https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * நிறுவிக்கொள்ளுதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 616  / 806 / தேதி 15 ஏப்ரல  2022



* நிறுவிக்கொள்ளுதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 14.






BSNL தாயகராஜன் தனது மார்க்கிய தொடர்புகளில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவரின் லட்சியவாத பார்வை விலகவில்லை காங்கிரஸிற்கு வந்த பிறகும் இங்கு அதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் . மார்ஸிய மனச் சாய்வு கொண்டவர்களுக்கு காங்கிரஸ் பெரும் துயரம் அளிக்கும் அமைப்பு . இங்கு காணப்படும் இடைவெளி அவர்களின் சிந்தனையில் மார்ஸியத்தை இங்கு செயல்படுத்த வேண்டும் என்பது ஒருவித மன்றாட்டு மனநிலையில் அதை சுற்றியே உரையாடல்கள் செல்வது அவரால் தவிற்க இயலாததாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றில் எதை எங்கிருந்து எப்படி இதில் கொண்டு வைக்க முடியும்? என கேட்டால் அவரிடம் பதில்லாமல் போகலாம் . தாயகராஜன் பாபுலாலுக்கு அவனது வியாபாரம் வழியாக அறிமுகமாகியிருக்க வேண்டும் . பாபுலால் சின்னகடை முனிசிபல் கட்டிடத்தில் கறிக்கடை வைத்திருக்கிறான் . அரசியல் குறித்த ஆழமான விமர்சனங்களையும் கேள்விகளையும் அவன் தாயாகராஜனிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். தாயகராஜன் முன்வைப்பவை இங்கு யாருக்கும் என்னவென்று புரிவதில்லை. அதை மேடைதோரும் முழுங்கும் கம்யூனிஸ்டுகள் கூட இன்று அவற்றை பற்றிய நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை . இன்று அதை மேடையில் பேசுகிறவர்களுக்கு அது ஒரு அலங்காரம் போல அடையாளம் போல பேச்சில் வெளிப்படுகிறது . காங்கிரஸில் உள்ளவர்களுக்கு அவை முற்றிலும் புரியாத வேறொரு உலகம். அதன் சிறு பகுதியை புரிந்து கொண்டவர்கள் கூட ஒரு ஏளனப் பார்வையுடன் சிரித்தபடி கடந்து சென்றுவிடுவார்கள்


தாயகராஜன் கடந்த காலத்தில் உறைந்திருந்தார். அவர் பேசுவதெல்லாம் ஒருகாலத்தில் கம்யூன்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு சுற்றி இருப்பவரை பற்றிக்கொண்டு எரிந்தது. உள்ளுக்குள்ளே கூட ஒத்த கருத்துள்ளவர்களை பார்க்க முடியாது . ஒருவர் சொன்னதை பிறிதொருவர் மறுத்து பேசியேயாக வேண்டும் என்பது ஒரு சட்டம் போல. கலைந்து சென்ற பிறகும் பேசப்பட்ட கருத்துக்கள் எடுத்துச் செல்லப்படாமால் பருப் பொருள் போல அங்கேயே இருந்தது . கேட்டவர்கள் காதிலெல்லாம் ஒரு மயக்கு அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கலாம் . இன்று அவர்களிடையே கூட புதிய தலைமுறைகள் ஒன்று உருவாகிவந்துவிட்டது. அவர்கள் மத்தியில் இவை மீண்டும் அதே உக்கிரத்துடன் மீளவும் விவாதிக்கப்படுகிறதா என தெரியவில்லை. என்னுடன் அரசியலில் இணைந்து பணியாற்றிய பல கம்யூனிஸ நண்பர்களை நான்பின் தொடரும் நிழல்குறித்த கேள்விகளை ஒரு சீண்டலுக்காக கேட்பதுண்டு . அவர்கள் அதை பதட்டமில்லாமல் கடந்து செல்வது ஆரம்பத்தில் எனக்கு திகைப்பை கொடுத்ததுண்டு . பின்னர் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கும் உள்ள இளைஞர்களைப் போல இங்கு அரசியலின் பதவி மற்றும் அதிகாரத்திற்கு  கொள்கைகள் அவர்களை தங்களின் அரசியலின் நிறம் பிறித்தலுக்கு பயன்படுபவை. அது புறவயமாக அவற்றை தொகுத்துக் கொள்ளும் அதே சமயம் அகவயமாக அதை நெருங்க தயங்குபவர்களாக அல்லது அஞ்சுபவர்களாக அவர்களை பார்த்திருக்கிறேன். மார்க்சியம் ஒரு தரிசனம் அதை ஒட்டு மொத்த உலகியலுக்குள் கொண்டு வைக்க இயலும் என ஜெயமோகன் சொல்வதுண்டு . அப்படியானால் அது எக்காலத்திற்கும் உரிய பொதுத்தன்மை கொண்டிருக்க வேண்டும். அதை காலத்திற்கு எற்று அல்லது ஏற்ப பொருள் சொல்லபவர்கள் இல்லை என்பதால் அது நிறுவனமாக மாறிப் போனதற்கு காரணமாக இருக்கலாம்.


