https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 149 * கோபாக்னி *

ஶ்ரீ:





பதிவு : 149 / 223     தேதி :- 05 ஆகஸ்ட்  2017

கோபாக்னி  *

இயக்க பின்புலம் - 73
அரசியல் களம் - 43




 // அன்று பின்காலை 11:30 மணிக்கு மேலிருக்கும் , சேகர் மிக பதட்டமாக என் அலுவலகம் நுழைந்தான் . செய்தி மிக சுருக்கமாக இருந்தது . இன்று மதியம் பாலனுக்கும்   தாமோதரனுக்கும்  பெரிய முரண் . எங்கே நிகழ்ந்தது என்றதற்கு  முதல்வரின் தனிச்செயளர்   அறைக்கு வெளியே . என்றான் . //






சேகர் சொன்ன விஷயம்  இதுதான் .மாநாட்டின் போது பொருளியல் உதவி செய்த தாமோதரனின் நண்பர் ஒருவருக்கு அரசாங்க ரீதியான சிக்கல் . அமைச்சர் ரங்கசாமியிடம், சொல்லி காரியம் ஆற்றவேண்டும் . முதல்வருக்கும் ரங்கசாமிக்கும் ஏதோ நிழல் யுத்தம் , இங்கும் அங்குமாக சென்றுவரக்கூடிய சிலர் அவரவர் முகாமிலேயே இருந்து கொண்டனர் போக்குவரத்து சில காலத்தில் அறவே நின்று போனது

இந்த சிக்கலின் உச்சத்தில் தான் தாமோதரன் பாலனின் உதவியை நாடியது . தாமோதரனே அதை செய்யக்கூடியவர்தான் , ஏதோ காரணம் இதில் பாலனின் உதவியை நாடினார். பாலனுக்கும் தாமோதரனுக்கும் என்ன நடந்தது,  பாலனின்  என்ன சொன்னார் என்கிற தகவல் தெரியவில்லை . ஆனால் தாமோதரன்  , "இந்த உதவிக்கு உன்னை நாடிவந்தது என் தப்பு, அதற்காக என்னை நானே கழற்றி அடித்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று சொல்லிவிட்டு வேகமாக முதல்வரின் தனிச் செயலரின்  அறையை விட்டு வெளியேறினார் என்றான் சேகர்

காரியமாகிறதோ இல்லையோ சட்டமன்றத்தையே தினம் சுற்றிவரும் சில வேடிக்கை மனிதர்களை எனக்கு தெரியும் , அவர்களின் தகவல்கள் மிகத்துல்லியமாக இருக்கும். அப்படி ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார் . சேகரிடம் சொல்லிவைத்ததை அவரிடமும் சொல்லியிருந்தேன் . நடந்தவை முதல்வரின் தனிச்  செயலரின் அறையில் என்பதால் அவராலும்  அதை முழுவதுமாக சொல்ல முடியவில்லை . தாமோதரன் கேட்ட உதவி என்ன என அவருக்கும் தெரியவில்லை . ஆனால் அவரும் பாலனுடன் தாமோதரனுக்கு நிகழ்ந்த மோதல் சம்பவத்தை பகுதியாகத்தான்  சொன்னார் .இருவரின் குரலும் உச்சஸ்தாயியை அடைந்த பிறகே, பிறிதெவரையும் போல அவரும் உள்ளே  சென்றார் . பாலன் தாமோதரன் கோபத்திற்கு எந்த சமாதானமும் சொல்லாமல், தாமோதரன் தன் அனுமதியின்றி தன்னை கடந்து   சட்டமன்றத்திற்கு  வந்து போவது  தன் அவமானத்திற்கிணையான  குறையாக சொன்னபிறகே இந்த சிக்கலே தொடங்கியது . அதன் பின்னரே தாமோதரன்  தான் எதற்கு அங்கு வந்தேன் என்றும் ,அதை இப்போதும் பாலன் செய்து கொடுத்து பின் சொல்லட்டும் , தன்னை அங்கு வரவேண்டாமென என்றதற்கு , "நம்பிக்கை" பற்றி பாலன் ஏதோ குதர்க்கமாக பேசிய பின்னரே தாமோதரன் நிலைபிறழ்ந்து அந்த சொல்லை ப்ரோயோகப்படுத்திவிட்டு வெளியேறினார் என்றார் .

