https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 16 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -1

ஶ்ரீ:



அரிய நிகழ்வும்  வெறுமையும் -1

பதிவு :  387 / தேதி :- 15 ஜனவரி  2018 





வாழ்வின் சில நிகழ்வுகளை நாம் திட்டமிடுவதில்லை அந்த தருணங்கள் நம் மீது வலிந்து வந்தமர்கின்றன , வேளுக்குடி ஸ்ரீ..வே.கிருஷ்ணன் ஸ்வாமிகளின் மார்கழி மகோற்சவம் அப்படிப்பட்ட ஒன்று .சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்வாமிகளிடம் நான் திருப்பாவை உபன்யாசத்திகிற்கு புதுவைக்கு வர வேண்டும் என்கிற விண்ணப்பம் வைக்கும்போது , அவர் சிரித்தபடி புதுவைக்கா?  என கேட்டு தன்னால் வரமுடியாத காரணத்தைக் கூட  அவர் சொல்லவில்லை .

அந்த சந்தர்பத்தில் அது மிகை விண்ணப்பம் என்பதை அறிந்தே  நான் முன்வைத்தால் அவர் வர இயலாமைக்கு காரணம் அவர் சொல்லாமலேயே எனக்கு தெரிந்தது . இருந்தும் நான் கேட்டேன் என இருக்கட்டும் , ஒருநாள் புதுவைக்கு வரும் சந்தர்ப்பம் வாய்க்கும், என அவரிடம் சொன்னேன் . அவர் புன்னகையுடன் அதை கடந்து சென்றார் . சில மாதங்களுக்கு முன்பாக எனது நண்பர் பார்த்தசாரதி என்னிடம் வேளுக்குடி ஸ்வாமி மார்கழி திருப்பாவை உபன்யாசத்திற்காக  புதுவைக்கு வரும் வாய்ப்பு அதிகம் என சொன்னபோதே, நான் அதற்கான   தருணம் வந்துவிட்டதாக நினைத்தேன் . ஆனால் கடந்து சென்ற சில வருடங்களில் நடந்தவைகள்  , எனது உற்சாகத்தை மழுங்கடித்திருந்தன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...