https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 6 ஜூலை, 2017

அடையாளமாதல் - 115 *பாதுகாப்பென முளைவிடுதல் *

ஶ்ரீ:



*பாதுகாப்பென முளைவிடுதல் *
இயக்க பின்புலம் - 43
அரசியல் களம் - 34





என்ன காரணத்தினாலோ தாமோதரன் கமலக்கண்ணனை விட்டுக்கொடுக்க முடியவில்லை , நல்ல நட்பின் அடையாளமாக அதை பாராட்டலாம் , இதில் நான் எங்கு வருகிறேன் , என்னை விரோதிக்க  என்ன காரணம் , இதை தான் கடந்த சில மாதங்களாக என்னை சந்திக்க வருபவர்களிடம் நான் கேட்பது . வெளியில் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது . இதோ உங்களை தாண்டி எனக்கு நன்மை செய்பவர்கள் யார் . உங்களிடம் ஏன் மறைத்துப்பேச வேண்டும் . நீங்கள் சொல்லுங்கள் நான் யாருக்கும் போட்டியில்லை , எந்த பதவிக்கான பந்தய  ஓட்டத்திலும் நான் இல்லை . சட்டென சுப்பாராயன் சூடானார் , கிருஷ்ணராஜை பார்த்து . இதுக்கா நாம் வந்தோம் , பேசவேண்டியதை விடுத்து அனாவசியமான பேச்சு எதற்கு . என்று போய்க்கொண்டிருந்த சொற்பெருக்கை வெட்டி அவர் சொன்னது . பாலன் சொல்லி ஒரு கருத்தாய்வு நடந்ததுஅந்த  கருத்தாய்வில் முடிவானது இன்று எங்கள் அறிக்கையாக பாலனிடம் கொடுக்கவுள்ளோம் . அதை பற்றிய உன் அபிப்பிராயமும் தெரிவது அவசியம் என்பதால் உன்னைப்பார்க்கவந்தோம் என்றார்

நான் என்னுடைய நிகர்நிலையை இழந்துகொண்டிருந்தேன் . .அவரின் பீடிகை பலமானதாக இருந்தது . “இதில் என் கருத்தை அறிய என்ன வந்திருக்கிறது . சரி தெளிவாக பதிவு செய்ய்துவிடலாம் , எந்ததோன்றி , எதைப்பற்றியது என்று சொன்னால் என் கருத்தை சொல்வேன் . ஆனால் அதற்கும் இப்பொது என்ன அவசியம் என்று எனக்கு தெரியவில்லை . நடந்தது உங்களுக்கும் உடன்பாடில்லை என்பதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியத்தில் நான் இல்லை . உங்களுக்கும் அது தெரியும் . நான் சொல்ல வருவது . அந்த நிகழ்வினால் நான் அடைந்த புரிதல் ஒருநாளில் வந்ததல்ல.

அரசியல் விளையாட்டல்ல ,இப்பொழுது நிகழ்வது பெரிதும் வருத்தமளிப்பதாக இருப்பது சட்டமன்ற தலைவர் தேர்தலின்போது நிகழ்ந்த அந்த அதிர்ச்சியில் எனக்கு ஏற்பட்ட திறப்புகள் ஏராளம்  . நான் நினைத்ததுபோல இது ஒரு சிறிய உலகமன்று , ஒருநாள் இல்லை ஒருநாள் இந்த சிறிய உலகை விட்டு வெளியில் வந்தேயாகவேண்டும் . வெளியில் நாம் யார் என்பது ஆகப்பெரும் கேள்வி . அன்று அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பூங்காவனம் நம் கையறு நிலையை சொல்லி கண்கலங்கிய போது நம்மில் எவர் கண்கலங்காதவர் . கட்சிக்கும் நமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை எனும்போது, ஆட்சிக்கு நமக்கான இடம் என்ன என் கேட்பதை போல ஒரு மடமை பிறிதொன்றில்லை

இருந்தும் ஒருநாள் வளர்ந்து வெளியில் நிகழும் அரசியலில் நாமும் ஒரு ஆள்தான் என தருக்கி நிமிரும் காலம் ஒன்று வரும் என்பது, கிருஷ்ணமூர்த்தியின் நுழைவிற்கு பிறகு முழுவதுமாக தகர்ந்து போனது . நமக்கொரு சிக்கல் வராது நமது தலைமை நம்மை காத்துக்கொடுக்கும் என்கிற நம்பிக்கை இழப்பே , பிறிதெதையும் தாண்டி முன்னால் வந்து நிற்கிறது . அந்த காற்றில் பாலன் பறப்பது கண்முன் நிகழ்வு .எதைக்கொண்டும் இதை மறித்துவிடமுடியாது , நான் இங்கு பாலனை குறை சொல்லவரவில்லை

