https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 31 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -67 . இந்து ஞானமரபு .


ஶ்ரீ:





இந்து ஞானமரபு




பதிவு :  461 / தேதி :- 30 . மார்ச்   2018







பரகாலனின் பின்னாலிருந்து  அமைப்ப உருவகித்திருந்தவர் அதை மிக எளிமையானதாக செய்திருந்தார்  . ஆனால் விதி முகூர்த்தம் , அது என்னை நோக்கி வரும் என அவர் நினைத்திருக்கவில்லை . நானும் கூடத்தான் . வழமைபோல புது முயற்சியும் அதை ஒட்டிய புதிய முரண்களும் எழுந்தன. அவர்கள் வடிவமைத்திருந்த அழைப்பிதழில் வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசத்தை கடந்து பெரிதாக ஏதுமில்லை . அந்த அமைப்பிற்கு அவர்கள் தேர்ந்திருந்த சிரை நான் அறிவேன். அவர்கள் எதையும்  மிகை உணர்ச்சியுடன் விவாதிக்க தயங்காதவர்களாக , புதிதாக முயற்சிக்கும் எதையும் புரிதலற்று தடுக்கும் போக்கு கொண்டவர்களாக இருந்தார்கள் . அவர்களால்  சங்கடமே விளையும். குடிமைச் சமூகத்தின் இன்றைய தேவை என நான் நினைப்பதை ஒருகாலும் அவர்களுக்கு என்னால் புரிய வைத்துவிட முடியாது . குறுகிய பார்வையும் மூர்க்கமாக இயக்கத்தை பழைய பாணியில் செலுத்த முயற்சிப்பார்கள் என்கிற அச்சம் எனக்கிருந்தது .

இரண்டாவது நான் நினைவில் நிறுத்தியிருப்பது ஒரு பிரம்மாண்டமான மேடை, அதனுள் சமூக அந்தஸ்தும், பொறுப்பும் , நுட்பமும் உள்ள சிலர் உள்நுழைய வேண்டும் . எல்லாவற்றிலும் முக்கியமானதும் ஒரு மாற்று அமைப்பை உருவாக்குவதை பற்றிய எனது எண்ணம் இவர்களில் பெரும்பாலானோரை எதிர்த்தே என்பதால் , நான் அவசரப்படவில்லை . வேளுக்குடி சுவாமியிடம் தேதி குறித்து பேசுவதற்கு முன்னாள் அடிப்படை அமைப்பு ஒன்றை உருவாக்கி பின் இந்த ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவை அமைப்பதுதான் சரியாக இருக்கும் என நான் சொன்னதை ஏற்று , வந்திருந்தவர்கள் அரைமனத்தினராக எழுந்து சென்றனர்

நான் இன்னும்திறந்த அரங்கம்குறித்த கருத்துப்பொதுமை உள்ளவர்களை கண்டடையும் முயற்சியில் இருந்ததால் எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது . அந்த சூழலில்வேதவிஞ்ஞானம்என்கிற கருதுகோளை நோக்கியே எனது பயணம் இருந்தது. அதை நடைமுறை படுத்த, திட்டமிட அனுபவம் வாய்ந்தவர்களை தொகுத்துக் கொண்டிருந்தேன்.

ஒரே வாரத்தில் முதல் கூட்டம் ஒருங்கப்பட்டு, எனது வீட்டில் கூடியது ,ஒரு வாரம் முழுவதுமாக முக்கியஸ்தர்களை தொடர்புகொண்டபடி இருந்தேன் . முதல் கூட்டத்திற்கு கணிசமானவர்கள் கலந்து கொண்டது அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் ,அதில் தாங்கள் நீடிக்க வேண்டும் என்கிற ஆவலும் எழுந்ததும் . ஒரு அடிப்படை கட்டுமானம் உருவாகி வந்தது . நான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டேன் 

இயக்கத்தின் அடைப்படை செயல்பாடுகள் குறித்து பேசப்படாது இருந்து கொண்டிருந்தது . என்னுடன் இயல்பாக செயல்படும் ஒரு குழுவை அன்று அமைத்துக் கொண்டேன் . அவர்கள் அனைவரும் துவக்க விழாவைத் தாண்டி வேறு எண்ணமில்லாதவர்கள் . எனக்கு அது ஒரு சுதந்திரத்தைக் கவடுத்திருந்தது . நான் எனது இலக்கையும் பாதையையும் நடைமுறை சாத்தியத்தைக்  எண்ணத் தெளிவிறகு , ஒத்த கருத்துள்ளவர்களை அடையாளம் காண முயற்சித்தபடி இருந்தேன் . அந்த ஒரு மாத காலம்விழாக்குழுவின்அடைப்படை கட்டுமானத்தை செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது

