https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அடையாளமாதல் * கடந்தவைகளின் தேங்குதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 662  / 852 / தேதி 29 ஜனவரி  2023



* கடந்தவைகளின் தேங்குதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 57.






அறமீறல்கள் வஞ்சங்கள் வழியாக மட்டுமின்றி அசட்டுத்தனமாக கூட ஒரு சில அரசியல் தலைமை உருவாகி பதவியில் சில காலம் நீடித்து நிற்பதை எந்த கணக்கிலும் கொண்டு வைக்க முடியாது. அதைப் புரிந்து கொள்ள குறைந்தது ஒரு தசாப்தம் பின்னோக்கு பயணிக்க வேண்டியிருக்கும். அதில் இன்றைக்கான காரண விதையை கண்டடையலாம் என்றார் சண்முகம் . அரசியலின் அனைத்து விளைவும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் . எதனுடனும் சம்பந்தப்படாது முற்றிலும் புதியதாக ஒன்று உருவாகி வந்துவிடாது என்று சொல்லுவார் . அது புரிந்து கொள்ளக் கூடியதுஒவ்வொரு பத்து வருட அடுக்கும் ஒரு தசாப்தம். தசாப்தக் கணக்கை எந்த வருடத்தில் இருந்தும் தொடங்கலாம்முதல் அடுக்கு மற்றும் அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு பயணிக்கும் போது அதன் மாபெரும் வலைப்பிண்ணலை பார்க்க முடியும் என்றார். சண்முகம் கை பிடித்து காட்டியதால் புரிந்து கொள்ள அந்தக் கோட்பாடு மிக எளிதாக இருப்பதாக தோன்றியது.நான் அது மாதிரி ஒன்றை உருவாக்க முயன்று ஒரு கட்டத்தில் அதில் தொலைந்து போயிருக்கிறேன். பல வருடம் கழித்து ஒரு நிகழ்வு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்த போது சட்டென அந்த கோட்பாட்டிற்குள் பின்னர் நீண்ட அரசியல் காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி வந்தது திகைக்க வைக்கும் அனுபவம்.


எல்லா அரசியல்வாதியும் கொஞ்சம் முயன்று அதன் உட்கூறுகளை அறிந்து கொள்ள முடியுமானால் அரசியலின் போக்கையே அது மாற்றிவிடுமேஎன்று நான் அவரிடம் சொன்ன போது  “இந்த கணக்கில் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பிடி கிடைப்பதில்லை காரணம் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் திளைத்திருக்கிறார்கள். அதிகாரம் தளைப்பதால்தான் அந்த தேக்க நிலையே உருவாகிறதுஎன்றார். “அதிகாரத்தில் இருப்பவருக்கு அதில் உள்ள சுமையால் உள்ளம் குவியாது என்பதால் இவற்றை பார்க்க முடிவதில்லை. மேலும் இயற்கை ஒரு விழியின்மையை கொடுத்து விடுகிறது. அந்த பதவிகாலம் முடியும்வரை பிறவற்றை அந்தக் கண்களால் பார்க்க இயலாதுஎன்றார்


அரசியலில் அனுபவமுள்ளவர்கள அந்த அகக்குருட்டில் இருந்து மனதளவில் மீட்சி கொள்ள நிகழ் அரசியலைப் பற்றிய புரிதலுக்கு அதை அவதானிக்க, கடந்த காலத்தை பிரித்து பிரித்து பார்த்து அதன் விதையை பின் அது உருவாக்கும் போக்கை அறிந்து கொள்வதுடன் , அந்த செய்திகளுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதன் ஒழுக்கு வேறு இடங்களில் எப்படி வெளிபடும் என புரிந்து கொள்ள முயல்வது அரசியலின் போக்கை ஒழுக்கை உணரச் செய்கிறது . பின் அங்கிருந்து தங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கக் கூடும் என்பது பற்றி அதனால் அரசியலின் விளைவு என்னவாக இருக்கும் என ஊகிக்க முயல்கிறர்கள் . நிகழ் அரசியலை உற்று நோக்குவதற்கு அவற்றின் வகைகளை அறிந்து கொள்ள மிக நுட்பமான வழிகளாக இவை சொல்லப்படுகின்றன . இது சண்முகத்திடம் இருந்து எனக்கு வந்த பழக்கம். ஒரு முறை தொட்டுவிட்டால் பின் அதிலிருந்து விலகுவது கடினமானது. அது ஒரு வகை மனப்பழக்கம் நம்மை மீறி மனதை அதில் ஒன்றச் செய்துவிடும். தன்னியல்பாக மிக தீவிரமாக பொருத்து பார்ப்பதை அது ஒருபோதும் நிறுத்தாது . உற்சாகத்தால் சம புரிதல் இல்லாதவர்களிடம் இது பற்றி உரையாடினால்கழன்ற கேஸ்பட்டம் நிச்சயம்.


