https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 10 அக்டோபர், 2022

அடையாளமாதல் * வெறுப்பின் இந்தனம் *

   



ஶ்ரீ:



பதிவு : 644  / 834 / தேதி 10 அக்டோபர்  2022



* வெறுப்பின் இந்தனம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 40 .






1998 பாரளுமன்றத் தேர்தலில் சண்முகம் தோல்வியுற்றதன் தாக்கம் ஒய்வதற்கு முன்னர் 1999 இறுதியில் திமுக தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சி மாற்றத்தினால் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்தது . சண்முகம் தேர்தலை சந்தித்து ஆட்சியமைக்கலாம் என நினைத்தார். பிற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றத்தை விழைந்தனர். சண்முகம் தேர்தலை விழைவதற்கு காரணம் ஆளும் திமுக முதல்வர் ஜானகிராமன் அவரது ஜாதியை சார்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என கட்சிக்குள் பல வகையில் குற்றம்சாட்டப்பட்டார். ஒரு மாதிரி அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ள அந்த ஆட்சி மாற்றம் அவர் எண்ணியிராத கணத்தில் நிகழ்ந்து முடிந்தது. அதற்கு பின்னால் வல்சராஜ் மற்றும் கண்ணன் இருந்தார்கள் அவர்களுக்கு நாராயணசாமியின் ஆதரவிருந்தது


அந்த ஆட்சிக்கு யாரும் எதிர்பாராமல் முதல்வராக சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் அனந்த பாஸ்கரன், வில்லங்கம், மற்றும் நான் சென்னை சென்று மூப்பனாரை சந்தித்து புதுவை அரசியல் நிலவரத்தை விவரித்தோம். அதில் சண்முகம் முதல்வராக விரும்புவதை மற்றும் நாராயணசாமி அவருக்கும் இடையேயான உறவு கசந்திருப்பதை சொன்னோம். இரண்டும் அன்று அவருக்கு புதிய செய்தி. கண்ணன் என்ன நினைக்கிறார் என்றதற்கு அவருக்கு சண்முகம் முதல்வராக வருவதில் எதிர்ப்பில்லை என்றோம். சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்புதுவை பொறுப்பாளர் கேரளத்தில் இருப்பதால் என்னால் அவரை தொடர்பு கொள்ள இயலாது ,அவர் என்னை தொடர்பு கொண்டால் என் கருத்தை சொல்லுகிறேன் இல்லை என்றால் என்னை வையாதீர்கள்என தஞ்சாவூர் பாணியில் சொன்னார். மூப்பனார் சண்முகத்தை ஆதரித்தால் பிறர் பற்றி கவலையில்லை ஆனால் குலாம்நபி ஆசாத் புதுவை முதல்வர் தேர்தலுக்கு நேரம் குறிக்கப்பட்ட மதியம் பண்ணிரண்டு மணிக்கு முன் மூப்பனாரிடம் பேசியாக வேண்டும். என்ன செய்யலாம் என்றார் வில்லங்கம். நான் தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள குலாம்நபி ஆசாத்தின் உதவியாளரை அழைத்தபோது அவர் புதுவை நிலவரங்களை கேட்டார் இறுதியில்  “சென்னையில் மூப்பனாருக்கு உடல்நலக்குறைவுஎன சொன்னேன். “அனந்தபாஸ்கரான் ஏன் இப்படி சொன்னாய்என்றார் இந்த செய்தி இன்னும் அரை மணிநேரத்திற்குள் குலாம்நபி ஆசாத்திற்கு தெரிவிக்கப்பட்டுவிடும், வந்த வேலை முடிந்தது என்றேன்.அதன் பிறகு புதுவை திரும்பிய பிறகே சண்முகம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அறிந்தோம். நாங்கள் மூப்பனாரை சந்தித்ததன் விளைவா அது என அப்போது நினைக்கவில்லை. ஆனால் சண்முகம் முதல்வராக பொறுப்பேற்ற அன்று மாலை அவரது அறையில் பேசிக் கொண்டிருந்த போது தன் உதவியாளரிடம் ஒரு சால்வை எடுத்துவரச் சொல்லி அதை எனக்கு அணிவித்தார் நான் அது எதற்கு என கேட்க ஒரு சொல்லும் சொல்லவில்லை. நான் அதை மூப்பனாரை சந்தித்தது குறித்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.


