https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 15 நவம்பர், 2023

வெள்ளிமலை பிரபந்த முகாம் கடிதம். ஜெ தளத்தில்

 



https://www.jeyamohan.in/192752/


அன்பிற்கினிய ஜெ,

வணக்கம்,நலம் நலனை விழைகிறேன்.

திவ்ய பிரபந்த பயிற்சி முகாம் வெள்ளிமலையில் ஒருங்கிய உங்களுக்கும் அதை வெற்றிகரமாக நிகழ்த்தி கொடுத்த நண்பர் ராஜகோபாலன் மற்றும் நண்பர் மாலோலன் அவர்களுக்கும் என் உளம் நிறைந்த நன்றிகள்ஒரு நீண்டநாள் கனவு மெய்பட்டது போன்ற உணர்வுகடந்த இருபதாண்டுகளாக நீடித்த ஒன்றுபல முறை முயன்று முடியமால் போனதுஉபண்யாசம் மற்றும் காலஷேபம் போன்றவை நிகழ்த்து கலைக்கு ஈடானவை அவர்களால் அதன் ஓட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக ஒன்றை செய்ய இயலுவதில்லைமுயற்சித்த சிலர் பாதியில் தொடர்பு சரடு அறுந்தவர்கள் போலாவதை பார்த்து திகைத்திருக்கிறேன்பிரபந்த பாசுரங்கள் எளிய தமிழின் சொல்லழகும் கவித்துவமும் மிளிர அதன் உச்சத்தை அடைவது மரபில் சாத்தியமில்லை எனப் புரிந்து கொண்டேன்ஆனால் நவீன இலக்கியம் வாசித்தவர் ஒருவர் அந்த உச்சங்களை அனாயாசமாக சென்றடைய முடியும் என்பதை இந்த முகாமில் அனுபவிக்க முடிந்ததுநண்பர் ராஜகோபால் அதை தனது அனுபவத்தால் நிகழ்த்தி காட்டிய போது ஒவ்வொரு முறையும் உள்ளம் விம்மியது .

இன்றைய நவீன இலக்ககிய வாசகர்களுக்கு பக்தி மரபிலக்கியம் நோக்கிய தேவை இது போன்ற ஒரு நிகழ்வு பெரிய அளவில் உதவும் . இன்று சாமான்யர்களுக்கு தமிழ் இன்னும் தூரத்தில் உள்ளது . துரதிஷ்டவசமாக மரபான உபண்யாச முறைகளில் பிரபந்தம் மற்றும் கம்ப ராமாயணமே கூட மொழியில் அழகும் அதன் அறிதலும் நிகழ்வதில்லைதத்துவ விளக்கம் வியாக்கியாணம் என பெரிய சொற்காடுகள் உருவாக்கும் போது தமிழின் சொல்லழகும் உச்சக் கவித்துவமும் பிரித்தெடுத்து ரசிக்க முடியாமல் போய்விடுவதுடன் பகத்தியில் அதன் உள் பொதிவு தேவையற்றது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது

உபண்யாசம் கேட்பதாலேயே “கதி மோட்டசம்” போன்ற எண்ணத்தை உருவாக்கி விடுவதால் அங்கு அமர்ந்து கேட்பவர்களுக்கு அதைக் கடந்து பிறிதொரு எண்ணமில்லாமல் அந்த சொற் பெருக்குகளை செவியளவில் உள்வாங்கி புண்ணியத்தை சேர்த்து பின்னர் தங்கள் அன்றாடங்களுக்கு திரும்பிவிடுகிற்றார்கள் அங்கு கற்றல் ஒருபோதும் நிகழப்போவதில்லையகாலஷேப முறை வகுப்பு போல எடுக்கப்பட்டாலும் சம்ஸ்கிரத சொல் உபயோகம் கேட்பவரை அன்னியப்படுத்தி விடுவதுடன் கவனத்தை சிதறடித்துவிடுவதை பார்த்திருக்கிறேன்

மரபு இலக்கியத்தில் நவீன வாசிப்பின் வழியாக நிகழக் கூடியது என்ன என்பதை முதலில் அறிந்து கொண்டது எழுத்தாளர் சுஜாதாவின் மரண தருணத்தில் நீங்கள் நம்மாழ்வார் பாசுரங்கள் சிலவற்றை அன்றைய இரவு முழுவதும் வாசித்துக் கொண்டிருந்ததைப் பற்றிய கட்டுரை  கொடுத்திருந்ததுஇரண்டாவது நீங்கள் புதுவை வெண்முரசு கூடுகைக்கு முதல் முறையாக வந்திருந்த போது நண்பர்கள் அலவலாவல் மத்தியில் பெரியாழ்வாரின் “புறம் புல்குதல்” பற்றிய பத்து பாசுரத்தில் இருந்து சிலவற்றை சொன்ன போது அந்த சிலிப்பை அடைந்தேன்பின்னர் பல சந்தர்பங்களில் அது போன்ற நிகழ்வை நான் நடத்துவது பற்றி உங்களிடம் உரையாடி இருக்கிறேன் . அதுவே பின்னர் புதுவை வெண்முரசு கூடுகையாக உருவெடுத்தது

சமயம் கிடை்க்கும் போதெல்லாம் கடலூர் சீனு,மணிமாறன்தாமரைக்கண்ணனுடன் இது பற்றி பேசி இருக்கிறேன்கடந்த மாத வெண்முரசு கூடுகையின் இறுதியில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களை நவீன பாணி கவிதைகளாக மாற்றி பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்