அரசியல் அரசு சூழ்தலால் நிகழ்கிறது என்பது அதை ஆதரிப்பவர்கள் சொல்லுவது. அரசியலும் கூட அறத்தால் நிற்பது என்பதற்கு இங்கு மிக நீண்ட மரபு நமக்கிருக்கிறது. அரசியலின் பொருட்டு எதையும் இயற்றலாம் என்பது பரப்பிய அரசியல் எழுந்த பிறகு உருவானது. பின் அங்கிருந்து அது அடைந்த வீழ்ச்சியே இன்றைய அரசியல் பாணியாக இந்தியா முழுவதும் உருவாகி நிற்கிறது . அதை பொதுப் போக்காக கொள்ள முடியாது . அதை ஏற்காமல் அரசியலில் இருப்பவர்கள் மிகச் சிலர் என்றாலும் அவர்களை கொண்டே மொத்த அரசியலும் தன்னை வகுத்துக் கொண்டதை வரலாறு முழுக்க பார்க்க முடிகிறது


யாரையும் பொருட்படுத்தாத தலைமை ஒன்று நிகழும் போது அனைவரும் அதிர்ந்ததைப் போல பாவனை செய்தாலும் அதை பெயராளவில் கூட எதிர்ப்பதில்லை என்பது மொத்த அமைப்பை நீர்த்துப் போகச் செய்கிறது . அதன் வழியாக அவர்களும் அந்த வீழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள் . குழு குழுவாக அதைப் பற்றிய அலர் பேச்சு எங்கும் இருந்தாலும் யாரும் அதற்கு எதிராக சிறு புல்லைக் கூட அசைக்க மாட்டார்கள். பேச்சும் அங்கலாய்ப்புமாக காலம் ஓடிக் கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன் . அந்த தலைமையை நேரில் சந்திக்கும் போது பணிவும் அவர்களின் உடல்கள் வழியாக வெளிப்படும்  குறுகலும் குமட்டலை உருவாக்கிவிடும். அந்த தலைமை நீடித்தி நிற்கப்போகிறது என கூச்சமில்லாமல் பேசுவார்கள் அதற்கான் தர்க்கங்களை முன்வைத்து அரசியலை பேசி அவர்களும் அதன் அங்காமாகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் அத்தகைய அரசியல் நீடிக்கிறது. அத்தகைய தலைமை வந்து அமரும் போது அவர்களின் செயல்பாடுகள் எந்த தர்க்க நியாயத்திற்கும் பொருந்தாமல் அடிப்படைகளை நோக்கிய கேள்வியை அது எழுப்பிவிடுகிறது . அது ஒரு அராஜகம் அதை எதிர்ககாமல் போவது அரசியல் இழிவு. ஜனநாயக பன்பு கொண்ட தலைவர்கள் அதே பதவிகளில் இருக்கும் போது அவர்களின் எல்லா அரசியல் செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கும் , எதிர்க்கும் இதே கும்பல் அறத்தின் காவலர்களாக மீறப்பட்டு விட்டதாக கொப்பளித்து ஆர்பரித்து நிற்கிறார்கள் . ஆனால் எதிர்மறைத் தலைமைக்கு முன் அவர்கள் கானாமலாகி விடுகிறார்கள். அரசியலில் ஜனநாயகப் பண்பிற்காக இடம் அவ்வளவுதான் போல.

