https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

அடையாளமாதல் * கனவும் கைக்கு எட்டுவதும் *

 






ஶ்ரீ:



பதிவு : 557  / 747 / தேதி 10 ஜனவரி  2021


* கனவும் கைக்கு எட்டுவதும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 35.





அரசியலின் நிஜமான முகமும் , எனக்கான அரசியல் களமும் அதை ஒட்டிய எனது புரிதலும் , நிலைபாடும் ஒரு கட்சி நிர்வாக அடிப்படைச் சிக்கலில் இருந்தது தெளிவுபெறத் துவங்கியது ஓர் இரவு நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகுதான் . ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பி்ன் பலங்களில் ஒன்று . எனக்கு பலம் என ஆனாதெல்லாம் 1996 கொடியேற்ற நிகழ்விற்கு பிறகுதான் . சர்ச்சைக்குறிய தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி அதில் ஒன்றின் அருகில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் காலனியுடன் நீண்டகாலச் சிக்கல் . அது ஒரு ரசாயன சுத்திகரிப்பு ஆலை .அது அங்கு துவங்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைகுறிய பல சம்பவங்களை அந்த ஆலை நிர்வாகம் துணிந்து செயல்படுத்தத் துவங்கியது . அந்த ஆலை அங்கு அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது உள்ளூர் பிரமுகர்களின் தலையீடு மற்றும் அவர்கள் அளித்த உறுதி மொழியினால் எதிர்ப்புசெயலிழக்கம்செய்யப்பட்டது . ஆலை நிர்வாகம் கொடுத்த இரவு நேர உற்பத்தி மட்டும் என்கிற உறுதி மொழி மீறப்பட்டு மாலையிலேயே உற்பத்தி துவங்கியது . அது குறித்து இளைஞர்கள் சிலருடான பல நாள் நடைபெற்ற  சில்லரை தகராறு ஒரு நாள் ஆலை நிர்வாகத்திற்கு எதிரான பெரும் மோதலாக உருவெடுத்தது. இளைஞர் காங்கிரஸின் தொண்டர் அமைப்பு பலமிக்க பகுதிகளில் அதுவும் ஒன்று . பிரச்சனை காவல்நிலையம் வரை சென்றது . இளைஞர் காங்கிரஸ் சார்பாக பதினைந்து பேர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றனர் , அவர்களை காவல் துறையினர் கைது செய்திருப்பதாக இரவு 9:00 மணிக்கு செய்தி வந்தது . செய்திகள் எப்பவும் நெருப்பு போல உக்கிரத்துடன் வந்தடைந்தவுடன் எங்கும் பற்றி எரியத்துவங்குவது . உடனடியாக கூட்டம் தலைமை அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் குவியத் துவங்கியது  . பாலன் அன்று ஊரில் இல்லாததால் இங்கும் அங்குமாக முட்டி மோது தகவல் எங்களிடம் வந்து சேர இரவாகியது . நாங்கள் காவல்நிலையம் சென்றபோது சூழல் கொதிநிலையை எட்டி இருந்தது . அது எனது முதல் அனுபவம் , மிகுந்த பதட்டத்தில் இருந்தேன். இரவு நேரம் அதை பல மடங்காக பெருகச் செய்திருந்தது . இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி தொண்டர்களாக அன்றாடம் பார்க்க நேரும் அந்த மனிதர்களை காவல் நிலையத்தில் பிரச்சனைகளுக்கு மத்தியில் பார்க்க நேர்ந்தது துணுக்குற வைத்தது . காவல் நிலையத்தில் வழக்கம்போல மட்டையடி நடத்தி அவர்களை மீட்டு வந்தது சாதனை உணர்வை  தந்தது . மொத்த சிக்கலுக்கும் குறிப்பிட்ட ரசாயன ஆலை காரணமாக இருந்தாலும் புகார் கொடுக்க வந்த ஆளும் கட்சியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை தயக்கமில்லாமல் கைது செய்தது அதிர்வை ஏற்படுத்தி இருந்தது . மீட்டு வெளிவந்த பின்னரும் அது பற்றிய பேச்சு ஓயவில்லை , எங்கு சுற்றினாலும் இறுதியில் அங்கு வந்து நின்றது . அங்கு ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த முதிர்ந்த ஒருவர் வலுவான மாற்று சிந்தனை ஒன்றை முன் வைக்கும் வரை . அவர் சுதந்திர போராட்டத் தியாகி என்று பின்னர் அறிந்து கொண்டேன். பலர் பரப்பரப்பாக பேசிக் கொண்டிருக்க அவர் சொன்ன கூரிய அரசியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டேன். பேச்சினூடாக அவர் முன் வைத்தது அரசியலின் எதார்த்த முகம். மிக கொடுமையாக இருந்தது . எந்த பகட்டு பாவனைக்குள்ளும் அடங்காமல் குத்திக் கிழித்து புடைத்து வெள்ளெலும்புக் என வெளித்தெரிந்தது. இயக்கங்களுக்குள் நிகழும் உள்ளரசியல் பற்றியும்  அதன் இடவெளிகளின் வழியாக காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் அத்துமீற நினைப்பது போன்றவை அப்போது எனது ஆரம்ப கட்ட புரிதலாக இருந்தது . அரசு துறைகளின் அரசியல், அவர்கள் அரசியலாளர்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும். கட்சி ரீதியில் தொண்டர்கள் எந்த உண்மைநிலையை முன் வைத்தாலும் அரசாங்கத்திற்கு வேறொரு கருத்தை முன்வைத்து அவற்றை செயலிழகச் செய்துவதுடன் அமைச்சர்கள் அல்லது கட்சி நிர்வாகிகளை அவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது அரசு அதிகாரிகளின் அடிப்படை அரசியல் . அவர்களை வெல்லும் வழி அறியாது ஒருவன் தன் அரசியலை வென்றெடுக்க முடியாது என்றார்  . அரசியல் என்பது கட்சிக்குள் நடக்கும் காலிடறும் விளையாட்டை மீறி , பொது நிர்வாகத்திடம் பேசும் வல்லமையை பெறுவதில் தான் இருக்கிறது என்றார். அன்று இரவு நடந்த உரையாடல் நான் முற்றாக எதிர்பாராது . எனக்கான தனித்த அரசியல் என அப்போது ஏதும் எனது எண்ணத்தில் இல்லை . ஆனால் அது எங்கோ எனது ஆழ்மனதில் தங்கி இருக்க வேண்டும் . 1999 களில் எனக்கான பாதையை நான் திட்டமிட்டது மொத்தமும் அதன் அடிப்படையில் அமைந்தது .பிறிதொரு சந்தர்பத்தில் அவரை தேடிச் சென்று தலைவர் சண்முகம் என் முன் வைத்த அந்த இரண்டு கேள்விகளில் ஒன்றை கேட்டேன் . புதுவை சுதந்திர போராட்டம் பற்றிய பல அரிய தகவல்களை சொன்னார் . அவை சிக்கல் மிகுந்தவை . புதிய புரிதல்களை கொடுத்தவை


