https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 30 செப்டம்பர், 2017

அன்பிற்கினிய திரு சுனீல் அவர்களுக்கு

ஸ்ரீ :

பதிவு :279 \ தேதி 30 செப்டம்பர் 2017








அன்பிற்கினிய திரு சுனீல் அவர்களுக்கு . 


வணக்கம் , ஜெ தளத்தின் மூலமாகத்தான் நீங்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தீர்கள் . அதன் வழியாகவே நான் காந்தி டுடே தளத்திற்கு சிலசமயம் மேய்வதற்கு வந்திருக்கிறேன் . ஜெ யின் “இன்றைய காந்தி” கொடுத்த அளப்பறிய புரிதல்களின் உந்துதலால் முழு மனதுடன் படிக்க வேண்டுமென நான் புக்மார்க் வைத்திருக்கும் தளத்தினுள் அதுவும் ஒன்று . உங்களை புதுவை கூடுகையில் நேரில் சந்தித்தது ஒரு இனிய நினைவாக இருந்து கொண்டிருக்கிறது . 

தங்களின் சமீபத்திய பதிவு திரு எஸ்ரா பற்றியது . செறிவான பதிவாக மருத்துவம்சார்ந்து இருந்தாலும் அது அவரின் ஆளுமையை பற்றி சொல்வாதாகவும் அவர் மீது உங்களின் மதிப்பு முழுமையாக வெளிப்பட்டிருந்தது .நானும் அவரை புதுவையில் ஒரு கூடுகையின்போது பார்த்தேன் . அவரது ஆக்கங்கள் ஏதும் வாசித்திருக்கவில்லை எனவே அறிமுகம் செய்து கொள்ளவில்லை . எஸ்ரா எனக்கு அறிமுகமானது ஒத்திசைவு தளத்தில்தான் . உங்களைபோன்றே ஜெ வும் எஸ்ரா பற்றி அதே அபிப்ராயம் கொண்டிருக்கிறார் .அவரை மட்டுமல்லாது ஒத்திசைவை பற்றியும் உயர்ந்த எண்ணமே எனக்கு காணக்கிடைக்கிறது . இலக்கிய உலகிற்கு தற்செயலாகதான் ஜெ தளம் மூலமாக உள்நுழைந்தேன் . 

பொதுவாகவே எல்லோரையும் கழுவேற்றுபவர் ஒத்திசைவு . விதி விலக்கு ஜெ . நான் எனது எழுத்து மொழியை கூர்கொள்ள சில தளத்திற்கு செல்வது வழமை ( சமீபமாக ஒத்திசைவு தளம் செல்வதை நிறுத்திக்கொண்டேன். ஏதோ ஜாஸ்தியானதாக உணர்வு ) ஒத்திசைவு பற்றி ஜெ வைத்திருக்கும் எண்ணமே அவரை பார்க்கவைத்தது . ஆனால் எஸ்ராவை ஏன் இப்படி கழுவுகிறார்.

புரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் . சமயம் கிடைக்கும்போது விளக்கினால் நன்று.

கிருபாநிதி அரிகிருஷ்ணன்
27 செப்டம்பர் 2017




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...