https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 31 அக்டோபர், 2016

ஊழின் ஆடல் குறித்து

ஶ்ரீ:
ஶ்ரீமதேராமாநுஜாய நம்:

தேதி 06 நவம்பர் 15 / கடிதம் -4
புதுவை




என்ஞானாசரியனின் தாய் என் மனம் வாக்கு காயத்தில் எப்போதும் இருப்பாதக.  ஹரி:||

நிஜத்தை புரிந்து கொள்ளாது கூச்சலிடுபவர்கள் அறிவிலிகள் , தள்ளத்தக்கவர்கள் ஆதலால் பரிதாபத்திற்குறியவர்கள் அவர்களுக்கு உண்மை ஒருபோதும் தன் கதவுகளைத் திறந்து காட்டப்போவதில்லை .

நிதானமாக கோவப்படுபவர்கள் ஆபத்தானவர்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்மை ஒரு பொருட்டே அல்ல.





உன் கடிதம் படித்தேன் முதல் பகுதி மிக அழகானது. மகிழ்வளிப்பதாக இருந்தது உனக்கு நன்றி.


காரிய துரந்தரனை நோக்கி மேற்சொன்ன இரு சாராரும் கேள்விக்கணைகளை தொடுத்தல் புரிந்து கொள்ளக்கூடியதே , ஒருவனால் அவை விடை இறுத்து முடிவு காணா முடியாதவை  . ஆகவே   அது   முடிவிலி..................

கடிதப்பதிவுகள் ஆபத்தானதவை , காரணம் ,நம் பின்வருவோர் நம்மை நாமாக காணவைப்பது , மற்றவர்கள விட இதன் ஆழத்தை அறிவேன் , இது இரு முனை கூர் கொண்ட கத்தி நேர்மை நிலை தவறின்,  கேட்பவரை அக்கனமும் சொல்பவனை எக்காலத்தும்  கிழிக்கும்.

உன் கடிதம்  உன் அனுகுமுறைக்கும் நிலைப்பாட்டிற்கும் அத்தனை வாசி என்பது உனக்கு புரிய இது பயன் படும்.


செயல்படுபவனை புரிந்து கொண்டால் செயல்களின் அர்த்தம் புரியும் ,

செயல்கள் நடந்து முடிவது அவன் ஊழ்நிலையை பொறுத்தது. அது சரித்தவறுகளாக. மரியாதை அமரியாதையகால சூழ்தலில் மற்றவர்களுக்கு அர்த்தமாவது.

காலம் தன் முடிவில்லா கண்ணிகளை முடியத் துவங்குவது இங்குதான் .

அது , ஒரு வெக்தியை,  அதை செய்யக்கூடிய அதிகாரியா எனப் பாராது தன் நிர்வாகத்தை நடத்துகிறது .

நம்வரையில் அதைப் புரிந்து கொள்ள அதுவே அதற்கே சாஸ்திரங்களை ஈட்டு விட்டிருக்கிறது. அது நம்வரை எட்டக்கூடியதாக நம் பூர்வர்கள் செய்துவிட்டு போந்தனர்.

ஊழின் விளாட்டை புரிந்து கொள்கிறாயா?  ................ இதோ சமீபத்திய நிகழ்வு   ......முடிந்தால் ஆய்ந்துகொள்.

நான் சொன்னேன் என்று நீ சொன்னதாக லாவண்யாவும் குணாவும் என் கடிதத்தை விளங்கிப் போக நேற்று வந்தனர் . அவர்கள் வந்தது என் தீழூய் ....................... அவர்களுக்கும் அவ்விதமே.
நான் அவர்களை வரச்சொல்லவில்லை ,

என் முதல் கடிதத்திலேயே , குறிப்பில்

இது தொடர்பான  எவற்றையும் காலம் வரும்வரை  நிரகரிக்கிறேன்-
காலம்  வரின் , சொல்லெழுதலுக்கு அவசியமின்றி அனைத்தும் துலங்கும்

என்று எழுதியிருந்தேன் , ஆனால் உனக்கான பாதையை மட்டும் திறந்து வைத்திருந்தேன்.
அதற்கு உன்அனுகுமுறை மட்டுமே காரணம்