அந்த நிகழ்விற்கு பின்னர் ஒவ்வொரு பகுதியிலும் அவரைப் போன்றவர்களை தேடி சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டேன் . வயது முதிர்ந்த அந்த சுத்தந்திரப் போராட்டகாரர்களை சந்திப்பது அரசியல் முக்கியத்தும் வாய்ந்தது என கருதத்துவங்கினேன் . அரசாங்கத்தின் கனிந்த முகத்தை கட்சி அல்லது அமைச்சர்களின் கருணையால் வென்றெடுக்க முடியாது என்றனர்  . ஒவ்வொன்றிலும் அவரவர்களுகான தனித்த நோக்கம் இருக்கிறது . இங்கு பொதுப் பிரச்சனை என ஒன்றில்லை என்கிற நிதர்சனம் அதிர வைத்தது . உண்மை தோலுரிந்து வெளிவரும் கணம் என ஒன்றுண்டு . எனக்கானது இதுதான் . அரசியலை கடந்து காவல்துறை தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தால் வழக்கு பதியாமல் அவர்களை காவல் நிலையத்தில் அந்த இரவு வைத்திருக்கம் துணிவைத் தந்தது . இயக்கத்தினுள் இருந்த பிளவு , இளைஞர் காங்கிரஸின் கையறு நிலை அதை பயன்படுத்தும் உள்ளூர் கட்சி முக்கியஸ்தர்கள் என பல முகங்கள் வந்து சென்றது . அன்றிரவு வென்றாதாக நினைப்பது போல மடமை பிறிதில்லை . காவல் நிலையத்தில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் , வெளியே திரண்டிருந்த எதிர்நோக்காத கூட்டம் , வழக்கு பதியாமையால் உடன் அழைத்துச் சென்றிருந்து வழக்கறிஞர் முன்வைத்த கேள்விகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களை கொடுக்க முடியாமை போன்றவை அவர்களின் கைகளை கட்டியிருந்தது . நிலமை கைமீறி செல்வதை காவல்நிலை பொறுப்பாளர்கள் தங்கள் மேலிடத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்த , பிடித்து வைத்திருந்தவர்களை வெளியிட நேர்ந்தது . ஆனால் அது முடிவல்ல நாளை இரவு அழுத்தத்துடன் அவர்கள் இன்னும் மூர்கமாக அதையே மீளவும் செய்யக்கூடும் . அந்த உண்மை அப்போது உரைக்கவில்லை . அரசியலில் அனுபவமுள்ள வயதான அந்த காலனி பெரியவர் ஒருவர் அதை உணர்த்தும் வரை. “அவர்கள் அங்குதான் இருக்க போகிறார்கள் இன்றில்லை என்றால் என்ன ? நாளை பார்த்துக் கொள்ளலாம் என புன்சிரிப்புடன் நினைத்துக் கொண்டிருப்பார்கள்என்றார் , அந்த எண்ணம் நினைவில் எழும்போதெல்லாம் உளச்சலை கொடுத்து .


