https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 24 மே, 2018

அடையாளமாதல் - 342 * செய்திகளில் திகழ்வது *

ஶ்ரீ:




பதிவு : 342 / 519 / தேதி :- 24 மே  2018



* செய்திகளில் திகழ்வது *




நெருக்கத்தின் விழைவு ” - 36
விபரீதக் கூட்டு -04.





ஆனந்த பாஸ்கரன் எனக்கு சொன்ன காபி வரும்வரை, அந்த கிளப்பிற்கு தினம் வந்து செல்கிற அவரது நண்பர்கள் மரியாதை நிமித்தமாக அவரைப் பார்த்து ஓரிரு சொல் பேசி செல்லநான் அதை பார்த்தபடி அமைதியாக இருந்தேன் . விட்ட உரையாடலை எங்கிருந்து மறுபடியும் துவங்க வேண்டும் என்பதை மனம் ஒன்றின் மேல் ஒன்றாக தன்னிச்சையாக அடுக்கியபடி இருந்தது . அவர் சற்று சகஜ நிலைக்கு வந்ததுபோல இருந்ததால் நான் அவரிடம் . “நான் காலை உங்களிடம் சற்று தேவைக்கு அதிகமாக பேசிவிட்டேன் என நினைக்கிறேன் . இது போல ஒன்று நிகழக்கூடாது என்பதனாலேயே , நீங்கள் துவங்கும் எந்த உரையாடலுக்குள்ளும் நான் வருவதில்லைஎன்றேன்

உங்களை அஞ்சியே நீங்கள் பேசுவதை முகத்திற்கு நேராக உங்களை மறுக்காதவர்கள் அதை ஒரு இளிவரலைப் போல பின்னல் பேசுவதை நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள் . நம்மை பற்றிய செய்திகளுக்கு எதிர்வினை ஆற்றுவதை போல ஒரு வீண் வேலை இல்லை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை  . இன்று காலை நான் பேசியவை எனது எண்ணமோ கருத்தோ அல்ல , பல செய்திகளை இணத்து ஒரு உருவகம் கொடுத்தது மட்டுமே நான் செய்தது. அந்த அவதானிப்புகளில் சில தவறாக இருக்கலாம். நீங்கள் மறுதளிக்க வேண்டியது எனது யூகத்தை . செய்திகளை  நீங்கள்  ஒன்றும் செய்யமுடியாது காரணம் செய்திகள் உண்மையானவை. அதுபோல என்னையும் என்றேன்.

முதலில் சிரித்துக் கொண்டவர்நீ சொன்ன பல விஷயங்கள் எனக்கு தெரிந்தவைகளே ஆனால் அவற்றை நீ தொகுத்து கொண்டதை போல நான் செய்யவில்லை , உன்னிடம் ஒன்றும் சொல்லாது எழுந்து வந்தது எனக்கும் சிறிது வருத்தமளிப்பதாக இருந்தது , ஆனால் மதிய உணவிற்கு பிறகு என்னை சந்திக்க வந்த சிலருடன் நான் பேசியபோது நீ சொன்ன தகவல்களை போலவே அவர்களும் சொன்னார்கள் ஆனால் அவை உதிரிகள் , நீ தொகுத்ததைப்போல இல்லை”. என்றார் ஆனந்த பாஸ்கரன் . “நீ சொல்லவருவது சண்முகம் மிக சிறந்த கட்சிக்காரர் மேற்படும் மதியூகி என்பது உனது தீர்மாணமா? என்றார். சாந்தமாக பேசினாலும் இந்த இடத்தில அவரது குரலில் கடுமை வந்து சேர்ந்தது .சண்முகம் பற்றிய சிந்தனையே அவரை பற்றி எரியச் செய்வது என எனக்கு தெரியும்

நான் அவரிடம் சொல்ல விரும்புவது அவர் வெளிப்படுத்தும் இந்த காழ்ப்பைப் பற்றித்தான் . அது அவருக்கு அரசியல் ரீதியாக நன்மை தர தக்கதல்ல. வெகு விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் இந்த சூழலில் தனக்கு அடங்காதவராக ஆனந்த பாஸ்கரை தலைவர் பார்ப்பது அவரின் அரசியலுக்கு உகந்ததல்ல . அதற்காக அவரை நடிக்க சொல்வது எனது அணுகுமுறைக்கு மாறானது .என்னால் உண்மை எண்ணத்தை மறைத்து நடிக்க முடியாது . என்னால் செய்ய இயலாததை நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. அன்றாட வாழ்கையை உண்மை, எதார்த்தம் என ஏதாவதொரு இடத்தில் அதை கண்டடைந்து அங்கிருந்து நமக்கான வளர்ச்சியை அடைய முயற்சிக்க வேண்டும் என நினைப்பவன் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...