https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 1 ஜனவரி, 2019

அடையாளமாதல் - 427 * சமூக ஒருங்கிணைவு அரசியல் *


ஶ்ரீ:



பதிவு : 427 / 592 / தேதி 01 ஜனவரி 2019

* சமூக ஒருங்கிணைவு  அரசியல்   * 


எழுச்சியின் விலை ” - 28
முரண்களின் தொகை -01 .




தேர்தல் அரசியலை வழிமுறையாக எடுக்காதவர்கள், கட்சி அரசியலில்  தவிற்க இயலாதவர்களாக உருப்பெற கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை முன்வைத்து  அதன் ஒருங்கிணைப்பை எனது அரசியல் கருதுகோளானது . அதை முன்னெடுப்பது அவர்கள்   தேர்தல் அரசியலாளர்களை கடந்து மேலெழுந்து வரும் திட்டமாக உருவெடுத்தது , 1996ல் புதுவையில்  காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்த சமயம்  வல்சராஜுடன் நான் பயணிக்க துவங்கினேன் . அவருடன் நான் கட்சியை முண்ணிட்டும் பல தனிப்பட்ட காரணங்களுக்காவும் நிறைய பயணித்திருக்கிறேன்

பயணத்தில் ஆர்வமுள்ளவராக அவர் இருந்தார். நானும் அவருமாக நிறைய பயணப்பட்டது அந்தக் காலகட்டத்தில்தான். ஒருமுறை  அவருடன் சென்னைக்கு சென்றிருந்த போது அவர் தனது தொகுதி கூட்டுறவு இயக்க செயல்பாடுகளுக்கு , அரசாங்கத்தை நம்பி இராதுநபார்டுவங்கியுடன் நேரடி தொடர்பிலிருந்தார். அது பற்றி நான் முன்பே அறிந்திருந்தேன் . ஆரம்பத்தில் அது அவரது அரசியல் யுக்திகளுள் ஒன்று என்கிற எண்ணம் எனக்கு மேலோங்கி இருந்ததால் அதில்  பெரிய ஆர்வமில்லாது இருந்தேன் . சென்னையில் நடந்த நபார்டு வங்கி கூட்டத்திற்கு செல்லவிருந்த வல்சராஜ் என்னையும் வருமாறு அழைத்தார். முதலில் தயங்கிய எனக்கு , சென்னையில் எனக்கான வேலையும் இருப்பதால் உடன்வர ஒப்புக்கொண்டேன் .

இரண்டு நாள் தொடர்ந்து நபார்டு வங்கி அலுவலர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களை ஒட்டி  அவர்களுக்களுக்குள் நடந்த திட்ட வடிவமைப்பிற்கான கூட்டத்திற்கு நானும், அவருடன் இருக்கவேண்டி வந்தது. அவை பெரும் பகுதி நாங்கள் தங்கி இருந்த அறையிலேயே நிகழ்ந்தது . அந்த சூழலில் எனக்கு  முழுமையாக அதை கூர்ந்து நோக்கும் வாய்ப்பு அமைந்ததால் முதலில் ஆர்வமற்று இருந்து பின்னர் ஒருபுள்ளியில் அதை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்

அதன் வடிவமைப்பு எனக்குள் பெரும் ஆர்வத்தையும், புதிய சிந்தனைகளையும் திறந்து கொடுத்தது. தனது தேர்தல் வெற்றிக்காக வல்சராஜ் இதில் ஈடுபட்டார் என்றாலும் , இதில் அற்பணிப்புள்ள சில நண்பர்கள் அவருக்கு வாய்த்திருந்தார்கள் .அவர்களில் பலரை அங்குதான்  அறிமுகம் செய்து கொண்டேன் . அப்போது வல்சராஜ் பற்றிய பிறிதொரு எனக்கு பரிமாணம் கிடைத்தது . அரசியலை கடந்து அவருக்கு பல நண்பர்கள் இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாகத்தான் கிடைத்தார்கள் என்பது புதிய தகவல்  . அங்கு வந்திருந்தவர்களில் பலர் அவருக்கு முற்றும்  எதிரான "மார்க்சியர்கள் மற்றும் இந்துத்துவ" ஆதரவாளர்கள்  என்பதும். அவரது அரசியல் நுட்பம் குறித்த ஆழமான பார்வையை அது எனக்கு கொடுத்தது . அரசியலுக்கு அப்பால் அவர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான ஒத்திசைவு இருந்ததை அறிய முடிந்தது

