https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 மார்ச், 2022

அடையாளமாதல் * முடிவில்லா சாத்தியகூறுகள் *



ஶ்ரீ:



பதிவு : 610  / 800 / தேதி 10 மார்ச்  2022


* முடிவில்லா சாத்தியகூறுகள் *



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 09.





வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து ஓரிரு நாட்களுக்கு பிறகு தேர்தல் அணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான  அதிகாரப்பூர்வ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரும் விண்ணப்பபடிவம் B” சமர்பிக்கிறார்கள் . அது அந்தந்த கட்சிகளால் தங்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவது . அதுவே அவர்களையும் அமைய இருக்கும் அரசையும் கட்சியையும் இணைக்கிறது . பின் அவர்கள் அந்த சட்டமன்றம் கலையும்வரை அந்தக் கட்சியின் சொத்தாகிறார்கள். சட்டமன்றக் கட்சி என்கிற முழு அமைப்பிற்குள் சென்று அமர்ந்து அதன் சொல்லுக்கு கட்டுப்படுகிறார்கள் . கட்சி அவர்களை ஆள்கிறது,அதன் சொல்லுக்கு கட்டுப்பட மறுப்பவர்களை கட்சியிலியென அறிவித்து உதிரிகளாக்குகிறது . பின் உதிரிகளும் சுயேட்சைகளே. சில சமயம் அவர்களை பதவி நீக்கங்கள் கூட செய்கிறார்கள்கட்சித் தாவல் தடை சட்டம் அதற்கு வகை செய்கிறது . அதேசமயம் பிறிந்து செல்ல விழையும் உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகிற போது அந்த சட்டம் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அவர்கள் கட்சியின் உடைந்த பகுதியாகி வெளியே செல்ல அது அனுமதிக்கிறது . “குறுங்குழுக்களுக்கு எப்போதும் தனிக்கணக்கு .   


கட்சியின் அதிருப்தியாராக போட்டியிடுபவர்கள் அந்த கட்சியில் எத்தகைய உயர்ந்த பொறுப்பில் இருந்திருந்தாலும் படிவம் B சமர்பிக்காவிட்டால் தங்களை அவர்கள் அந்தக் கட்சி சார்ந்தவர்களாக அறிவித்துக் கொள்ள முடியாது. அவர்களும் சுயேட்சைகளே . சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்கிறது . தமாக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் அவர்கள் தலைமையகத்தில் இருந்து படிவம் B வழங்கப்பட்டு தேர்தல் அலுவலகத்தில் சமரப்பிக்கப்பட்டு அவர்களின் சைக்கில் சின்னம் ஒதுக்கப்பட்டது . மூன்றாவது முறையாக சட்டமன்றத்திற்கு போட்டியிடும் தமாக புதுவைத் தலைவர் கண்ணன் அந்த படிவத்தை சமர்பிக்காததால்  “சுயேட்சையாக”  அறிவிக்கப்பட்டார் . தங்களுக்கு ஒதுக்கப்படும் சின்னம் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முற்றுரிமை உண்டு . புதிய கட்சிகளுக்கு தற்காலிக சின்னம் ஒதுக்கப்படுகிறது . அதை நிரந்தரமாக்கிக் கொள்ள குறிப்பிட்ட சதவிகித ஓட்டு பெற்ற பிறகு அந்த சின்னம் அவர்களது பிரத்யேக உரிமையாகிறது . பின் அந்த சின்னம் அந்த கட்சி வேட்பாளர் தவிர பிறருக்கு வழங்கப்படாது .தமாக புதிய கட்சி என்பதால் அதன் சைக்கிள் சின்னம் தற்காலிகமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதால் , அது அன்றுவரை சுயேட்டை சின்னமாக கருதப்பட்டது. கண்ணன் தனது சிண்ணமாக சைகிளை கேட்டுப் பெற்றார்


