https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 28 ஜூலை, 2017

வெண்முரசு புதுவை கூடுகை - 06



வெண்முரசு கலந்துரையாடல் .
பதுவை கூடகை -06
தேதி 27 ஜூலை 2017


கடந்த கூடுகையில் முனவைத்த அதே கேள்வி இங்கு மீளவும்  எழுகிறது. மனிதகுலம் தன்னை கண்டடைய வழியாக அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டு ,அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அடையமுயல்கிறது. இன்றைய நடைமுறை வாழ்வின் ஒரு தருணம், துல்லியமாக அங்கும் ஒரு கதைமாந்தரில் வெளிப்படுகிறது, அதன் மீது எத்தனை அதிமானுஷத்தை ஏற்றினாலும்.அது இங்கும் ஒருவனில் பிரதிபலிப்பதை பார்க்கமுடிகிறது என்பதே அதன் சிறப்புகளில் தலையானது .  

ராமயணம்,மகாபாரதம் இரண்டும் இதிகாசங்கள் என மரபார்ந்த தளங்களில் பேசப்பட்டாலும் , பௌராணிகர்களை நோக்கி தாட்சண்யமற்ற கேள்விகளை சமூகம் கேட்டபடியே இருக்கிறது , காலத்திற்கேற்பராசிக்கியத்தை ஒட்டி , அது புனையப்படைவது நடந்தபடியே இருக்கிறது .வால்மீகி எழுதிய பிறகு அதற்கு விரிவாக்கம் கம்பராமாயணம் என் சொல்லமுடியாது . காலமாற்றத்திற்கு உட்பட்டு , சில விஷயங்களில் அது மூலத்தோடு மாறுபடுகிறது அவ்வளவே. அது கால ஓட்டத்தை மனதில் கொண்டே அவை மாறுபாட்டைகின்றன புனைவின் சுதந்திரமாக அதை பார்க்கவேண்டி உள்ளது

சிறிய கதைமாந்தர்களுக்கு மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரங்களுக்கும் அதே முறைமை காட்டப்படுகிறது. வியாச பாரதத்ததில் வாழாத விசித்திரவீர்யன் வெண்முரசில் நிறைவாக வாழ்கிறான். மணிச்சங்கம் . சங்கம் ஞானத்தின் குறீடென அறியப்படுகிறது . அது வெண்முரசில் அணிசெய்யப்பட்டு மணிச்சங்கமாகிறது.விரிவாக்கம் என்பது ஒரு புறம் நடந்தாலும் ஜெயமோகன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள் அற்புதமாக உருபெற்று கதை தருணங்களில் ஒளிர்கின்றன. மாபெரும் ஆளுமைகளைத் தவிர்த்து அணுக்க சேடிகளின், அமைச்சர்களின், சூதர்களின் பார்வையில் மட்டும் இக்கதையை அனுக வாய்ப்பிருக்கிறது. அவர்கள் பாரதத்தின் பெரும் ஆளுமைகளின் நிழல் பிம்பங்களாக, ஆடிகளாக, விமர்சகர்களாக வருகிறார்கள். கதை ஒழுக்கிற்கு குந்தகம் விளைவிக்காது தனியாக கதைபோக்கிற்கு அடர்த்தி ஏற்படுத்துகிறார்கள் , ஆனால் ஜெயமோகன் அவற்றை துணிவுடன் மையக்கதை மாந்தருடன் இணைத்து உலவவிடுவது . ஒரு கோணத்தில் கேள்விகளாக எழுந்தபடி இருப்பதை தவிறயிலாது.