செவ்வாய், 5 ஜனவரி, 2021

அடையாளமாதல் * ஆர்வம் *


ஶ்ரீ:


பதிவு : 556  / 746 / தேதி 05 ஜனவரி  2021


* ஆர்வம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 34.








தலைவர் சண்முகம் அறிமுகப்படுத்திய பிரெஞ்ச் இந்திய விடுதலை போராட்டத்தின் பிறதொரு அழுத்தமான கோணத்தை பார்க்க முடிகிறது அது சொல்லும் உள் தகவல்கள் ஆர்வமளிப்பவை . அதன் விசைகளே சண்முகத்தை அரசியல் ரீதியில் வழி நடத்தியவை. குபேரையும் பிற நிலவுடைமை சமூகத்திற்கும் எதிரானவராக தன்னை நிலைநிறுத்துவதின் ஊடாக தனது அரசியல் களத்தையும் தனக்கான இடத்தையும் அவர் கண்டடைந்தார். அங்கிருந்து அவர் காமராஜருக்கும் அவர் வழியாக நேரு இந்திரகாந்தி குடும்பத்திற்கும் அனுக்கமானார் . அது புதுவை அரசியலை அவருக்கு திறந்து கொடுத்தது . தனிப்பட்ட உரையாடலில் அவர் முன் வைத்த இரண்டு கேள்விகளின் பதிலை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் புதுவை விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பலரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன் . அந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருந்தது . ஆனால் அவர்கள் அந்தக் கேள்விகளுக்கு தங்கள் தங்கள் கோணத்தை  முன் வைத்திருந்தனர். அவை எனக்கான அரசியலின் கற்றலை உருவக்கிக் கொடுத்தன அவர்களில் பலர் மிக எளிய மனிதர்கள் எந்த மனச் சாய்வும் இல்லாத நடைமுறைவாதிகள் . அவர்களைத் தேடி தேடி சந்தித்துக் கொண்டே இருப்பதை ஒரு அரசியல் நடைமுறையாக உருவாக்கி கொண்டேன் . கடந்தகாலத்தைப் பற்றி பேச விழையும் மனிதர்களாக அவர்கள் இருந்தனர். புதுவை விடுதலை இயக்கம் பற்றிய பல புரிதல்களை எனக்கு அளித்தனர் . அவை முரண்பாடுகளின் வழியாக அடைந்த மாற்றம் . சுதந்திரப் போராட்டம் அதை நோக்கிய அனுகுமுறையில் ,செயல்பாட்டில் ஒருவருடன் ஒருவர் முரண்படவில்லை . ஒருவரின் செயல்பாட்டை எதிர்த்தே பிறிதொருவரின் செயல்பாடு இருந்தது என்பதுதான் உச்ச கட்ட முரண் . சுதந்திரத்திற்கான வெளியில் அதில் ஈடுபட்ட பெரும்பாலனோர் ஒருவரை ஒருவர் தொடர்ந்து தாக்கியும் மறுத்தும் செயல்பட்டதால் இது சுதந்திர போராட்டம் அல்ல என்கிறார் . அப்படி ஒன்று எங்கு நிகழ்ந்தது என்கிற கேள்வியை சண்முகம் முன்வைத்த போது அதன் பின்னால் உள்ள வருத்தத்தை ,வன்மத்தை புரிந்து கொள்ள முடிகிறது . அவர் மரணிக்கும் காலம்வரை பிரெஞ்ச் இந்திய விடுதலை என ஒன்றை யாராலும் முன்வைக்க முடியவில்லை . அவர் மறைந்த பிறகே அந்த மாற்றம் நிகழ முடிந்தது .