ஆட்சி நிர்வாகம் பற்றிய பேச்சு எழுந்த போது அந்த ஆழ்ந்த மௌனத்தை மிகத்தாமதமாக உணர்ந்தேன் . முதல்வரின் தனிச் செயலாளராகவில்லங்கத்தைகொண்டிவருவதில் பெரிய முரண்பாடு உருவாகி அது சண்முகத்தின் குடும்ப உறுப்பினர்களிடையே விவாதப் பொருளாகியிருந்தது . மாறனுக்கும் வில்லங்கத்திற்கும் தனிப்பட்ட உரசல்கள் பல முணைகளில் அப்போது நடந்து கொண்டிருந்தது மிக எளிதாக வில்லங்கத்திற்கு எதிரான அணியை திரட்டிய போது அவன் பலமாக காலூன்றிவிட்டான் என்பதை அறிவித்தது . மாறன் அங்கு தங்குவதை ஆரம்பம் முதலே வைத்தியநாதன் எதிர்த்து வந்தார். மாறன் தொழிலை விட்ட பிறகு அவன் அங்கி தங்கியிருப்பது குறித்துவில்லங்கம்மீண்டும் பேசத் துவங்க , அவர் சொன்னதாலேயே அந்த பேச்சு சண்முகத்திடம் எடுபடாமல் போனது. அரசியலின் தொடர் அதிரடி ஆட்சி மாற்றம் மாறனை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. அந்த காலகட்டத்தில் தவிற்க முடியாத நபராக உருவெடுத்திருந்தான்.


முதல்வரின் செயலாளர் நியமனத்தில் முதல்வராக பெறுப்பேற்க இருந்த சமயத்தில் சண்முகத்திற்கு வில்லங்கத்தின் மீது பல காலம் இருந்த வருத்தம் கசப்பாகிவிட்டிருந்தது .வைத்திலிங்கம் தலைமையில் 1997 களில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு உதவியவர்களில் வில்லங்கமும் ஒருவர். அது தன்னை பொருட்படாதாத செயல் என சண்முகம் நினைத்தார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பிறகு அதன் பின்னணியில் உள்ள அனைவரும் ஆளும் திமுக அரசின் பதிலடிக்கு ஆளானார்கள். வைத்திலிங்கம் மீது மத்திய புலனாய்வு வழக்கு பதியப்பட்டு கைது அளவிற்கு சென்று திரும்பினார். அரசு ஊழியரான வில்லங்கம் மஹே பொறுப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டு அங்கு அனுப்பப்பட்டது பழிவாங்கள் போல நிகழ்ந்தது. அதற்குள் அவரை பற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளும் அடுக்கப்பட்டு துறை ரீதியில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு வேலையில் இருந்து நீக்கப்படவிருக்கும் செய்தி கசிந்தது. ஓய்வு பெற இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் நிலையில் அவரது ஓய்வூதியம் போன்றவற்றை முடக்க திட்டமிடப்பட்பட்டதை அறிந்து மஹே சென்று வேலையில் சேர்ந்த கையோடு விருப்ப ஓய்வு பெற விண்ணப்மம் செய்தார். அந்த விண்ணப்பமே சில மாதங்களுக்கு இழுக்கடிக்ப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப் பட்டது ஒரு நீண்ட கதை. அது இன்று அவரை முதல்வரின் செயலாளராக கொண்டுவருவதற்கு தடையாக இருப்பதாக காரணம் சொல்லி அவரை வெறுப்பேற்றினார்கள். அரசியல் நியமனங்களில் இதற்கெல்லாம் பெரிய அர்த்தமில்லை. ஆனால் அவரது நியமனம் சண்முகத்தால் பரிசீலிக்கபடவேயில்லை


