https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

அடையாளமாதல் - 182 * தகுதியை எதிர்நோக்கும் வாய்ப்பு *

ஶ்ரீ:




பதிவு : 182 / 257   தேதி :- 08 செப்டம்பர்   2017

* தகுதியை எதிர்நோக்கும் வாய்ப்பு *


தனியாளுமைகள் - 09”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-04



வல்சராஜ் இந்தப்பகுதியை சேர்ந்தவர் . கேரள பாணி அரசியலில் எழுந்து வந்தவர் , புதுவையில் காங்கிரஸுக்கு பிரதான எதிர் கட்சி என்றால் அது திமுக மற்றும் அதிமுக . ஒன்றுடன் கூட்டணி அமையுமானால் பிறிதொன்று எதிர்நிலைக்கு செல்லும் . ஆனால் மாஹே பகுதி கேரளா அரசியலை ஒட்டி அதன் பிரதான எதிர் கட்சி இடதுசாரிகள் . அவர்களுக்கு புதுவை அரசியல் ஒரு இளிவரலை போல தோன்றுவதால் , இதிலிருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் . வல்சராஜுக்கும் தனது கேரளா தான் நாடு என்கிற மனோபாவம் எப்போதுமிருக்கும் .  இங்கிருந்து ஒருநாள் பயணம் மாஹே . தேர்தல் களம் மிக சிக்கலானது . அது அவரை பெரும்பாலும் மாஹேவிலேயே இருக்கும் படி நேர்ந்துவிடும் . அப்போது இங்கு இளைஞர் காங்கிரஸ் தலைமை இல்லாதபோது மாற்றுத்தலைமை அவசியமாகிறது.






வல்சராஜ் அரசியல் காரணங்களுக்காக பெரும்பாலும் மாஹேவிலேயே தங்கிவிடுவதால், இங்கு கட்சி பணி என ஒன்றும் நடைபெறவில்லை . இந்த இடைவெளியில் நான் ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்திய வந்த சிறு கூடுகைகளின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதை தாண்டியது . வாரத்திற்கு குறைந்தது மூன்று கூடுகை என இலக்கு வைத்து செயலபட்டேன் . சில சமயங்களில் அவை ஐந்து என்றுகூட தொட்டதுண்டு .அவற்றின் மூலமாக ஏறக்குறைய புதுவையின்  அனைத்து பகுதி முழுவதுமாக அது இணைக்கப்பட்டுவிட்டது 

அன்று காலை பத்திரிக்கையில் வந்திருந்த ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இரண்டு செய்திகள்  ஒருவித தார்மீக கோபமாக எழுந்தது. . ஒன்று  பால் விலை உயர்வை பற்றியது.அதன் விவசாய அமைச்சர் வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் .கேபினெட் மீட்டிங்கில்  விலையேற்றத்தை  ஏகமனதாக தீர்மானத்தின் அடிப்படையில் அது நிறைவேறி இருந்ததை பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்டுருந்தார்கள்  . அதன் பிறிதொரு செய்தி வலது கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் இரண்டு நாளில் நடக்கவிருக்கும் பால் விலை உயர்வை கண்டித்து போராட்டத்ததை நடத்தவிருப்பதாகவும் அதன் தலைமை அதே விவசாய அமைச்சர் என்றிருந்தது  . இந்த முரணுக்கு பதிலடி காங்கிரஸிலிருந்து கொடுக்கப்படவேண்டும் . அது வழமை போல இன்றோ நாளையோ அறிக்கை வெளியிடும் . ஆனால் என்னை பொறுத்தவரை இது போராட்டவடிவில் இருக்க வேண்டும் என நினைத்தேன்

அன்று வல்சராஜ் இல்லாததால் . தலைவரிடம் இதை பற்றி பேசலாம் என அவரை சந்தித்தேன் . முதலில் அவர் எண்ணமறிந்த பிறகே நாம் நினைப்பது சொல்வது உசிதம் , என அமைதியாக இருந்தேன். பின் மதியம் அவரை சந்திக்க வந்த அனைவரும் சென்ற பிறகு அவர் மத்திய சாப்பாட்டிற்கு அமர்வார் . அதுதான் எனக்கான நேரம் . அவர் சாப்பிட அமரும்  நேரம் அவரை யாரும் சந்திக்கவியலாது என்பதால், முக்கிய விஷயங்களை தடையின்றி பேச நான் அந்த நேரத்தையே தேந்தெடுப்பது வழமை . அவரும் அன்று பேசும் மனலிலையில் இருந்தார். நான் பால் விலையுயர்வை பற்றியும் வலது கம்யூனிஸ்ட் களின் இரட்டை நிலைப்பாட்டை சொன்னபோது , நான் எனது திட்டத்தையும் சேர்த்தே சொன்னேன் . ஆட்சியை இழந்து இருக்கும் இந்த காலகட்டத்தில் பெரியதாக எதையும் செய்யவியலாது எனபதை அவரும் அறிந்திருந்தார் . மிக உற்சாகமாக என்னுடைய சிறு கூட்டம் பற்றிய சிந்தனை அவருக்கு ஏற்புடையதாய் இருந்தது . கண்டனப்போரட்டம் நிகழவிருக்கும் தகவல் சொல்ல , அதை செயல்படுத்த தேவையான ஐந்து நாள் கால அவகாசத்தில் அதை செய்திமுடிக்க முடியும் என்றதும் , சிறிது தயக்கத்துடன் ஒப்புதல் கொடுத்தார்