நான் நினைக்கும் அமைப்பும் ஒருவகையில் நிறுவனப்படுத்துலா அதனால் நிகழும் முரண்பாடுகள் நான் தெளிவாக வரையறை செய்து கொள்ள எப்போதும் முயன்றிருக்கிறேன். கட்சியும் கொள்கைகளும் நிரந்தரமாக பிரிந்துபோன ஒரு காலகட்டத்தில் அந்த விவாதங்களுக்கு என்ன அர்த்தம் என்பது  திகைப்பை கொடுத்தது . நானும் ஒரு வகையில் இவர்களை போல கட்சிக்கும் காலத்திற்கும் பொருந்தாத ஒன்றை முயற்சிக்கிறேனா என கேட்டுக் கொண்டு அவர்களது உரையாடல்களை சந்திக்கிறேன். உறுதியாக அப்படி இல்லை. என் செயல்பாடுகள் வழியாக நான் முயற்சித்துக் கொண்டிருப்பது அரசியலை அல்ல நான் ஆராய்ந்து கொண்டிருப்பது என் சிந்தனையை . நினைக்கும் அமைப்பை உருவாக்குவதை பற்றிய எனது முன்னோடி கண்ணன் மற்றும் உருவான இயக்கத்தை கையாண்ட சண்முகம் மற்றும் பாலன் போன்றவர்களிடமிருந்து எனக்கானதை புரிந்து கொண்டிருக்கிறேன். கட்சி அமைப்பில் இருப்பவர்களின் உளம் செல்லும் திசையை மிக அணுக்கமாக பார்த்திருக்கிறேன் அதில் அந்த நொடிப் புரிதல் சொந்த லாபத்தை தாண்டி அவர்கள் செல்வதில்லை. அதைத்தாண்டி தன் பங்காக சிறிது கிள்ளி எடுத்துவைத்தவர்கள் கூட நினைவுகொள்ளப்பட்டதில்லை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தங்களுக்கு தலைமை தாங்கியவர்களை கைவிட்டிருக்கிறார்கள் அல்லது சூழல்நிலை காரணமாக நிராகரித்திருக்கிறார்கள். இதுவே அரசியலில் நிரந்தரமானது. மாற்ற முடியாத விதி. பின் அவற்றை எதன் பொருட்டு முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்பவர்கள் அரசியலுக்குள் பொருந்தியிருக்க முடியாதவர்கள்.


அரசியல் உலகில் அத்தனையும் சாத்தியமா? என்றால் ஆம்! என்பதே அதன் பதிலாக இருக்க முடியும் . இல்லை என்பது பிறதொரு சாத்தியகூறு மட்டுமே . என்னென்ன சாத்தியங்களினால் அவை இல்லை என்றாகிறது காரணங்களை கண்டடைகிறது , எந்தெந்த வாய்ப்புகளில் பாய்ந்தோடி இணைந்து கொள்கிறது எப்படியெப்படித் தன்னை உருமாற்றி அமைத்துக் கொள்கிறது, எப்படி தன்னைத்தானே கண்டடைகிறது. அதில் இருந்து என் இடத்தில் இருந்து இதுவரை , இனிமேல் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை . அதுதான் எனக்கு முக்கியம். இது எனக்கு மட்டும் திறந்து காட்டும் வழி அதை நானே கண்டடையும் பரவசத்துக்காகவே நான் அரசியலில் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். வெல்கிறேன் , தோற்கிறேன் அதன் முடிவுகள் எனக்கு பொருட்டள்ளானால் அதிலிருந்த கற்றுக் கொள்கிறேன் .