மாறன் அதை மிகச்சரியாக ஊகித்திருக்க வேண்டும். காரைக்கால் முருகையன் அல்லது மாறன் அதை நேரடியாக சண்முகத்திடம் சொல்லும் வாய்ப்பிருந்ததாக நான் நினைக்கவில்லை, சொல்லிருந்தால் ஒருவேலை அவர்களுக்கு எதிராக சண்முகம் முடிந்திருக்கலாம் ஆனால் அவர்களை எண்ணத்தை கரூர் பாஸ்கரன் வழியாக செய்திருக்க வேண்டும். தலைவரிடம் அழுத்தமாக பேசக்கூடிய சூரியநாராயணன் போன்றவர்கள் வில்லங்கத்தை மேல் இருந்த மன விலக்கத்தினால் அதில் எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை இவை அனைத்துமே வில்லங்கத்திற்கு எதிரானது. ஒரு வகையில் அவருக்கு ஆதரவாக நான் மற்றும் முன்னாள் அமைச்சர் அனந்த பாஸ்கரன் அதை விரும்பாது போனாலும் வலுவாக அதை மறுக்கக்கூடிய குரலை எழுப்ப இயலவில்லை. சண்முகத்திற்கு வில்லங்கத்தின் மீதான கோபம் பற்றி நாங்கள் அறிந்திருந்தது அதற்கான காரணம். தலைவரின் காதுகளுக்கு அதைக் கொண்டு செல்ல தயங்கினோம். நிகழ்வது எனக்கு  எவ்வகையிலும் நல்ல செய்தியல்ல என நினைத்தேன். மாறனிடம் இதுபற்றி எனது கருத்தை சொன்னபோது இருவரும் பெரிய அளவில் முரண்படுவது அறிந்து கொள்ள முடிந்தது. அதுவரை நட்பார்ந்த விவாதம் சர்சையை நோக்கி நகர்ந்தது.

மணிவிழா.1

மணிவிழா.1


எனக்கு  மணிவாழா கொண்டாட்டம் பற்றி எந்த எண்ணமும் இருந்ததில்லை. அதற்கு பல காரணம். முன்மையானது நான் எனது ஆயுள் 58 என வரையறை செய்திருந்தேன்.  60 க்கு நான் இல்லை என்பது உளப்பதிவாக இருந்தது. என் மனைவி மணிவிழா பற்றி பலமுறை சொன்ன போதும் நான் அதை காதில் கொள்ளவில்லை . மகள் விஜி ஒரு வருட காலம் அதை திரும்ப திரும்ப பேசி என்னை சம்மதிக்க வைத்தாலும் நிகழ்வை அவள் போக்கில் விட்டுவிடேன்.

மணிவிழா என்பது பிள்ளகளின் விழா. மேலும் எனது வளர்ப்பு பிள்ளைகள விஜி நிவாஸ் இருவருக்கும் தொல்லை  கொடுக்க வேண்டாம் என எண்ணினேன் .. நான் என் தந்தைக்கு அவரின் மணிவிழாவை மூன்று நாள் கொண்டாடினேன். முறையான ஏற்பாடுகளை சிதம்பரம் AV. ரங்காசாரி ஸ்வாமி ஒருங்கியிருந்தார். ஜீயர் முன்று நாளும் இருந்து அதை நடத்திக் கொடுத்தார். மூன்றாம் நாள் அப்பாவின் விருப்பப்படி இலக்கிய விழாவாக நிகழ்ந்தது. பிரபஞ்சன், இந்திராபார்த்தசாரதி, கிரா,என பல இல்கிய உலக அவரின் நண்பர்கள் கலந்து கொண்டனர்

அப்பா அவரின் அறுபதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. விளையாடாக அவரையும் அம்மாவையும் அப்புசாமி சீதா பாட்டியாக சித்தரித்து வெளியிட்ட வாழ்த்தில் கையில் அப்புசாமி உடலில் அப்பாவின் முகத்தை ஒட்டி அதில் வலை தடியுடன் இருப்பது ஏற்காமல் அதை வெளியிடக்கூடாது என கடிந்து கொண்டார்

