https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 14 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 266 * வெறுமையை கலைதல் *

ஶ்ரீ:



பதிவு : 266 / 352 / தேதி :- 13 டிசம்பர் 2017


* வெறுமையை கலைதல்  *




“ ஆளுமையின் நிழல்   ” - 12
கருதுகோளின் கோட்டோவியம் -03





உட்கட்சி தேர்தல் சம்பந்தமாக தில்லியிலிருந்து பார்வையாளர்களின் வரவு அதிகரித்த போது  ,  வழமையாக நிகழும் நிகழ்வல்லை இது என அனைவருக்கும் புரிவதற்குள் , இறுதி தேதி நெருங்கி  விட்டிருந்தது . அனைவரும்  கடைசி நேரத்தில்  செயல்பட்ட பிறகும் கூட அவர்கள் நினைத்தபடி முழுமையாக எவற்றையும் செய்யமுடியவில்லை . நான் அணுக்கமானவர்களிடம் அவர்கள்  பதிந்த படிவங்களை தொகுதி தலைவர்களிடம் கொடுக்க வேண்டாமென சொல்லியிருந்தேன் . அவர்கள் எங்களை தேவையற்ற இடையூராக கருதுவதால் , இளைஞர் காங்கிரஸ் சார்பாக நாங்கள் தனியாக பதிந்ததை குறைத்துக்ட்டிகாட்டியோ அல்லது கொடுக்காமலேயோ விடுபடும் ஆபத்திருந்ததால்; அப்படி சொல்லியிருந்தேன் . இறுதி தேதி அறிவித்த பிறகு , கடைசிநாள் மாலை கட்சி அலுவலகத்தில் நேரடியாக அவற்றை தனித்தனி தொகுதிகள் சார்ந்து சமர்பிக்க செய்தேன் . நான் தேவையில்லாமல் உட்கட்சி தேர்தலில் தலையிடுவதாக தலைவரிடம் முறையிடப்பட்டது . அது எதிர்பார்த்ததே  . படிவங்களை இளைஞர் காங்கிரசின் சார்பாக வல்சராஜின் கணக்கில் அவை ஆவணப்படுத்தப் பட்டிருந்ததால் , என் பெயரில் எதுவும எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதால்   அவர்கள்   எனக்கெதிராக  முயன்ற முயற்சிகள் ஏமாற்றமளிப்பதாக இருந்தது .

அனைத்து படிவங்களை பெற்றதாக வல்சராஜின் கையெழுத்து இருந்ததால் , யாருக்கும் என்ன நிகழ்ந்து என புரியவில்லை . தலைவரிடம் சென்று முறையிட்டதற்கு  அவர்இளைஞர் கங்கிரஸ் இயக்கம்   மாநில காங்கிரஸ் கட்சியின்  இணை அமைப்பு; அவர்களுக்கு தனியாகதான் கொடுக்கவேண்டும், ஏதாவது முறைகேடுகள் நடத்திருந்தால் , அனைவரையும்  நேரடியாக வல்சராஜை சென்று பாருங்கள் என சொல்லிவிட்டார் . வல்சராஜ்  என்னிடம் இதுபற்றி கேட்ட போது , நான் பழைய செயற்குழு நிகழ்வைச் சொல்லிநமது மாநில நிர்வாகிகள் நீங்கள் சொன்னபிறகும் என்னை படிவம் சம்பந்தமாக அனுகவில்லை, ஒருகால் அது அவர்கள் தங்களுக்கு கௌரவக்குறையாக புரிந்து கொண்டிருக்கலாம்என்று சொன்னேன்  ,அவரும் அதை புரிந்துகொண்டார்

முறையிட வந்தவர்களுக்கு உண்மையில் நிகழ்ந்தது என்ன ? என்பதை பற்றியும் அதை தொடர்ந்து நிகழ இருப்பதையும் அனுமானிக்க இயலவில்லை . தொகுதிகளின் தலவர்கள் அனைவரும்கட்சியின் தொகுதி நிர்வாகிகளின் பட்டியலையும் , தலைவருக்கான தேர்வையும் , வழமைபோல தலைவரிடம் சொல்லி பெற்றுக்கொள்ளலாம் என்கிற திட்டத்தில் அமைதியானார்கள். ஆனால் இது தேர்தல் , நேரடியான நியமனம் ஏதும் இனி இதில் செய்ய முடியாதென்பதும் , ஏகமனதாக தேர்ந்தெடுக்கபடும் வாய்ப்பில்லையேல், அது அந்த தொகுதியை தேர்தலில் கொண்டு விடும் என அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அன்று இரவு நானும் தலைவரும் உட்கட்சி தேர்தல் விஷயமாக அனைத்து கோப்புகளை தயார்படுத்தி வைக்க இரவு 1:30 மேலாகி விட்டது . நான் வாங்கிச் சென்ற அனைத்தும் வந்ததா என்றார் நான் பாதிக்குமேல் திருப்பவில்லை என்றேன் . அனைத்து ஆவணங்களையும் கட்சி கெஜெட்டில் பதிவு செய்யும் வேலையை நானும் சூரியநாராயணனும் செய்து கொண்டிருந்தோம் . மெல்ல எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பதிவுகள் திரும்பியது என்கிற கணக்கு என் கவனத்திற்கு வந்ததும், எனக்கு அது மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது

அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை நான் நியமித்த 210 பேர்களில் நம்பிக்கைக்கு உகந்த முக்கிய நபர்களை மட்டும் அழைத்து பேசினேன் . அனைவரும் பிரகாசமானார்கள் . உட்கட்சி தேர்தல் பணிகள் உச்சகட்டத்தை எட்டியிருந்தது  . தலைமை அலுவகத்திலிருந்து எல்லா தொகுதிகளுக்கும் மேற்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்துனர் நியமனம் என பரபரப்பாக இயங்கியது . நான் எந்தெந்த தொகுதியில் யார் யார் வரவேண்டும் என்கிற கணக்கிலும் . எங்களுக்கு பலமில்லாத தொகுதிகளில் எங்களை கலக்காது முடிவெடுக்க முடியாத நிலையை உருவாக்கி தக்க  வைத்துக்கொண்டோம்

நான் செய்து கொண்டிருப்பதை தலைவருக்கும் கடைசீ வரை தெரியாமல்தான் வைத்திருந்தேன் . காரணம் நினைப்பதை முழுமையாக களத்தில் என்னால் நிகழ்த்தமுடியுமா? என அப்போது உறுதியாகத் தெரியவில்லை . அதைவிட முதன்மை சவால் எனது திட்டத்திற்கு முதல் எதிர்ப்பே அவரிடமிருந்துதான் கிளம்பும் . அவரிடம் எந்த கோட்பாட்டையும் உருவாக்கிக்கொண்டு தர்க்கிக்க  முடியாது . நம்புது முயற்சிகள் அத்தனையும்  அவரதுசிறுபிள்ளை விவசாயம் விளையாது , விளைந்தாலும் வீடுவந்து சேராதுஎன்பதற்கு முன்பாக வெற்றி கொள்ளாது. இது அனைத்து முனைகளிலும் புது முயற்சிகளையும் ஒன்றுமில்லாதபடி செய்யும் வல்லமையுடையது . அனுபவத்திற்கு முன்பாக இளமையின் முயற்சி என்பது ஒன்றுமே இல்லை என்பதாகி விடுகிறது ,அவரது சிறப்புமிக்க கிராமத்து சொல்லாட்சி.

கடந்த சில காலமாக களத்தில் நான் கண்ட சில விஷயங்கள் எப்போதும் எனக்குள் நிழலாடியபடி  இருந்தது . அவை தலைவரின்  கைவிடப்பட்டு சிதிலமடைந்த பல முயற்சிகள். அவை யாவும் பருப்பொருள் என தேங்கிய காலத்தில் நின்று கொண்டிருக்கின்றன . ஒருகாலத்தில் தலைவரால் முன்னெடுக்கபட்டு , பின் ஏதோ சில பேரங்களில், சில சமாதனத்தை முன்னிட்டு விட்டுக்கொடுக்கப்பட்டவைகள்அரசியலில்இருபாதை பயணக்கோட்பாடுபற்றி சூரியநாராயணன் சொல்ல நான்  கேள்விப்பட்டதுண்டு. ஒன்று ; ‘அரசியல் சரிநிலைகளுக்காக’ . பிறிதொன்று; ‘எந்த லாப நோக்கமுமில்லாது இருக்கும் நிலைக்கு உண்மையாக இருக்க முயல்வது’ . 

அவை அரசியல் காரணங்களுக்காக நாம் செய்யும் தவிற்கவியலாத பிறழ்வுகளுக்கு பிழையிடு போல . அதை அவர் பல  இடங்களில்  முயற்சித்து பார்த்ததையும் ,  சிலவற்றில் வெற்றியையும் பலவற்றில் தோல்வியையும் சந்தித்திருந்தார். “தோல்விகள் ஆங்காங்கே சிதிலங்களாக கிடக்கின்றன சரி , அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவர் வெற்றி பெற்றதை எங்கு பார்க்கமுடியும் ?” என்று  சூர்யநாராயணனிடம் கேட்ட போது , “அவைகளில் பல இன்று அவரை எதிர்த்து நின்று கொண்டிருக்கின்றனஎன்றார் . ஆம் நம்  வெற்றிகள்  பிறிதொருவருக்குஅரசியல் சரிநிலைகளாகபார்க்கப்பட்டு அவர்களின் எதிர்வினைகளால், ஒருநாள் நம் வெற்றிகள் அவர்களுடன் நமக்கு எதிர் கைகோர்க்கும் என்பது கோட்பாடு  . சலியாத முயற்ச்சிகளுக்காக அவர்  மீதான எனது மரியாதை உயர்ந்தது என நினைக்கிறன் . எந்த முயற்சியும் காலத்திற்கும் நிலைத்தவைகளல்ல , ஒரு காலத்திற்கு நமக்கு சரியென தோன்றுவது பிறிதொருவருக்கு வேறுவிதமான நினைவுகளை கொடுக்க வல்லவை . ஆழ்ந்து நோக்கினால் வெறுமையை தவிர  வேறு எதையும் உணரமுடியாது . ஆனால் பொறுப்பில் இருப்பவர் காரியங்களை ஆற்றவே உருவானவர்கள்  .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...