https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 20 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வளருதல் *

 



ஶ்ரீ:



பதிவு : 559  / 749 / தேதி 20 ஜனவரி  2021


* வளருதல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 37.






சிக்கல்களை தீர்க்க முக்கிய பதவிகளில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் , சொல்லுபவர்களுக்கு எந்த பதவியும் உதவப் போவதில்லை , அதை சொல்லுபவர்கள் எத்தகைய அதிகாரத்தில் இருந்தாலும் எப்போதும் உணர்வது தங்கள் போதாமையைத் தான். எழுந்துவரும் சிக்கல்கள் அனைத்தையும் நேரடியாக சென்று அணுகுவதற்குறிய செயல்பாடுகள் மட்டுமே அதை தீர்க்க வல்லதாக இருக்க முடியும் . அதற்கு தொண்டர்களை ஒருங்கு திரட்டும் பலம் ஒரு முதல் படி மட்டுமேஎவ்வளவு தடுத்தும் சிரித்தபடி கார்வரை வந்து எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பும் முன் அவர் சொன்ன அந்த வார்தைகள் எனது காதுகளில் கேட்டபடி இருந்தது . முதலில் திகைப்பை கொடுத்தாலும் அதை ஏனோ மனம் நிராகரிக்கவில்லை . அதனுடைய அடிப்படை சீண்டுவதாக இருந்தாலும் அதை மெல்ல உள்வாங்கிக் கொண்டிருந்தேன். நான் அவர்களை பல ஆண்டு காலம் பார்த்து வந்திருக்கிறேன் . புதுவை கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவராக இருந்தவர் வா.சுப்பையா எனது பக்கத்து வீட்டுக்காரர் . என்ன காரணத்திலோ கம்யூனிச சிந்தாந்தமும் அதன் வழிமுறைகள் எனக்கு உகப்பாக இருந்ததில்லை . தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கு திரட்டும் பலமே அவர்களை அரசியலின் முக்கிய இடத்தில் கொண்டு வைத்திருக்கிறது. அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியலாளர்கள் அஞ்சுவது அவர்களைத் தான் . அவர்கள் ஒருபோதும் புதுவை அரசியலில் அதிகாரத்திற்கு வரப்போகிறவர்கள் இல்லை . ஆனால் அவர்கள் எதையும் நேரடியாக வீதிக்கு கொண்டுவந்து விடுகிறார்கள் என்பதே அவர்கள் அச்சத்தின் முதன்மைக் காரணம் . அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி நிறுவிவிடுகிறார்கள் . பிறரின் அச்சம் அவர்களுக்கான இடத்தை உருவக்கிக் கொடுத்து விடுகிறது . இன்று காவல் நிலையத்தில் நடந்ததை திரும்பவும் ஒரு முறை நினைவில் இருந்து எடுத்துப் பார்த்தேன் . ஒரு கனவைப் போல அதை விரித்தெடுக் முடிந்ததுகாவல் நிலையத்தில் நுழைந்தது முதல் பின்னர் வெளியேறிது வரை முதலில் அவர்களின் கடும் பேச்சு பின் மெல்ல குறைந்து எங்களை எதிர்க்க முடியாதவர்களாக மாற்றியது  எனது பின்னால் கூடிய கூட்டம் என நினைத்தேன் . ஆனால் அது உண்மையல்ல கம்யூனிச ஆதரவாளரான அந்த நபர் எனது பக்கத்தில் வந்து நின்ற பிறகே அங்கு சூழ்நிலை மாற்றமடைந்த படி வந்தது காவல்துறை அதிகாரிகள் அவருக்குத் தான் முதலில் அஞ்சினர் . அது அப்பட்டமான உண்மை . அன்றிரவு வீடு வந்து சேர்ந்த போது ஒரு விஷயத்தை சாதித்த நிறைவை அடையாமல் யதார்த்தம் முகத்தில் வந்து வீசுவது போல இருந்தது . அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம் எதையும் கொடுப்பதில்லை . மேலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட இறுதிக் காரணம் என ஒன்று உருவாகி வந்து விடும் . அத்துடன் யாரும் போராட முடியாது என்பது யதார்த்தம் . அவர்கள் கட்சி ரீதியிலே எதையும் அணுகும் அவசியமில்லாதவர்கள் . காரணம் சட்டமன்றம் வேறுவிதமான அரசியல் செயல்பாட்டை வழிமுறையாகக் கொண்டது . கண்ணன் மற்றும் பாலனின் கம்யூனிச சிந்தனை நோக்கிய மனச் சாய்வு அதன் கொள்கையின் அடிப்படையில் ஆனது இல்லை . அது ஒரு பாவனை மட்டும் என புரிந்து கொள்கிறேன் . அரசியல் அவர்கள் எதிர் கொண்ட உண்மையின் முகம் மிகக் கொடுமையானதாக இருந்திருக்க வேண்டும் . அரசு அதிகார பதவிக்கு வரும் யாரும் இந்த இடத்தில் தங்களை சமரசம் செய்து கொள்ளாமல் முன்னகர முடியாது . ஒரு வகையில் மரணத்திற்கு ஒப்பானது . அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அடிப்படையை சமரசம் செய்து கொள்வது ஒரு கொடுங் கனவு போல இருந்திருக்க வேண்டும் . அந்த நேரடித் தன்மை அவர்களை நிலைகொள்ள இயலாமல் செய்திருக்கும் அந்த சீற்றத்தைக் கடக்க தங்களை கலகக்காரர்களாக இளந்துருக்கியர்களாக முன்வைத்துக் கொண்டார்கள் .