லாவண்யா சிறியவள் அவளும் என் னை போலவே இச்சூழலின் காரிய துரந்தரீ , எதிர்காலத்தில் தன் புரிதல்களால் தன்னை பிறருக்கு தனக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்த இருப்பவள் .          ஆனால் ஊழ். ................ அவள் குணாவை  உடன் அழைத்து வந்திருந்தாள் .  தனித்து வர இயலாத ஓர் நிலைபாட்டை ஊழின் காரணமாக அவள் எடுத்திருந்தமையால்.
வந்தது கடித விளங்க்கங்களை..........பெற      அதாவது    எப்படி அனுப்ப போச்சு ?  என்று . ஆனால் எது விளைத்ததனால் இக்கடிதம் முலைத்திருக்கிறது என விளங்கிக்  கொள்ளும் பொறுமை அற்று.



குணாபாய்

தன் வாழ்விலிருந்து  கற்றது பாடமாக  கைவரப்படாதவள் , மிக எளியவள், அனைவரின் அரவனைப்பிற்கானவள் . ஆனால் என் தீழூழ் என்னிடம் சொல்லத்தகாதன சொல்லி எனனால் கேட்கத்தகாதனவற்றை , என்னிடம் கேட்டுப் பெற்றவள் .

 ஒரு கோபத்தில் தான் சொன்னதை  என் நிலைபாட்டாக மாற்றாது விடமாட்டாள் போலும்........என்செய்வேன்.....     என் ஊழ் அங்ஙனம்

லாவண்யா தனியாக வந்திருந்தால் இதன் முடிவு வேறு வகையாக நிச்சயம் முடிந்திருக்கும் .  நான் அதை உறுதியாக நம்புகிறேன் அத்துனை திறன்மிக்கதாக இருக்கும்  அவள் சொல்லாடல்.


அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் அதற்கு நான் என் பதிலளித்தல் என்ன என விளக்கினால் ........ இக்கடிதம் எழுதும் அதிரமற்றவாகிப்போவேன்      ...காரணம் .......          இக்கடித விஷேஷம் அதுவன்று .

ஏனெனில் இது    ஊழ்  பற்றியதானது , உன் கடிதத்திற்கான பதில் , உங்கள் அனைவரின் இதுவரை எழுந்த மற்றும் எழவிருக்கும் அனைத்து கேளவிக்கானது

லாவண்யா என்னிடம் முறையாக விடைபெறுவதற்கு முன்பே குணா வெளியேறிவிட்ட பின் , நானும் லாவண்யாவும் எவ்வித செல்லும் எழாதே ஒருவரை ஒருவர் நோக்கிக்  கொண்டிருந்தோம்  .காலம் ஊழியாகக்கடந்தது        . என்னுள்ளே நானும் அவளும் தன்னுள்ளே கசிந்து கொண்டிருந்தோம் .  இறுதியாக "நா வரேன்னே " எனச் அவள் , அவளாகச் சொல்லிச்சென்றால். நான் என் மௌனம் காத்தேன்.

ஒருநிமிடம் , இது ஒன்றுமில்லாது செய்யும் சக்தி இருவரும்  பெற்றிருந்தும் ...... அது நடக்கவில்லை .........ஊழ்    

ஆனால் நடந்தது என் முதல் கடிதத்தில் நம் அனைவரின் விலக்களை பற்றிய என் முன்மொழிதலை ..........  வேறு   வழியற்று      ,அவள்    ,அவளை  மீறி     வழிமொழிந்தளே  ஊழ்


அதை என் தீழூழ்  எனச்சொல்லாது.   இதை அவள் தவறு என நான் கூறுவேனானால் நான் பொய்யன் , என் சொல் மனம் காயம் அனைத்தும் பொய்யே .


ஆம் அவ்வாறே ஆகுக.

ஹரி:||











குறிப்பு:-

ஶ்ரீபீஷ்மபிதாமகர் குறித்து ,என்னை மனத்துவைத்து நீ சொன்னது வியாகணத்தில் வெஞ்சினார்த்தமாக சொல்படுவது. அதன் ஸ்வாபதேசம் அதுவன்று . உன்னதமான வாழ்வியலானது . சமயம் வாய்பின் விளக்குகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்