https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 15 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 523 *பயணம் விட்டு சென்ற வடுக்கள் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 523

பதிவு : 523  / 713 / தேதி 15 பெப்ருவரி   2020

*பயணம் விட்டு சென்ற வடுக்கள் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 37 .





சூரயநாராயண்ணன் சொன்ன தகவல் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது , இரட்டை மனநிலையில் சென்று சண்முகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது முதலில் என்னுள் எழந்தது ,அவர் என்ன சொன்னாலும் மறுக்க வேண்டும் என்கிற உஷ்ண உந்துதல் .ஆனால் அவரை  அறையில் சந்தித்த போது அங்கிருந்த சூழல் நான் எண்ணியிருந்ததை செயலாக்க தயங்க செய்தது அதே சமயம் நிமிரவும் செய்தது .மாநில அமைப்பின் மூத்த நிர்வாகிகள் பலர் அவருடன் அப்போது உரையாடிக் கொண்டிருந்தனர்

முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சபாபதியும் வேறு சிலரும் கூட அங்கு இருந்தனர் .அவர்களில் பெரும்பாலானவர்கள்  ஏதாவது ஒருவகையில் எனது செயல்பாடுகளுக்கு எப்போதும் எதிர்மறை விமர்சனத்தை வைப்பவர்கள் . பாலனுடன் எனக்கிருந்த தொடர்பு அவர்களுக்கு என் மீதிருந்த காழ்பிற்கு அடிப்படை .வல்சராஜ் தலைவராக இருக்க நான் அவருக்கு இணைத்தலைவராக அதிகப்பிரசங்கித்தனமாக  நடப்பதாக எப்போதும் குற்றம் சுமத்துபவர்கள் .எனது நடவடிக்கைகள்  சண்முகத்தால் அங்கீகரிகப்படாதவை என்கிற எண்ணம் உள்ளவர்கள் . சண்முகமே கூட அதைபோன்ற கருத்து உருவாக காரணமாக இருந்திருக்கலாம் .

அவர் தன்னை நோக்கி வரும்  யாரை பற்றிய பதறும் குற்றசாட்டுகளுக்கு எனக்கு தெரியாது யா , அப்படியா நடக்குது , கூப்டு கண்டிக்கிறேன்” என்பதாக இருக்கும் . அதனால் உருவாகும் தலைமை தெளிவின்மையும் அதைப்பற்றி  எழும் செயல் குழப்பம் குறித்து அவர் கவலைப்படுவதில்லை .அது அவர்வரைக்கும் பாதிப்புக்கு உள்ளாகும் போது அந்த நொடி அதை சரி செய்து விடுவார். அரசியலில் இன்று  மட்டுமே நேற்று எப்போதும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை .

நான் அவரது அலுவலகம்  நுழைந்ததும் என்னை பார்த்தது அருகழைத்து தில்லியிலிருந்து வந்திருந்த கடிதத்தை கொடுத்து முக்கியமான இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் தில்லி பயணம. குறித்து திட்டமிட சொன்னார் .அந்த நிமிடம்  வரை என்னை பற்றிய பிழை புரிதல் உள்ளவர்கள் உடன் தங்கள் நிலைகளை மேம்படுத்திக் கொள்வார்கள் . அதனுள்  அடங்காதவர்கள் இனி எதிர்பை மறைமுகமாக்க துவங்குவார்கள் . நான் மறுப்பேதும் சொல்லாமல் அதை பெற்றுக்கொண்டேன் .அது எனக்கான அங்கீகாரத்தை , இருப்பை அறிவிப்பது , மேலும் அங்கு அதை மறுப்பது பின்னாளில் சிக்கலை உருவாக்குவது . .