புதன், 25 ஜனவரி, 2023

அடையாளமாதல் * தொடர் முயற்சிகள் *

 




ஶ்ரீ:



பதிவு : 661  / 851 / தேதி 25 ஜனவரி  2023



* தொடர் முயற்சிகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 56.






அதுவரையிலான தனது முழு அரசியல் காலத்தை ஆட்சி அதிகாரத்தின் பொது புத்திக்கு பொருந்தாத அறமீறலுக்கு எதிர் நிலையாக தன்னை வைத்துக் கொண்டதால் கட்சி என்கிற அமைப்பை தன்னை சுற்றி இயங்குவதில் சண்முகம் வென்றிருந்தார். அரசின் மெத்தனம் மற்றும் நடைமுறை சட்டத்தால் உருவாகும் கருணையற்ற செயல்களால் மனம் வெதும்பி தலைவரிடம் முறையிடும் அனைவருக்கும் அவரின் ஒரே பதிலாகபதவியில் அமர்பவர்கள் கட்சியையும் மக்களையும் மறந்து விடுகிறார்கள்என்கிற கடும் குற்றச்சாட்டை அரசாங்கத்திற்கு எதிராக வைக்க அவர் தயங்குவதில்லை. “ஆட்சியாளர்கள் கட்சித் தலைமையை விரோதிக்கிறார்கள்என்கிற அங்கலாய்ப்புடன் அவரை அனுகுபவர்கள் விலகுவார்கள். சில அமைச்சர்களுக்கு எதிராக மிக கடுமையான விமர்சனத்தை அவர் வைத்ததுண்டு. அது அரசு அவர் சொல்லுவதை கேட்கவேண்டும் என்கிற நிர்பந்தத்தின் கொக்கி கொண்டிருக்கும் . அதை மிக ரசனையாக செய்வார். பல சமயம் பார்ப்பவரை வெறுப்புற வைத்துவிடும். தனக்கு முன்பாக வரும் சிக்கலில் அரசின் பார்வையை விளங்கிக் கொள்ளாமல் அவரால்நான் செய்து கொடுக்கிறேன்என பொறுப்பேற்க இயலாது அதே சமயம் தட்டிக் கழிக்கவும் முடியாது . தன்னை நாடி வருபவர்களுக்கு காமராஜரின் புகழ்மிக்க ஆறுதல் சொல்ஆகட்டும் பார்க்கலாம்என்பது போல சண்முகத்திடம் ஒரு சொல் இல்லை


ஆனால் விஷயம் தீவிரமாக இருந்தால் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வார். “வில்லங்கம்நுழைவது இங்கு. அவர் அதை தொடர்ந்து கவனித்து செய்யக் கூடியதை முயற்சிப்பார். எதிலும் மேலதிகமாக அவருக்கான கணக்குகள் உருவாகி இருக்கும். எல்லா செயல்களிலும் தனக்கான அரசியல் கணக்கில்லாதவர்கள் அரசியாலாளர்களே இல்லை. தலைவர் அளவில் இது அன்றாட செயல்களில்வில்லங்கம்தன்னிடம் ஒப்புவிக்கப் பட்ட அனைத்தை பற்றிய நடைமுறை தகவலுடன் தனது சொந்த அரசியல் பார்வையையும் முன் வைப்பார். அது பிறர் எளிதில் கடந்து செல்ல முடியாததாக இருக்கும் . ஒரு புள்ளியில் அதுவே சண்முகத்தின் முடிவாகவும் மாறி விடுவதை பார்த்திருக்கிறேன். அது மிக நுட்பமாண ஆடல். “வில்லங்கம்சொல்வதில் எந்த முடிவும் இருக்காது. அவை வெறும் தரவுகளாக சண்முகத்திற்கு சொல்லப்படும். அந்தத் தரவுகளை எந்த திசையில் கோர்த்தாலும் அது சென்று சேருமிடம் வில்லங்கத்தின் கணக்காக இருக்கும். விளைவாக எது நிகழ்ந்தாலும் அது சண்முகத்தின் கணக்காக வெளிப்படும். இதில் விந்தை அவரும் அப்படியே நினைப்பார்அதன் பின் அந்த முடிவிற்கு யார் முரண்பட்டாலும் அவர்கள் சண்முகத்தை விரோதித்துக் கொள்வதாக சூழ்நிலை அமைந்து விடும். ஒரு அரசு அதிகாரியான வில்லங்கத்திற்கு அரசியலில் பிறர் எதிர்க்க அஞ்சும் இடம் இப்படித்தான் உருவாகிவந்தது.


