https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 30 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 174 * நகைக்க மட்டுமே இயன்றவர்கள் *

ஶ்ரீ:




பதிவு : 174 / 248: தேதி :- 30 ஆகஸ்ட்  2017

*  நகைக்க மட்டுமே இயன்றவர்கள்  *


தனியாளுமைகள் - 02”
(1996 தேர்தல் களம் - 11 )


ஒரு கருத்திற்கு யாராவது மாற்று சொல்லும்போது . தனது அனுபவத்தை முன்னிறுத்தி பிறிதெவரையும் பேசவிடாது செய்து தான்  அதற்கு பின்னல் மறைந்துகொள்கிறார் என்றார் . இது காந்திராஜ் தனது தொழில் சார்ந்து அவர் கண்டடைந்த உளவியல் புரிதலாக இருக்கலாம் . இவ்வளவு தெளிவான புரிதலுள்ள காந்திராஜிடம் அரசியலில் தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள இயலாது போனதற்கு பாலன் கையாண்ட அதே குறுங்குழு அரசியலை முன்னெடுத்தது ஒரே காரணம் . தன்னிச்சையாக வளரும் தனியாளுமைகளின் நிரையே , ஒரு அமைப்பை பலமுள்ளதாக வார்க்கிறது . அதை தடுத்து நிற்கும் தலைவனின் கீழ் உருவாகும் வெற்றிடத்தில் , அத்தகையவர்கள்  நிலை கொள்ளமாட்டார்கள்அவரை சூழ்ந்திருக்கும் வெற்றிட மனிதர்களால் ஆகக்கூடியது ஒன்றில்லைஅவர்கள் தங்களின் தன்மதிப்பின் வழியாக பிறிதெவரிடமிருந்தும் பிறித்து தனியாளுமை என வளர்த்தெடுதுக்கொள்கிறார்கள் அது நிகழாத களம் எதையும் உருவாக்குவதில்லைஅது அவர்களது அரசியல் வீழ்ச்சியாக பார்க்கிறேன் . 



வளர்ந்து விட்ட எந்த கட்சியின் நிர்வாகிகள் அமைப்பும் தலைமைப் பதவியில் உள்ளவர்களை ஒருபோதும்  ஏற்காது . மறைமுகமாக எதிர்த்து செயல்பட ஒரு தருணத்தை நோக்கிக் காத்திருக்கும் . அதை ஒருபோதும் நேரில் வெளிக்காட்டிக் கொள்ளாது . தலமையை எதிர்த்து மாறுபட்ட நிலைப்பாடுகள் வழியாக எழுந்துவரும்  புதியத் தலைமையை ஒருபோதும் அது முன்னின்று ஆதரிக்காது . முடியுமானால் அதை தோல்வியுரசெய்யும் அனைத்துவித உத்துழைப்பின்மையை தயங்காது செய்யும். அதே சமயம் பிறிதொருவரையும் அதை செய்யும்படி மறைமுகமாக தூண்டியபடி இருக்கும் . இவற்றை தன் இடத்திற்கான பேரமாக பயணபடுத்திக் லாபம் அடையும் . மாற்றுத் தலைமை வேறுவழியில் தனது தனி ஆளுமையால் தன்னை நிரூபித்து பதவிக்கு வந்தால் ,இதே குழு எவ்வித தயக்கமுமில்லாது அவர் பின்னே நிரைவகுக்கும் . இதற்கு பொருளியல் ஊழல்  முதல்நிலைக் காரணமென இருக்காது . பதவியும் தங்கள் இருப்பையும் நிலைகொள்ளச் செய்வதைத்தான் பிரதானமாக கருதும் . இதுவே கட்சி அரசியலின் முதல் படிநிலை

ஒரு தலைவன் தன்னை சூழ்ந்து நிறைந்த ஆமைப்பின் சகத் தோழர்களிலிருந்து ஒருநாளும் எழுந்து வர இயலாது , வந்தாலும் மிக விரைவாக அவன் வீழ்சசியடைகிறான். மக்கள் திரளிலிருந்து  எழுகிற தலைவன்  தனது தனியாளுமையால் அந்தத் திரளின் உத்துழைப்பாலே தனது இலக்கை கண்டடைந்து வெல்கிறான் . இதே நிர்வாகிகள் குழு எந்த தடையுமின்றி அவன் பின்னும் நிரைவகுப்பார்கள் . அவர்களை ஆளத்தெரிந்தவனே , எல்லாவற்றிலும் வெற்றி பெருகிறான்.

