https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 30 ஜனவரி, 2023

மணிவிழா - 62

  



ஶ்ரீ:



30.01.2023


* உடல்களின் குவிமுணை  *









கனவையும் நினைவுகள் என மிக அருகில் உணர்வதில்  உடலைப்போல பிறிதொன்று இல்லை. உடல் பிரபஞ்ச வெளியுடனும் இணைந்திருக்க உள்ளம் இரண்டினூடாக இடைவிடாது தொடர்பு கொண்டுள்ளது. உள்ளம் என்பதை அதில் பெருகி வழியும் சொற் பெருக்கு வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. கூட்டு நனவிலியில் நிலைபெற்று உள்ளவைகளை படிமங்களாக ஆழ்மனத்திற்கு அது கனவின் வழியாக பின் சிந்தனை வழியாக புதிய கற்பனையாக கடத்துகிறது. அவையே பல சமயங்களில் உள்ளுணர்வாக வெளிப்படுகிறது போலும் . நான் என்கிறஆணவத்தால்கட்டுப்படுத்தபட்டுள்ள மனம் சிலந்தியை போல உடல் என்னும் கூட்டிற்குள் அமர்ந்து கொண்டு அதை இடைவிடாது அறிந்து சவால்களை புரியாத நிலையழிவுகளாக மனத்திற்கு கடத்தி வருகிறது. மனம் நான் அல்ல என புரிந்திருக்கிறேன். மனமென்பதை அதன் உள்ளார்ந்து எழும் மொழியின் பெருக்கு வழியாக அறிய முடிகிறது


உள்ளத்தின் பகுதியாக மனதை புரிந்திருக்கிறேன்மனம் என்கிற தன்னிச்சையாக ஒழுக்கு ஒருபோதும் எனக்கு சாதகமானதல்ல. ஆனால் ஒரு கூறு என்னை அதனுள் அனுமதிக்கும் வரை அது ஒரு நல்லூழ். அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மனம் பிறழ்ந்தவர்களாக புரிந்து கொள்ளப் படுகிறார்கள் என்றாலும் அனைவரும் ஒருவகையில்அதன்நிற பேதங்களில் இருந்து கொண்டிருப்பவர்களே .


மனதை தனது உடற்பாகமாக எண்ணி மயங்கும் தோரும் புறவய உலகின் தொடர்பில் இருக்கும் உடலை அது நிராகரிக்கிறது. உடல் பிறதொரு புரியாத புதிர். ஆனால் அதன் வழியாக வந்து சேரும் தகவல்களை ஆழ்படிமங்களாக தொகுத்த வைக்கிறது. மனம் வாய்ப்பு கிடைக்கும் தோரும் அதிலிருந்து பெரும் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்கிறது


எனது சிந்தனைகள் அதில் நிகழ்ந்தாலும் உடல் மனம் இரண்டும் நான் இல்லை என புரிந்திருக்கிறேன். இந்த உடலில் நான் யார். ஆத்மா மட்டமே என்பதால் மனதின் ஒரு பகுதியில் என் சிந்தனை நிகழ அது இடமளிக்கிறது. பல சமயங்களில் அது நிகழாதபடி நிராகரிக்கிறது. மனம் உடலை சார்ந்து இயக்கம் கொள்கிறது நான் என உணரும் ஒன்றைவிட ஆகப் பெரியது என புரிந்து கொள்கிறேன்.


மறைந்த அணுக்க நண்பன் நம்பிராஜன். எனது சிக்கல் மிகுந்த நாட்களில் மனசாட்சி போல என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறான் . எனது சாதனைகளை மனக்குமுறல்களை வருத்தங்களை அவனிடம் கொட்டித் தீர்த்திருக்கிறேன். நான் எனது குமுறமும் எண்ணங்களை விரித்தெடுக்கும் போது அமைதியாக ஒரு சொல் சொல்லாமல் கேட்டபடி இருப்பான். சில சமயங்களில் மகிழ்வான தருணங்களையும் பகிர்ந்து கொண்டதுண்டு. ஒரு முறை தில்லியில் நடைபெற்றி அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தின் இறுதியில் புதுவையின் அடுத்த தலைவராக என்னை தெரிவு செய்து வைத்திருப்பதை அந்த கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் என்னிடம் சொன்னார்கள். அதை ஒட்டி  அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்க சொல்லி அதற்கான அவரது அனுமதியை பெற்றுத் தந்தனர். மறுநாள் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு அவரது அதிகாரபூர்வ இல்லமான 10, ஜன்பத்தில் சந்தித்தேன்.காங்கிரஸ் அலுவலகத்தில் சந்திக்காமல் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது பெரிய கௌரவம்


புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்பது எனது வாழ்நாள் கனவாக தலைவர் சண்முகத்திடம் சென்று இடைந்து பின்னாளில் உருவானது . அதன் பொருட்டு பல ஆண்டுகள் என்னை வரையறை செய்து கொண்டு மெல்ல வளர முயன்றேன். இளைஞர் காங்கிரஸில் நுழைந்த போது அப்படிபட்ட எந்த எண்ணமும் எனக்கில்லை. அரசியல் பலம் தரும் கிளர்ச்சி அன்று போதுமானதாக இருந்தது. ஒரு புள்ளியில் அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலன் தனது அரசியல் கணக்கிற்காக தலைவர் பதவிக்கு என்னை தெரிவு செய்தது எனது பேசுதல் குறைபாட்டை மையமாகக் கொண்டதாக இருந்தாலும் எனக்கு நட்பின் அடிப்படையில் அனைவரின் ஆதரவு இருந்தது பிறிதொரு கராணம். அதுவே என்னை பற்றிய அச்சத்தை அவருக்கு விளைத்திருக்கலாம். பின்னாளில் என்னுடன் முரண்படும் போக்கை அவர் எடுத்தது இதன் பின்னணியில் இருக்கலாம்


தலைவர் கனவுடன் பாலனுடன் பயணித்த கமலக்கண்ணனுக்கும் , தமோதரணுக்கும் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டது அதிர்வளிப்பதாக இருந்திருக்க வேண்டும். கமலக்கண்ணன் எனது பேசுதல் குறைபாடை பற்றிய இளிவரலாக சொன்ன சொல் என்னை மிக கடுமையாக சீண்டியதுஅதை ஒட்டி என்னை நோக்கி நான் பார்க்க துவங்கினேன்


நான் என்னை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொண்டது அதன் பின்னர் நிகழ்ந்தது .பதினைந்து வருடமாக அதை நோக்கிய உடலாலும் உள்ளத்தாலுமான நீண்ட பயணத்தில் இருந்தேன். தில்லியில் தலைவராக நான் முன்மொழிப்பட்ட போது உள்ளம் உணர்ந்தது போல உடலால் அதை உணரவில்லை. உள்ளம் கிளர்தலை போல அன்று உடல் மலர்வது. உள்ளத்தை நம் எண்ணத்தால் கிளர்ந்தெழச் செய்யலாம். ஆனால் புறவய உலகுடன் தொடர்புள்ள உடல் வேறு வழிகளில் தனது வாய்ப்பை அறிந்து உடல் உள்ளே நிகழ்கின்ற ரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது என நினைக்கிறேன்.அதில் உள்ளம் தள்ளி நிற்கிறது. அதன் எதிர் தட்டாகசெல்வாக்குஎன்பது அதிகாரத்தின் பொருட்டு பிறர் மனம் வழியாக உருவாகி கடத்தப்படும் ஒருவகை உடல்ரீதியான முரணியக்க வெளிப்பாடாக இருக்கலாம்.அது பிறரை தன்னளவில் தூண்டுகிறது. பணிதலும் மறுத்தலும் அதன் இரு கூறுகள். அதை உருவாக்கும் ரசாயன மாற்றம் உள்ளத்துடன் தொடர்புற்று இருந்தாலும் அதை உள்ளம் மட்டுமே தனித்து உருவாக்கி விட இயலாது. சுற்றியுள்ளவர்கள் தங்கள் உள்ளத்தால் அதை உருவாக்கி மெருகேற்றுகிறார்கள். அது இன்னதென தெளிவாக வரையறை செய்ய இயலாது போனாலும் அப்படி ஒன்று உண்டு என அதை நெருக்கமாக அறிபவர்கள் இருக்கிறார்கள். உடல் வழியாக நிகழும் மலர்தல் எனக்கு நிகழாததால் நான் தலைவராக வருவது சாத்தியமில்லை என உணர்ந்தேன்


புதுவை திரும்பிய பிறகு தில்லி அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் நிகழ்ந்தது. அவர்கள் அறிவுறுத்தலின்படி காங்கிரஸில் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தது குறித்து பேசிக் கொண்டிருந்த போது நான் தலைவராக வருவது நிகழாது போலிருக்கிறது என்றேன். அதை மறுத்து நம்பிராஜன் பேசினாலும் இறுதியாக எனது சந்தேகமே உண்மையானது. பல்வேறு அரசியல் சமன்பாடகளால் நான் தலைவராக நியமிக்கப்படவில்லை.