அதில் உள்ள அரசியலின் இரு நிலைகளை புரிந்து கொள்பவர்கள் அதை அவர்களின் அன்றாட விளையாட்டு என நகர்ந்து விடுவார்கள். சண்முகத்தின் நிர்பந்தம் ஒரு முணையில் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் தன்னை அறுக்க அதே கத்தி  ஒரு நாள் இங்கு வந்து காத்து நின்றிருக்கும் என ஊகித்திருப்பாரா?. நாராயணசாமி கையாண்டது சண்முகத்தின் அதே பழைய ஆயுதம். அதில் அவரின் சண்முகத்திற்கு எதிரானதை கவனப்படுத்தும் காழ்ப்பு மட்டுமே இருந்ததால் பிற எவரையும் விட சண்முகத்திற்கு எதிராக அது மிக கூர்மையாக விணையாற்றியது. பிறருக்கு அவர் சொன்ன அதேகட்சியரை மதிக்கவில்லைஎன்கிற ஒன்று சொல் அவருக்கு எதிராக வந்து நின்றபோதுகெட்ட வசவாகஉருவு எடுத்து அவரை தாக்கியது. நிகழ்ந்தவற்றிற்கு யாராலும் சமாதனம் சொல்ல முயலவில்லை . சண்முகத்திற்கு நெருக்கமான ஒவ்வொருவரும் அந்த காலகட்டித்திற்குள் எங்கோ ஒரு புள்ளியில் அவரின் அணுகுமுறையால் காயமடைந்து கசப்பு கொண்டிருந்தார்கள்.


அரசியலின் அடிப்படை குற்றச்சாட்டுகளால் ஆனது. அது எவர் முன்பாக வைக்கப்பட்டாலும் அவற்றில் எதுவும் ஏற்கப்படுவதில்லை என்பதால் மிகச் சரியான மறுப்பிற்கு கூட எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுகிறது . சண்முகத்தின் மறுப்பு யாரின் கவனத்தையும் கொள்ளவில்லை. மேலும் மேலும் அவதூறாக அது அவர் மீது கொட்டிக் கொண்டே இருந்தது.சண்முகத்திற்கு எதிராக சிக்கல்கள் அவர் முதல்வராக வந்தமர்ந்து கட்சி கைமாறிய ஒரே வாரத்தில் துவங்கிவிட்டது. நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக மிக துல்லிய தாக்குதலை துவங்கி இருந்தார். இந்த சூழலை மன்பே உத்தேசித்து கட்சி அமைப்பை முழுமையாக செயாலற்றும் வாய்ப்பை உருவாக்க அங்கிருந்து பின் மெல்ல எதார்த்தத்திற்கும் அதற்கான நுழைவாயிலுக்கும் வந்து சேர்ந்தேன். மிகுந்த சவாலான காலகட்டம். நாராயணசாமியின் கடும் தாக்குதல் அவரது அணுக்கர்கள் அவர் மீது கொண்ட அதிருப்தி சண்முகத்தின் பிடிவாதம் என எனக்கு ஆதரவளிக்கும் அனைத்தும் முடங்கின. இனி சட்டமன்றத்தின் வழியாக கட்சி விஷயங்களை மேற்கொள்ள விருப்பமின்றி  சட்டமன்றத்திற்கு செல்வதில்லை என்கிற முடிவிற்கு வந்தேன்


