https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 31 அக்டோபர், 2016

செல்வியின் குறுஞ்செய்தி விளக்கம்

ஶ்ரீ:
ஶ்ரீமதேராமாநுஜாய நம்:


தேதி:-03-11-2015


உன் குறுஞ்செய்தி பார்தேன்

நம்பிக்கை    -  ஆம்.    நம்பிக்கைகளின் ஊற்றமும் அது ஏற்படுத்தும் நிலைபாடுகளுமே என அடையாளங்களாக , என்னை கடந்த காலங்களில் வைத்திருந்தது போலேவே, என்னை எக்காலத்தும் வைக்கக் கடவது.

யாவருக்குமான அக்கடிதம் உனக்குமானதாக ஆகிப்போனது எப்படி ,என நினைத்து கேட்டிருப்பாக கருதுகிறேன் .  கடந்த முறை பேசும் போது நான் என்ன மனநிலையில் இருந்தேன் , அதை எதனால் உன்னிடம் பேசினேன் என நீ அறிவாய் என நினைக்கிறேன்.

உன்னிடம் பேசியது எல்லாருக்குமானது .

அனால் ,அது செயலாற்றும் திறனழிந்துவிட்டதின் நிலையே லாவண்யா வீட்டு நிகழ்வின் வெளிப்படானது.

அது உன்னால் ஏற்பாடு செய்யபட்டதென அறிவேன் , அவள் என்னை மட்டுமே அழைப்பதன்  தவற்றையும் , அதின் பின்விளைவுகளையும் எடுத்துரைத்தது திருத்தியிருக்க வேண்டும் .அது உனக்கான கடமையாக நான் கருதுகிறேன். அல்லது குறைந்த பட்சம் என்னிடம் இதுபற்றி பேசி உன்ன நிலைப்பாட்டை தெரிவித்திருக்க வேண்டும்.

லாவண்யா எனக்கிழைத்த கீழ்மைக்கு அனைவரும் சாட்சிபூதர்களாக நின்றீர்கள்.

மற்றவர்களிடமிருந்து உன்னை வேறுபடுத்தும் இதை நீ இழந்து போனாய் .


வாழச் சென்றவர்கள் வேர் விட்டிருக்கிறார்கள் .தன் முடிவென்னும் முதல் குலை சவலையாக எனக்கு காய்திருக்கிறது, கோபமில்லை , வருத்தமளிக்கிறது.

சகோதர பனிப்போர் என்கிற நிலையை தாண்டுதல் , அவரவர் வீட்டு ஆண்கள் அனைவரும் அறிதல் எனச் சென்று நிற்கும். அதற்கு துணிந்தார்கள் எனத் தெரிகிறது.   எனில்   .  ஆம் ...... அது அப்படியே ஆகுக

  - ததாஸ்து ||.   என்பதை தவிர பாதை இல்லாமல் ஆனது என்குற்றமில்லை.

இருந்தும் உன்னிடம் மட்டும் இது குறித்து எழுதுவது உன் அனுகுமுறையைத் தெரிந்ததனால்!!!!!!

 அனால்

அனுகுமுறைக்கும் , நிலைபாட்டிற்குமான வாசியை நீ அறியாய் போலும்.

நிலைபாட்டிலிருந்து அனுகுமுறையாக பரிமளித்தலே சரி, இல்லையெனில் இரண்டும் நேர் எதிர் திசையில் பயணிக்கும்.

நீ எனக்கு மற்றவர்களுக்குமான பகைமையில் , புரியவைக்க வேண்டியது உன் நிலைபாடு.



க்ருபாநிதி அரிக்ருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...