சில நாள் கழித்து நண்பர் தாமரைக்கண்ணன் “கிளப்ஹவுஸ்” செயலி அதில் நண்பர் ராஜகோபால் அவர்களின் உரையாடல் குறித்து சொன்னது பின்னர் வியப்புடன் அதை முழுவதுமாக கேட்ட கொண்டிருந்த சந்தர்பத்தில் நீங்கள் வெள்ளிமலை திவ்ய்பிரபந்த வகுப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டிருந்தீர்கள் . நான் தற்செயல் வாதத்தை நம்பாதவன்இதை ஒரு நல்லூழாக எடுத்துக் கொண்டேன்அதே செயலியில் “இம்பர்வாரி” என கம்பராமாயணத்தை வாசிக்கிறார்கள் கேட்க மிக அற்புதமான அனுபவமாக இருந்தது 

இன்றைய மரபிலக்கியம் ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு சொல்ல ஓன்றுமில்லை அது இளநிலை மாணவர்களுக்கு முதுகலை கற்பிப்பது போன்ற பாவனையுடன் சொல்லப்படுகிறது  எனது தந்தை வருத்தமாக சொல்வதுண்டு

முகாமை துவக்கி நடத்திய கணம் முதல் இறுதிவரை நண்பர் மாலோனின் அருகமர்வு வழியாக முகாமை நடத்திச் சென்றது மிக சிறந்த அணுகுமுறை .தயக்கமில்லாமல் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் தங்களை இணைத்துக் கொண்டது நிகழ்வை உயிர்புள்ளதாக்கியதுபலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் அது உருவாக்கியது.நண்பர் ராஜகோபால் அவற்றை உள்வாங்கி  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை வேறொரு உச்சத்திற்கு அவர் கொண்டு சென்றதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்ஒவ்வொரு உரையாடலுக்கும் இறுதியில் அவர் சென்றடையும் உச்சம் மேடையில் உருவாகி அது நிகழும் கணம் அதில் திளைத்தல் என அவை அவரது மேடை அனுபவத்தை காட்டியது .

ஆழ்வார்களின் பாடலில் உள்ள தமிழ் கவிச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்த அதே சமயம் தத்துவம் குறித்த மிகையற்ற “சிறு கிள்ளல்” உப்பு அதன் சுவையை மிகப் பெரிய அளவில் கூட்டியது.

நண்பர் மாலோலன் அருகமர்வு வகுப்பை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது.மிக சிறப்பான ஏற்பாடுபாடல்களை மரபான சந்தையில் வாசிக்கப்படும் போது உருவாகும் உணர்வு நிலை கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டது . பிரமாதமான ஏற்பாடு.எனது நீண்ட நாள் கனவு இது போன்ற ஒரு நிகழ்வு.நிகழ்வு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்ததுஒவ்வொரு பாசுர கவித்உவமான விளக்கம் பின்னர் அதன் இறுதியில் தத்தும் பற்றிய சிறிய அறிமுகம் மிக சரியாக கோர்கப்பட்டிருந்ததுமுதல் நாள் துவக்கத்தில் வைணவ தத்துவ கட்டுமானத்தை வைக்காமல் அன்று இரவு அதை செய்திருந்தது மற்றைய இரண்டு நாள் கற்றலுக்கு உதவியாக இருந்தது.   

மரபான வியாக்கியான முறைகளின் படி சொல்பவர்களை அதில் திளைக்கச் செய்துவிடுகறது அத்தகைய உரைகளில் பார்வையாளர்கள் சில உச்சங்களை மட்டும் சேகரித்துச் செல்கிறார்கள்அது அவர்களுக்குள் விதையாக விழுவதில்லை

கடந்த சில வருடங்களாக அலோபதி மருந்துகளால் உருவான தொடர் உடல் உபாதைகளுக்கு அஞ்சி பயணத்தை தவிற்த்து வந்தேன்ஒவ்வொரு வெள்ளிமலை முகாம் பற்றிய அறிவிப்பு வரும் போதெல்லாம் கலந்து கொள்ள இயலாமை குறித்து மனம் குழைந்து வருந்தியதுண்டுஇம்முறை வாய்ப்பை தவறவிடுவதாக இல்லை சென்றேயாக வேண்டும் என கிளம்பினேன்வியாழக்கிழமை இரவு 11:30 மணிக்கு புதுவையில் இருந்து தனியாக கிளம்பி அதிகாலை 6:00 வெள்ளிமலை சென்றடைந்தேன்இடையில் அந்தியூரில் நண்பர் பெங்களூர் ஹரீஷ் வந்து இணைந்து கொண்டார் அந்தியூரல் இருந்து மலை ஏற்றம் துவங்கியுடன்

உங்களின் முதல் தத்துவ முகாமிற்கு புதுவையில் இருந்து அங்கு விட்டு வந்து எனது ஓட்டுனர் அங்கு நடந்ததாக சொன்ன கதைநண்பர் அந்தியூர் மணி விளக்கமாக எழுதிய மின்னஞ்சல் போன்றவை ஏற்படுத்தி பீதி காரணமாக இருள் விலகா காலையின் இடையில் மலையேற்றத்தில் சில மணிநேரம் வெளிச்சம் வரும்வரை காத்திருந்தது ஒரு வகை திகில் அனுபவம்வழியில் சற்று முன்னர் யானை கடந்து சென்றதற்கான சான்று போன்றவை அந்த இருள் விலகா காலையை திகிலுடன் அழகாக்கியது

நன்றி 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

புதுவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...