நிலைத்து நிற்கவே இயலாத ஒரு அமைப்பை கொண்டு அதிலிருந்து அடைய ஒன்றுமில்லாத போது அதை ஒரு உருவாக்குவதில் என்ன லாபம்? இது இன்னொரு நம்பிக்கையிழப்பு கைவிடப்படல் . அப்படி எத்தனை நூறு முயற்சிகள் அவை ஒவ்வொரு இயற்கையின் சக்திகளை வாய்ப்புகளை நான் அறிந்து கொள்வதில் ஒரு புதிய திறப்பு. இயற்கையை அரசியலை நான் கையாள்வதில் ஒரு புதிய சாத்தியம் அதிலிருந்து வெற்றி அல்லது இல்லை என்கிற இரட்டைக்குள் வைத்து பார்க்காத போது அது தரும் இடம் மகத்தானது . ஒவ்வொரு முயற்சியும் இயற்கையில் இருந்து எனக்கு கிடைக்கும் ஒரு நிகழ்வு ஒரு அனுபவம் ஒரு சாத்தியம் ஒரு சொல் ஒரு புரிதல் ஒரு குறியீடு இப்படி சொல்லிக் கொண்டே செல்லாலாம் . ஆனால் எல்லா நிகழ்வுகளும் குறியீடுகள்தான். இயற்கையாக அது  சூழ்ந்திருக்கிறது. இந்தவானம், இந்தமழை, இந்த மலைகள், இந்த நகரம் இந்தக்காடு அவற்றின் மொழி வானமெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த மொழி கடல் என்றால் மானுடர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் சிந்தனை ஒரு  மொழி என்பது அதில் ஒரு துளி. இயற்கையின் பெருமொழிமேல் மானுட மொழியைக் கொண்டு முட்டிக் கொண்டே இருப்பது போல செயல்பாடுகளை கொண்டு அதை செய்கிறேன் . அடிபெருத்த மரத்தை அறைந்து உலுக்குவதுபோல. அவ்வப்போது ஒரு சொல் உதிர்கிறதுவானிலிருந்து நேராக சிந்தனையில் நாவில் சொல்லில் தோன்றியது இடியாக. செயல்களில் இருந்து உருவான இடம் என்னை நான் கட்டமைத்துக்கொள்ள உதவின.


ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * நடிப்பு சுதேசிகள் *

ஶ்ரீ:



பதிவு : 615  / 805 / தேதி 10 ஏப்ரல்  2022



* நடிப்பு சுதேசிகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 13.