மக்கள் மனத்தில் வாழும் பாரதம் போன்ற ஒன்றை மறுவாக்கம் செய்யும் போதுஜெசொன்னதுபோல, இடைவெளிகள் , துணைபாத்திரங்கள் போன்றவற்றுடன் அனாயாசமாக தன் கட்டற்ற மொழியில் திறக்கும்போது அவை ஒவ்வொன்றும் ஒரு விதையைப்போல பல பரிமாணங்களை பொதிந்தபடி செல்கிறது. மரபார்ந்தவர்கள் அதை வாசிக்க நேரும்போது ஏற்படும் திடுக்கிடல் தவிற்க இயலாது. ஆனால் ஒரு எழுத்தாளர் தான் நினைப்பதெல்லாம் அதில் ஏறிட்டுவிட முடியுமா , என்றால் பாரதம் போன்ற ஒன்றில் முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு இடத்தில் தன் கருத்தை வைத்தால் அதை சுமந்து செல்லும் கதாபாத்திரத்தை மற்றொரு முனையிலே சமன்படுத்தவில்லை எனில் அது தனித்து நின்று புனைவிற்கு சுவைசேர்க்காது. அப்படி ஒரு பிசிறை இதுவரை அறியவில்லை. மிக நேர்தியாக சொல்லில், நிகழ்வில், தற்காலத்துடன் துணிச்சலாக பயணிக்க முடிகிறது என்பது பிரமிப்பாக இருக்கிறது.மற்றொருபுறம் அதை சமப்படுத்தல் என்பது போல ஒரு சவால் பிறிதொன்றில்லை .என் ஆவல் முழுக்க அவற்றின் உருவாக்கம் எழுச்சி கதைகூற்றின் பங்கு ஆகியவற்றை ஆழ்ந்து நோக்குவதில் கிடைக்கும் பரவசம் அநிர்வசனீயமானது .

அகஸ்தியர் சொல்வது போலஒரு வலையின் கண்ணியை வலையைப்பார்க்காமல் சரிசெய்யமுடியுமா?” என்றார் அகத்தியர். “ஆம், மனிதர்கள் பிறவியின் வலையிலும், குலத்தின் வலையிலும், செயலின் வலையிலும் அமைந்திருக்கிறார்கள் என்பார்கள் நூலறிந்தோர்என்று சொன்ன ஸ்தானகரிடம் அகத்தியர் சுட்டுவிரலைக் காட்டிகோடிவலைகள். கோடானுகோடி வலைகள். ஒவ்வொன்றிலும் கோடானுகோடி கண்ணிகள்முடிவிலியையே அதில் ஒரு கண்ணி என்று சொல்லலாம்என்கிறார்.

அகத்தியர்அந்த வலைகளை அறிய எவராலும் முடியாது. ஆனால் ஒரு வழி உள்ளது. அதை கணஞானம் என்கிறோம். இங்கே இப்போது இக்கணத்தில் மட்டும் அந்த வலையைப்பார்க்கிறோம். இந்த அறையில், இந்த கணத்தில் நிகழ்வதன் ஒரு பகுதிதான் நீங்களும் நானும் இவரும்என்றார். கணாதரரின் விவாதம் போல போகிற போக்கில் எடுத்தாளப்படுகிறது.


நாவலில் இடம்பெற்றுள்ள உபகதைகள் அதன் சொல், குறியீட்டு மற்றும் உளவியல் முறையிலும் அவை சொல்லப்படும் தருணத்துடன் இருக்கும் நுட்பமான பிணைப்பாலும் பலத்திறப்புகளை உள்ளடக்கியதாகின்றன.
இயற்கையாகவே அடர்தியான கருத்துக்களை கொண்ட வியாசரின் கதை சொல்லும் முறை இன்றைய நவீன பேரிலக்கிய  போக்குடன் அது புனைந்து தரும்போது ஆலமரமென கணக்கில்லா விதைகளை விதைத்தபடி செல்கிறது .முதற்கனல்என்பது முதல் பொறி. ஒரு பெண்ணின் சாபமே குருகுலத்தை அழிக்கும்முதற்கனல்என்றாகிறது . இதில் வேடிக்கை இந்த சொல்லை எந்த முக்கிய தருணத்துடன் பொருத்தி இதை கருத்தை அங்கும் கண்டடைய முடிகிறது