எண்ணியிருந்தபடி சிலரை உள்ளே கொண்டுவர முடிந்தது . துவக்கவிழா பிரம்மாண்டமாக நடந்து  . அடுத்தடுத்த நிகழ்வை  நோக்கிய பயணத்தில் இருந்தேன் . முக்கிய நிர்வாகிகளுக்கு எனது திட்டம் பற்றியகோட்டிவியம்மட்டுமே தெரியும் , தேடல் நிலைபெற அனைத்து வழிகளையும் முயற்சித்தபடி இருந்தேன் .எனது தந்தை இதுபற்றி தனது எண்ணத்தை  என்னிடம் பலமுறை பேசி இருக்கிறார் . விசிஷ்டாத்வைத சித்தாந்தம் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு  ஆறாம் வகுப்பு  மாணவன் கற்பிப்பதைப் போன்றது . அடிப்படை கல்வியை அது ஒரு போதும் சொல்லித்தருவதில்லை. அதற்கான பாடதிட்டம் அதனிடம் இல்லை என்கிற குறைபாடு அவருக்குள் எப்போதும் இருந்தது .சொல்லிவைப்பவர் ,சொல்லிக்கொள்பரின் அடிப்படையை , ஆழ்மன நம்பிக்கையை கணிசியாத முயற்சியாக அதை பார்த்தேன்

வேதவிஞ்ஞானம்என்கிற கருதுகோள் நோக்கிய பயணம் எனக்கு கற்றுக்கொடுத்தது அளப்பரியது . அறிஞர்கள் என நாம் நினைக்கும் பலர் தங்களது துறையைத் தாண்டி எளிய பாமரர்களின் பார்வையை தவிர உலகியலை அறிந்தவர்கள் அல்லர்கள் என்பதும் , எதையும் முயற்சிக்கும் மனநிலை அற்றவர்களாக அவர்களை பார்த்த போது அதிர்ச்சியையும் பெரும் உளச்சோர்வையும் அடைந்தேன். ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுப்புகள் மாற்று பாதையை நோக்கி என்ன செலுத்திக் கொண்டிருந்தது . இந்த காலகட்டத்தில் என்னை தொகுத்துக்கொள்ள , அந்த முயற்சிகள் அடையும் மாற்றம் எனக்கு சொல்ல வருவது என்ன ? என்பதைப் பற்றிய  அவதானிப்பில் எப்போதும் இருந்தேன்

புரிதல்களை காலத்திடம் இருந்து பெற்றுக் கொண்டேன் .   வாழ்கை முழுவதுமாக எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதினூடாக , அடையாளம் , வெற்றி தோல்வி, தனிமை, நிறைவுவினமை போன்றவற்றை அடைந்தேன் . இவற்றை ஒருங்கிணைத்தால் கிடைப்பது நிறைவு . அதை இன்னும் அனுகி அறிந்துகொள்ளும் ஆர்வமே என்னை இத்தனைக்காலம் அனைத்தினுள்ளும் செலுத்தி வெளியேற்றியது .

முயறசிகளுக்கு என்னிடம் முன்முடிவுகள் இருந்ததில்லை . ஒருகருதுகோளைதவிற . என்னிடம் எந்த திட்டமிடலும் இல்லை . நான் மிக அடிப்படையை நோக்கிய அறிதலுக்காக அவற்றை முயற்சித்தபடி இருந்தேன் . அது ஒரு தேடலைப்போல . சந்தர்ப்பம் அவற்றை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்துக்கொண்டே இருந்தது. அதை செய்வதனூடாக நான் கற்றுக்கொண்டே இருந்தேன் . கற்றலும் , அதை நோக்கிய விழைவுமே எனது விடியலை அர்த்தமுள்ளதாக மாற்றுவதை அறிந்திருக்கிறேன்


எனது முயற்சிகளுக்கு அனுபவங்களை தாண்டி வேறு பயனை விழைந்ததில்லை . காலம் பல ஆளுமைகளுடன் அணுக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தது . அவர்களின் அனுக்கத்தால் அங்கு நிலவும் சூழலில் இருந்து நான் எனக்கான பாதையை தேருகிறேன் . அவை என்ன காரணத்தினாலோ பிறர் அவற்றை கடக்க முயற்சிக்காதவைகள் .அதை முயற்சிக்கையில் நான் எனது வாழ்வை கடந்து இங்கு வைத்து அமைத்துள்ளேன் . “வேதவிஞ்ஞானம்என்கிற கருதுகோளில் இருந்துஇந்து ஞான மரபைநோக்கிய எனது பயணம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய தருணமாக உணர்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்