எனக்கு அரசியல் மீது ஈடுபாடுகள் உருவான காலகட்டத்தில் கம்யூனிச கட்சிகளின் மேல் எனக்குள்ள கசப்பு இன்னும் ஆழமானதாக மாறியது , அவர்களின் வன்முறை அரசியலில் மீது எப்போதும் ஒவ்வாமை இருந்து . 1969 களில் கட்சிகளுக்கு இடையேயான தொழிற்சங்க சிக்கல் பழனிராஜாவின் கொலையில் முடிந்தது . என்னை வந்து முட்டி நிலையழச் செய்த முதல் அரசியல் படுகொலை செய்தி . எனக்கு அன்று ஏழு வயது . ஒரு மனிதன் பிறிதொருவனை கொல்ல முடியும் என்கிற உண்மை பெரும் அச்சத்தை அதிர்ச்சியை அப்போது உருவாக்கி இருந்தது . அதைச் செய்யும் ஒருவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்கிற கேள்வி அலைகழிப்பை கொடுத்தது . அந்த சவ ஊர்வலம் முக்கிய தெருக்களின் வழியாக சென்ற போது ஒவ்வொரு தெரு முணைக்கும் உளம் பதற ஓடி மீள மீள எதற்கு பார்கிறேன் என தெரியமால் பார்த்துக் கொண்டிருந்ததை நினைவுறுகிறேன் . பின்னர் தொடர்ந்து பல அரசியல் கொலைகள் கருணாஜோதி வரை நிகழ்ந்தது. அது வன்முறையை கையாண்ட அந்த அமைப்பை பற்றிய ஆழ் மன விலக்கலை அளித்திருக்க வேண்டும் . தேர்தல் அரசியலை நோக்கிய பயணம் எனக்கு இறுதி வரை உடன்பாலில்லாத ஒன்றாக இருந்தது . நான் அதற்கானவன் அல்ல என்கிற தெளிவு ஆழ்மனத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும் . அதை நோக்கி இறுதிவரை நகரவேயில்லை . தொண்டர் ஒருங்கு திரட்டல் மற்றும் அவர்களுடன் இருத்தல் எனக்கு மிக அனுக்கமானதாக இருந்தது . அதுவே எனது பலமாக பின்னாளில் ஆனது


காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளை எதிர்த்து நிகழ்ந்தது  திட்டமிட்ட ஒன்றல்ல , எனக்கு கொடுகப்பட்ட பணியை நான் செய்து முடிக்க முயன்றபோது அதன் எதிர்ப்பு உருவானது . பின் அது என்னை மையங் கொண்டது. நான் அரசியலில் இருந்த இறுதிக் கணம் வரை அதன் பாதிப்பை தொடர்ந்து அடைந்து கொண்டிருந்தேன் . முதலில் திகைப்பை கொடுத்தாலும் பிறருடன் உரையாடும் இடத்தில் நான் இருக்கவில்லை .அதற்கு அன்றைய அரசியல் பற்றிய ஒற்றைப் புரிதல் காரணம் . மெல்ல அதில் இருக்கும் ஆபத்தை உணருந்த போது காலம் கடந்து விட்டிருந்தது. அனைத்தையும்  உரையாடி தீர்த்துக் கொள்வதில் இருந்த நம்பிக்கை தகர்ந்த போயிற்று . அரசியலில் அதிகாரம் இருக்கும் வரை ஒருவருடன் வெளிப்படையான உரையாடல்கள் நிகழ வாய்ப்பில்லை  . அவர்களில் பலர் நிலவுடைமை சமூகத்தை சேர்ந்தவர்கள்புதுவையின் ஐந்து தனித் தொகுதிகளில் நான்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இன்றளவும் இருக்கிறது . இளைஞர் காங்கிரஸின் பெரும்பான்மை தொண்டர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் . அதற்கு சில அடிப்படைப்படை காரணிகள் உண்டு . தமிழக மற்றும் புதுவை அரசியலில் எதிர்கட்சியை ஆளும் அமைப்பாக மாற்றும் ஊசல் ஓட்டுகளை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே எப்போதும் முடிவுசெய்கிறார்கள். தமிழகம் போலன்றி நீண்ட காலம் அவர்கள் காங்கிரஸை ஆதரித்தனர் என்பது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் முதல்வராக வர விழைபவர்களுக்கு அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு எப்போதும் தேவைப்பட்டது . அவர்களின் முடிவை தீர்மானிக்கும் இடத்தில் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு மீறி நிலவுடைமை சமூக பெரியவர்கள் கைகளில் இருந்தது . முதல்வராக வர இருப்பவர் அவர்களுடனான பேரம் வழியாக பல உள்விளைவுகளையும் சமன்பாட்டையும் உருவக்கிய பின் அந்த அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்