எனது ஆறுபது பற்றிய எந்த பதட்டமும் எனக்கில்லை. மனதளவில் அந்த பத்து வந்து சிறுவனை இழக்காமல் இருக்கிறேன். என் முதல் குழந்தை இறந்து பிறந்து மனைவி பிழைப்பது கடினம் என்கிற சூழல் நிருமனமாகி பத்து மாதமாகி இருந்த சூழலில் அதை எப்படி எதிர் கொள்வது  என தெரியாது திகைத்திருந்த நேரம் அப்பா உடல் நிலை சரியில்லாத சூழலில் எனது பூஜை அறைறைக்கு வருவது தவிர எனக்கு வேறு வழி இல்லை பொதுவாக என் பூஜை வேண்டுதலாக நிகழ்வததில்லை மனம் மிக அமைதியாக சலனமில்லாமல் இருக்கும் ஒரு இடம்   அங்கு வேண்டிக்கொண்டேன் மனைவியை  மீட்டு தரும்படி . என் ஆயுளில் இருப்பது வருடம் அவளுக்கு தருவதை சொல்லிக் கொண்டேன் மூக்கு சொம்பில் இருந் தீர்த்தம் கொண்டு அந்த வருடங்களை தானம் தருவதாக சொல்லி நீர் விட்டேன். எனது ஜகத்தில் எனக்கு எழுபத்தி எட்டு என இருந்ததால் மிச்சமுள்ள ஆயுள் 58 ..விழா முடிவானது  தந்தைக்கு நடந்த அதே போல இன்னும் விரிவாக








புதன், 5 அக்டோபர், 2022

அடையாளமாதல் * வெளியே *

 



ஶ்ரீ:



பதிவு : 643  / 833 / தேதி 05 அக்டோபர்  2022



* வெளியே * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 39 .






சண்முகம் பழைமை விரும்பி போல பார்க்கப்படுபவர் எதையும் புதியவை நோக்கி மாறாமல் பார்த்துக் கொள்வதின் ரகசியம் புதியவை எப்பவும் துவக்க கால சிக்களை உடன் கொண்டுவருபவை. அதை சரி செய்யும் காலத்தை அரசியல் ஒருபோதும் கொடுப்பதில்லை. ஒரு முறை செயல்கள் மாற்று தடத்தில் நகர்ந்தால் ஒட்டு மொத்த திசையையே அது மாற்றிவிடும் அபாயமுண்டு. பின் அங்கிருந்து எப்பக்கத்திற்கும் நகர முடியாது என்பது அதன் இடக்கரடக்கல் மற்றபடி நவீனத்திற்கு எதிரானவராக அவரை சொல்லமுடியாது. தேர்தல் வேலைகள் எவரையும் மூழ்கடிக்கக் கூடியவை . முதல் முறையாக நான் மாநில அளவிலான  தேர்ந்தெடுத்து வைத்திருந்த நிர்வாகிகளை ஓரளவு அந்த தேர்தல் வேலைகளுக்கு பயணபடுத்திக் கொள்ள முடிந்தது. தினம் இரவு தலைவர் வீட்டில் அவரை சந்தித்து அன்றைய முக்கிய நிகழ்வுகளை சொல்லுவதும் நாளை நிகழ்வுகளை திட்டமிடலுமாக அந்த நாள் நிறைவடையும். மனதை தீவிர அரசயலில் இருந்து உதறிக் கொள்ள தலைவர் வீட்டின் பின்கட்டில் நிகழும் வேடிக்கை சந்திப்பு பெருமளவு உதவியது. மாறனுடன் தங்கியிருந்த கரூர் பாஸ்கரனின் உதவியாளர்களை அங்கு தினமும் சந்திப்பதும், பின்னர் அது நட்பாகியதுஒட்டு மொத்தமாக கரூர் பாஸ்கரன் அரசியல் நுழைவை வேரொரு கோணத்தில் பார்க்கிறேன். அவர் சண்முகத்தின் தேர்தல் உதவிக்கு வந்தாலும் அவரால் தன்னுள் இருக்கும் அரசியலாளன் அவரை உந்தி வெளித் தள்ளுவதை தடுக்க முடியவில்லை . சில காலம் கழித்து அவர் அதிமுகவில் சேர விழைவதை சண்முகத்திடம் சொல்லி அதற்கு மேலிடத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க சொல்ல சண்முகம் அதை முழுமையாக நிராகரித்து அரசியலின் சிக்கல் அதிமுகவின் எதிர் காலம் போன்றவற்றை சொல்லி அவர் விருப்பத்தை தடுத்து விட்டார்அது அந்த தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஏற்பட்ட மாற்றமாக இருக்க வேண்டும். கரூர் பாஸ்கரனை முன்வைத்து நடந்த அனைத்திற்கும் பின்னால் மாறன் இருந்திருக்க வேண்டும். கரூர் பாஸ்கர் உள்நுழைவிற்கே கூட மாறன் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது சண்முகத்திற்கு உதவ வந்த கரூர் பாஸ்கரனை மாறன் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பின்னர் நடந்த அனைத்து அரசிலுக்கும் தனக்கு உதவியாக மாறனை தலைவர் தேர்தெடுத்தர் . அதை பாஸ்கரனால் அவருக்கு சொல்லப்பட்டிருக்கலாம்