அன்று இரவு நடையின் போது பாபுலாலைப் பார்த்தேன். நலம் விசாரிப்புகள் . பல வருடங்கங்களாக கடற்கரை இரவு நடைக்கு சென்று கொண்டிருக்கிறேன் அவனை பார்த்ததில்லை. தற்செயலாக வந்திருக்கலாம். பாபுலால் இளைஞர் காங்கிரஸில் எனக்கு மிக அணுக்கமானவனாக இருந்தவன்இரவுகளில் சந்தித்து உரையாடி கொண்டிருப்பது அன்றைய வழக்கமாக இருந்தது . மிக உற்சாகமான நாட்கள் . அந்த உரையாடல்களுக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து கூடுவார்கள். பல நேரங்கள் இரவு நெடு நேரம்வரை அது நீண்டு விடுவதுண்டு . பாபுலால் எனக்கு அறிமுகமானது ஒரு விசித்திரப் பின்னணியில். வல்சராஜ் தலைவராக வந்த பிறகு அவர் நியமித்த கமிட்டியில் பாபுலால் 20 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தான். BSNL ஊழியர் தாயகராஜனுக்கு நண்பர் . அவர் வழியாக சண்முகத்தை அறிமுகம் செய்து கொண்டான்அவனது பெயரை தாயகராஜன் வல்சராஜிற்கு சிபாரிசு செய்திருக்க வேண்டும் . நான் பாபுலால் பெயரை நிர்வாகிகள் பட்டியலில் பார்த்திருக்கிறேன் நேரில் அறிமுகமில்லை. வல்சராஜுடன் முதல் முறையாக தில்லி சென்றபோது பல புதிய நண்பர்கள் இளைஞர் காங்கிரஸ் சார்பாக அப்போது தில்லி வந்திருந்தார்கள். அவர்களுடன் பாபுலால் வந்ததாக நினைவு. முருகேசன் தலைமையில் வேறொரு அணியும் அப்போது அங்கு வந்திருந்தது . வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவன் இந்தி சரளமாக பேசி பிறருக்கு உதவி ரயிலில் இருந்த அனைவருக்கும் நெருக்கமானான். கூட்டம் நடைபெறும் போதெல்லாம் அவனுக்கும் அழைப்பு அனுப்பப்படும். ஆனால் எதிலும் கலந்து கொண்டதில்லை. சில வருடங்களுக்கு பின் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலை புதிதாக வந்து இணையும் ஆளுமைகளைக் கொண்டு இன்றையமார்கெட் மதிப்பைகணக்கிட்டுக் கொள்ளவோம். உருளையன் பேட்டை தொகுதி  ஹேமா பாண்டுரங்கம் ஒரு வித்தியாசமான ஆளுமை சற்று கூச்ச சுபாவி. வெளிவட்டார தொடர்பை சரியாக நிர்வாகிக்காதவர் அதுவே அவரை பல கட்சிக்கு துரத்திக் கொண்டிருந்தது . திமுக தொடங்கி பின் மதிமுக சென்று அங்கிருந்து தமாக வில் இணைந்தார். உருளையன் பேட்டை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெல்லும் கனவுள்ளவர் . அது அவரை எந்த இடத்திலும் நிறைவுறாது துரத்திக் கொண்டே இருந்தது


உருளையன் பேட்டை தொகுதி நகர் மற்றும் அதை சார்ந்த உடனடி புற நகர் மற்றும் குடிசை பகுதிகளைக் கொண்டது. இளைஞர்கள் பல வித செயல்பாடுகளைக் கொண்ட குழுவாக இருப்பதால் அவர்கள் அரசியலை நோக்கி இழுக்கப்படுகின்றனர். குற்ற பின்னணியுள்ள இளைஞர்கள் அதிகம் என்பதால் அரசியல் பாதுகாப்பு மற்றொரு அம்சம். காங்கிரஸ் போன்ற மிதவாத கட்சியால் அங்கு தாக்குப்பிடிக்க முடியாது. எனவே அது திரவிட இயக்கங்களின் கோட்டை. அங்கிருந்து காங்கிரஸை நோக்கி வந்த முதல் ஆளுமைஹேமா பாண்டுரங்கரம்”. அவர் தமாக வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த போது பெரும் இளைஞர் கூட்டம் கட்சி அலுவலகத்திற்கு வந்தது . சம்பிரதாயமான இணைப்பு நிகழ்விற்கு பிறகு வந்த கூட்டம் வடிந்து ஹேமா பாண்டுரங்கத்திற்கு அணுக்கமான சிலர் மற்றும் தரைதளத்தில் தேங்கி நின்றிருந்தனர். உருளையன் பேட்டையை்சேர்ந்த எனது அணுக்கன் ஆறுமுகம் ஹேமா பாண்டுரங்கத்ததை என்னிடம் அழைத்து வந்தான் அவர் தன்னை அறிமுகம்செய்து கொண்டார். அவர் பெயர் நான் முன்பு அறிந்திருந்தேன் ஆனால் நேரில் பழக்கமில்லை . அவரது பெயரின் அடைமொழி அந்த கவனிப்பை கொடுத்திருக்கலாம். உருளையன்பேட்டை தொகுதியில் இரண்டு பாண்டுரங்கங்கள் இருந்ததால் ஹேமா ஒயின் நடத்திய பாண்டுரங்கம் கடை பெயர் அவருடன் இணைந்து கொண்டது. அவர் தன்னுடன் வந்திருந்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த போது அதில் பாபுலால் ஒருவன். பெயர் ஒற்றுமையாலும் பார்த்த முகமாக இருந்ததாலும் அவனை விசாரிக்க அந்த பாபுலால் தான் என தெரிந்தது . கட்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இருப்பதே அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும் . அவன் பெயர் இன்னும் கமிட்டில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது குறித்து அவனுக்கே வியப்பு. அதன் பின்னர் என்னுடன் இணைந்து செயல்பட்டான்