ஞாயிறு, 29 ஜனவரி, 2023

மணிவிழா - 61 * சிதையும் உளக்கட்டமைப்பு *

 ஶ்ரீ:



29.01.2023


* சிதையும் உளக்கட்டமைப்பு  *






வேளுக்குடியுடன்இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் அவரைகடவுள் மனிதர்என்கிற இடத்தில் வைத்துப் பார்ப்பவர்கள். புரிதலுக்கும் செயல்படுத்துதலுக்கும் அப்பாற்பட்டு ஆன்மீக உரைகளை கேட்பது மாத்திரமே புண்ணியம் சேர்ப்பது என்கிற கருதுகோளை கொண்டவர்கள். இந்து ஞானமரபின் தொடர்ச்சி ஆயிரம் வருடங்களாக உருவாகி நிலைகொண்ட நம்பிக்கையின் நீட்சி. அவரின் தன்னார்வளர் போன்ற அடையாத்தை கொண்டவர்களுடன் சாதாரன எளிய மனிதர்களும் அவரின் நிர்வாகத்தில் ஏதாவதொரு வகையில் பங்கு பெறும் ஆர்வம் கொண்டவர்களாயினர் .


எனக்கும் அவருடன் பயணிக்கும் எண்ணமே இருந்தது, வேறு ஒரு விரிவான தளத்தில். அன்று எனது தேடலில் அதன் சிறு முணையே எனக்குள் தென்பட்டது .அது ஆரம்ப நிலை. பயணத்தில் அதை விரித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் என்னிடம் இருந்த கருவிகளை கொண்டு சம்பிரதாங்களை இன்று நவீன சமூகம் ஏற்க தடையாக இருப்பதும் அதற்கான மாற்றம் உருவாக இருப்பது எவ்வகையானது, எதை நோக்கியதாக இருக்கும் என்கிற விவாதம் துவங்கப்பட வேண்டும் என நினைத்தேன்.


2012 களில் உள்ள ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கம் இந்த கருதுகோளை கொண்டதாக இருந்தது. அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஆன்மீக எத்தகைய சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது குறித்த ஒரு உரையாடல் துவங்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில்திறந்த அரங்கம்என்கிற அமைப்பு உருவாக்கப்பட திட்டமிட்டு இறுதிவரை நிகழவில்லை. அதன் திசை அறிய இயலாததாக இருந்தாலும் விளைவது பற்றிய புரிதல் தெளிவாக இருந்தது என்பதால் அது ஒரு குருட்டு பட்டிமன்றத்தை போல இருந்தாலும்சரிஎன்பதே அன்றைய தேர்வாக இருந்தது. இந்து ஞானமரபு தேடலை முதன்மையாக கொண்ட அலைதல் அடிப்படையானது என்பதால் அது ஆண்களுக்கானதாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்கள் மிக அரிதாக அதில் தென்படுகிறார்கள். பக்தி வழி தத்துவத்தில் இருந்து மெல்ல விலகி விலகி ஆன்மீகம் இந்து ஞானமரபின் சிறு கூறுகளை கொண்டதாக வடிவெடுத்து இன்றளவும் சற்றேனும் கலாச்சார பண்பாட்டின் தொடர்ச்சி அறுபடாத நிற்கின்றது. தத்துவார்த்த தளத்தில் அது பெரும் வீழ்ச்சியாக நிகழ்ந்து பின் பக்தி மார்க்கம் என்பது ஆன்மீகமாக சடங்கு சம்பிரதாயம் என்கிற அளவில் குறுகியது. பிறகு அது பெண்களுக்கானது என்கிற நடைமுறை புரிதலின் பின்புலத்தில் நிலைகொண்டது