அது அம்பையுடையது அல்ல, அதற்கும் முன்னால் கைகூப்பி அறுபது வயதில் பிள்ளைகள் பெற்று இறந்த சுனந்தையின் கனல் , என்பது விசித்திர வீரயனின் கூற்றில் வெளிப்படுகிறது இது பலஆண்டுகளாக நிகழும் ஒரு அலரின் சிறு துகள்களை எல்லா இடங்களிலும் காட்டப்படுகிறது

பிரமாண்டங்களுடன் இணையாது ஆதூரசாலையில் தனித்து வாழும் ஒரு பிறவி நோயாளி, இருத்தலியலின் நுட்பத்தை , நுண்மையில் அறிந்து கொள்கிறான், தனக்கான ஆப்தவாக்கியத்துடன்.

இளங்காற்றில் மகரந்தபீடம் குலையும் மலர்கள். காற்றில் சிறகுகள் பிசிறிய பறவைகள். அவ்வளவு வண்ணங்களையும் ஒருபறவையின் சிறகிலேயே ஒவ்வொரு வேளையிலும் அவை மாறுபட்டுக் கொண்டிருப்பதில் ,இவ்வுலகம் வண்ணங்களின் பெருக்கு. ஒலியின் பெருக்கு. மணங்களின் பெருக்கு. சுவைகளின் பெருக்காக உணர்கிறான். புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை எனகிறான்.

அனைத்தையும் துறப்பதில் கிடைக்கும் பிறவிப்பயனை அணைத்தையும் அடைவதில் பஞ்சேந்திரியங்களின் வழியே புலனகளால் அடைகிறான்


இரு விளிம்பு நிலை பெண்களுடனான அவனது உரையாடல் அவன் அடைந்துள்ள ஞானத்தின் வெளிச்சமாக காட்டப்படுகிறது. விசித்திரவீரியன் விழிகளை அவளைநோக்கித் திருப்பிநான் ஆணென்று உணராத ஒரு கணமும் இல்லை அன்னையேஎன்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்.”விசித்திரவீர்யனின் அவள் மீது உள்ள அன்பினால் மேலும் சில காலம் வாழவிரும்பும் விழைவை தன் தாயிடம் வெளிபடுத்துகையில் சத்தியவதி அவன் ஒரு கொடிவழி தொடர்ச்சி இடை மட்டுமே அதைதாண்டி அவன் ஒன்றுமில்லை என்பதை , அவன் ஆணா என்கிற சீண்டலை மிக அற்புதமாக ஏற்று தான் மட்டுமே ஆண் என்கிறான்

கசப்பானதாக இருப்பினும் உண்மை ஒரு நிறைவையே அளிக்கிறது என்றான். சத்யவதி அவனை நிலைத்த விழிகளுடன் நோக்கிவிசித்திரவீரியா, வாழைப்பூ இதழ்களைக் களைந்து உதிர்த்துவிட்டு கனிமட்டுமாவதுபோல மனிதர்கள் அவர்கள் மட்டுமாக ஆகும் ஒரு வயது உண்டு. நான் அதில் இருக்கிறேன். இன்று நான் என் விதியை முழுமையாகவே பார்த்துவிட்டேன். எங்கோ ஒரு மீனவர்குடிலில் பிறந்தேன். நதிமீது பித்தியாக அலைந்தேன். பேரரசியாக இந்த அரியணையில் இன்று அமர்ந்திருக்கிறேன். இத்தனை வேடங்கள் வழியாக விதியொழுக்கு என்னை கொண்டுசெல்லும் திசை என்ன என்று இன்று அறிந்தேன். என் அத்தனை முகங்களையும் இன்று களைந்துவிட்டேன். நான் இன்று சந்தனுவின் மனைவி மட்டுமே. என் கடமை மேலுலகம்சென்று அவரைப்பார்க்கையில் அவரிடமிருந்து நான் பெற்றவற்றை சிதையாமல் கையளித்துவிட்டேன் என்ற ஒற்றைச்சொல்லை நான் சொல்லவேண்டும் என்பது மட்டுமே. வேறெதுவும் எனக்கு இன்று முதன்மையானது அல்லஎன்கிறாள்


