https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 9 பிப்ரவரி, 2019

அடையாளமாதல் -434 * ஒற்றைப் பரிமாணம் *

ஶ்ரீ:





பதிவு : 434 / 606 / தேதி 09 பிப்ரவரி  2019

* ஒற்றைப்  பரிமாணம்  * 


எழுச்சியின் விலை ” - 35
முரண்களின் தொகை -02 .





ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை என்றார் ஜே.சி.குமரப்பா .  எண்ணி எண்ணி விரித்துக்கொள்ள வேண்டிய வரி அது. பெரும்கனவுகளை கொண்டிருத்தல், இலட்சியங்களின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைதல் ஆகியவை ஒட்டுமொத்தமான பார்வையை முடிவு செய்யவேண்டும். காந்திய வழிமுறை பற்றி ஜே.சி.குமரப்பா சொன்னதாக ஜெயமோகன்.

கூட்டுறவு இயக்கங்களை கட்டமைக்கும் முயற்சி பற்றிய சிந்தனையே அரசிலை நோக்கிய எண்ணங்களுக்கும் , திட்டமிடலுக்கும்  பெரும் பாய்ச்சலை கொடுத்திருந்தது. என்ன செய்தாலும்  அரசியலின் வெற்றிடத்தை நிரப்ப இயலாது. அதற்கான இளந்தலைவர்களை , அரசியலின் "நுண்   கறைக்கு"   அப்பால்  பழக்குவது குறித்த ஆயாசம் . மனச்சோர்வை கொடுத்திருந்தது . அரசியல் குறித்த தெளிவான பார்வை மற்றும இலக்கு உருவாகி வந்தது இதற்கு பிறகுதான். தேர்தலரசியலை நான் எப்போதும் விழைந்ததில்லை . அதற்கு மாற்று திட்டமான அமைப்பை ஒருங்கிணைத்து , ஒருமுகப்படுத்தி அதிலிருந்து எழும் இயக்கத்தை அரசிலுக்கான விசையாக தொடுக்க 
எனக்கு பிறிதொரு துறை வேண்டி இருந்தது

அரசியலுக்கு முற்றும் புதியவர்களான அவர்களுக்கு ,அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருத்தியல் தேவை எழுந்தது. அதை அரசியலில் இருந்தே எடுக்க முடியும். ஆனால் அதில் அவர்களுக்குள் முரண்பாடுகள் எழும் வாய்ப்புகள் அதிகம். சமூகத்தை தொடர்புறுத்தும் அரசியலின்  எந்த செயலை செய்யும் ஒருவருக்கு நேரும் சிக்கலையும், அதிலிருந்து வெளியேறும் வழியையும்    போட்டுப்பார்க்கும் பயிற்சியாக பிறிதொரு தளம் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்  .  நீண்ட தேடலுக்கு பிறகு மிக மிக தற்செயலாககூட்டுறவு இயக்கம் வழியாக அரசியல் ஒருங்கிணைப்புஎன்கிற கருதுகோளை வந்தடைந்தேன். அது ஒரு சரியான மாற்று தளமாக இருந்தது

தேர்தலரசிலையும் அதன் மூலம்  அதிகாரத்தை பெற, நெறிகளுக்கு கட்டுப்படாத சமன்பாடுகள் மீது மனவிலக்கத்தை கொண்டிருந்தேன்  . தொடர்ந்தது நிகழும் சமன்படுகள் ஒருவரை எங்கு கொண்டு விடும் என யாராலும் கணிக்க இயலாது .நான் அதற்கானவனில்லை, அல்லது அது எனக்கானது இல்லைதேர்தலரசியல் முலம் பெரும் அதிகார அரசியலே  நிஜமான அரசியலின் முகம் என்றாலும், அதற்கான கோட்பாடுகள் , நெகிழ்வுத்தன்மை கொண்டது . கரவுப்பாதைகளின் வழியாக அரசியலை தனிப்பட்ட வெற்றியை நோக்கி நகர்வது . அது யாரையும் , யாருக்கும் உண்மையாக இருக்க விடாது என்பது மட்டுமின்றி அதில் ஈடுபடும் எவருக்கும்  அழுத்தமான தனி முகத்தை , அடையாளத்தை அது ஒருபோதும் கொடுப்பதில்லை  . 
சண்முகம் அந்த வளையத்தின் கட்டுப்பாட்டில் வராமல்  போனதற்கு , பிறிதொரு தளமான சுதந்திர போரட்ட களம் அவரை வடிவமைத்தது காரணமாக இருந்திருக்கலாம் . அது நெறியை , சமூக பிரக்ஞையை முன்னிறுத்தியது .சண்முகம் சுதந்திர போராட்டத்தின் வழியாக அரசியலுக்கு வந்தவர் .அவர் அரசியலில் நுழைந்த காலம் , நாடு சுதந்திரத்தை நோக்கிய பயணத்தின் இறுதி கட்டத்தில் இருந்தது . அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடத் துவங்கிய போது ,தில்லியில் நேரு தலைமையில் இந்திய தேசிய கொடி செங்கோட்டையில் ஏறியிருந்தது.

போராட்டக்காலத்தின் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் , திராவிட இயக்கம் போன்ற அமைப்புகள்  அரசியலில்  காலூன்ற முயற்சித்து கொண்டிருந்தது. அந்த இயக்கங்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியது அவர்களின் களமாக ஒருங்கியிருந்தது .சுயராஜயம் பிறப்புரிமை”  என்கிற கருத்தியலை முன்வைத்து வெற்றி பெற்ற அதை நடைமுறைபடுத்த அடுத்த திட்டமிடலுக்கு நகர்ந்த போது  ,சுதந்திர இந்தியாவில் மக்களை ஒன்று திரட்ட வேறு பல கோட்பாடுகளின் தேவை எழுந்தது . மனித திரளை பண்பாட்டின் முனைக்கு கொண்டு வருவது பற்றியும்  மனம் அது எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒற்றை பரிமாணத்தை அடைகிறது என்பது இன்னமும் புரிந்து கொள்ள முடியாதது

1935ல் காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து மாகாணசபைகளில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை வென்றெடுத்து தேர்தலரசியலில் நுழைந்ததும் அதிகார அரசியல் இந்தியாவில் ஆரம்பித்தது. ஆரம்பித்த கணமே அது காங்கிரஸை உடைத்தது. தேர்தலில் போட்டியிடும் பொருட்டு காங்கிரஸில் இருந்து வெளியேறிய சுயராஜ்யக்கட்சியின் பிளவின் பின்னடைவை காங்கிரஸ் தாண்டிவர காந்தியின் ஆறுவருடக்கால கடும் உழைப்பு தேவையாகியது. மனம்சோர்ந்த அவர் கிட்டத்தட்ட அரசியலைவிட்டே விலகி கிராமசேவைப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். தன்னைச்சூழ்ந்திருந்த அனைவரும் அதிகரா அரசியலின் வேட்பாளர்கள் என உணர்ந்த காந்தி அதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவர்களான ஒரு தொண்டர்படையை அமைத்தார். அந்த தொண்டர்களுடன் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். அவருடைய இலட்சியவாத அரசியலின் வீரர்களாக அவர்களே கடைசிவரைத் திகழ்ந்தனர்” என்கிறார் திரு.ஜெயமோகன் .அரசியலின் மூலம் அதிகாரத்தை பெற புதிய கருத்தியல்கள் எழுந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...