அதை பெற்ற மறுகணம் மனதிற்குள் தீவிர திட்டமிடலுடன் தில்லி வரை நண்பர்களுடன் நீண்ட பயணம் சென்றுவிட்டிருந்தேன் . எனக்கு அதை மறுக்க வேண்டாம் என தோன்றிப் போனது .என் பிரதான எதிர்பாளர்கள் முன் நிகழ்ந்தது என்குள் ஒருவித தருக்களை கொடுத்தது . இது அதற்கான தருணம் அதை இழக்க நான் தயாரில்லை . மேலும் அமைப்பை முன்னெடுப்பது பற்றி சில வருடங்களுக்கு முன் முயற்சித்து தோற்கடிக்கப்பட்டிருந்தேன்.மிகுந்த மன கொந்தளிப்பை கொடுத்த நேரம் . ஒரு புள்ளியில் பதவியை ராஜினாமா செய்ய முயன்றது அதற்கு வல்சராஜ் சொன்ன யதார்தத அரசியல் வியாக்யாணம்”  மனதில்  நிழலாடியது .

 நெடுநாள் முன்பு திட்டமிட்ட ஒன்றை இப்போது நிகழ்த்தி பார்க்கும் வாய்ப்பு கண்முன்னென வந்து சென்றது .முன்பு இளைஞர் காங்கிரஸில் நிர்வாக கமிட்டியில் எனக்கிருந்த எதிர்ப்பு” என்கிற ஒற்றை புள்ளி செயல்திட்டம் இப்போது காணாமலாகி இருந்தது . இப்போது இதை மறுப்பது அறிவீனம் . காரணம் இப்போது சண்முகம்செய்ய சொன்னது மிக எளிய பயண ஒருங்கிணைப்பாளர் வேலை . ஒருவேளை என்னவிட சிற்பாக செய்யக்கூடியவர்கள் கூட கிடைக்கலாம் . ஆனால் இதை முன்வைத்து எனக்கு பெரிய திட்டமிருந்தது .

1996 தேர்தல் தோல்வியால் கடந்த சில வருடங்களாக மாநில கட்சி அரசியல் தொய்வடைந்திருந்தது . யாருக்கும் சொல்லிக் கொள்ளும்படி  வேலை என ஒன்றில்லை . சண்முகமே கூட தினம் ஒரு வேளை  மட்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றார்  . சில நாட்கள் வீட்டிலிருந்தபடியே கட்சி வேலைகளை செய்யத்துவங்கி இருந்தார் .மிகுந்த மன ஆயாசத்தை கொடுத்த காலம் . அது போன்ற நேரம் சில அடிப்படைகளை பெரிய எதிர்புகள் இல்லாமல்  உருவாக்க சரியான காலமாக எனக்கு தோன்றியது .

ஒரு பக்கம்  நீண்ட நாட்களாக நினைத்திருந்ததை செய்து முடிக்கும் ஆர்வம் எழுந்தாலும்   , இதை எப்போதோ செய்திருக்க வேண்டியவர் , அந்த காலத்தையெல்லாம் விடுத்து இப்போது தானக்காக அதை நிகழ்த்தி இருக்கிறார் என்கிற எண்ணம் எரிச்சலை ஏற்படுத்திய உடன் நான் எப்போதும் விளையாடும்  தற்காப்பு ஆட்டத்தை விடுத்து இனி அடித்து ஆட வேண்டும் என்கிற வெறி எழுந்தது .

ஆனால் மிக நிதானமாக எனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கத் துவங்கினேன் .முதல் கட்டமாக எனது அனுக்கர்களின் கூடுகையை மிக ரகசியமாக ஏற்பாடு செய்து அதில் அடுத்து செய்யவேண்டிய திட்டத்தை  முன்வைத்தேன் . தில்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள விழையும் பழைய பாலன் காலத்து நிர்வாகிகளை தொடர்பு கொள்ள சொன்னபோது எதிர்பார்த்த பலனை அது கொடுக்கவில்லைஅதற்குள்ளாக மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலர் தங்கள் ஆதரவாளர்களின் பட்டியலை சண்முகத்திடம் கொடுக்க துவங்கினர் . அது முதற் கோணல் . நானும் எனது பட்டியலை அவரிடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...