அதுவரை அங்கிருந்து கற்றவை கொண்டு மீண்டும் ஒரு சரியான முயற்சியால் கதவை திறந்து விடுபவை என நான் நினைத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைத்தேன் . நிதானம் மட்டுமே கட்சி அரசியலை அங்கே அங்கீகரிக்கும் கதவு திறக்கிறது என்பது அனுபவத்தில் இருந்து பெற்றது . அதை வென்றெடுக்க நான் திட்டமிட்ட நிகழ்வு மிகச் சரியாக நிகழ்ந்தாலும் காலம் அதற்கான வெற்றி வாய்ப்பைத் தரவில்லை. ஆட்சி மாற்றம்தான் என ஏறக்குறைய உறுதியான அந்த சூழலில் நிர்வாகிகள் அனைவரின் உளப் பதிவுகளை அளவிட ஒரு கூட்டம் ஒருங்கப்பட்டது. அதிகாலை 6:00 மணிக்கு ஒருங்கப்பட்ட கூட்டம் நிர்வாகிகளின் மனநிலையை கணிக்க கூட்டப்பட்டது. இரண்டு நிலைகளில் அந்த கூட்டம் மக முக்கியமானது.ஒன்று நாம் தாக்குதலில் இருக்கிறோம். கூட்டம் முழு அளவில் பங்கு கொண்டது உற்சாகத்தை கொடுத்தாலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் சவால் குறித்து யாருக்கும் எந்த புரிதலும் உருவாகவில்லை என்பதுடன் எனது நீண்ட கால பயிற்சியும் அதன் திட்டத்தால் தூரத்து பலன்களைப் பற்றி அதிருப்தி கவலையளிப்பதாக இருந்தது. முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட அரசு அதிகாரிகளை அழைத்து அவர்கள் சொல்லுவதை செய்து கொடுக்கும் படி சொல்ல முடியாது. அவர்கள் சொன்னவற்றிற்கு உள்ளே நம்மால் சரி செய்ய இயலாத சட்ட நடைமுறை சிக்கலை முன் வைத்து நம்மை முட்டாளாக்குவார்கள். இந்த சூழலில் ஆட்சி அதிகாரத்திற்கு பக்கத்தில் வந்த பிறகும் இந்து தொலைநோக்கு திட்டம் ஏன் ? என்கிற கேள்விக்கு என்னால் விளக்கமளிக்க முடியாது. ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்து உணர்ந்தவைகளை வார்த்தகளால் பிறருக்கு புரியவைத்து விட முடியும் என் நம்முவதைப் போன்ற மடமை பிறிதில்லை

திங்கள், 23 ஜனவரி, 2023

மணிவிழா - 55

 




ஶ்ரீ:



23.01.2023.






இயல்பு பற்றி நினைத்து புரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதற்கு அப்பால் எதிர் நோக்காத தருணத்தில் இருந்து வெளிப்படுவதை சேர்த்தே நாமும் பிறரும் . அரிய தருணங்களில் அது சட்டென மிக எளிதாக எழுந்து ஆட்கொண்டு அடுத்த செல்திசையை முடிவு செய்து பின் திகழ்ந்து முடியும்வரை உடனிருந்து பின் காணாமலாவதை அறிந்திருக்கிறேன். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பாலன் நான் இயற்றாத ஒரு பிழைக்கு வலிந்து என் மீது குற்றம் சுமத்தி என்னை தனிமை படுத்திய போது அதற்கு கடும் எதிர் விணையாற்ற என்னுள் எழுந்த அந்த கட்டுக்கடங்காத சீற்றம் எனது இயல்பிற்கு மாறானது. அதுவரை நான் அறியாதது. ஒரு ரௌத்ரம் போல என்னில் வெளிப்பட்டது. அதுவும் என் இயல்பே என புதிதென அன்று அறிந்து கொண்டேன். பாலனுக்கு எதிரான அரசியலில் அவரை முற்றாக வீழ்த்திய பிறகே அந்த சீற்றம் அடங்கி பின் என்னைவிட்டு விலகியது . உணர்வுகள் ஒருவித நரம்பு செயல்பாட்டின் வழியாக உயிர் விழைவை உருவாக்கும் உடல் திரவம் அதைஅட்டினல்போல அன்று உணர்ந்தேன்.அந்த காலகட்டத்தில் கொண்டிருந்த விசை நான் முற்றும் அறியாதது. எதிர் நோக்காத நேரத்தில் என்னில் இருந்து வெளிப்பட்டு பாலனை உளவியல் ரீதியில் முற்றாக அழித்து பின் ஒரு போதும் அரசியலுக்கு முன் தருக்கிக் கொள்ள இயலாமல் செய்ததுஅவருக்கு அது ஒருவகையில் மரணத்திற்கு இணையானது