தாமோதரனை பற்றி நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் பிழையானதல்ல . அவர் மிக எளிய மனிதர் . எளியவர்களுக்கே இயல்பாக இருக்கும் போதாமையால் இன்றைய நடைமுறைமை அரசியலை தன் ஒருவனாலேயே  சமாளிக்க முடியும் என நினைத்தது  யானையை தன்  வீட்டு தொழுவத்தில் கட்ட விழையும் வெகுளித்தனம் . கமலக்கண்ணன் முதலில் தலைமை பொறுப்பிற்கான ஆளுமையே  அல்ல , அதை அவரும் அறிவார் . அவர் விழைவதை  என்னுடன் பகிர்ந்துக்கொண்டிருக்கலாம் . ஆனால் இந்த சூழலில் நான் அதற்கு ஆதரவளித்திருக்க முடியாது என்பது வேறுவிஷயம் . ஆனால் ஆட்சிக்குவந்த பிறகு நடைபெற்றுவரும் உட்கட்சி அரசியல் நிலைகளை பற்றி அவர் ஏதும் அறிந்திருக்கவில்லை . வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரது பார்வையை என்னால் மாற்றியிருக்கமுடியும் . ஊழ் அவர் என்னை அணுகவேயில்லை . என்னாலும் அதை கடந்து அவரிடம் செல்லமுடியவில்லை.

 நாம் விழையும் எதுவும்  நமக்கு சரியானதாக இருக்கவேண்டும் என்பது  எந்த நியதிக்கு உட்பட்டதல்ல . கமலக்கண்ணனை விதிவசத்தால் தலைமைக்கு கொண்டுவருவது நிகழ்ந்தால் . அது கேட்கும் முதல் களப்பலி தாமோதரனாகவே  இருந்தால் அது ஆச்சரியமல்ல. அவருக்கு தெரியவில்லை  இன்று நிகழும் மாநில அரசியல் இதுவரை நடவாதது  . இன்னும் புதிய சமன்பாடுகள் எழுந்துவரவில்லை அதனாலேயே அது தேக்கமடைந்துள்ளது . அந்த தேக்கத்தினால் முதல்நிலை தலைவர்களே அமைதி இழந்திருக்கிறார்கள். மற்ற சிக்கல் அவர்களின் காதில் ஏறப்போவதில்லை. 

மூப்பனாரிடம் நான் சொன்ன இன்றைய புதுவை அரசியலின் புதிய நிலைப்பாடுகள் மற்றும்  ஏற்படப்போகும் சமன்வாய்ப்பை பற்றிய என் அவதானிப்பே  அவரை என்னை திரும்பிநோக்க வைத்தது . ஆனால் அவரிடம் நான் என்ன சொல்லிவிட்டு வந்தேனோ, அது இனி நிகழப்போவதில்லைஅதை யாருடனும் பேசப்போவதில்லை ,  அந்த பாதையை இனி எவரும் பயன்படுத்த முடியாது என்பதுதான் சோகம் . இபோதும் அங்கு என்ன நிகழ்ந்தது என இவர்களுக்கு புரியவைக்க முடியுமானால் . மூப்பனாரை நான் மறுபடியும் சந்தித்தால்  எனக்கான புதிய பாதைகள் திறக்கலாம் .ஆனால் அதன் வாய்ப்புகளின்  வாழ்வு மின்னலினும் மெலியவை 

இதில் தாமோதரனின் அரசியல் நிலைப்பாட்டில் வேறொரு கூரையும்  கவனிக்கிறேன் . கமலக்கண்ணனை மையப்படுத்தி அவரின் அரசுசூழ்தல், நான் விலகிய பின்  நிலைமாறுபாடு சிக்கல் எழுந்தபோதே காலாவதியாகிவிட்டது  . அதை மீண்டும் வேறு வடிவத்தில் புனையாது அப்படியே வைத்திருக்க அவர் முட்டாளில்லை . அதை  ஒரு பேரத்திற்கான வெட்டுக்காயாக கூட அவர் வைத்திருக்கலாம் . பேரம்பேசுகிற இடத்தில் அவர் எப்போதும் இல்லை என்பதை உணரவேயில்லை .இப்பொது எனக்கு முன்பே உள்ளது தெளிவான பாதை இதில் எந்தவித பேரத்திற்கும் இடமில்லை . தற்போதைய சூழலில் பேரமென்பது அனைவரின் கைகளிலிருந்து கழன்று விட்டது . இப்போது அனைவரின் முன்னுள்ள கேள்வி ஒன்றே , நான் நினைத்ததை அவர்கள் ஆற்றுவதா  ,விடுவதா என்பதே.

என்னால்  சட்டமன்றத்தில் என்னென்ன நிகழ்ந்திருக்கும் என அவதானிக்க முடிந்ததுசேகரிடம் , நான் தாமோதரனை மட்டும் தனிமையில் சந்திக்க விரும்புவது உன்னால் எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ சொல் என்றதும் சேகர் உடனே புறப்பட்டு சென்றான். ஆச்சர்யம்தான் முதலில் மாட்டேனென்றவன்,இப்போது ஒரு எதிர் சொல்லின்றி உடனே கிளம்பியது எதையோ யூகித்துவிட்டிருந்தான் என்பதை காட்டியது .

