https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 24 நவம்பர், 2023

ஜெ.அடியடைவு பதிவு கனவு கடிதம்

 




24.11.2023

புதுவை.1


அன்பிற்கினிய ஜெ,


வணக்கம்ஒருவகையில் இது 23.11.2023 அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சி. வழக்கமாக அதிகாலையிலேயே உங்கள் தளத்தை வாசித்து முடித்து விடுவேன். என்ன காரத்தினாலோ நேற்று வாசிக்கவில்லை. உங்களுக்கு எழுதிய கடிதத்தை அனுப்பலாம வேண்டாமா என குழுப்பி பின் அனுப்பி வைத்தேன்..அதன் பிறகே உங்கள் தளத்தை வாசித்தேன்

உங்கள்அடியடைவுவாசித்து முடித்த பிறகு அதிர்ச்சி. உங்கள் முன்னோருக்கு நீங்கள் அளித்த நீர்கடன் திகைப்பை தந்தது. உங்களை சந்தித்த இந்த 13 வருடத்தில் நீங்கள் அடைந்து வரும் மாற்றத்தை அறிந்திருக்கிறேன் . நீர்கடன் கொடுத்து முடித்த பிறகு நீங்கள் அடைந்த அந்த மனநிலையை மிக அணுக்கமாக உணர்கிறேன். அவை வார்த்தைகளால் விவரிக்க இயலதவை. அதை ஒட்டி இந்த கடிதத்தை எழுத நினைத்தேன்

எனது தினசரி பூஜை துவக்கம் நீர்கடனுடன் துவங்கும் . நான்கு நிரைகளில் நான் எனக்கு குருவாக நினைக்கும் அனைவருக்கும் அதில் நீர்கடன் கொடுப்பது வழக்கம்

முதல் என் தாய் தந்தை வழி 

இரண்டு என்அரசியல் குரு பரம்பரை சண்முகம் காமாராஜர் காந்தி என ஒரு நிரை 

பின்னர் மூன்றாவது நிரை வியாச சுகப்பிரமம் என தொடங்கும் நிரையின் இறுதியில் வெண்முரசு மூலம் உங்களிடமிருந்து பெற்றவைக்கு நன்றி சொல்லும் விதமாக பாகுலேய பிள்ளை விசாலாட்சி அம்மாள் என நிறைவுறும்

நான்காவது நிரை பிரம்மா தொடங்கி துருவன், சிவன் ,மகாபலி ,பகிரதன், கங்கை , பீஷ்மர் என நிறைவுறும்.பின்னர் குல வழக்கமான விஷ்ணு வழிபாடு.

நான் உங்களை பற்றிய எழுதிய கனவிற்கும் உங்கள் பதிவிற்கும் உள்ள தொடர்பு போல ஒன்று  இருப்தாக மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது

நான் காசியில் தாய் தந்தைக்கு நீர்கடன் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன அத்தனை விரிவாக இல்லை


நன்றி 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...