https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 23 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 167 * தடுத்தலே தொழிலென *

ஶ்ரீ:




பதிவு : 167 / 241 : தேதி :- 23 ஆகஸ்ட்  2017

* தடுத்தலே தொழிலென *


மீண்டும் இயகத்தில்
1996 தேர்தல் களம் -3


கற்பனையால் கணக்கிட்டத்தை நிஜத்தில் விரித்தெடுக்க இயலாமல் தோற்று ,உள்புழுக்கம் தாங்காது வெளியே ஓடிப்போவது எந்த மாதிரியான தலைமைப்பண்பு ?. அதுவரை பாலன்மீது இல்லாத கோபம் அன்று தாங்கமுடியாத வலியாக வெளிப்பட்டது . பல்லாயிரம் தொண்டனை கூட்டி ஆர்பாட்டமாய் முழங்கிய கூட்டம் நிகழ்ந்த களம் இதோ எனது முதுகு பின்னல் வெறுமையாய் வறண்டு கிடக்கிறது. அனைவரையும் கட்சியெனும் கடலில் கரைத்துவிட்டு  தான் மட்டும் மிச்சமென உதிர்ந்து , இரண்டு அம்பாசிடர் காரில் பத்துப்பேருடன்  கண்ணனுடன் சென்று ஐக்கியமானார் . மனித சக்தியை வீணடித்த ஒரு ஊதாரியின் வீழ்ச்சி , இதோ கல்லாக இந்த சமுத்திரத்தின் ஓரத்தில் கொட்டப்பட்ட கல்லிடையே இதுவும் ஒன்றாக ஓயாத அலைகளை தடுத்து தேய்ந்து ஒரு நாள் இல்லாமலாகும்




என்னை அபூர்வமாக சந்திக்கும் ஒருவர் இன்று காலை என் அலுவலகத்திற்கு வத்து பாலன் அன்று மதியம் கட்சிமாறப்போகும் செய்தியை முதலில் சொன்னபோது , எனக்கு மிகுந்தது அதிர்ச்சியை விட வருத்தம்தான் . இதைப்போல ஒன்றை அவர் செய்யக்கூடுமென முன்பே யூகித்திருந்தேன் .  இங்கு  அவருக்கான வழிகள் என்றோ அடைபட்டு போயின . தில்லி சென்று கமிட்டியை மாற்றிக்கொண்டுவந்த பாலனுக்கு அதை செய்தது பெரிய மடமை என விரைவில் புரிந்துபோனது . விதந்தோதும் தொண்டனில்லாத தலைவன். கைகால்களற்ற ஒரு பிண்டம் மட்டுமே, அது இருப்பைத் தவிர பிறிதெதையும் உணராது  . பலரின் கைகளால் கண்களாலும் சிந்தனையினாலுமே ஒரு தலைவன் செதுக்கப்படுகிறான் . தன்னால் நியமிக்கப்பட்ட புது நிர்வாகிகளுக்கு தலைவன் பாலன் அல்ல பிறிதொருவரெனில் அவர் அடையும் பரிபவங்கள்  சொல்லில் அடங்காதவை . இவன், என்னை ,இப்படி, பார்க்க , ரசிக்க , விரும்ப வேண்டும் என்கிற விழைவே அனல் கொண்டு அவனை உந்தும் விசையென்றாகிறது . அதுவே அவனை வடிவமைத்து  அவனென்ற அடையாளத்தையும் கொடுக்கிறது . அவர் அமைத்த கமிட்டி நீர்ததுப்போனதும் . எதையும் செயலவடிவில் மீட்டெடுக்க இயலாமல் கிருஷணமுர்த்தியின் பின்னால் நிற்கவேண்டிய நிலைக்கு அவரது தாழ்வு மனப்பான்மை அல்லது இயலாமை கொண்டு நிறுத்தியது . வைத்தியலிங்கத்தின் சூழியலுக்கேற்றபடி அரசியல் நிர்பந்த்தத்தினால்   திட்டமிட்டதை விட்டுக்கொடுப்பதை தயக்கமில்லாது சமரசம்  செய்யது  கொள்ள துவங்கியதும் , பாலன் அவரை சார்ந்து முன்னிருத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அடிவாங்கி விட்டன . அனைத்து தரப்பும் அவர்மீது நம்பிக்கையிழந்தது . 

