https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

ஆழமற்ற நதி சிறு கதை (ஒரு விள்ளண்ணம்)

ஶ்ரீ:

பதிவு: 277  / தேதி 28. செப்டம்பர் 2017





ஜெயமோகனின்
ஆழமற்ற நதி .
சிறுகதை .  

ஒரு விள்ளண்ணம்





ஒரு குறியீடு போல இருக்கும் நதியை, ஜஸ்டிஸ் காசிநாதனை படிக்கட்டின் தொடக்கத்தில் நின்று முகத்தைஅலட்சியமாக தன்னை பார்க்கவைக்கிறது . வேர்விட்டு வளர்ந்திருக்க வேண்டிய குடும்ப உறவுகள் மேட்டிமையின் உள்படிப்புகளில் சிக்கி மரத்துபோன இதயங்களை கொண்டவரகளாக , தங்களை பற்றி மட்டுமில்லாது குடும்பத்தில் எவருடனும் புரிதலற்ற ஆழமற்ற உறவுகளை பேணுவதை சொல்லவருகிறது.அதற்குறிய தண்டனையை அந்த ஆழமற்ற நதியின் நீர்ப்பரப்பு தீட்டப்பட்ட கத்தியின் பட்டைபோல கரியநிறமான ஒளி கொண்டு காத்திருக்கிறது.

அவரும் பாக்கத்தான் பெரியவராக தெரிந்தாலும் ஆழமே இல்லாத. பேப்பர் ரிவர்னு  என்று அவருக்கு  உதவ வந்த கதை சொல்லியான வக்கீல்குமாஸ்தாலசுந்தரேசன் சொல்லுகிறார் .ஆழமற்றவர் எல்லாவற்றிலும் அப்படி என்பதாக ,காசிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய எல்லாரையும்போலத்தான் அவரும் என்றாலும் கண்டபடி அலைந்து கைநீட்டமாட்டார் என சுருக்கமாக அவரது தன்னறத்தை முடித்து வைக்கிறார் . 

எதனுடனும்  கலக்கும் நதிக்கு மாறுபட்டு எதிலும் கலக்காதே பிறரை கையாள நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அவரை பேச்சுக்கு இழுக்கவே முடியவில்லை..என அங்கலாய்கிறார் கதை சொல்லி.அது அவரது சுபாவம் என்பதை செல்பேசி வண்டு போல அடிக்கடி அதிர்ந்தபடியே இருந்ததை கவனிக்கிறார்.

தன்மீதுள்ள கழிவிரக்கதால் பிறர்மேல் வண்மம் கொண்டு காசிநாதன் முகம் எரிவதுபோல செவ்வொளி கொள்ள கண்ணாடிச்சில்லுகள் சுடர்ந்து அணைந்தன.. தன்னைமட்டுமின்றி எல்லோரையும் அதே மனோபாவம் கொண்டவர்களாக  உருவாக்கியிருக்கிறார். அவரது மனைவியை பற்றி சொல்லும்போது அவள் முனகல் போன்ற குரலில் “இங்கதானா?” என்றாள். “ஆமாம்மா . இதான் பல ஆண்டுகளாகப் பேசிப்பழகியவள். சலிப்பு போன்ற முகம் ஒன்றைத்தான் என்னைப்போன்றவர்களுக்கு அவர்கள் அளிப்பார்கள் என்கிறார் கதைசொல்லி.காசிநாதனின் மகன் ஆறுமுகம் எரிச்சல் தெரிந்த முகத்துடன்எல்லாம் ரெடியா? விடியறதுக்குள்ள முடிஞ்சாகணும்கூட்டம்கூடிரப்பிடாதுஎன்றார். தூக்கமில்லாமையால் கண்களில் வளையங்கள் தொங்கின. குடியால் நீர் மீன்னும் கண்கள்.
-
அவரது மனைவி, இஸ் த வாட்டர் டர்ட்டி?” என்றாள். ஆறுமுகம் முகம்திருப்பிக்கொண்டதிலிருந்து அவள் அவர் மனைவி எனப்புரிந்து கொள்கிறார் , பின்னர் சுவாரஸ்யம் ஏற்பட்டு சிலந்தி வலைகட்டுவதுபோல அந்த உறவுகளை பின்னி விரிவாக்கிக்கொள்கிறார். காசிநாதனுக்கு இரண்டு மகன்கள், ஒருமகள். மூத்தமகன்தான் இறந்தவர். அவருக்காகத்தான் சடங்கு. இளையமகன் ஆறுமுகமும் அவருடைய மகனும் மகளும் வந்திருக்கிறார்கள். இறந்தவனின் மகன் மட்டுமே வந்திருக்கிறான்.