கடந்த அரை நூற்றாண்டுகளாக வேகமெடுத்த சமூக சீர்திருத்தங்கள் அவர்களின் மீட்சியாக துவங்கியது போது நுகர்வு கலாச்சாரம் மேலோங்கி பொருளியல் பற்றாகுறையாக உருவெடுத்தது .குடும்ப முடிவுகளில் பெண்களுக்கு சம பங்கு என்கிற அனைவரின் ஏற்பு அவர்கள் வேலைக்கு செல்ல துவங்கிய பிறகு உருவாகிவந்தது அதனால் குடும்ப உறவுகளில் அணுகுமுறையில் பெரிய மாற்றங்களை காணமுடிந்தது. உறவுகளால் அதுவரை அழுந்தி இருந்த பெண்களின் உலகம் சுதந்திரம் பெற்று பெரிய மாறுதல்களை அடையத் துவங்கியது . குடும்ப நிர்வாகத்தில் எதிர்காலம் குறித்த பதற்றம் உருவாகி அதில் கல்வி முதன்மை பெற்ற பிறகு அதன் உலகம் மதிப்பெண்களினால் ஆனது அன்றி பிற எதையும் கருத்தில் கொள்ளாதானது. கல்வி செலவேறியது என்பதால் குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்தது. கல்வி ஒரு சொத்து போல உருவெடுத்தும் அதில் வெல்ல அழுத்தம் மிகுந்த போது குழந்தைகள் அறிவார்ந்த தளத்தில் எதையும் அறிந்து கொள்ளாதவராயினர். பெற்றோரின் போதாமை அவர்களுக்கு வழிகாட்ட இயலவில்லை.  

இந்த தலைமுறை கடந்த முப்பதாண்டுகளில் உருவாகி பின் இன்றைய உலகம் அவர்கள் அன்றி பிறர் இல்லாமலாயினர். கணிப் பொறி துறையின் வெற்றி நடுத்தர வர்க்கத்தின் பொருளியல் எழுச்சிக்கு அடிப்படையாகி பெண்கள் குடும்ப விவகாரங்களில் நேரடியாக மற்றும் மறைமுகமாக முடிவெடுக்கும் செல்வாக்கு அதிகரித்தது. வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருபவர்கள் அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மையை எடுத்துக் கொண்டு அவை இங்கு நம் வாழ்வியலிலும் கலாச்சாரத்திலும் அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதற்குள் வந்தமராதவை அனைத்தும் 

நிராகரிக்கப்பட்டன . பொருளாதார வெற்றி தரும் உற்சாகம் அவர்களை நம்பிக்கையுடன் நவீன உலகில் நுழையும் துணிவை கொடுத்தது. ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சவால்களை எதிர்கொள்ள முடியாதபடி அவர்களின் மரபான நம்பிக்கை நீர்த்துக் கொண்டிருப்பதை மிக தாமதமாக உணர்ந்தார்கள் அல்லது உணரவில்லைஇந்தப் போக்கு அனைத்து விழுமியங்களையும் அசைக்கத் துவங்கியது. அதன் விளைவாக குடும்ப உறவுகளில் சிக்கல், மனச்சோர்வு , பிளவுண்ட் ஆளுமை போன்ற உளவியல் சிக்கல்கள் பெருகின


விழுமியங்கள் அறத்தின் பார்பட்டவை. அறம் ஆன்மிகத்தில் அமர்ந்திருக்கிறது. ஆன்மீகம் உதாசீன படுகிறகிற போது காலச்சார பண்பாட்டு மற்றும் மரபு அமர்ந்திருக்கும் ஆழ்மனத்துடனாக அதன் தொடர்புகளை இழக்கச் செய்கிறது. அதுவரை எதிர்காலம் குறித்த மரபான நம்பிக்கைகளுக்கு துணைத்த கருவிகள் செயலிழந்து போகச் செய்கின்றது . அன்றாடப் பதட்டம் தவிற்க இயலாததாகி பலவித உளவியல் சிக்கலில் கொண்டு விடுகிறது. அங்கிருந்து உருவாகும் எதிர்மறை அலைகளை அனைத்து நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க குடும்பங்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு அவை சமூகத்தில் நிரந்தரமாக பள்ளங்களாக உருவாக்கி விடுகிறது .