1999 பாராளுமன்றத் தேர்தலில் இழந்த அதிமுக கூட்டணி திரும்பவும் வந்திணைந்த போது தமிழகம் மற்றும் புதுவை முழுக்க ஜெயலலிதா சுற்றுப் பயணத்தை ஒருங்கியவர்  தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை  சண்முகத்திற்காக அவருடன் இணைத்தது மாறன். சண்முகம் அந்த தொடர்பை உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டும். அதில் உருவான செங்கோட்டையனின் தொடர்பு மாறனுக்கு இன்றுவரையில் நீடிக்கிறது. அவர் மூலமாக தனது காரியத்தை முடித்துக் கொடுக்கும் வல்லமையை தமிழக அளவில் பெருக்கிக் கொண்டான்.பின்னர் ரங்கசாமி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தொடர்பு சிலருக்கு தில்லி வேலைகளை செய்து கொடுப்பதில் உதவியிருக்கலாம். செங்கோட்டையன் அரசியலில் சில காலம் பின்னடைவு ஏற்பட்ட பிறகு மாறனின் செயல்பாடுகள் தேக்கமடைந்தன. ஆனால் தொடர்புறுத்தலில் ஒன்றுல் இருந்து பலமுள்ள பிறிதொன்றுக்கு தாவிச் தாவிச் செல்லுதல் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் இன்று யாருடைய பலத்தில் இயங்குகிறான் எனத் தெரியவில்லை 

 

இந்தப் பதிவில் சண்முகத்தின் வீழ்ச்சியில் மாறன் பங்கு பற்றி அதானிக்கு முயல்கிறேன் என்பாதல் பிற விஷயங்களை தவிற்திருக்கறேன். சண்முகத்திற்கு 1990 களில் துவங்கிய சிக்கல் 2001 ல் முழு சரிவாகி நின்றது . அவரது அரசியல் முடிவுற்றது அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எடுத்து பல பிழை முடிவுகள். அனுபவம் என்பது கூட நவீனமயதாலுக்கு ஒரு பெரிய தடை என நினை்கிறேன். அது மிகப் பெரும்பாலான சமயங்களில் நேர்மறையாக சிந்திக்க வைப்பதில்லை. சண்முகத்தின் வயோதிகம் அவரது இறுதி கால முடிவுகளில் பின்னடைவை உருவாக்கி இருந்தது. கொள்கை முடிவுகள் கூட ஒருவகை நரம்பு சம்பந்தப்பட்டவை போல .வயதாகும் போது அதன் முடுக்கு இழக்கத்துவங்குகிறது. அல்லது அதுவரை இருந்த சில இல்லாமலாகின்றன. யாரை நோக்கியும் அவர்கள் சொல்ல ஒன்றுமில்லை என்நினைக்கும் போது அதுவரை கொண்டிருந்த அனைத்து விழுமியங்களும் அர்த்மற்றப் போகின்றன. தனது செயல்பாடுகள் யாராலும் கவனிக்கப்படவில்லை என்கிற ஆதங்கம் அதுவரையிலான சமூகம் நோக்கிய அவர்களின் உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறது போலும்