மாஹே கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி , அங்கு அவருக்கு பிரதான எதிர்கட்சி "மார்க்சியர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள்  , அவை கேரளத்தின் பலம்மிக்க அரசியல் அமைப்புகள்  . ஒவ்வொரு முறையும் அவற்றுடன் மோதியே  தனக்கான வெற்றியை அவர் அடைந்திருந்தார். கடந்த மூன்று முறையாக அவர் மாஹேவை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் . இது கத்தி மேல் சாஹசம் செய்வது . வெறும்  அரசியல் சமன்பாடுகளை கடந்து பொதுப் பார்வை என்கிற ஒன்று இருந்தால் அல்லது இது சாத்தியமில்லை . இந்த அம்சம் அவரது அரசியல் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது . அப்போதுதான் நான், வல்சராஜின் தொகுதி அரசியல் குறித்து அவதானிக்க துவங்கினேன்.

அதை ஒட்டி நான் வல்சராஜுடன் மஹே சென்று சில நாட்கள் தங்கி அங்கு அவருடன் அவரது கூட்டுறவு இயக்க செயல்பாடுகளை அறிந்து கொண்ட  போது , அது நான் எண்ணியபடி அரசியல் இழையால் கோர்க்கப் பட்டிருந்தாலும் அனைத்திற்கும் அப்பால் அதன் சமூகத்தை ஒருங்கிணைத்த முறை என்னை மிகவும் கவர்ந்ததுஅதன் கருதுகோளும் அதிலிருந்து எழும் பலனும்  , அரசியலை இயக்கம் வெறும் வறட்டு விளையாட்டாக என்னால் பார்க்கப்பட்டதிலிருந்து, முற்றும் மாற்றமடைந்து அதில் பெரிய ஈடுபாடும்  , அதில் நான் அடையவேண்டிய இலக்குகளை பற்றிய கனவும், திட்டமும் எழுந்து வந்தது .

அதுவரை அரசியலில் எந்த இலக்கும் இல்லாதிருந்த எனக்கு சமூகத்தையும், இதில்  இளைஞர்களை இணைக்கும் அதன் செயல்பாடுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . எனக்கான அரசியலில் எனது கனவுகளுக்கான விதை இங்குதான் விழுந்தது . அதை தொடர்ந்து திட்டங்களும் ஒருங்கிணைப்போடு போக்கும் அதை அடைவதற்கு எழும் தடைகளும் அந்த தடைகளை கடக்க அதிகாரம் என எனது அரசியாக போக்கு முழுவதுமாக வடிவம் கொண்டது இதன் பிறகுதான் .

அரசியல் குறித்த எனது பார்வை , எனக்கான இலக்கு போன்றவை உருவாகி வந்தது இதற்கு பிறகுதான் . எந்த இலக்கும் இன்றி வெறும் கூடி கலைகிற கூட்டத்தின் மத்தியில் எனக்கான பாதை கண்ணுக்கு   தெரியத்துவங்கியது . ஒரு விஷயத்தில் மட்டும் வல்சராஜின் செயல்பாடுகளில் இருந்து எனது வழி  மாறுப்பட்டிருந்தது , அவருக்கு தேர்தல் வெற்றிக்கு இது பெரும் பங்கு வகிப்பது , அதனால் அவர் அதை முழுவதுமாக வேறு விதத்தில்  நிர்வகித்தார் , ஆனால் தேர்தல் அரசியல் எனது இலக்கில்லை என்பதால் , அதை கடந்து பிறிதொரு கருதுகோள் எனக்கிருந்தது . இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் அடிப்படையை மாற்றி அமைக்கும் அதன் திட்டம் பற்றி பெரிய கனவில் இருந்தேன்  , செயல்பாட்டை நோக்கி நகர்ந்தது  போது . அதில் முதல்நிலை வெற்றியும் , அதனால் கட்சிக்குள் பலரது தனிப்பட்ட விரோதத்தையும் ஒரே சமயத்தில் சந்திக்கத் துவங்கினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...