண்டதற்கு சிறு வட்டம் விட்டு வலகி உலகப் பொதுச் சூழலுக்கு வந்து சேரும் அரசியல் கனவு அவருக்கு இருந்திருக்க வேண்டும் . இலட்சியவாத்த்தில் நம்பிக்கை பெருக்கெடுத்த காலம் . எந்த அரசியல் பின்புலமும் இல்லாத எளிய மக்கள் புட்சியினால் கிடைக்கும் புது உலகம் பற்றி கனவு விரியத் துவங்கி இருந்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ரஷ்யா நேசநாட்டுப் படைக்குள் வந்த போது ஐரோப்பிய நாடுகள் அதை வரவேற்றன . பாரதி சொன்ன யுகப் புரடச்சி துவங்கி விட்டதை போன்று சூழல் உருவாகி வந்தது . உலகளாவிய மாற்றத்தை ஒட்டி பிரெஞ்ச் இந்திய அரசு கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை  உனடியாக மாற்றிக் கொண்டது . தனது இருப்பை கேள்விக்குறியதாக ஆக்கும் இயக்கத்துடன் அரசியல் கூட்டணி உடன்பாடாக  மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை என்ன ? என்பது ஆழமான கேள்வியை எழுப்பக் கூடியது . தன்னை வெளியேற்ற வேண்டி போராட்டம் நடத்தும் இயக்கத்துடன் அது நட்புறவை பேணியது அதன் ஆழந்த காலணி அரசியல் புரிதலையும் உள்ளூர் அரசியலின் உள்நெசவுகளையும் அது நன்கு அறிந்திப்பதை வெளிப்படுத்துகிறது


சற்று பின்நோக்கி சென்றால் மேலதிக காரணம் எளிதில் காணக் கிடைக்கிறது . இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தங்கள் கைவசமுள்ள காலனிகளில் சாதகமில்லாதவற்றை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிக் கொண்டிருந்தது . 1940 களில்  இந்திய விடுதலை பெறும் காலம் மிக சமீபத்தில் இருக்கும் சாத்தியக்கூறை அவை முன்பே ஊகித்து இருக்க வேண்டும் . அதே சமயம் சாதகமான காலணிகளை விட்டு வெளியேற அவை விரும்பவில்லை . ஒட்டு மொத்த காலனிகளில் இருந்து வெளியேற விரும்பியிருந்தார் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை போன்ற சிலவற்றில் இருந்தும் அவை வெளியேறி இருக்க வேண்டும் . ஆனால் கிழக்கு ஆப்ரிக்க நாட்டை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது . இந்திய சுதந்திரத்திற்கான கொள்கை பிரகடனம் அதற்கு ஒரு தடையாக இல்லை


பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பல ஆண்டுகளாக விடுதலைப்  போர் நடந்து கொண்டிருந்தது. 1948 களில் கிழக்கு ஆப்ரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக வெள்ளையர்களை கொண்ட கிழக்கு ஆப்ரிக்க தேசிய கட்சி என்கிற பெயரில் அங்கு தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தது . நெல்சன் மண்டேலா 30 வருட சிறையில் இருந்ததை குறித்து எந்த வெட்கமும் அந்த அரசு கொள்ளவில்லை . அங்கு தொடர்ந்து நிகழ்ந்த சுதந்திர போராட்டத்தின் விளைவாகவும் உலக நாடுகளின் கொடுத்த வந்த அழுத்தம் கரணமாக 1994 களில் சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு ஆப்பிரிக்கவை விட்டு வெளியேறியது . அதே சமயம் கிழக்கு ஆப்பிரிக்க குலக் குழுவிற்கு இடையே பெரும் வன்முறை நிகழும் என எதிர்பார்ப்பும் அதை அடுத்து அரசியல் மாற்றத்திற்கும் , தங்களுக்கான மறுவாய்ப்பு பற்றி  அவர்களுக்கு எண்ணம் இருந்தது. நெல்சன் மண்டேலாவின் விட்டு கொடுக்கும் புரிதலால் அந்த கலவரம் நிகழவில்லை . கைவசமுள்ள தங்கள் காலணிகளை விட்டு முற்றாக வெளியேற அவை ஒருபோதும் விரும்பியதில்லை . இதுவே அன்றைய ஐரோப்பிய நாடுகளின் பார்வையாக இருந்தது . பிரெஞ்சு இந்திய அரசாங்கத்திடமும் அப்படிப்பபட்ட பார்வை இருந்திருக்க வேண்டும் . இல்லை எனில் உலகளாவிய அரசியல் மாற்றத்தை அனுசரித்து தனது நிலைப்பாட்டை ஒரு சிறிய காலனி அரசு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை என்ன? . இந்திய சுதந்திரம் தவிர்க்க முடியாதது என்கிற நிலை உருவாகி வருவதை அறிந்த பின்னரே அவை புதுவை கம்யூனிஸ்டுகளை நோக்கிய தனது நட்ப்புக் கரத்தை நீட்டியது . இன்னும் ஆழமாக பார்த்தால் இந்திய விடுதலைக்குப் பிறகு எல்லா சிறு அரசுகளுக்கும் தாங்கள் திரும்பவும் ஆட்சிக்கு வர முடியும் என்கிற கனவிருந்தது . இந்திய சுதந்திரத்தை ஒட்டி இங்கு பெரும் குழுமப்பம் விளையும் என ஐரோப்பிய அரசுகள் நம்பின  . இங்கிலாந்தின் வின்ஸ்டர் சர்ச்சில் , “இந்தியாவை ஆளும் சக்தி இந்தியர்களுக்கு இல்லைஎன அறிவித்தார் . ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகளுக்கு இதே எண்ணம் இருந்திருக்க வேண்டும் . தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் தனக்கு எதிரான குரல் இருக்க கூடாது என அது நினைத்திருந்தால் அதில் வியப்பில்லை . உலகளாவிய சூழலை ஒட்டி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கம்யூனிஸ்ட்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவெடுத்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...