பாபுலால் உரையாடல்களில் விருப்பமுள்ளவன் தயக்கமில்லாமல் தனது வாதத்தை முன் வைக்க நல்ல வாசிப்பு இருந்திருக்க வேண்டும் அல்லது அவனது நண்பன் தாயகராஜனுடன் நடந்த உரையாடல்களின் வழியாக அவற்றைப் பெற்றிருக்கலாம். தாயகராஜன் BSNL ல் காங்கிரஸ் தொழிற்சங்க வாதி. ஆரம்பத்தில் கம்யூனிஸ இயக்கங்களில் இருந்து பின் முரண்பட்டு வெளியேறினாலும் புரட்சிகர மார்க்கிய சிந்தனைகளுடன் காங்கிரஸிற்குள் அவற்றை முன்வைக்க அது ஏற்படுத்திக் கொடுக்கும் இடத்திற்காக காத்திருப்பவர்கள். காங்கிரஸில் அப்படி ஒன்று இல்லை என்பது அதன் வினோதம். பல முறை அப்படிப்பட்ட கருத்துக்களை தாயகராஜன் சண்முகத்துடன் அவர் ஓய்வாக இருக்கும் போது உரையாடுவதை பார்த்திருக்கிறேன். அது இன்னொருவர் அந்த அறைக்குள் நுழையும் வரை மட்டுமே நீடிக்கக் கூடியது. பின் சண்முகத்தால் அறிவுரை போல ஒன்று சொல்லப்படு முடிவிற்கு வந்துவிடும் . ஒரு வித உடல் குறுகலுடன் அவர் அதை ஏற்று அமைதியடைந்துவிடுவார். அவர் பொறுத்தவரை சண்முகத்துடன் உரையாடிய திருப்தியில் அன்று சந்திக்கும் அனைவரிடமும் சண்முகத்துடன் விவாதித்ததாக சொல்லும் அரசியல் அவருக்கு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

நவீன இளைஞர்களிடையே சாதி, சமூகமேட்டிமைத்தனம் எல்லாமே உண்டு. அவர்களுக்கு நீதியுணர்ச்சி என்பதே இல்லை என்பது அதிர்ச்சியளப்பது . அவர்கள் குடும்பங்களில் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை அவர்களுள் எதையாவது வாசிக்கக்கூடிய ஓரிருவர் கூட இல்லை. ஆகவே வேறு எந்தவகையிலும் அவர்களுக்கு அறமோ நீதியுணர்வோ அறிமுகமாவதே இல்லை. அசலான இடதுசாரிக் கருத்துக்களை வாழ்வியலாகக் கொண்ட ஒருவர் கூட நான் பார்த்தில்லை . ஏழைகள்மேல் ஒரு சின்ன கரிசனமும் குறைந்தபட்சம் ஏளனம் செய்யக்கூடாது என்ற உணர்வு எல்லாம் கடந்த கால நினைவுகள் போல . அதாவது சென்ற இரண்டு தலைமுறைக்காலம் என் தாத்தா , அப்பாவின் காலம் . அது எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல காந்தியில் தொடங்கி நக்சலைட் இயக்கத்தில் முடிந்த ஒரு யுகம். இன்றைய இளைஞர்களிடம் அந்த நுண்ணுணர்வும் இங்கிதமும் துளிகூட கிடையாது. தனக்கு ஒரு சமூகப்பொறுப்பு உண்டு என்ற எண்ணமே எவரிடமும் இல்லை. சொல்லப்போனால் பிறருக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இதன் நடுவே புரட்சிக்காரர்களாக வேஷம் போடுகிறார்கள். அது ஒரு ரோல்பிளேயிங். ஒரு சைக்காலஜிக்கல் ரிலீஃப். முற்போக்காக புரட்சிக்காரனாக கலகக்காரனாக பாவனைசெய்து அரசாங்கத்தையோ சமூகத்தையோ மதத்தையோ கட்சியையோ வசைபாடினால் ஒரு சின்ன நிறைவு. பிறரிடம் இருந்து நான் வேறுபடுகிறேன் என்கிற ஆனவம் சமன் செய்யப்படுகிறது. பாரதியார் சொல்லும் அப்பட்டமான நடிப்பு சுதேசிகள்.