முதல்வருக்கு  பலமாக இருந்தது அவரது மைத்துனர் பாஸ்கர் . அரசாங்க ரீதியில் அவரின் தேவைக்கு சரியாக செயல்பட்டாலும் அரசியலில் ரீதியில் நிறைய சொதப்பினார் . கட்சிக்குள் எழுந்த அதிருப்தியை அவரால் சரிசெய்யவே இயலவில்லை . முறையான மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பில்லாததால் சின்ன சின்ன விஷயங்களும் அவரை நேரடியாக சீண்டியபடி இருந்தது . அதனால் எப்போதும்  நிலையழிந்தே  காணப்பட்டார் . விளைவு அவசியமான காலத்தில் பாலனால் அவரை  தனது கருத்தால் , திட்டத்தால்கூட  நெருங்க முடியாது போனது . தனது தேர்தல் சீட்டு விஷயத்தில் கூட  கிருஷ்ணமூர்த்தியை நம்பி அசிங்கப்பட்டார் . அதன் தாக்கம் , தன்னை சமாதானம் செய்ய யாராவது வருவார்கள் என எதிர்பார்த்து முருக்கி நின்று யாரையும் பார்க்கமலானார் , யாரவது வந்து தன்னை சமாதானம் செய்யட்டுமென .  அப்படி யாரும் வராததால் ஏமாற்றமுற்று வெதும்பி, கசந்து  ஒரு கட்டத்தில் கட்சிலிருந்தே வெயேறவேண்டியதானது . எதை தன் ஆயுதமென கொண்டு பலரை காயப்படுத்தி சிதறடித்தாரோ , அதே ஆயுதம்  அவரையே பலிகொண்டது . 

கண்ணன் பல பாலன்களின் தொகுப்பு . தாமோதரன் இவரிடம் இப்படித்தான் திரும்ப ஓடிவந்தார் . பாலனும் கண்ணனிடம் திரும்பினார் . இது ஒரு வழிப்பாதை . அவருக்கு தெரிந்ததே . ஆனால் இது தனக்கென வரும்போது எவருக்கும் அது உயிரகொண்டெழுவதில்லை .இந்த இணையும் விஷயத்தை கட்சிக்குள் இருக்கும்போதே செய்திருக்கலாமே . அப்போது தடுத்தது இப்போது ஏன் உறங்குகிறது . என்ன என்ன அரசியல் கணக்குகள் . காய்நகர்தல்கள் , எல்லாம் இதற்கா? இப்படி அனாதரவாய் நாடோடிப்போல ஓடுவதற்கா ?.எவ்வளவு பெரிய வாய்ப்பு . அனைத்தையும் கெடுத்து, தானும் அதில் சிக்கி சீரழிந்து . இது வேண்டாமென்றுதானே அன்று அரிஸ்டோ ஹோட்டலில் நான் கதறினேன் .