ஒரு செயல் தொடங்குவது பற்றிய ஊக்கம் பெற்ற பின் அதை உடனே துவங்கி விடுவதும் அது கொண்டிருக்கும் பல பிழை கூறுகளை பயண வழியில் எதிர்கொள்ளும் போது அந்த சிக்கல்களை திருத்தங்கள் மூலம் சரி செய்து கொண்டும் செல்வதனூடாக அதன் வெற்றியை கண்டடைவது மிகச் சிறந்தது என என் இயல்பு வழியாக புரிந்திருக்கிறேன். அந்த பயணத்தில் என் திட்டமிலுக்கும் வெளியில் உருவாகும் வாய்ப்பை ஒட்டியும் பின் அதை தொடர்ந்து வளர்சிதை மாற்றம் போல அது நிகழ்ந்து விடுகிறது . ஒரு குருட்டு கற்பனையாக பருப் பொருளுக்கு அப்பால் உள்ள கருத்து வெளியில் இருந்து கிடைக்கும் தூண்டுதலாக எனக்குள் ஆழ்படிமங்கள் வழியாக எழும் திட்டங்களாக அவற்றைப் பார்ப்பதுண்டு

பலருடன் முயங்கும் எந்த செயலையும் முழு திட்டமிடலுடன் துவங்க இயலாது என்றாலும் அதை அனைவருக்கும் பொதுவாக நேர்மையாக அணுகுவதன் வழியாக கிடைக்கும் புரிதலால் மிக சிறப்பாக செய்து முடிக்க முயற்சிப்பேன்


ஒரு செயல் மனதளவில் கருக் கொண்ட பிறகு என்னால் அதை கடந்து செல்ல இயலாது. அதன் மாபெரும் வெற்றியை மட்டுமின்றி தோல்வியையும் என மனதால் உணர்ந்த பிறகும் அது உருவாக்கும் நல் விளைவுகள் பொருட்டு வளர்த்துக் கொள்வதன் வழியாக அதை மிக நெருக்கமாக அணுகி பார்க்க முயல்வேன். அதன் செயல்பாடுகளின் மத்தியில் என்னை மீண்டும் மீண்டும் வரையறை செய்து கொள்வேன். அதன் வெற்றிக்கு அந்த அணுகுமுறை மிக அவசியம் என கருதுகிறேன் . என்னால் அதற்கு கொடுக்கூடிய சிறந்தவைகளை சுதர்மம் போல அதற்கு அளிக்க முயற்சிப்பேன்.


ஆன்மீகம் வழியாக தந்தை கையளித்துச் சென்றது எனது வாழ்கை பயணம் நெடுகிலும் கை கொடுத்தது என்றாலும்