ஆனால் அதுதான் எதார்த்தம் . நமது அலுவலகத்திற்கு புறமே உள்ள அரசியல் பொதுவெளியில் . நாமும் ஒரு அங்கம்தான் என நிரூவுவதற்கான ஒரே வாய்ப்பை நாம் தொலைத்து நிற்கிறோம் . “இயக்கம்  இனி என்ன”  என்பது நமது பேசுபொருளே அல்ல . அது ஏறக்குறைய நம்கைவிட்டு போய்விட்டது . அதை பற்றிய கருத்தாய்வு என்பது நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வது . அந்த கேள்வியினால் விளையும் பயன் நமக்கானது அல்ல . நான் அரசியலுக்கு லாயக்கில்லை . இதுவரை நான் ஆற்றியதெல்லாம் அரசியலை போல ஒன்று . ஆனால் நிஜமான அரசியலை பார்த்தமாத்திரத்தில் நாம் தெறித்துப்போனோம் .

உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் வாயக்கவில்லை .உப்பளாம் விடுதியில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பிறகே நாம் இதுவரை செய்தது ஒன்றுமேயில்லை என்பதைவிட , அதிர்ச்சியானது மட்டுமல்ல விபரீதமான உண்மை, நாம் இதுவரை பயணித்தது வந்தது அதற்கான பாதையேயல்ல என்பதுதான்  . இயக்கம் பற்றி பேச ஒன்றில்லை நான் பாலனை பார்த்து அவருடனான நல்ல நட்பின் காரணமாக அவருக்கு தேவையானதை செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன் அவ்வளவே . அதற்குஅரசியல்என்று பேர் என்று நீங்கள் சொல்லுவீர்களேயானால் உங்களை போன்ற மொண்ணைகள் பிறிதொருவரில்லை

இவ்வளவிற்கும் பிறகு நான் உங்களுடன் அரசியல் என்கிற ஒன்றை பற்றி பேசுவது அன்று கூடியிருந்த திரளின் நடுவே என்பொருட்டு பாலன் கேட்ட கேள்வி ஒன்றே இத்தனை வருஷா உழைப்பிற்கு போதுமானது . அது என்றைக்குமானது . என்றேன். நான் பேசிமுடிக்கும்வரை யாரும் குறுக்கிடவில்லை . அவர்கள் அனைவருமே மிக நுட்பமான அரசியலுக்கானவர்கள் . நான் பேசியது அனைத்தையும் சொல்லித்தான் புரியவேண்டும் என்கிற அவசியமில்லாதவர்கள் , நானும் அவர்களுக்கு புரிவதற்காக இதை சொல்லவில்லை, என் தற்போதைய நிலை இது என கூறுவதற்காக வைக்கப்பட்டது மட்டுமே . அதுவரை அமைதியாக இருந்தவர்கள் சுப்பாராயன் தொண்டையை செறுமியதும் அவரை திரும்பிப் பார்த்தனர் . சற்று நேர அமைதி கிழிக்கக்கூடிய பருப்பொருள்போல அனைவரையும் சூழ்ந்திருந்தது . அனைவரின் மௌனம் , என் தரப்பு வார்த்தைகளுக்கு அப்பால் தொடர்பற்றதாக எங்கோ இருந்தது அவர்கள் சொல்லவந்திருந்த சொற்கள் . அந்த மௌனம் கலையாமல் அவர்கள் எழுந்து செல்வார்களேயானால். எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கும் . வேறு ஏதாவது பேசி கலைவது அனைவருக்கும் உகப்பானதாக இருக்கும் என எண்ணினேன் .


வளர்வது ஆரோக்கியமானது தேவையற்ற இடத்தில் வளர்வதைப்போல வ்யர்த்தம் பிறிதொன்றில்லை , ஆனால் இவர்கள் நல்ல நண்பர்கள் , அரசியல் என்கிற விஷயத்தில் உள்ள எதார்த்த இன்று நான் பேசியது , கொஞ்சம் கடுமையாகி விட்டது . பலமுறை இதைப்போன்ற விவாதம் பலவற்றை நிகழ்த்தியுள்ளோம் . இதற்கு முன்புகூட இதை போல பலமுறை கூடியிருக்கிறோம் , அவையெல்லாம் எல்லோரும் சேர்ந்து ஒரு பயணத்திற்கான இலக்கை அடைவதை குறித்தாக இருந்தது , அப்போது  இதைவிட நிர்தாட்சண்யமாக  கருத்துக்களை நான் சொல்லி இருக்கிறேன் .ஆனால் இதற்கு ஒரு மாறுபாடு உண்டு இன்று நான் விலகி செல்வதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் . பாலனுக்கு நான் என்னவேண்டுமானாலும் செய்துகொண்டிருக்கிறேன் . அதை நான் அரசியலில் இருந்துதான் செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை என்றதும். சுப்பாராயன் தனது இறுதி அஸ்திரத்தை என்னை நோக்கி ஏய்த  நான்  பேச ஏதும்மின்றி , அமைதியானேன் . என்வார்த்தையை எடுத்து என்மீதே வீசுகிறார் , என்ன சொல்வது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...