கண்ணன் சுயேட்சையானது விபத்தா அல்லது திட்டமிட்டு  வலிந்து செய்தாரா ?. 1996 தேர்தல் சூழ்நிலையை அவதானித்தால் சில புதிய உண்மைகள் தெரியலாம் .தமிழகம் போல காங்கிரஸ் அதிமுக கூட்டணிக்கு புதுவையில் பெரிய எதிர்ப்பலை இருக்கவில்லை . அங்கிருந்த கொதி நிலையை புதுவைக்கு கடத்த முயன்றவர் கண்ணன். அது சில தலைவர்களை இடம்பெயரச் செய்தது. அதில் முக்கியமானவர் ஜனதா தளத்தைச் சேர்ந்த தேனீ ஜெயகுமார் . ஜனதா தளம் சிதறுண்டதால் பலர் வேறு கட்சிகளுக்கு சென்றனர்.அரசியலில் சில பெரிய ஆளுமைகளின் முடிவு தேர்தல் அரசியல் களத்தை புதிய இடம் நோக்கி நகர்த்திவிடுவதுண்டு . புதுவை ஜனதா தளத்தின் தலைவரான தேனீ ஜெயகுமாருக்கு இயல்பில் அவர் காங்கிரஸில் இணைந்திருக்க வேண்டும் . தனது தொகுதியான வில்லியனூரில் அவர் போட்டியிட விரும்பினார். ஆனால் தலைவர் சண்முகத்தின் ஆதரவாளர் அனந்தபாஸ்கர் அதற்கு தடை. தனக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பில்லை என நினைத்திருக்க வேண்டும். அதனால் அவருக்கு கண்ணனின் தமாக ஒரே வாய்ப்பு.தேனி ஜெயகுமாருக்கு தலைவர் சண்முகம் அனந்தபாஸ்கரை ஒதுக்கி தனக்கு போட்டியிடும் வாய்ப்பை அளிக்கமாட்டார் என்பது பிழைப் புரிதல் என்றே நினைக்கிறேன். அனந்தபாஸ்கரன் தற்பெருமையும் கறாரான உரையாடலும் அதில் இருக்கும் மெல்லிய எள்ளலும் யாரையும் மிக எளிதில் காயப்படுத்தக் கூடியது . காங்கிரஸில் அவருக்கு நண்பர்கள் அனேகமாக இல்லை. தலைவர் சண்முகம் அவர் மீது அதிருப்தியில் இருந்தார் . சண்முகத்தை தேனீ ஜெயகுமாரின் சரியாக அனுகி இருந்தால் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்திருப்பார்


தமாக வை புதுவை தேர்தலரசியல் களத்தை வேறொரு பரிமாணத்திற்கு நகர்த்தியவர் தேனீ ஜெயகுமார் . அவரது வருகை மண்ணாடிப்பட்டு,ஊசுடு,திருபுவணை,ஏம்பலம், பாகூர் போன்ற புற நகரப் பகுதிகளில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது . இங்கு காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு அவர் முக்கிய காரணம் கண்ணனுக்கு இணையான ஆளுமையாக புறநகர் பகுதிகளில் அறியப்பட்டவர் . அவர் தமாக வில் இணைந்தது. கண்ணன் மீது புதிய நம்பிக்கை ஏற்படுத்தி அவர் தனது அரசியல் பார்வையை மாற்றிக் கொண்டதாக புதிய பிம்பம் உருவானது. பின்னாளில் கண்ணனுக்கு மாற்று தலைவராகும் வாய்ப்பில் இருந்த தேனீ ஜெயகுமார் மிக எளிய அனுகுமுறையையும் யாரும் வந்து சந்திக்கும் இயலும் ஆளுமை  .வெளிப்படை மற்றும் நேரடித்தன்மை அவருக்கு பெரிய அணுக்கர் மற்றும் தொண்டர் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தது . ஏறக்குறைய புதுவை புறநகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை கணிசமானது . கடந்த 10 ஆண்டுகளில் கண்ணனின்

கட்சி அமைப்பு முழுமையாக சிதைந்த நிலையில் அவர் துவக்கிய கட்சியின் தேனீ ஜெயகுமாரின் வரவு பெரிய பாய்ச்சல் . கண்ணனின் அரசியல் நம்பகத்தன்மையை புறவயமாக கட்டமைத்து கொடுத்தது அது . இவை எல்லாம் புறவயத் தோற்றம்