எனக்கு கிடைத்த நல்லதொரு அரசியல் பாடமிது . தன்னை தற்காத்துக்கொள்ள பிறரை தடுப்பதொன்றே வழிமுறை என கற்றவர்கள் அது காலாவதியானதும் , கற்ற இடத்திற்க்கே திரும்ப நினைக்கிறாரகள் . வளர்ச்சி என்பது  தன்னை சுற்றி தன்னிச்சையாக வளரும்  தனி ஆளுமைகளின் ஆற்றல்களுக்கு ஈடாக நம்மை வளர்த்தெடுத்துக்கொள்வதே . இதை எனக்கொரு வாய்ப்பு கிடைத்தபோது முற்சித்தேன் . நல்ல வெற்றியை  கொடுத்தாளும் , ஒருநாள் வீழ்ச்சியைத்தான் அளித்தது இருப்பினும் அது  ஆரோக்கியமானதாக  நேர்மறையான எங்களை உருவாக்கியது  தாமோதரன்  குழு செய்ததற்கும் பாலன் இன்று செய்ததற்கும் என்ன வித்தியாசம்?.விளக்கு வீட்டில்பூச்சிபோல ஒரு சிறகு பொசுங்கிய பிறகும் அது மீளவும் ஏறி நின்று மற்றொன்றையும் பொசுக்கி மாய்ந்து போவதுபோல . அதில் சிக்கி கொண்டவர் பின்னெப்போதும் பிடறியில் கால்பட ஓடிக்கொண்டிருப்பதை தவிர பிறிதொன்றையும் செய்யவில்லை . தாமோதரனுக்கு செய்த துரோகம் அவரை இப்போது , இப்படி பழி தீர்த்தது.புதுக்கமிட்டி அமைத்து அதில் தாமோதரனை சேர்க்காது விரட்டியடித்து அவர் பலநாட்கள் புதுவைக்கு வராமல் பித்தனை போல கமலக்கண்ணனை மட்டும் சிலகாலம் சந்தித்துக்கும் வழக்கமும் , ஏதோ மனப்பிணக்கில் அதுவும் நின்று போனது . 
அன்று மதிய உணவிற்கு உட்காரப்போகும் நேரத்தில் , என் தங்கை ஏதோ அவசரம் போன் வந்திருக்கு என சொன்னதும், சாப்பிட்ட கையோடு எழுந்து ரிசீவரை காதில் வைத்ததும் , யார் என கேட்க தேவையில்லாத குரல் . அது பாலன் . “என்ன” என்றதும் பதட்டமாக தாமோதரன் மாரடைப்பால் இறந்த செய்தியை சொல்லி உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்தார் . நான் அப்படியே கைகழுவி மருத்துவமனைக்கு சென்றபோது , பாலன் எனக்காக காத்திருந்து என்னைப்  பார்த்ததும் , என்னிடம் “பிணவறையில்” என்றார். நான் சென்று அது அவர்தான் என உறுதிப்படுத்திக்கொண்ட பிறகும் என் திகைப்பு அடங்கவில்லை . பாலனுக்கு ஏதாவது குற்ற உணர்விருப்பதாக என்னால் அறியமுடியவில்லை . ஆனால் யாராவது குற்றம் சொல்லிவிடப் போகிறார்கள் என்கிற மிரட்சியைத்தான் அவரது கண்களில் பார்த்தேன் . என்ன மாதிரியான ஆள் , தலையை உலுக்கி அந்த அருவருப்பை போக்க முயறசித்தேன். அவர் தூக்குக்கு தப்பிய குற்றவாளி . மனம் குமைந்தே ஒருவரை மரணிக்க வைத்த அவரது அரசியலில் அதற்குறிய விலையை ஒருநாள் கொடுத்தேயாக வேண்டும் . என அப்போது நினைத்தேன் . அது தான் இப்போது நிகழ்ந்தேறியது.

பத்து பேர்தான் அவர்களுடன் சென்றனர் .மற்றவர்கள் என்னவானார்கள் என தெரியவில்லை . யார் யார் அவருடன் சென்றிப்பார் என அறியமுடியவில்லை . செய்தி பாலன் இணைந்ததைப்பற்றி மட்டும் ஒருவித இளிவரல் தொனிக்க வெளியிட்டிருந்தது .  மறுநாள் காலை என் அலுவலகத்திற்கு ஊசுடு பெருமாள் தேடி வந்திருந்தான் . பாலனின் அணுக்கன் அவரைத்தவிர பிறிதொருவர் எனில் அவனுக்கு நான் . நீண்டநாள் பிறகு ஒரு சந்திப்பு . அவன் பேசட்டும் என காத்திருந்தேன் . நேற்று நடந்ததை சொன்னான் . முதலியார்பேட்டையை சேர்ந்த சிலருடன் சென்று சேர்ந்ததாக சொன்னான் . தன்னை அழைத்தும்கூட என்ன செய்யப்போகிறார் என சொல்லவில்லை . இரண்டு கார் வந்தது ஏறச்சொன்னார்கள்  . அலுவலகம் வந்தபிறகுதான் அவனுக்கு தெரியும் அவர் கட்சிமாறுகிற விஷயமே . கண்ணனும் பாலனும் கட்டி அனைப்பதை பார்த்து ஒன்றும் சொல்லாமல் திரும்பிவந்து இன்று என்னை பார்ககவந்ததாக சொன்னான்.பாலனுடனான எனது தொடர்பு அவன் மட்டுமே என மிச்சப்பட்டான் .  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...