அதன் பல கூறுகளான அனைத்து கலாச்சாரம் பண்பாடு அறம் என்பதை மையப்படுத்தியதாக இருந்ததுஅவற்றை வாழ்கை முறையாக்கிய போது அதன் செயல்பாட்டு முணையில் எழுந்த சமூக இடக்கரடக்கல் பலன்களால் மனவழுத்தங்கள் உருவாகி நிலைகுலையச் செய்தது. அனைத்தின் மீதும் நம்பிக்கை இழக்க வைக்கிறது. அதுவரை பற்றியிருந்தவைகளை மீள் பரிசீலனை செய்ய சொல்கிறது. ஆனால் அது மிக எளிய உலகியல் உளச்சிக்கல்யதார்த்தத்தில் அதற்கு பெரிய இடமில்லை. அதை கடந்து செல்ல ஆன்மீகம் கை கொடுக்க வேண்டும். தத்துவதார்த்தமாக மிக எளிதில் கடந்து செல்ல இயலுவதை கற்றிருக்கிறேன். தத்துவங்களை வாழ்கையில் போட்டு பார்க்க அவற்றின் சிறு கூறுகளாவது பயன்படுத்தி இருக்க வேண்டும். இங்கு தத்துவம் பேசாத யாரும் இல்லை. ஆனால் வாழ்கை எழுப்பக் கூடிய அத்தனை சிக்கலுக்கும் நம்பிக்கை இழப்பிற்கும் அவர்கள் தங்கள் தத்துவத்தில் இருந்து தங்களுக்கு அளித்துக் கொள்ள ஏதுமில்லை


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கத்திற்கு முன்பாகவேளுக்குடி ஸ்வாமிகள்என்னிடம் கேட்ட கேள்விகள் எல்லாம் நேரடியானவை ஆழமானவை சீண்டுபவை ஆனால் நான் பதில் சொல்ல சில மணி நேரம் காத்திருக்க முடிவு செய்தேன். காரணம் அதற்கு நேரடி பதில் என்னிடம் இல்லை

அவர் கேட்டவற்றில் மிக முக்கியமானதாக நான் கருதியது பொருளியல் வெற்றியை குறிவைத்த பிறகு பிற கொள்கைகளை சமரசம் செய்ய வேண்டி வரும் என்பது. அடிப்படையில் நான் சமரசங்களுக்கு உட்படாதவன். களம் என்ன கேட்கிறதோ அதை நேர்மையாக செய்ய முயற்சிப்பவன். எனது செயல்பாடுகள் வழியாகவே நான் என் புரிதலை அடைகிறேன். அது எப்போதும் களத்தில் தான் நிகழ்கிறது. இப்போதும் அதைத்தான் நம்புகிறேன். படைப்பூக்கம் உச்சம் கொள்ளும் போது செயல்படுவதன் மூலமே எனது கற்றல் என் மீது கவிகிறது. அப்போதைய சூழலில் படைப்பூக்க உந்துதல் அந்த புரிதலின் அடிப்படையில் கனவு பெரியதாக இருந்தால் அதன் வழியும் பிரமாண்டமானதாக இருக்கும்


வேளுக்குடி ஸவாமிக்கு என்ன சந்தேகிக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது கேள்வியில் என் மீதான நம்பிக்கை இழப்பை உணர முடிந்தது. பெரிய விழாக்களை முன்வைத்து கருத்தியல் ரீதியாக அவற்றை முன்னெடுக்க முடியாது. அதில் எங்கோ ஒன்றை இழந்தே அதை அடைய முடியும் என்பது அவரது உள்ளார்ந்த அர்த்தமாக இருந்தது. அல்லது நான் அப்படி புரிந்து கொண்டேன். என் கனவுகள் வேறுவிதமானவையாக இருந்தன. ராமாநுஜரின் தரிசனம் ஆயிரம் ஆண்டை கடந்து இன்று என்னவாக பொருள்படுகிறது என்பதை மையப்படுத்தி அதற்கு தீர்வு சொல்லும் பெரிய அமைப்பை எதிர் நோக்கி இருந்தேன். அது பெரும் தேடலை அடிப்படையாக கொண்டது அவற்றை நோக்கிய பயணத்திற்கு தேவையான பிரமாண்டம் வழியாக மட்டுமே அடைய முயல்பவையாக அதுவரை பிற எவரும் முயற்சிக்காத ஒன்றாக அது இருந்தது என்பதால் அதுவரை சம்பிரதாயத்திற்கு உள் நின்று யாரும் முயற்சிக்காத ஒன்னறை துவங்கி இருக்கிறேன் என தெளிவாக அறிந்தருந்தேன்.

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசுகூடுகை 76 அழைப்பிதழ்