ஒட்டு மொத்த புதுவை அரசியலில் மாறன் என்கிற மறைமுக ஆளுமையை உருவாக்கியது இந்த சூழலில்,அதற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சண்முகம் உதவினார் என நினைக்கிறேன்


காலம் எப்போதும் பல விசித்திரங்களை கொண்டு வந்து வைத்தே எல்லோரையும் திகைக்க செய்கிறது . மாறன் தனது தனிப்பட்ட இடத்தை உருவாக்க அல்லது காப்பாற்றிக் கொள்ள சண்முகம் அறியாது அல்லது அவரால் தவிற்க இயலாதபடி உருவாக்க ஆரம்பித்தான். அதில் தனக்கு இடறென நினைத்த எல்லாவற்றையும் மாற்றி அமைக்கத் துவங்கினான். அதற்கு பின்னால் அரசியலென எதுவும் இல்லை இது எப்படி சண்முகத்தின் மூக்கிற்கு கீழே நடந்தது என்பதை அவதானித்தால் பல வித அடுக்குகளாக அந்த சூழலை புரிந்து கொள்ளலாம். அவர் அறிந்து அல்லது அறியாது என இரண்டு வகைமைகளில் அவற்றை தொகுத்தாலும் இரண்டும் அவரது நீண்ட கால அரசியல் அனுபவத்திற்கு பெருமை சேர்ப்பவையல்ல. பிறரின் தவறு என அவர் சுட்டிய அனைத்தும் இந்த இரண்டின் கீழும் வருபவை ஒன்று அறியாமை பிறிதொன்று இயலாமை இரண்டுமே அரசியல் தேக்கத்கத்தை சொல்லுபவை


புதுவை அரசியலில் சண்மகத்தின் இடம் பற்றிய புரிதலை அவரது எதிர்காலம் குறித்து என எல்லாவித செய்திகளும்  சண்முகத்தின் குடும்பத்தாருக்கு அனைத்தும் உள் தகவல்களும் மாறனால் பகிரப்பட்டிருக்க வேண்டும். கரூர் பாஸ்கரனின் வியாபார யுக்தி அதை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தது புரிந்து கொள்ளக் கூடியது. 1988 பாராளுமன்றத் தேர்தலில் தனது குடும்பம் ஒட்டுமொத்தமாக பின்னின்றதை அவர் மனதால் ஏற்றிருக்க வேண்டும். தலைவரின் குடும்பத்தினரை மூன்றாக பகுக்கலாம்காரைக்கால் நெடுங்காட்டை மையமாக கொண்ட குடும்பத்தினர்இவர்கள் ஏனக்குறைய காரைக்காலை நிர்வகிக்க முயன்றவர்கள். இரண்டாவது குழுவினர் சண்முகத்தின் உடன் பிறந்தவர்கள் இருவர் அதில் இளையவர் சண்முகத்தின் கண்கானிப்பில் இருந்து உடல்நலம் குன்றி மரணித்தார் அவரது மகன் பாலு பல ஆண்டுகளாக மாறனை போல கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க முயன்று தோற்றவன். சண்முகத்தின் மூத்தவர் இந்திய எண்ணை கம்பெனியில் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் அவரது மருமகன் கரூர் பாஸ்கர்.

புதிய பதிவுகள்

மணிவிழா -89 * சாத்தியமும் எதிர்பார்ப்பும்

  ஶ்ரீ : மணிவிழா - 89 14-09-2026 * சாத்தியமும் எதிர்பார்ப்பும் * அன்று கைசிக ஏகாதசி திருக்கோவலூர் ஜீயர் பிரம்மரதம் ஏ...