தாமோதரன் கமலக்கண்ணனை தவிர்த்து  தனியாக என்னை சந்திக்க வந்தாரென்றால் என் யூகம் சரி. எப்படியும்   என் பேசுமுறை மாறப்போவதில்லை .நான் தாமோதரனிடம் எங்கிருந்து தொடங்கவேண்டும் என்கிற  பேசு முறைமைகளை பிறிதொரு முறை மனதில் எடுத்து பேசி பேசி, பிழையூகம் கொள்ள செய்யும் விதைகளை விலக்கி செறிவாக்கியபடி, அவருக்காக அமைதியாக காத்திருந்தேன்.


வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 148 * தேக்கும் மடமை *


ஶ்ரீ:

-



பதிவு : 148 / 222      தேதி :- 04 ஆகஸ்ட்  2017

தேக்கும்  மடமை  *

இயக்க பின்புலம் - 72
அரசியல் களம் - 42





"என்றைக்கு தாமோதரனுக்கும் பாலனுக்கும் கடும் முரண் வெடிக்கிறதோ அப்போது எனக்கு தகவல் சொல்லவேண்டும் , அவ்வளவே" என்றேன் .சேகர் "அடுத்து என்ன" என்றதும் மேற்கொண்டு  சொல்ல ஏதுமில்லை .அந்த தகவல்முரண் நிகழ்ந்த சில மணிநேரத்திற்குள் எனக்கு தெரிவிக்கப்பட  வேண்டும் அவ்வளவே"என்றேன்.  அடுத்தடுத்து நிகழவிருப்பதை நினைத்த போது உள்ளுக்குள்   ஒரு சிறு நலுங்களை  உணர்ந்தேன் .எப்படியெல்லாம்  இது பேசப்படப்போகிறது ,   யார் யார் வாழ்வினை இது புரட்டிப்போடும்  என தெரியவில்லை அவை நிழல்களைப்போல,பிரதிபலிப்பவை ஆனால்  அவரவர் விழைவிற்கு தக்கபடி வளைவுகளால் செறிபவை  , நிலையாக நிற்காதவை. பலராலும் அதற்கு கணக்கிலடங்கா தலைகளும் வால்களும் இட்டு கட்டப்பட்டு பெருகியபடியே இருக்கப்போகிறது .  




பாலனின் தேர்ந்த இந்த விளையாட்டில் , இதில் அவருக்கு  எந்தவொரு தற்காப்பு அரசியல் நோக்கமிருப்பதாக  நான் நினைக்கவில்லை . அது ஒரு வித மனச்சிதைவு போல , மரைக்காயரை சுற்றி இருக்கும் அரசியலின் தன்மை வேறு வகையிலானது , அதை பார்த்து தனது களத்தை பிழையாக குழப்பிக்கொண்டார். மரைகாயரின் களத்தில் அவரவர் தங்கள் தங்கள் பலத்தைக்கொண்டு தங்களின் அரசியல் நிகர்நிலையை பேணுபவர்கள் . அவர்களுக்கு மத்தியில் தனக்கான அரசியலை மரைக்காயர் வென்றெடுக்க வேண்டும், அவர்கள் ஒத்துழைப்புடன் அல்லது நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பில்லாமல்

ஒத்துழைப்பில்லாது அவர் தனது வெற்றியை அடையும்போது , அதை இழந்தவர் , தனக்கு நிகழ்ந்ததை எவ்வகையிலாவது பழிநிகர்க்கொள்ள எப்போதும் முயன்றபடி இருப்பர்  . அது நடவாது மரைக்காயர் இருபத்திநாலு மணிநேரமும் தன்னை தற்காத்தபடி இருக்கவேண்டும் . இதை படிநிலை அரசியலில் நிற்பவர்களிடம் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசிமில்லை . அவர்கள் மிக எளியவர்கள். தங்களின் எதிர்காலத்திற்காக பாலனை சார்ந்திருப்பவர்கள் . மேல்முறையை அரசியல் சூழ்தல்களை அவர் இயக்கத்திற்குள் பயன்படுத்தும்போது . பாதிக்கப்பட்டவர் மனம்வெதும்பி  விலகிவிடுவதால் . இதை அவர்களுக்கு தொடர்ந்து செய்ய இயலாது . புது உறுப்பினர்கள் சேர்வது என்றோ இல்லாமலாகி விட்டது . இந்த சூழலில் இருப்பவரை வெளியேற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது .  