புதன், 6 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * முயற்சிகளின் வெளி *

 


ஶ்ரீ:



பதிவு : 614  / 804 / தேதி 06 ஏப்ரல  2022



* முயற்சிகளின் வெளி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 12.





1996 களில் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி இறந்த காலத்தில் வசித்துக் கொண்டிருந்த போது நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை முழுமையாக உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆட்சியில் இருக்கும் காலத்தில் கட்சியில்  வேகமாய் இயங்குவதை போல மடமை பிறிதில்லை. அந்த நேரத்தில் அதில் புதிதாக உபயோகமிள்ளதாக எதையும் உருவாக்க முடியாது. அதை செய்ய முயற்சிப்பது முழு வேகத்தில் சென்று சுவற்றில் முட்டிக் கொள்வது.பயிற்சி முகாம் என்கிற வாய்ப்பும் அதை நிகழ்த்த முடியாத முற்றுகையும் அந்த சூழலில் ஏற்படுத்தப்பட்டதால் அரசியல் மாற்றமடையும் முன்னர் அந்த முகாமை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய நிர்பந்தமும் தேவையும் எனக்கிருந்தது . அரசியல் என்பது ஒருங்கிணைப்பின் வழியாக உருவாவது அது மையங்கொள்வதை தடுக்கும் எதிர்ப்பு மனச்சோர்வு அடையச் செய்து விடும். ஆனால் இந்த முறை அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தெளிவாக உணர்த்திருந்தேன் . 1996 களில் ஆட்சியல் அமர்ந்த போதே ஜானகிராமன் தலைமையிலான திமுக அரசு பலவீனமானது . அதன் முதல் சிக்கல் அடுத்து என்ன நிகழ்த்துவார் எனக் கணிக்க முடியாத கண்ணன் அவரது அமைச்சரவையில் இருந்தார். இரண்டு. ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்தும் காங்கிரஸ் அதை கோராது எதற்காகவோ காத்திருப்பது போல விலகி நின்று கொண்டது . இவை அரசியலாளர்களுக்கு புரிவது .அது தவிற வேறு சில சந்தர்பங்களில் அரசு மிக பலவீனமானது என சாமான்யனுக்கும் புரிந்தது . ஒன்று ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ஏறக்குறைய வெற்றி பெற்றிருக்க வேண்டியது ,ஒரு சின்ன இழை பிசகியதால் அன்று அது நடக்கவில்லை. இரண்டு நாராயணசாமி போட்டியிட்ட ராஜ்யசபை தேர்தல் முடிவு . ஆளுங்கட்சி 18 காங்கிரஸ் 9 நடுநிலை 3 என்கிற கள சூழலில் . நாராயணசாமி ஒரு வோட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவை அந்த ஆட்சியின் ஆயுள் பற்றிய கணக்குகளை எல்லோருக்கும் கொடுத்திருந்தது . எனக்கு வேறுவிதமான கணக்குகள் இருந்தன. நான் எனது பழைய தொடர்புகள் அறாமல் புது இளம் ஆளுமைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் இடத்தை உருவாக்கி அவர்களுக்கு அளிக்கும் முயற்சியில் இருந்தேன். அவர்கள் அந்த இடத்தில் நிலை பெற்ற பிறகே எனக்கான இடம் தெளிந்து வரும். நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவராகும் வாய்ப்புகள் இருந்தாலும் அது நிகழும் வரை என்னால் காத்திருக்க முடியாது. என்னைத் தவிர பிறர் எல்லாம் சொன்னார்கள் நான் அடுத்த தலைவர் என்று . இருப்பை தெளிவாக உணர்வது ஆழ்மனம் அங்கிருந்து நம்மை அறியாது செயல்கள் கூர் கொள்கின்றன. அங்கிருந்து ஆழ்மனம் அறிவதை உடல் உணரும் போது செயல்வேகம் கூடுகிறது. என்ன காரணம் என தெரியவில்லை என்னால் என்னை அந்த அமைப்பின் தலைவராகும் வாய்ப்பை உடலால் உணரவே முடியவில்லை . அது இல்லை போலும். இறுதியில் அதுவே நிகழ்ந்தது .