“பொதுவா பித்ரு தர்ப்பணம் பண்ணுவாங்க… சாதாரணமா சமஸ்தாபராதபூஜை எல்லாரும் பண்றதில்லை. இந்தமாதிரி வீட்டிலே யாருக்காவது கெட்டசாவு வந்தா…” என்றவுடன் அவள் சிவந்தமுகத்துடன் திரும்பியாருக்கு கெட்ட சாவு?” என்கிறாள் .“இல்ல, நாம பண்ணின தப்பால…” என்கிறார் . “என்ன தப்பு? யார் பண்ணினது?” என்று அவள் உரக்க கேட்கிறாள் .“இல்லம்மாஎன அவர் தடுமாறுகிறார் .

பிழையோ பாபமோ செய்தவங்கதான் பிராயச்சித்தம் செய்யணும்” என அதே கேள்வியை நம்பூதிரி  எழுப்புகிறார் அவர்களுக்குள் ஏற்படும் குற்றவுணர்வை கலைய அவரு யாருண்ணு தெரியக்கூடாதுன்னா எல்லாரும் சேந்தே பண்ணலாம் என உபாயமும் சொல்கிறார்.இவன்தான்… பிராயச்சித்தபூஜை செய்யவேண்டியது இவன் மட்டும்தான். என்கிறார்  காசிநாதன். துனுக்குறும் நம்பூதிரி அவனை கூர்ந்து நோக்கியபின் “இவரா பாபம் செய்தார்?” மனசறிஞ்சு செய்தாத்தான் பாபமும் புண்ணியமும்,பிராயச்சித்தமும் மனசறிஞ்சு செய்யணும்என்று தனது தொழில்முறை தர்மத்தால் அதை கடக்கிறார் 

காசிநாதன் “இவன்தான் செய்யணும்” என்கிறார் உறுதியாக நம்பூதிரி அவர்களை மாறிமாறி நோக்கிவிட்டு “சரி, இந்த ஜென்மத்திலே இப்டி ஒண்ணையும் முடிச்சிட்டுப்போகணும்னு அவருக்கு பிராப்தம் இருக்குன்னு தோணுது… செஞ்சிருவோம்” என்கிறார்

பிராயசித்தம் செய்யும் மகன் தந்தையைப்பற்றி டிரைவர் கசப்பாக செத்துப்போனவர் இதை கையால தொட்டதில்லை 
“அது வாசல் ஜன்னல் ஒண்ணுமே இல்லாம ஆறுபக்கமும் மூடின வீடு மாதிரி சார். வெளியே இருந்து ஒண்ணுமே உள்ள போகாது” என்றார் சண்முகம் எப்டியோ உள்ள ஏதாவது போச்சுன்னாக்க வெளியே எடுக்கவும் முடியாதே” என்கிறார் கதைசொல்லி அதன் உட்பொருள் அறியாமல் 

எல்லாம் முடியும் தருணத்தில் ஒரு விசும்பலோசையைக் கேட்கிறார் . கதிரின் உதடுகள் இழுபட தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தான். கண்ணீர் வழிந்து மடியில் சொட்டிக்கொண்டிருக்கிறது .காசிநாதனை முகம் உச்சகட்ட அச்சத்தில் இருப்பதுபோல கோணலாகியிருந்தது. கைகால்கள் உதற படிகளில் மேலேறி மூச்சிரைக்க விரைந்து அகல்கிறார்.அவர்கள் அனைவருமே கதிரை ஒருகணம் நோக்கிவிட்டு படிகளில் ஓடி மேலெறிச்சென்றனர்.

ஆறுவழியும் முடப்பட்ட ஒன்றில் என்ன நுழைந்தது என்கிற அச்சம் காரணமாக , கால்கள் நடுங்கிக்கொண்டிருந்த கதை சொல்லியும். கதிரின் அழுகையை மீண்டுமொருமுறை நோக்கிவிட்டு பின்காலெடுத்து வைத்து படிகளில் ஏறி. மூச்சிரைக்க மேலே வந்து நின்றுகொண்டேன். பின்னர் கீழே பார்க்கவேயில்லை.என்கிறார் . ஆழமற்ற நதியில் காசிநாதன் குப்புற விழுந்து மூழ்கி முவதுமாக நனையாது எழுகிறார் . அது ஆழமற்றதால் யாரையும் முழுமையாக கழுவிக்கொள்ள விடுவதில்லை..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...