கண்ணனின் யதார்த்த கணக்கு வேறு வடிவத்தில் இருந்தது அது ஏறக்குறைய சரியானதும் கூட. தன்னை முன்வைத்த அரசியலால் என்ன நிகழும் என தெரிந்திருந்தவர் தேனீ ஜெயகுமாரின் வரவு சில முக்கிய தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் ஊசல் முடிவாளர்களை தமாகா நோக்கி திரும்ப வைத்திருந்ததை கணக்கில் கொள்ளவில்லை. புதுவை தேர்தல் அரசியலில் காங்கிரஸின் இடம் வலுவாக இருந்தது . அந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் இடத்தில் சண்முகமும் வைத்திலிங்கமும் முரண்பட்டனர் . பல தொகுதிகளில் அவர்களுக்குள் மாற்றுக் கருத்து இருந்தது . வெற்றிவாய்ப்பை கருத்தில் கொள்ளாமல் ஆதரவாளர்களுக்கு சீட்டு என்கிற கணக்கில் உறுதியாக இருந்தார் வைத்திலிங்கம். அவர் முடிவு செய்து வாய்ப்பளித்த அத்தனை பேரும்  தோல்வியடைந்தார்கள். மேலதிகமாக காரைக்கால் சந்திரகாசு, முதலியார்பேட்டை சபாபதி , மண்ணாடிப்பட்டு ராஜாராம் ரெட்டியார் போன்றவர்களின் தோல்வி எதிர்பாராதது. இது மொத்த கணக்கையும் மாற்றியமைத்தது


இவைகளுக்கு மத்தியில் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வென்றிருந்தது . ஒரு சில தொகுதிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் காஙகிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம். பாகூர் மற்றும் ஊசுடு இரண்டு தொகுதிகளில் கடைசி நிமிடம் மாற்றம் செய்திருந்தால் கூட முடிவுகள் மாறியிருக்கும் . கைவிரல்களுக்கிடையே அந்த வாய்ப்பு நழுவியது . கண்ணனின் இறுதி நேர குழப்பத்தை இங்கிருந்து துவங்கி புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். சண்முகத்துடனான பேரம் தனக்கு முதல்வர் என்பதைத் தாண்டி வேறு ஒன்றிருக்க வாய்ப்பில்லை . தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு . ஆட்சி அமைக்க ஒன்று அல்லது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்கிற அளவில் வந்து நிற்கும் என்றால், கண்ணன் தன்னை காங்கிரஸ் மற்றும் தமாக இரண்டின் மத்தியில் நின்று கொண்டு தனியாக அல்லது கட்சியாக என இரண்டையும் பேரத்தில் கொண்டு சாத்தியப்படுத்தும் அவரது அரசியல் கணக்கு அபராமானது .


வக்கில் முருகேசன் தேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை காந்திராஜ் சார்பாக காங்கிரஸிற்கு வாக்கு தேகரித்துக் கொண்டிருந்தார் . அவரிடம் நான் பேசிக் கொண்டிருந்த போதுநீங்கள் மூப்பானருக்கு அணுக்கமானவர் தமாக செல்லாதது கண்ணனின் பின்னால் நிற்க வேண்டும் என்பதை தவிற்கவாஎன்றேன் . அவர் முன்னாள் கண்ணனின் நண்பர் இன்று வெறுப்பவர். அவர் சொன்னார்நாங்கள் சிலர் சென்னை சென்று மூப்பனாரிடம் புதுவையில் என்ன செய்ய வேண்டும் என கேட்டோம் அதற்கு  இங்கு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் புதுவையில் காங்கிரஸ் வரும் வாய்ப்பிருக்கிறதே அங்கு சென்று ஆவதை பாருங்கள்என மூப்பனார் சொன்னதைச் சொன்னார்.


வாக்கு பதிவிற்கு சில நாட்களுக்கு முன் வக்கில் முருகேசன் தேர்தல் களத்தில் கானமலானார் . நான் காந்திராஜிடம் அவரைப் பற்றிக் கேட்டேன் அவர் கண்ணனுடன் சென்று விட்டார் என்றார் . மூப்பனார் அவருக்கு சொன்னதை சொன்னேன் . அவர் சிரித்தபடிமூப்பனார் எங்கு சென்றாலும் அவர் பின்னால் போக வேண்டியவர் முருகேசன் . தேவையில்லாமல் அவரிடம் கேட்டு பின் உண்னை அறிந்து பதறி புரிந்து கொண்டு ஓடிவிட்டார் என சொல்லி வெடித்துச் சிரித்தார்.


வியாழன், 3 மார்ச், 2022

அடையாளமாதல் * முரணின் சமன்பாடு *

 




ஶ்ரீ:



பதிவு : 609  / 799 / தேதி 03 மார்ச்  2022


* முரணின் சமன்பாடு



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 08.





