https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 31 அக்டோபர், 2016

சகோதரிகளுக்கு ஓர் திறந்த மடல்

ஶ்ரீமதே ரமனுஜய நம:

சகோதரிகளுக்கு ஓர் திறந்த மடல்



தேதி 29-10-2016


ஊரிலேண் காணி இல்லை *
உறவு மற்றொருவர் இல்லை .......

-நன்றி
- எந்தை கோ.கிருபாநிதிபிள்ளை அவர்கள்.





இந்த கடிதம் என் உடன் பிறந்த அனைவருக்குமானது , துரதிஷ்டவசமானது . பல முறை கணிசித்து, பிறகு இதை எழுதுவதற்கு விருப்பில்லாது போனதற்கு காரணம் ,அத்தனை காலம் கூட இதைக் கணிசித்தலால் ஏற்படும் மனமாசடைதலை தவிரும் பொருட்டே,  ஆனால் இன்று மீறி எழுதுவதற்கு ஓர் மனசாமாதனம், இது காறும் ஏற்பட்டமையால் .

என் ஞானகுரு ஶ்ரீபீஷ்மபிதாமகர் என்வாழ்வியலில் பெரும் தாக்கம் கொள்ளச்செய்தவர் , இன்று உலகோர் மஹாத்மா காந்தியை புரிந்து கொண்டால் அவரை புரிந்து கொள்ளலாம் . அனைத்தும் விட்ட பின்னும் , இருவரும் தங்கள் இறுதி தருணம் வரை உலக வாழ்வியலில் நிலை கொண்டிருந்தார்கள்  -  உலகத்தோருக்கு இருத்தலியலின் நுட்பம் புரிபட -

வாழ்வியலில்  நிகழ்காலமென்பதும் , எதிர்காலமென்பதும் எப்போதுமே  வதைப்பது , அனுபவ நிலைப்பாடுகளைக் ஒன்றுமில்லாது செய்வது.  நிகழ்வுகளில் இருந்து கற்றது கைகொடுக்காது , சூழ்நிலைகளில்  கடமைகளென்று நம் முன்னே வந்து நிற்கும் போது மனப் போராட்டமும் , சமாதானமும் எல்லா சமயமும் நிகர்நிலை கொள்ளாது , அதற்கு அங்குசம் இடாது அதைக் கடப்பது என்பது நிலையழியச்செயவது.       - இதுவே இருத்தலியலின் நுட்பம்


ஆம்,  இதுவும் அதுவே .


அனுப்புவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை .


உழ்........
உப்பக்கம் காணும் .......- என்பர்.


ஒரு மனிதனின் குணத்தை கொல்வது அவனை கொல்வதைக் காட்டிலும்  கொடுமையானது , வலிமிகுந்தது .

ஓர் நிகர்நிலை மனிதன் , தன்னை உலகம் எப்படி நோக்க வேண்டும் என்பதற்கேற்ப தன்னுடைய அடையாளங்களை உருவாக்கிக் கொள்கிறான் . உலகம் அவனை எப்படி பார்த்த பொழுதும் . அதை சூழ்நிலைக்கேற்ப  புனைந்து கொள்வது என்பது அவனால் இயலாது .

நம் தாய் நேற்று ,நாளை என்கிற கால பரிமாணத்தையும், அது ஆற்றும் எதிர் விணையை பற்றய மதிப்பீடுகளையும் அறியாத எளியவர் . அனுபவம்,காலம், நோய், என்கிற மனித தடைகளையும், பிறர் மனம், சமூகம் , தன்பொறுப்பு , பற்றிய கவலை அற்று  இன்றைய தேவை அவரது அனுபவம் ,கணக்குகள் அவரின் புரிதல்கள் என்பன  அவர் பேச்சுக்களாக வெளிப்பாடும்போது அது இத்தனை ஸ்தூலமானதானதாக  அர்த்தம் கொள்ளப்படுவதும் , கேட்பவர் சித்ததை கொதி நிலை அடையச் செய்வதும் , வியப்பாக இருக்கப்பட வேண்டியதில்லை.

சாமான்யர்களின் உலகம் என்றுமே கொந்தளிப்பானது.

வாழ்வியலில் மிக மலினமாக காணக்கிடைக்கும் இதை ஒப்புக்கொள்ளாது தாண்டுதல் , எந்தையாலும் அவர் நமக்கு அறிமுகப்படுத்திய சம்பிரதாயத்தாலும் நன்கு உரைக்கப்பட்டது. இது புரிதலின் உள்அடுக்குகளில் தொன்மங்களாக படியாது ஒருவருக்கு அனுபவத்தில் வாராது . கற்ற ஏட்டின் அளவே சென்று நிற்கும் .

பெண்கள் ஆண்களை ஆள்கிறார்கள், அதை ஆண்கள் வைதிக, சம்பிரதாய , மனொருக்கம் ,காமம் சாராத முதுமையின் வழியாக அவர்களை அங்கீகரிகிறார்கள். அதன்பால்பட்டு,  நிகர்நிலை உள்ளவர்கள் அதன் எல்லைகளை வகுக்குறார்கள் , அவர்கள் அடிமை பட்டிருக்கிறார்கள் என்றும்  , மற்றவர் அவர்களை  அங்ஙனம் நிலைநிருத்த முயல்வதும், அவரவர் கீழ்மையான மனவிகாரங்களே.


இந்நிலையை மீறி அவளோ , அல்லது அவள் சொல்லுக்கு நின்று நிகர்நிலை அழிந்து பெற்றவர்களுக்கு துரோகமிழைப்வானாக , உடனபிறந்தோரால் ஒருவன் நிலை நிருத்தப்பட்டு , கூற்று உண்மையாகி ,அவர்கள் எண்ணம், சொல்  வெல்லுதல் என்றாகிப்போனால்  , தன் பெற்றோருக்கே துரோகமிழைப்வானான அவனால் தனக்கென்றும் வாழ்வில் ஆவதுதான் என்ன?.எதிர்காலத்தில் உடன்பிறந்தோர் கடமைகளில் அவனால் ,மற்றொருவருக்கு  ஆவதுதான் என்ன?.


 இது, இப்படிதான் நிலைகொண்டுள்ளதாக அவர்கள் நிரூவாரானால் , அதன் விளைவுகளால் அவனிடமிருந்தும், தங்கள்  எதிர்பார்புகளில் இருந்தும் தங்களை விலக்கிக் கொள்ளலே, அவர்கள்  மீது அவர்களாலேயே விதிக்கப்பட்டதும் தொற்றி நிற்பதும் என்றாகிப்போகிறது  .

தங்களின் எண்ணங்களாலும் , அர்தமற்ற உரையாடல்கள் வாயிலாகவும் , காலத்திடம் அவர்கள் இருகை ஏந்தி இரந்து பெற்றது இதுவே என்றாகிப்போகும் .




என்றால் ,

ஆம் அவ்வாறே ஆகுக !!

ஹரி: ||




இது தொடர்பான  எவற்றையும் காலம் வரும்வரை  நிரகரிக்கிறேன்-
காலம்  வரின் , சொல்லெழுதலுக்கு அவசியமின்றி அனைத்தும் துலங்கும்




க்ருபாநிதி அரிக்ருஷ்ணன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...