https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2023

“கீதா முகூர்த்தம்” - 11. * காலமில்லா *

 


27.04.2023

கீதா முகூர்த்தம்” -  11.


* காலமில்லா  *




ஆழ்மனப் புரிதலில் இருந்து அடுத்த கட்டம் அதை நோக்கிய புறவயமான பயணம் அதன் மீது கொண்ட அழுத்தமான நம்பிக்கையில் விளைவது . தாத்தாவின் பக்தி மிக எளிய பூஜை என்பதே காலையில் நெற்றிக்கு இடும் திருமண்னுடன் துவங்கி அங்கேயே முடிந்து விடுகிறது . அன்று வீட்டில் பூஜை அறை என ஒன்று தனியாக இல்லை கூடத்தில் கிழக்கு நோக்கி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் தெய்வங்களின் படங்கள் அதற்கு நடுவில் சிறிய விளக்குமாடம் அதில் காமாட்சியம்மன் விளக்கு. அது இரு பக்க யானைகளுடன் கூடிய மஹாலட்சுமி புடைப்பு சிற்பம் கவண்டது . அன்றுஅதை ஏன் காமாட்சியம்மன்”? என சொல்லுகிறார்கள் என யோசிப்பதுண்டு. அம்மா அல்லது அக்கா யராவது தீபம் ஏற்றுவார்கள். அதற்கு முன்பாக மீராபாய் அல்லது லக்ஷ்மிபாய் அக்கா தாத்தாவிற்கு திருமண் இட்டு விடுவார்கள். கண் அறுவைசிகிழ்ச்சைக்கு பிறகு அவர் தனது கண்பார்வை இழந்திருந்தார். திருமண் இட்டு முடித்தபின் அக்காவிடம் கண்ணாடியை காட்ட சொல்வார் அது ஒரு சடங்கு என நான் நினைத்துக் கொள்வேன். மீராபாயிடம் நான்கண் தெரியாதவர் எதற்கு தன்னை கண்ணாடியில் பார்க்க முயல்கிறார்என கேட்டதுண்டு . “அந்த கிழத்திற்கு நன்றாக கண் தெரியும் நம்மை சும்மா ஏமாற்றுகிறதுஎன்பாள். விசேஷ தினங்களில் சுடராட்டு செய்கிற போது சில படங்களுக்கு எதிரில் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதும் கண்கள் பொங்கி மனம் விம்முவதை பார்த்திருக்கிறேன். பார்வையால் அல்லது மனத்தால் எதனருகிலோ மிக நெருக்கமாகி விடுவதாக தோன்றுவதுண்டு. ஒரு வேளை மீராபாய் சொல்லுவது போல நல்ல வெளிச்சத்தில் அவரால் அந்த காட்சிகளை பார்க்க முடிந்திருக்கலாம் .

 

புதுவை காந்தி வீதியின் வராதராஜப்பெருமாள் கோவிலில் தனது இஷ்ட தெய்வமான பாண்டுரங்கனுக்கு தனி சன்னதி எழுப்பியதுடன் அங்கு அவர் தனது ஆழமான புரிதலை எப்படிப்பட்டது என அனைவருக்குமாக அங்கு பதித்தார் என நினைக்கிறேன். மூலவருக்கு எதிரில் சிறு பலிபீடம் நிறுவி அங்கு தன்னை அதன் காலடியின் கீழ் விழுந்து வணங்குபராக ஓர் புடைப்பு சிற்பம் வடித்து பதித்து வைத்து அவர் காலம் கடந்து அங்கு இருந்து கொண்டிருப்பவராக தன்னை வைத்துக் கொண்டார்  . அந்த தனி சன்னதி திருவுரு முன்பாக காலமல்லாத ஒரு காலத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.


புதுவையில் அன்றிருந்து பெரும் செல்வந்தர்கள் மத்தியில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து செய்து வந்த கோவில் கைய்கர்யம் அவரது ஆழ்மனத்தை நோக்கிய பயணம் என்பதைத் தவிர வேறு காரணங்கள்  இருக்க முடியாது என நினைக்கிறேன். வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம், வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் . பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் என நித்திய, மாத வருடாந்திர பூஜை உற்சவத்தை ஏற்படுத்தி வைத்தபின் அவர் மிக உச்ச நிகழ்வாக செய்தது  மணற்குள விநாயகர் உற்சவ மூர்த்தி . பின் அதற்கு  மாசி மக கடற்தீர்த்தவாரி உற்சவத்தை ஏற்படுத்தினார் . மணற்குள விநாயகர் உற்சவ மூர்த்தி கடற்கரைக்கு சென்று வீதியுலாவாக கோவிலுக்குள் செல்லும் முன்பு தன் பக்தன் இருக்கும் வெள்ளாழர் வீதி உள்ள அவரது வீட்டிற்கு எழுந்தருள்வதுடன் அந்த உற்சவம் முடிவிற்கு வருகிறது


அன்று வெள்ளாழர் வீதியில் இருக்கும் அவரது அனைத்து மகன்களின் வீட்டிற்கும் அது செல்லும். ஒவ்வொரு வீட்டின் முன்பாக நின்று தாத்தா அந்த வீட்டிற்கு தரும்  மரியாதையை ஏற்றபின் அந்த குடும்பத்து மூத்த உறுப்பினர் கோவில் மரியாதையை எற்றுக் கொள்வார். மணற்குள விநாயகர் மனம் கனிந்து அந்த வீட்டிற்கு வரும் சடங்காக வில்வக்களை என்கிற பத்து சுடராட்டு நிகழ்த்தப்பட்டு அது அந்த வீட்டின் பூஜை அறைக்கு கொண்டு செல்லப்படுவதுடன் அவரது குடும்ப நிகழ்வு முடிவிற்கு வரும். இது அணைத்து  குடும்பத்திலும் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து கொண்டிருந்தது.


