https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * அசாத்தியமுயற்சி *

 


ஶ்ரீ:



பதிவு : 530  / 723 / தேதி 06 செப்டம்பர் 2020


அசாத்தியமுயற்சி * 


ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 07.






தில்லிக்கு ரயில் வண்டியில் புதிய நிர்வாகப் பொறுப்பிற்கு வருபவர்களுடன் பயணம் செய்ய இயலாது போனது எதிர்கால அரசியலில் நிகழக இருக்கும் நுட்பமாண ஆடல்கள் குறித்த புரிதலுக்கு அவர்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எனது திட்டமிட்ட உழையாடல் நிகழாது போனது எனது எதிர்கால அரசியலுக்கு சிக்கலை உருவாக்கிவிட்டிருந்தது.


அது ஒரு மிக முக்கிய காலகட்டம் என என் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது .அகில இந்திய அளவிலும் அதை ஒட்டி தமிழக , புதுவை அரசியலில் திடீர்  மாற்றம் நிகழக்கூடும் என உய்த்துணர்ந்திருந்தேன் . அதை ஒட்டியே எனது நிலைப்பாடு வடிவமைக்கப்பட்டிருந்தது .அந்த சூழல் அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்களுக்கானது என உறுதியாக நம்பினேன் .இன்று அது உண்மை என காலம் சொல்லுகிறது.ஆனால் அதில் பங்கு பெறும் சூழலில் நான் இல்லாதிருப்பது ஊழின் காரணம்.


புதிய தலைமுறை தலைவர்கள் வெளிப்படுவது 2020 ல் முழுமையடையும் எனக் கணித்திருந்தேன். இடைப்பட்ட பத்து ஆண்டுகள் அதற்கான வடிவமைப்பை உருவாக்கித் தரும் என உறுதியாக நினைத்தேன்.


பாலனை விட்டு வெளியேறிய பின் அரசியலில் இருந்து விலகுவது என்றிருந்த எனக்கு மாநில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சண்முகத்திடம் சென்று சேர்வது பற்றி எந்த கணக்கும் இருந்ததில்லை .ஆனால் ஊழ் அதை செய்யும்படி நிகழ்த்தியதை. பிறகும்கூட மாநில அரசியலில் தனி ஆளுமையாக என்னை முன்னிறுத்திக் கொள்ளும் எந்த கனவும் எனக்கில்லை . எனது உடல் குறைபாடு மட்டும் அரசியலை முழு நேமுமாக என்னால் செய்ய இயலாது என்றே என்னைப்பற்றி எனக்கு கணிப்பிருந்த நேரம்.


கடந்த கால நிர்வாகிகள் கொடுத்த தேவையற்ற அழுத்தம் .வல்சராஜ் அதை பயன்படுத்திக் கொண்டு  என்னை உதாசீனப்படுத்தியது. தொடர்ந்து செயல்பட முடியாதபடி என்னை முற்றுகையில் வைத்திருந்தது போன்றவை பெரும் மன அழுத்ததை கொடுத்திருந்தது .


என்னைப்பற்றி எனக்கு உரிய புரிதலை அந்த காலகட்டம் கொடுத்திருந்தது . அதுவரை என்னை நான் அறிந்திருக்கவில்லை என்பது விசித்திரமானது .பாலன் எனக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அதிலிருந்து திமிறி எழுந்து இயக்கத்தை உடைத்து எனது கோபத்தை வெளிப்படுத்தும் வரை அதை நான் செய்யக்கூடியவனாக் என்னை அறிந்திருக்கவில்லை . அதன் பின் பாலனுக்கான இடம் இறுதிவரை அவருக்கு கிடைக்காமலானது.அப்போது கூட நான் யார் கவனத்தையும் பெரிதாக கவரவில்லை . என் உடன் இருந்த அந்த குழு மட்டுமே என்னை அறிந்திருந்தது.


புதுவை அரசியலில் இருந்த வெற்றிடம் , தமிழக அரசியலால் எந்த கணிப்பும் கொள்ளமுடியாத சூழல் புதுவை அரசியலில் பெரும் குழுப்பத்தை உருவாக்கி இருந்தது . இந்த இடைவெளியில் எனக்கான இடம் துலங்கி வந்து . அதை பற்றறியெடுத்து எனது அரசியல் போக்கை முடிவெடுத்தேன் . காலம் சாதகமான காற்றை வீசிக் கொண்டிருந்தது .அது விடுக்கும் சவாலை ஏற்பது மட்டுமே என்கிருந்த ஒரே வாய்ப்பு.அதை துணிந்து ஏற்றுக்கொண்டேன்.மாநில தலைவர் சண்முகத்துடன் நெருக்கமாக இருந்தது அன்றைய அரசியல் சூழல் குறித்து தெளிவான புரிதலை கொடுத்திருந்தது .


1996 களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலமையில் மாற்றம் அதன் பாரளுமன்ற தேர்தல் தோல்வி ஒட்டி நிகழ்ந்தது.இந்தியவின் மிக முக்கிய பிரதமர் , நாட்டை திவாலாகாமல் காத்தவரான நரசிம்மராவ் அடையாளமிழந்து போனார் .தனியாளுமையாக அவர் வெளிப்படாமல் அது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.அதுவே அவரை பெரும் அச்சுறுத்தலாக சோனிகாந்தி நினைக்க வைத்தது ஆச்சர்யமில்லை. அன்றைய அமைப்பை பிரித்து அடுக்கியதன் விலையை இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது . நரசிம்மராவை அடுத்து சீத்தாராம் கேசரி தலைவராக வந்தார்.


1996 களில் தமிழகத்தில் மூப்பனார் தனிகட்சி துவங்கி திமுகா வுடன் கூட்டணி அமைத்து அதிமுகாவின் தோல்விக்கு வழியமைத்தார் .அதையொட்டி புதுவையிலும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்த அரசியல் பிளவை கண்ணன் பயன்படுத்திக் கொண்டு திமுகாவுடன் கூட்டணி ஆட்சியை கொண்டுவந்தார் .பலமிக்க உள்துறை புதுவையில் முதல்முறையாக முதல்வர் இலாக்காவில் பிரிக்கப்பட்டு கண்ணனுக்கு கொடுக்கப்பட்டது .


தனது நிலையை தக்ககவைத்துக் கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் புதுவை முதல்வருக்கு தலைவலியானார் .அவர் எப்போதும் பிறரால் கணிக்க முடியாத சிக்கல் நிறைந்தவராகவே ஆரம்ப காலம் முதலே இருந்து வந்தார். ஆனால் புதுவை முதல்வராக இருந்த ஜானகிராமனிடம் கண்ணனின் அரசியல் அழுத்தம் எடுபடவில்லை . திமுக தலைவர் மட்டும் மூப்பனார் மூலமாக கண்ணன் அழுத்தப்பட்டு கடும் அதிருப்தியில் உழன்று கொண்டிருந்தார்.


1996 முதல் 1998 வரை அகில இந்திய அரசியல் கடும் நிலையற்ற தன்மை கொண்டிருந்தது இந்த கால கட்டத்தில் இந்தியா மூன்று பாராளுமன்ற தேர்தலை சந்தித்து .கடசிகளின் நிலமையும் சிக்கலில் நீடித்தது .அது மாநில அரசியலிலும் பிரதிபளித்தது .தெளிவற்ற அரசியலை விதைத்திருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...