இது இருபுறமும் உள்ள ஒவ்வாமையை நிகர்நிலை பேணுதல் . அது மானுடர் வெகு சிலருக்கே வாயப்பது இதை விண்ணுரையும் தெய்வங்களே சாத்தியமாக்குகின்றன . ஆனால் புவியின் ஊழ் எதிர்மறை ஆளுமைகளுக்கே வளரும் வாய்ப்பினை கொடுத்து  இந்த புவியின் போக்கை நிர்வகிக்கிறது என்கிற எண்ணமே எப்போதும் தோன்றியபடி இருக்கிறது . காரணம் அதை போன்ற ஒன்றையே நான் பல முக்கிய அரசியல் தருணங்களில்  அவதானித்துவந்திருகிறேன் . அரசியல் சாமானியர்களின் களமல்ல , அது தன்னை வளர்த்தெடுத்துக்கொள்ள விழையும் தனியர்களால் ஆனது . அவர்கள் ஒருகாலமும் தங்களில் இருந்து ஒருவன் எழுவதற்கு விடுவதில்லை . இவர்கள் எவரையும் இளிவரளாகவே அறிந்து கொள்ளும் வேடிக்கை மனிதர்கள் . இவரகளை வெல்லாத எவரும் தலைவனில் சென்று அமர்ந்ததில்லை . ஆனால் எதிர்மறை ஆளுமையாக தன்னை வளர்த்தெடுத்தி ஒருவனை இந்த திரள் எப்போதும் தேர்ந்தெடுத்தபடி இருப்பதையும் , அதனால் இந்த நேர்மறை தனியாளுமைகள் சிதைந்து போவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது  .

வெகு அபூர்வமாக நேர்மறை ஆளுமைகள் பதவிக்கு வருகிறார்கள் . நான் சொல்லவருகிற நேர்மறை பொதுவான தளத்தில் புழங்கும் அர்த்தத்தில்  அல்ல . நேர்மையின் அளவீடு காலத்தையும் துறையையும் பொருத்தது . அது விபரீதமாக அர்த்தத்தை கொடுப்பினும்  அதுதான் நடைமுறை . நேர்மை என்பதின் பொருள்கொள்ளுதல் அன்றைய சமூகத்திலிருந்து எழுந்து அடையப்படுவதே . ஒருமுறை நேர்மை பற்றி முன்னாள் அமைச்சர் அனந்தபாஸ்கரன் ஒரு வேடிக்கையான விளக்கமளித்தார் . “பணம் வாங்கிக்கொண்டு வேலையை முடித்துத்தருபவன் நேர்மையாளன் . வேலை முடியாது போனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தான் என்றால் மிகப்பெரிய நேர்மையாளன்என்றார் . இதை யார் ஏற்றுக்கொள்ளாது போனாலும்  அநேகமாக சமூகம் இப்படித்தான் இருக்கிறது .

நான் தலைவரை பெரும்பாலும் அவர் தனிமையில் இருக்கும்போது சந்திப்பதை வழமையாக கொண்டேன் . பெரிய காரணமெல்லாம் ஒன்றில்லை . பொது சபையில் அவர் பேசுவது எனக்கு அர்த்தமாவதில்லை . மேலும் எனக்காக அவர் தனிப்பட்டு என்ன சொல்கிறார் என்பதை அறிவதே எனக்கான இலக்கென்றானது . நான் எப்போது சந்தித்தாலும் இளைஞர் காங்கிரஸ் பற்றிய அவரது கசப்பான அனுபவங்களை பேசுவதும் கண்ணன் பாலன் எப்படி காட்சி அரசியலில் இளைஞர்களை தவறாக வழிநடத்தி அவர்களின் எதிர்காலத்தை ஒன்றுமில்லாதாக்கினார்கள் என்பதைபற்றிய நிறைய பதிவுகளை சொல்லியிருக்கிறார் . அவை பெரும் தகவல் களஞ்சியங்கள் . அவர் சொல்லும் நிகழ்வுகளும் நான் அங்கு தலையெடுத்த காலத்தில் நடைபெற்றவை என்பதால் அதன்  பிறிதொரு பரிமாணங்களாக அவை இருக்கும் . அவற்றினூடாக நான் அடைந்த புரிதல்கள் அளப்பரியவை

இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகள் ஒற்றைப்படையானவை . அதன் தலைவர்களின் விழைவை மட்டுமே தனது விழுமியமென உருவகித்தவைகள் . அதை நோக்கியே அது பயணப்பட்டது . அது இயல்பானதே . ஆனால் வழிநடத்தும் தலைவனுக்கு விரிந்த பார்வை இருந்ததா என்பது தான் கேள்வி . கண்ணன் அவரது அரசியலை துவங்கும்போது பெரிய கனவென ஒன்றிருந்திருக்க வாய்ப்பில்லை . ஆனால் தன் பாதையில் அதை கண்டடைந்தார் . அதை அடைய அவர் முயற்சித்த போது அதற்கான வழி சூழல் எல்லாம் அமைந்திருந்தது . அதனாலேயே அவரது இலக்கிற்கு வெகு அருகாமை வரை பயணிக்க முடிந்தது . வழியில் அது பிறழ்ந்து போனதால் , அவரது தனியாளுமை  அதன் மெல்லிய விளிம்பை கடந்து வெற்று ஆணவம் என்றானது . அதன் பின் அவரது ஆளுமையால் கூடிய திரள் அவர் சென்ற பாதைகளில் அவருக்கு தற்காலிக வெற்றி எனும் தோல்வியை பரிசளித்து பின் ஒவ்வொன்றாக கழன்றுபோனது . பின்னெப்போதும் எவருடனும் இணைய முடியாத நீர்த்துப்போன  இளிவரல் உதிரிகளின் தலைவராக மாறிப்போனார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...