வெள்ளாழர் வீதி , காந்தி வீதி சந்திப்பில் உள்ள கங்கை விநாயகருக்கு உற்சவமூர்த்தி செய்து வைத்தது போன்றவை புரிந்து கொள்ள முடிகிறது . ஆனால் திகைப்பூட்டுவது வடலூர் வள்ளலார் மடத்தில் நடக்கும் தைபூசத்திற்கு ஒரு மூட்டை அரிசி அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இன்னதென உறுதிப்பாடில்லாது அனைத்தையும் பிடித்து தனது மறுமை வாழ்கைக்கு தன்னை காக்கும் தெய்வத்தை பற்றிய மன ஊசலில் இருந்தாரா ? என்றால் இல்லை. ஆரம்பம் முதல் தனது இறுதி கணம்வரை தன்னை தீவிர வைணவராக இருத்திக் கொண்டார். அவரது புஷ்டிமார்க பயணம் பாண்டுரங்கனை இலக்காக கொண்டிருக்க வேண்டும் . ஆனால் அனைத்து சம்பிரதாயங்களை ஏற்கும் மனவிரிவு கொண்டவராக அவரை அறிந்து கொள்கிறேன். நான் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் தாத்தாவிற்கு அறிமுகமான அந்த கோவில் பட்டாசார்யார் என்னை பார்த்தவுடன் சொல்லுவது புயல் மழை என எதையும் பொருட்படுத்தாது கோவிலுக்கு வந்து ஒவ்வொரு சன்னதி விளக்கிலும் எண்ணை வார்ப்பதை விடாமல் செய்து வந்ததை நினைவு கூறுவார்


வாழ்வின் இறுதி கணத்தை மிக தெளிவாக தெரிவு செய்து வைத்ததுடன் அந்த நாளுக்காக கசப்பில்லாத  வாழ்கையை வைத்து அந்த இறுதியை நோக்கிய பயணத்தில் வைத்திருந்தார்  . தான் எரியூட்டப்படும் அந்த நிகழ்விற்கு இரண்டு பெருட்களை அவர் வாழ்நாட்கள முழுவதும் சேர்த்தார் . ஒன்று தனது சிதைக்கு வைக்கும் சந்தனக்கட்டை மற்றொன்றுபாகவத பாததூளிஎனப்படும் பக்தர்களின் காலடி மண். இதை அவர் தான் செல்லும் ஒவ்வொரு கோவிலின் நுழைவுவாயின் மூலையில் சேர்ந்திருக்கும் மண் மற்றும் புழுதியை சிறிது எடுத்து வந்து ஒரு வெள்ளி கூஜாவில் போட்டு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் . அவர் எரியூட்டப்படும் முன்னர் அவர் மீது அவரது மகன்களால் தூவப்பட்டது  வாழ்நாளெல்லாம் அவர் காப்பாற்றிய விழுமியங்கள் அவரை காத்திருக்க வேண்டும்.


பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் சொத்துக்களை தான் இருந்த காலத்தில் தெளிவாக பகுத்து வைத்தார். ஆவணம் எழுதும் கணத்தில் பாட்டி ஆதிலக்ஷ்மி அம்மாள் தனக்கென ஒன்றுமிலையா? என கேட்டபோது அதிர்ந்த தாத்தா தோப்பு  மற்றும் அது சார்ந்த பாசனக்குளம் இரண்டையும் பாட்டிப் பேருக்கு மாற்றி எழுதி அவரது காலத்திற்கு பின்னர் தங்களது பிள்ளைவழி ஆண்வாரிசுக்களுக்கு என எழுதி வைத்தார் . பாட்டி தாத்தாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக மண்மறைந்தார் . அதில் வினோதம் அந்த  சொத்து காரணமாக  குடும்பத்தார் இரு பிறவாக பிளந்து  நிழ்ந்த சச்சரவு தாத்தாவின் குடும்ப விழுமியத்திற்கு எதிராக சென்றது . இந்தப் பதிவு அந்த சச்சரவு பற்றி சொல்லவந்ததல்ல. குடை கோவிந்தசாமி என்கிற மனிதரின் அக மற்றும் புறவய தேடல் பயணம் கோட்பாடுகளை தனது செயல்பாடுகள் வழியாக அவர் வாழ்வியலில் கண்டடைந்தது என்ன என்பது பற்றியது.அவர் மண் மறைந்தாலும் அவரது விழுமியங்கள் அவரை இன்றளவும் காக்கின்றன என்கிற புரிதல் எனக்கு திகைப்பைக் கொடுத்தது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...