பாலனின் மேல்முறைமை அரசியல் விளையாட்டின் சில விஷயங்களை , சில கூறுகளை நான்  புரிந்து வைத்திருந்தேன் , அது ஒரு அரசியல் பாட திட்டம் போல. அவை அத்தனையும் அரசியல் சூழ்தல் மற்றும் அவதானிப்பிலிருந்து எழுந்து வருபவை. முடிவுகள் எப்போதும் பல  தரப்பிலிருந்தும் பெறப்படுகிற தகவல்களின் குறுக்கு நெடுக்கு ஊடுபாவாக நெய்யப்பட்டு அவற்றை பின்னர் முழுமைபடுத்தப்படும் . இருந்தும் அவை ஏறக்குறைய கற்பனையை ஒட்டியே உருபெறுபவை . கேட்பவரின் கண்களில் தெரியும் வியப்பின் வரிவையும் ,நம்மிடம் அதைத் தொடர்ந்து காட்டும் அரவணைப்பே, நம் கூற்றின் தண்மையை நிர்ணையம் செய்பவை . என்னால் அதை கொண்டு மூப்பனார் போன்ற பழுத்த ஆளுமைகளிடம் எதிர்வார்த்தை வைக்க முயன்று வெற்றியும் பெற முடிந்தது . அதைப்போல ஒரு விளையாட்டை பாலன்  அமைப்பிற்குள்ளும் நிகழ்த்த துவங்கியிருந்ததை , காலம் கடந்து அறிந்ததும் . அதிர்ந்து போனேன் . இது முறைமை மீறல் .எளியவர்களுக்கு எதிராக , அதிலும் தன்னை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பிரித்தாள உபாயகப்படுத்துவது.

ஒரு தலைவனாக அதை செய்வதற்கு பாலனுக்கு உரிமை உள்ளது. அனால் அந்த துலாவின் மற்றொரு தட்டில்  இயக்க உறுப்பினர்களுக்கு  அரசியலில் வளர்ச்சியையும் வாழ்கையும் கொடுக்கும் வல்லமை இல்லாத போது அதை நிகழ்த்துவது மடமை. மனிதத்தன்மையற்றதாகவே அது புரிந்து கொள்ளப்படும். அரசியல் பயணத்திற்கான தனது ஊடகத்தை , தேக்கி நிறுத்தி சீரழிக்கும் மடமையை இவரல்லாது பிறிதெவரும் செய்யார்.

சேகரிடம் என் விழைவைச் சொன்னபோது அவனுக்கு அதில் ஒளிந்திருக்கும் என் திட்டம் தெரிந்திருக்கவில்லை. தேக்கடியிலிருந்து புதுவை திருப்பும் வரை அதை என்னிடமிருந்து உருவியெடுக்க பல கோணங்களில் முயன்றபடியே இருந்தான் . நான் அவனுக்கான பதிலாக ஒற்றைபோக்கு கொண்ட சித்திரத்தையே அளித்தபடி இருந்தேன் , " தற்போது திட்டமென்றே ஒன்றில்லை என்றும்  , மேற்கொண்டு என்ன செய்வது என்பதை பற்றிய பேச்சு வார்த்தையை நான் யாரிடம் துவங்குவது நீயே சொல்என்றதும், வெகுநேரம் ஏதும் சொல்லாமல் இருந்தான் . நான் அதை அவரிடமிருந்தே துவக்கினேன் . “நீ அனைவரையும் ஒருங்குஎன்றதும் ,அது தன்னால் ஆகாதது என அவனே புரிந்திருந்தால், கமலக்கண்ணன் என்றதும்அவன் தாமோதரனை கலக்காமல் ஏதும் சொல்லமாட்டான்என்றான்  . ஆகவேதான் சொன்னேன்தாமோதரனை அழைத்துவாஎன்று

தன்னால் அழைத்துவர முடியாதென்றான் . நான் சிரித்தேன் . “தாமோதரனுக்கும் பாலானுக்கும் எப்போது பெரிதாக முரண்படுகிறது அன்று தகவலை மாட்டும் சொல்லு மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்என்றேன் .தேக்கடிக்கு சென்று வந்து பத்து பதினைந்து நாள் இருக்கும், இருமுறை என்னை சேகர் வந்து சந்தித்தான் . அவையெல்லாம் சாதாரண சந்திப்பே , விஷயம் என ஒன்றில்லை .

அன்று பின்காலை 11:30 மணிக்கு மேலிருக்கும் , சேகர் மிக பதட்டமாக என் அலுவலகம் நுழைந்தான் . செய்தி மிக சுருக்கமாக இருந்தது . இன்று மதியம் பாலனுக்கும தாமொதரனுக்கும் பெரிய முரண் . முதல்வரின் தனிச்செயளர் அறைக்கு வெளியே . என்றான் .

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * முடிவுறாத துவக்கம் *

  ஶ்ரீ : பதிவு : 700  / 889/ தேதி 09 ஆகஸ்ட்   2026 * முடிவுறாத துவக்கம் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...