இனி தன் உடலை  வழிபட முடியாது. பொய்த்தெய்வங்களை வழிபடுபவன் நரகத்துக்குச் செல்கிறான் என்று அறிந்திருக்கிறேன் என்கிறான் . புகழும், செல்வமும், உடலும்தான் மூன்று பொய்த்தெய்வங்கள் என்பார்மணிச்சங்கம் , பல பொருள் பொதிந்ததாக இரும்பினும். சங்கம் ஞானத்தின் வெளிப்பாடு , அது அழகுற சொல்லப்பட்டதால் மணிச்சங்கமாகிறது. பூரண வாழ்கையை இருத்தலியலின் மூலம் வாழ்ந்து முடிப்பதில் , இன்றைய நடைமுறை வாழ்வியலின் மிக அணுக்கமாக உணரவைக்கிறது.


முதுமையில் கருவுற்று குருதியையும் கண்ணீரையும் முழுக்க மகவுகளுக்கு அளித்துவிட்டு இறந்த சுனந்தையின் பழி அன்றே இந்நகர் மேல் விழுந்துவிட்டது என்கிறான். “என் உடலின் அநாகதத் தாமரையில் அனலில்லை என்று சித்தர் சொன்னார். அங்கே சுனந்தையின் குளிர்ந்த கண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.” என்கிறான் விசித்திர வீரயன்.

அதே சமயம் விசித்திரவீரியன் கண்கள் ஒளிரஅவள் மூன்று வியாழவட்டக்காலம் கன்னிமாடத்தில் சிறையிருந்தாள். அப்போது எத்தனை கனவுகள் கண்டிருப்பாள். எத்தனை ஆண் உடல்கள் என்கிற மற்றொரு கோணத்தை சொல்லி சிரிக்கிறான் 

சங்குகரணன் சொல்லும் அந்த குழந்தை கதை குறியிட்டுரீதியானது , தங்கள் நாகர் தொல்கதை என்னும் கடலின் மற்ற உலக்கதைகள் ஆறுகள் என சங்கமிக்கும் என்று தொல்மரபாக பிரமிக்க வைக்கிறான்.
அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை கையில் அந்த வெண்மலர் இருந்தது , பாண்டுவையும் அடுத்த தலைமுறையின் முதற் கிழங்காகவும் வெளிக்காட்டும் குறியீடாகிறது.

மணிச்சங்கத்தில் சங்குகர்ணன்..வானமென கறுத்துவிரிந்த என் அன்னை கத்ரு நான் விரிந்து வந்த முட்டையை பிரியமுள்ள கண்களுடன் குனிந்து நோக்கி என்னை அவ்வாறு அழைத்தாள். காலங்கள் என் மீது காற்றென ஒழுகிச்செல்கின்றன. அரசே கேள், நான் அழியாதவன். என்னை குருகுலத்து இளவரசன் அர்ஜுனன் என்பவன் காண்டவ வனத்தில் எரிப்பான். அவன் பெரும்பேரன் ஜனமேஜயன் என்பவன் என்னை சர்ப்பசத்ர வேள்வியில் எரிப்பான். நான் அழிவின்மையின் இருளில் இருந்து தோல்சட்டையைக் கழற்றிவிட்டு புதியதாகப் பிறந்தெழுவேன்…”தட்சகனின் விதி எக்காலத்தும் தன் இனத்தின் வித்து இங்கு விழலாகாது என்பதில் அவனும் கவனமாய் இருக்கிறான். அதை சங்குகர்ணனின் விசித்திரவிரயனை கடந்து பார்க்கும் குறியீட்டில் வெளிப்படுகிறது



  • கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...