எனகுள்ள நேரம் மிக குறைவானவை . புதிய இளம் ஆளுமைகளுக்கு கட்சியை பற்றிய அறிமுகமும் இதுநாள் வரை இழந்ததும் இப்போது பெறப்போவதும் என்ன வென்று தெரியவேண்டும் . அதில் இருக்கும் அரசியல் சாத்தியக்கூறுகள் பற்றியும்  எப்படிப்பட்ட ஆளுமையாக இருந்தாலும் உதிரியாய் இருந்தால் அடைய ஒன்றுமில்லை.அமைப்பாக திரண்டு நின்றால் மட்டுமே அது எவருடனும் உரையாட பரிமாணமடைய முடியும். ஆனால் அது நிகழும் வாய்ப்பு மிக மிக குறைவானது. அது நடக்க அதிகார அடுக்குகளில் உள்ளவர்கள் அனுமதிக்கப் போவதில்லை . அவர்களை நிராகரித்து மட்டுமே அது நிகழ்முடியும் . இப்போதுள்ள வாய்ப்பு சண்முகம் மட்டுமே. அவர் ஆகச் சிறந்த வாய்ப்பல்ல , அவரே விழித்துக் கொண்டால் இது நடக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்ல. யார்யார் கண்களுக்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி எப்படி பெருள்படும் என என்னால் ஊகிக்க முடியாது . அதைவிட மிக சிடுக்கான இடம். என்னால் அடையாளப் படுத்தபடுபவர்களுக்கு தங்களின் எதிர்காலமென்ன என்பது புரியுமா. அரசியல் களத்தில் பிரித்தாளுதல் மிக பழைய யுக்தி அதற்கு பலியானால் எங்கள் யாரையும் எதுவும் காப்பத்தாது .


இப்படி எந்தப் பக்கமும் சாதகமின்றி உள்ள ஒன்றை ஏன் செய்ய வேண்டும் என பல முறை கேட்டுக் கொண்டதுண்டு . விருப்பமுள்ள துறையில் ஏதாவது செய்யும் வாய்ப்பு தூண்டிலின் புழு அதை கடந்து செல்ல முடியாது அதன் முடிவுகளின் வெளியில் உள்ள ஆகயமும்  அடியாழத்தில் உள்ள இருள் உலகமும் ஒரு ஈர்ப்பு . இது இன்று வரை யாரும் முயற்சிக்காதது இனி இதன் அருகில் கூட இன்னொருவர் வரப்போவதில்லை. நான் வெற்றியின் எவ்வளவு அருகில் நின்று கொண்டிருக்கிறேன் என என்னைத் தவிர பிற யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . அடுத்தவருக்கு எளிதில் புரியவைத்து விட இயலாது இருந்தாலும் இது நிகழ்த்தப்பட வேண்டியது. எனது கற்றலின் காரணமாக எனது செயலூக்கத்தை வழியாக .என்னால் செயல்பாடுகள் வழியாக மட்டுமே முன்னகர முடியும் அதில் வெற்றி பெற இயலாது போனாலும் முயற்சியே எனக்கான நிறைவை தரும் எனது தனி உலகை நான் அங்கு கண்டடைவேன்.