கதர் சட்டைகாரர்களுக்கென சில தனிப்பட்ட இடற்பாடுகள் உண்டு அவை எப்போதும் அற்பமாக புறவயமாக நிகழும் இயற்கை அவர்களை பாதித்துவிடுகிறது . அது அவர்கள் அணிந்து கொள்ளும் கஞ்சி மிடுக்கில் இருந்து துவங்கி நிற்கும் தன்னகங்காரம் . அதை அணியும்  நொடியில் பிறரின் கண்களினால் தங்களை  கண்ணாடி முன்பாக பார்த்துக் கொண்ட பிறகே அவர்களால் நகர முடிகிறது , வியர்வையால் தன் தன்மையை இழப்பது ஒரு கொடும் தருணம் . காலையில் எடுத்துப் உடுக்கும் போது அத்துடன் இணைந்து எழும் ஒன்று சட்டென கானாமலாகி அவர்களை பிற சாமான்யர்களுக்குள் கொண்டு வைத்துவிடுகிற போது அது நிகழ்ந்து விடுகிறது . எப்படிப்பட்டவர்களையும் அது விட்டு வைப்பதில்லை . மூப்பனாருக்கு ஒருங்கிணைப்பாளனாக இருந்த இரண்டு நாளில் அவர் ஒவ்வொரு நிகழ்விற்கும் சட்டையை மாற்றிக் கொண்டே இருந்தார் . எப்படியும் நாள் ஒன்றிற்கு ஏழு அல்லது எட்டு . பெட்டியை திறந்து சட்டை எடுத்து  பிரித்தும் பிறிக்காமலும் சிலவிற்றை நிராகரித்து அவற்றுள் ஒன்றை எடுத்து இருபக்கமும் பார்த்து அதை நேர்த்தியாக அலுங்காமல் உடுத்திக் கொள்வார் . இந்த சட்டைகளை வேறொரு பெட்டியில் அவரது உதவியாளர் எடுத்து வைத்து விடுவார் . அனைத்தும் ஒன்று போலவே இருக்கும் வெள்ளை கதிர் சட்டையில் என்ன வித்தியாசத்தை அவர் அவதானிக்கிறார் என புரிந்து கொள்ள முடியாது . காரில் அமர்ந்து கொள்ளும் முன்பு சட்டைக் கீழ் பட்டனை கழற்றி பின் பக்கத்தை ஒழுங்காக மேல் புறமாக மடித்து நீவி தூக்கி நிறுத்திய பின்னர் அமர்ந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன் . இறங்கிய சில நொடிகளில் அவற்றை பழையபடி கீழிழுத்து நீவி பழைய நிலைக்கு கொண்டுவந்து விடுவார் . நிகழ்வு முடித்து கழற்றி கட்டில் மேல் போடும் சட்டையில் அவர் மடித்த இடத்தைத் தவிர வேறெங்கும் நலுங்காமல் இருக்கும் . அமரும் போது எனக்கு அந்த பழக்கம் அவரை பார்த்து வந்தது .


மார்ச் மாத வெய்யில் உக்கிரம் காட்டிக் கொண்டிருந்தது . தேர்தல் அலுவலகத்தில் அங்கீகரிகப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கு மனு தாக்கல் செய்யும் நேரம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியினரையும் மைக்கில் அழைத்துக் கொண்டிருந்தனர்எங்களுக்கான அழைப்பு இன்னும் விடுக்கப் படவில்லை . நாங்கள் வியர்வைக்கு பயந்து ஒதுங்க நிழல் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது மரியாதை நிமித்தமாக காசுகடை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி நாராயணசாமி காந்திராஜின் அருகில் வந்து அவருக்கு வணக்கம் சொன்னார் . பரஸ்பரம் தேர்தல் அளவளாவல்கள் . நான் ஜோதி நாராயணசாமியை அங்கு வைத்துத்தான் அறிமுகம் செய்து கொண்டேன் . “ஏன் ஜோதி இன்னும் மனு தாக்கல் செய்யவில்லையா? உன் பெயரை அழைத்துக் கொண்டே இருக்கிறார்களேஎன காந்திராஜ் கேட்டதற்கு . “கண்ணன் தாக்கல் செய்த பிறகு என்னை தாக்கல் செய்ய சொன்னார் தலைவர்என்றார் ரகசியம் போல . நின்றெரித்த வெயிலின் புழுக்கம் தாளாமல் ஜோதி நாராயணசாமியிடம் விடைபெற்று அருகில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தின் பின் பக்கத்தில் அமைந்திருந்து உணவு விடுதியில் சென்று அமர்ந்து கொண்டோம் . அது ஒரு மலையாளியால் நடத்தப்படுவது போலதமிழக உணவில் எல்லாம் ஒரு சிறு துளி கேரளத் தன்மை தெரிந்தது . இருவருக்கும் டீ சொன்னேன் . உணவுக்காக காத்திருந்தவர்களில் சிலர் அமைச்சர் காந்திராஜை அடையாளம் கண்டுகொண்டு எழுந்து வந்து வணக்கம் சொல்ல சிலர் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார்கள் . நான் அவர்களின் கண்களில் எதாவது விஷமம் தெரிகிறதா? என பார்த்துக் கொண்டிருந்தேன் . எல்லாம் ஒரு சம்பிரதாய கை குலுக்கல்கள் எதற்கும் இருக்கட்டும் என்பது போல


நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து  தற்காலிக தேர்தல் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த உள்ளாட்சித் துறை அலுவலக வாசல், கூட்ட நெரிச்சலில் இடுபட்டுக் கொண்டிருந்ததை இங்கிருந்து பார்க்க முடிந்ததுநான் காந்திராஜிடம்ஏன் ஜோதி நாராயணசாமி காத்திருக்க வேண்டும் . கண்ணன் கட்சியை விட்டு விலகிய பிறகு இது எதற்குஎன கேட்க நினைத்த போது அபத்தமாக பட்டது . நான் அதுவரை சண்முகத்தை நேரில் சென்று அறிமுகம் செய்து கொண்டிருக்கவில்லை. அவரைப் பற்றிய புரிதல்கள் எல்லாம் பிறர் அவரைப் பற்றிய சொன்னது . அதைவைத்து மிக அழுத்தமான உருவகத்திற்குள் வந்திருந்தார் . அதன் பிறகு அவரிடம் நேரில் பெற்ற அனுபவங்கள் அவற்றுடன் பெரியதாக முரண்படவில்லை. அவரிடமிருந்து எனக்கான அழைப்பு வந்ததெல்லாம் தேர்தல் முடிவுக்கு காத்திருந்த சமயத்தில் . அந்த முறை வாக்கு எண்ணிக்கை நடக்கும் தேதி மிக மிக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாத காலம். காந்திராஜ் அப்போதைக்கு காபந்து சர்காரின் பிரதிநிதி என்பதால் அவருக்கு கொடுக்ப்பட்ட துப்பாக்கி ஏந்திய காவல் அந்தஸ்த்து விலக்கிக் கொள்ளப்படவில்லை . துப்பாக்கி ஏந்திய காவலர் அவருடன் வரும்போதெல்லாம் கட்சி அலுவலகத்தில் உள்ள அனைவருக்குள்ளும் ஒரு சங்கடத்தைக் கொடுத்தது . அதை பார்த்த எல்லார் கண்களிலும் முகத்தில் காட்டாத புண்ணகையை பார்க்க முடிந்தது . ஒரு இளிவரல் போல


காந்திராஜ் மிக சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர் தனது இளமையில் கட்டற்று இருந்ததையும் அனைத்தின் மீது கொண்ட மீறலை நகைசுவையாக சொல்லிக் கொண்டே இருப்பார் . அவற்றில் பல இங்கு பதிவிட இயலாதவை . அவற்றை வெளிப்படுத்த அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. வெளியுலகில் தனக்கான இடம் குறித்த எந்த நுண்ணுர்ணவும் இல்லாதவராக அந்த கணத்தில் தோன்றினாலும்,அனைத்தின் மீது அவருக்கு மிக நுட்பமான அவதானிப்புகள் இருந்தன . அவரது எளிய குடும்ப பின்னணி தன்னைப் பற்றி பிறரின் எந்த மதிப்பீடுகளையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை எனவே முதுகின் பின் நிகழும் இளிவரல்கள் எதையும் பொருட்படுத்தாது தனது பதவிக்கால இறுதி நாட்களை விரும்பி ரசித்திருக்கவே வாய்ப்பு அதிகம் . தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அவரும் ஆழ்மனத்தில் உணர்ந்திருப்பார் . அது வெளியாகும் வரைஇது அரசு கொடுக்கும் அதிகாரம் அதை என்னத்துக்கு வேண்டாம் என சொல்லஎன நினைத்திருக்கலாம்.  