நான் முன்பே திரட்டிய அமைப்பை பெருமளவில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவைத்தேன் . இளைஞர் காங்கிரஸ் தலைவர் இல்லாமால் நிகழ்ந்த கண்டனப்போராட்டமிது  . கட்சி அலுவலகத்தில் தலைவர் துவக்கி  வைக்க கடற்கரை நேரு சிலை அருகே முடிவுற்றது . சுமாரான கூட்டம் என்றுதான் சொல்லவேண்டும் ஆனால் , பலரை திரும்பி பாரக்க வைத்தது அதன் ஒழுங்கு . கம்யூனிஸ்ட்களின் பாணியில் நிகழ்ந்த முதல் போராட்டம் . பதாகை ,கோஷம் , கொடி முனபின் ஒரேவித ஒலி அமைப்பு . வரிசை ஒழுங்குபடுத்தும் நிர்வாகிகள் என எல்லாம் மிகச்சரியாக அமைந்திருந்தது பத்திரிக்கையின் கவனத்தை ஈரத்தது. செய்தி முக்கியத்துவம் பெற்றதால் எங்கும் பேசப்பட்டதுஅத்துடன்  மாறுபாடு அடைந்த செயல்முறை ஒரு அமைப்பு தனியாக செயல்படத்துவங்கியதை அறிவிக்கும் நிகழ்வாக அது நடந்து முடிந்தது . பத்திரிக்கையின் கவனம் எனது செயல்பாடுகள் மீது குவியத்துவங்கியது . அதனால் நல்லதும் அல்லாததும் நடந்தது.

அதன்பிறகு தொடர்ச்சியான சிறு சிறு அறிக்கைகள் வெளியிட துவங்கினேன் பத்திரிக்கையாளருடன் நல்லா தொடர்பு கிடைத்தது இந்த கட்டத்தில் . அனைவரையும் அரவணைக்கும் போக்கும் பிளவிற்கு வழிவகுக்காத அணுகுமுறையும் தலைவரது பிரதான குணம் . கிருஷ்ணமூர்த்தி ஆட்கள் அனைத்திலும் பங்குபெறுவதனூடாக . தங்கள் நேரத்திற்கு காத்திருந்தனர் . இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட்டது அதிரடியாக நடந்துவிட்டதால் . அதில் வர இருக்கும் நிர்வாகப்பொறுப்பிற்கு காத்திருந்தனர்

நான்  நம்பிக்கை இழந்து சிதறிக்கிடந்த சண்முகம் அணிகளை ஏறக்குறைய தொகுத்துவிட்டேன் . ஆனால் அது எனது நம்பிக்கையான குழுவல்ல . அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தேன் . முடங்கிப்போன இயக்கத்தை முடுக்கிவிட கொடியேற்றம் நடத்துவது வழமை . நான் அதை தலைவரிடம் சொன்னபோது அதை உடனே தலைவர் அங்கீகரித்து என்னிடம் நடத்த சொன்னபோது நான் உற்சாகமானேன் . அவர் அதை ஒரு சிறு நிகழ்வாக நடத்த முடிவெடுத்திருந்தார். நான் என் அணுகுமுறையை மாற்றி செயல்படுத்த அதை பிரமாண்டமான ஒருநாள் விழாவாக திட்டமிட்டிருந்தேன்  . அதற்கு பின்னியில் கிராம அமைப்பில் நான் நினைத்த திருத்தங்களை செய்ய  அது சரியான      நேரமென கணித்திருந்தேன் . எனது வயது அனுபவம் இவற்றைக்கொண்டு தலைவரிடம் பேசி அவற்றை செயல்படுத்துவது சாத்தியமில்லாதது . களத்தில் நிகழ்பவைதான் அவற்றை செய்யத்தூண்டும் . மேலும் அது முழு நிர்வாக சீர்திருத்தத்திற்கு அறைகூவுவது . இந்தமாதிரியான கணக்கும் தலைவரை தயங்கவே செய்யும்

நான் தலைவருக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விழைந்தேன் . அவரை நாடி வந்து அவரது மனம்போல நடந்து அதன் மூலமாக தங்களின் இடத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மத்தியில் நான்வேறுமாதிரியான சிந்தனைப் போக்குள்ளவன் என்னை ஒருபோதும் அங்கு  கொண்டு நிறுத்தியதில்லை .அதற்கான போட்டிகளும் மிக சிக்கலானவை மற்றும் தலைவரின் கனிவான பார்வைக்கு ஏங்கி நிற்பவை  , அவை தனியர்களின் வழி . அரசியல் நிலைகள் எப்போதும் நேர்மறையான திரள்களின்  தொகையில் சில விஷயங்கள் முடிவு செய்யப்படுபவைகள் . அவற்றை விழைபவன் எதையும் மன்றாடுவதில்லை . அதை எடுத்துக்கொள்வான் . அதுவே எனக்கானான வழி . அவரை தினசரி சந்திப்பவர்களில் ஒருவனல்ல நான் என்பதை நான் அவருக்கு உணர்த்தினால்தான் எனக்கான பாதை எழுந்துவரும் . நான் அதை செய்துபார்க்கும் நிகழ்வாக அதை வடிவமைத்ததால் அது மிக பிரம்மாண்டமாக உருவெடுத்தது. ஊழ் எனக்கான உணவை எப்போதும் ஆபத்தான இடத்திலேதான் வளர்க்கிறது வைக்கிறது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...