இதை 1996 களில் துவங்கி இருக்கலாம் அவர்களை முன்வைத்து நிகழ்த்திய கூட்டங்களில் தேவையற்ற பிரச்சனை உருவாக்க மாநில நிர்வாகிகள் முயன்றனர் . ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்  இனி கூட்டம் நடத்துவதில்லை என முடிவெடுத்திருந்தேன் . புதிதாக ஒரு அமைப்பாக திரண்டு வருவதற்கு அதற்குள் எதிர்ப்பு குரல் எழுப்புவதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர முயற்சிப்பது மிக எளிய அரசயல் தந்திரம் அதை கடந்து நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ளவர்களின் உலகம் வேறு வகையிலானது . அந்த அக்கபோரில் நான் ஆர்வமல்லாமல் அமைதியன பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமலாகி இயக்கம் நின்று போனது . அடுத்து ஆட்சி மாறும் அறிகுறிகள் தோன்றின . அதை தொடர்ந்து கட்சி மாறுபவர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர் . மாதத்திற்கு இரண்டு நாளாவது பேராவது ஏதாவதொரு  கட்சியில் இருந்து விலகி கங்கிரஸிற்கு வந்து கொண்டே இருந்தனர் . ஒரு இணைப்புக்கு ஆயிரம் பேர் என ஒரு கணக்கு அந்த ஒரு ஆறு மாதத்தில் ஏழெட்டு பேர் இணைந்து விட்டார்கள் எப்படி பார்த்தாலும் எட்டாயிரம் பேர் . ஆனால் தினசரி கட்சி அலுவகத்திற்கு வரும் அதே எட்டு பத்து பேர் தாண்டி எப்போதும் கூட்டம் வருவதில்லை .உள்ளே வந்து சேரும் அனைவரும் புழக்கடை வழியாக வேறெங்கோ வேரொரு உலகிற்குள் சென்று மறைந்து விடுகிறார்கள் போல . அல்லது வந்தவர்களே மீள மீள வந்து கொண்டிருக்கிறார்களா?. புரியாமல் இருந்தது. கட்சியில் இணைந்த முக்கியஸ்தர்கள் மட்டும் டூவீலர் ஓட்டுனர் சகிதமாக வந்திறங்குவார்கள் . கட்சி வளர்ச்சி பற்றி எங்கும் பேச்செழுந்தபடி இருக்கும். கொள்கை பிணைப்பு , பிடிப்பு பற்றி நாம் கூசுப்படி படி பேசுவார்கள் செயல்படுவார்கள் நாம் இவர்கள் அளவு நாம் செயல்படவில்லையோ என நாணும் படி செயல்படுவர்கள் . புதிதாக வந்திணைந்தவர்கள் நம்மை தேடி வந்தால் மட்டுமே நம்முடைய இடம் என்ன என்பது பற்றிய புரிதல் உண்டாகும் . தேசிய தலைவர் பேரை கொண்ட ஒருவர் உணர்வு பூர்வமாக பேசிக் கொண்டிருந்தார் அந்த தேசிய தலைவர் இறந்த தினத்தில் அவர் பிறந்ததால் அவருக்கு அந்த பேர் போடப்பட்டதாக சொன்னார் . அதனால் தான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றார் . நான் வாய் பிளந்தபடி அவர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன் சரியாக இரண்டு வருடத்தில் கட்சியை விட்டு வெளியேறினார் . பின்னர் ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளுக்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை பார்க்கும் போது மௌனமாக கடந்து மட்டுமே செல்ல முடிகிறது.


புதிய பதிவுகள்

மணிவிழா - 90 *பிம்பங்களை கடந்து……*

  ஶ்ரீ : மணிவிழா - 90 15-09-2026 * பிம்பங்களை காடந்து …..* புதுவையில் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டி துவக்கம் ...