அடையாளமாதல் * கடந்தவைகளின் தேங்குதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 662  / 852 / தேதி 29 ஜனவரி  2023



* கடந்தவைகளின் தேங்குதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 57.






அறமீறல்கள் வஞ்சங்கள் வழியாக மட்டுமின்றி அசட்டுத்தனமாக கூட ஒரு சில அரசியல் தலைமை உருவாகி பதவியில் சில காலம் நீடித்து நிற்பதை எந்த கணக்கிலும் கொண்டு வைக்க முடியாது. அதைப் புரிந்து கொள்ள குறைந்தது ஒரு தசாப்தம் பின்னோக்கு பயணிக்க வேண்டியிருக்கும். அதில் இன்றைக்கான காரண விதையை கண்டடையலாம் என்றார் சண்முகம் . அரசியலின் அனைத்து விளைவும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் . எதனுடனும் சம்பந்தப்படாது முற்றிலும் புதியதாக ஒன்று உருவாகி வந்துவிடாது என்று சொல்லுவார் . அது புரிந்து கொள்ளக் கூடியதுஒவ்வொரு பத்து வருட அடுக்கும் ஒரு தசாப்தம். தசாப்தக் கணக்கை எந்த வருடத்தில் இருந்தும் தொடங்கலாம்முதல் அடுக்கு மற்றும் அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு பயணிக்கும் போது அதன் மாபெரும் வலைப்பிண்ணலை பார்க்க முடியும் என்றார். சண்முகம் கை பிடித்து காட்டியதால் புரிந்து கொள்ள அந்தக் கோட்பாடு மிக எளிதாக இருப்பதாக தோன்றியது.நான் அது மாதிரி ஒன்றை உருவாக்க முயன்று ஒரு கட்டத்தில் அதில் தொலைந்து போயிருக்கிறேன். பல வருடம் கழித்து ஒரு நிகழ்வு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்த போது சட்டென அந்த கோட்பாட்டிற்குள் பின்னர் நீண்ட அரசியல் காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி வந்தது திகைக்க வைக்கும் அனுபவம்.


எல்லா அரசியல்வாதியும் கொஞ்சம் முயன்று அதன் உட்கூறுகளை அறிந்து கொள்ள முடியுமானால் அரசியலின் போக்கையே அது மாற்றிவிடுமேஎன்று நான் அவரிடம் சொன்ன போது  “இந்த கணக்கில் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பிடி கிடைப்பதில்லை காரணம் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் திளைத்திருக்கிறார்கள். அதிகாரம் தளைப்பதால்தான் அந்த தேக்க நிலையே உருவாகிறதுஎன்றார். “அதிகாரத்தில் இருப்பவருக்கு அதில் உள்ள சுமையால் உள்ளம் குவியாது என்பதால் இவற்றை பார்க்க முடிவதில்லை. மேலும் இயற்கை ஒரு விழியின்மையை கொடுத்து விடுகிறது. அந்த பதவிகாலம் முடியும்வரை பிறவற்றை அந்தக் கண்களால் பார்க்க இயலாதுஎன்றார்


அரசியலில் அனுபவமுள்ளவர்கள அந்த அகக்குருட்டில் இருந்து மனதளவில் மீட்சி கொள்ள நிகழ் அரசியலைப் பற்றிய புரிதலுக்கு அதை அவதானிக்க, கடந்த காலத்தை பிரித்து பிரித்து பார்த்து அதன் விதையை பின் அது உருவாக்கும் போக்கை அறிந்து கொள்வதுடன் , அந்த செய்திகளுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதன் ஒழுக்கு வேறு இடங்களில் எப்படி வெளிபடும் என புரிந்து கொள்ள முயல்வது அரசியலின் போக்கை ஒழுக்கை உணரச் செய்கிறது . பின் அங்கிருந்து தங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கக் கூடும் என்பது பற்றி அதனால் அரசியலின் விளைவு என்னவாக இருக்கும் என ஊகிக்க முயல்கிறர்கள் . நிகழ் அரசியலை உற்று நோக்குவதற்கு அவற்றின் வகைகளை அறிந்து கொள்ள மிக நுட்பமான வழிகளாக இவை சொல்லப்படுகின்றன . இது சண்முகத்திடம் இருந்து எனக்கு வந்த பழக்கம். ஒரு முறை தொட்டுவிட்டால் பின் அதிலிருந்து விலகுவது கடினமானது. அது ஒரு வகை மனப்பழக்கம் நம்மை மீறி மனதை அதில் ஒன்றச் செய்துவிடும். தன்னியல்பாக மிக தீவிரமாக பொருத்து பார்ப்பதை அது ஒருபோதும் நிறுத்தாது . உற்சாகத்தால் சம புரிதல் இல்லாதவர்களிடம் இது பற்றி உரையாடினால்கழன்ற கேஸ்பட்டம் நிச்சயம்.