கண்ணன் காங்கிரஸில் இருந்து அதுவரை அதிகாரப்பூர்வமாக விலகவில்லை அதனால் தலைவர் ஜோதி நாராயணசாமியை சண்முகம் காத்திருக்க சொன்னார் என்பது எளிய நிர்வாக சிக்கல் போல தெரிந்தாலும் அரசியலின் உண்மை அதுவல்ல . சண்முகம் கண்ணன் இருவருக்கிடையே எங்கோ பேரம் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இருவரும் எதற்காகவோ காத்திருக்கிறார்கள் . இது ஒருவரை மீது ஒருவர்  கடும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரம் . யார் முதலில் நகர்வு என. அது ஒரு சதுரங்க ஆட்டம். கூடி நின்றவர்களையும் பிற அனைவரையும் மறந்த தங்களை மட்டும் முன்வைத்து கவனம் சிதறாமல் ஆடிக் கொண்டிருந்தனர். அது சமன் குலையாத கணம். ஜோதி நாராயணசாமியும் , ரவிச்சந்திரனும் களத்தில் காய்களாக நிறுத்தப்பட்டு அவர்களின் தலைவர் கையசைவிற்கு காத்திருந்தனர் . களம் இறுதிக்கருக் கொண்டிருந்தது . எனக்கு அது ஒரு அற்புத அரசியல் கற்றலின் கணம் அதை இங்கிருந்து மீள மீள பார்க்கிறேன். அவர்களுக்குள் உடைவு எங்கு எப்போது நிகழ இருக்கிறது என்பதைப் போல அதை பார்த்துக் கொண்டிருந்தேன் . கண்ணனுக்கு காங்கிரஸில் நீடிக்கும் விருப்பம் இருந்திருக்கலாம். அவர் எடுத்திருக்கும் முயற்சி அவரை பெரியதாக எங்கும் கொண்டு செல்லாது என்கிற குழப்பம் இருந்திருக்க வேண்டும் . அவர் எங்கிருந்தாலும் அமைச்சராகும் வாய்ப்புள்ளவர் . அதை தாண்டி பெரும் கனவு என்பது முதல்வர் பதவி குறித்து மட்டுமே இருக்க முடியும்.இப்போது திமுக கூட்டணியில் யார் முதல்வர் என்பது முதலிலேயே முடிவாகிவிட்டது . சண்முகத்தைப் போல மூப்பனாரை அவரால் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது . கண்ணனுக்கு 1991 களில் காங்கிரஸில் இருந்த அரசியல் சூழல் இப்போது இல்லை .சண்முகத்தின் கண்ணனை மடைமாற்றும் அரசியல் தந்திரம் இம்முறை எடுபடாது . கண்ணனுக்கு தான் உருவாக்கி இருக்கும் தமாக பற்றிய புரிதல் அவருக்கு அதைப்பற்றிய எதிர்கால நம்பிக்கை வேறு விதமான அதிருப்தியை உருவாக்கி இருக்கலாம். அது தன்னால் மீற முடியாத ஒருவரின் கீழ் மீளவும் சென்று நிற்பது .


சண்முகத்திடன் கண்ணன் இருவருக்குள் அன்று என்ன பேரம் நடந்தது என இன்றுவரை இருவரும் வெளிப்படுத்தவில்லை . அந்த நிமிடம் வரை கண்ணனுக்கு சாதகமாகவே சூழல் இருந்தது . வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் மதியம் முன்று மணிக்கு ரவிச்சந்திரன் வந்து கண்ணனுக்காக மனு தாக்கல் தெய்தார். தகவல் உறுதியானவுடன் ஜோதி நாராயணசாமி தலைவருக்கு தொலைபேசியில் தகவல் சொன்னார் . பின்னர் அலுவலகம் உள்ளே சென்று மனுத் தாக்கல் செய்து விட்டு வெளி வந்ததும் நாலைந்து பேர் மிக பலஹீனமான குரிலில் வாழ்த்து சொல்ல ஒருவர் சிறிய கழுத்தளவு  நளசம்பங்கி மாலையை அவருக்கு போட்டனர். “இந்த 10 ரூபாய் மாலையோட போக வேண்டியது தான்என கூடியிருந்த திரளில் யாரோ சொல்ல இருந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர் .


புதிய பதிவுகள்

மணிவிழா - 90 *பிம்பங்களை கடந்து……*

  ஶ்ரீ : மணிவிழா - 90 15-09-2026 * பிம்பங்களை காடந்து …..* புதுவையில் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டி துவக்கம் ...