அரசியல் அரசு சூழ்தலால் நிகழ்கிறது என்பது அதை ஆதரிப்பவர்கள் சொல்லுவது. அரசியலும் கூட அறத்தால் நிற்பது என்பதற்கு இங்கு மிக நீண்ட மரபு நமக்கிருக்கிறது. அரசியலின் பொருட்டு எதையும் இயற்றலாம் என்பது பரப்பிய அரசியல் எழுந்த பிறகு உருவானது. பின் அங்கிருந்து அது அடைந்த வீழ்ச்சியே இன்றைய அரசியல் பாணியாக இந்தியா முழுவதும் உருவாகி நிற்கிறது . அதை பொதுப் போக்காக கொள்ள முடியாது . அதை ஏற்காமல் அரசியலில் இருப்பவர்கள் மிகச் சிலர் என்றாலும் அவர்களை கொண்டே மொத்த அரசியலும் தன்னை வகுத்துக் கொண்டதை வரலாறு முழுக்க பார்க்க முடிகிறது


யாரையும் பொருட்படுத்தாத தலைமை ஒன்று நிகழும் போது அனைவரும் அதிர்ந்ததைப் போல பாவனை செய்தாலும் அதை பெயராளவில் கூட எதிர்ப்பதில்லை என்பது மொத்த அமைப்பை நீர்த்துப் போகச் செய்கிறது . அதன் வழியாக அவர்களும் அந்த வீழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள் . குழு குழுவாக அதைப் பற்றிய அலர் பேச்சு எங்கும் இருந்தாலும் யாரும் அதற்கு எதிராக சிறு புல்லைக் கூட அசைக்க மாட்டார்கள். பேச்சும் அங்கலாய்ப்புமாக காலம் ஓடிக் கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன் . அந்த தலைமையை நேரில் சந்திக்கும் போது பணிவும் அவர்களின் உடல்கள் வழியாக வெளிப்படும்  குறுகலும் குமட்டலை உருவாக்கிவிடும். அந்த தலைமை நீடித்தி நிற்கப்போகிறது என கூச்சமில்லாமல் பேசுவார்கள் அதற்கான் தர்க்கங்களை முன்வைத்து அரசியலை பேசி அவர்களும் அதன் அங்காமாகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் அத்தகைய அரசியல் நீடிக்கிறது. அத்தகைய தலைமை வந்து அமரும் போது அவர்களின் செயல்பாடுகள் எந்த தர்க்க நியாயத்திற்கும் பொருந்தாமல் அடிப்படைகளை நோக்கிய கேள்வியை அது எழுப்பிவிடுகிறது . அது ஒரு அராஜகம் அதை எதிர்ககாமல் போவது அரசியல் இழிவு. ஜனநாயக பன்பு கொண்ட தலைவர்கள் அதே பதவிகளில் இருக்கும் போது அவர்களின் எல்லா அரசியல் செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கும் , எதிர்க்கும் இதே கும்பல் அறத்தின் காவலர்களாக மீறப்பட்டு விட்டதாக கொப்பளித்து ஆர்பரித்து நிற்கிறார்கள் . ஆனால் எதிர்மறைத் தலைமைக்கு முன் அவர்கள் கானாமலாகி விடுகிறார்கள். அரசியலில் ஜனநாயகப் பண்பிற்காக இடம் அவ்வளவுதான் போல.

புதிய பதிவுகள்

வெண்முரசின் 80வது கூடுகையில் எனது உரை குறிப்புகள் எழுத்து வடிவில்

  வெண்முரசு கூடுகை . 80  எனது உரை 25 முதல் 40 வரை கூற்றெனும் கேள்   பேசு பகுதி   முதல் நிலை 24 முதல் 34 வரை . நண்பர் முத்துக்குமரன் ...