******


1989 களில் பாலனை இரவு தினமும் அவரது வீட்டில் சந்திப்பது மிகுந்த உற்சாகத்தை தருவதாக இருந்தது . இருட்டும் தனிமையுணர்வுமான இரவு நேர சந்திப்பு மிகுந்த அகவயமாக அனுக்கத்தை உணரச் செய்தது , அவருக்கு மிக நெருக்கமான சிலர் மட்டுமே எப்பவும் அங்கிருந்தனர். அது அவரது உள்வட்டம். அதெல்லாம் அன்று அறிந்து கொள்ளாமல் மிகையான ஆர்வ செலுத்துதலால் அதில் இணைந்து கொண்டேன் அங்கு பாலன் அல்ல பாலனின் மைத்துனர் சுப்புராயன் தான் மையப்புள்ளி . அவரின் தங்கையை பாலன் திருமணம் செய்திருந்தார் . சுப்புராயன் அவரதுகறார்அரசியாலாலும்கடும் சொல்பேச்சுனாலும் அறியப்படுபவர் . பாலன் மீது அவருக்கு பெரிய செல்வாக்கு இருந்தது , அதனால் அவருக்கு எதிர் சொல் வைக்க அனைவரும் தயங்கினர் . பெரும்பாலும் முடிவெடுக்கும் இடத்தில் அவர்தான் இருந்தார் , தனது கருத்தை சந்தர்ப்பங்களை பொறுத்து வெளிப்படையாக அல்லது மறைமுகமாக செலுத்த அவர் தயங்கியதில்லை . ஆலை வேலுயை விட்ட பின்னர் பாலனுக்கு பிறதொரு பொருளியல் வரவு நிலை இல்லை . வீட்டு நிர்வாகத்தை மனைவி மலர் எடுத்துக் கொள்ள அவரது  முழு ஆதரவினால் அரசியலில் தயக்கமில்லாமல் ஈடுபட அவரால் முடிந்தது . தன் தங்கையின் மீது சுப்புரானுக்கு இருந்த அதீத செல்வாக்கே பாலன் சுப்புராயனை அஞ்சும் நிலை உருவாகி இருந்தது . தனது குடும்ப சமநிலையை அவரால் பாதிக்க முடியும் என பாலன் புரிந்திருந்தார் .மேலும் அவரை பொருளியல் ரீதியாகவும் சார்ந்திருந்து இருக்க வேண்டும். அரசியலை முழு நேரமாக எடுத்திருந்த அவருக்கு குடும்ப நிர்வாகம் முதல் எல்லாமே சவாலாக இருந்தது . சுப்பிராயன் பாலன் மீது செலுத்திய ஆதிக்கம் பிற மூத்த நிர்வாகிகளின் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி ஒரு புள்ளியில் பாலன் மீதும் மனவிலகளை ஏற்படுத்தி இருந்தது . அதனால் நிர்வாகிகளில் தாமோதரனைத் தவிர பிறர் அந்த இரவு நேர கூடுகையில் கலந்து கொள்வதில்லை. தாமோதரனை வாரத்தில் ஒரு முறையாவது அங்கு சந்தித்திருக்கிறேன். பாலனிடம் எனக்கான இடம் உருவாகி விட்டதை தாமோதரன் முதலில் அறிந்திருக்க அறிந்திருக்க வேண்டும். அரசியலில் செவிவழி செய்திகளாலும்  ஊகங்களாலும் குறுக்கு நெடுக்காக நெய்யப்பட்டு அவரவர் அபிப்பிராயங்களை உருவாக்கி விடுகிறது , அதன் அடிப்படையால் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் . ஆதரவும் எதிர்ப்பும் அப்படி உருவாகுபவை . அதுவே பல இடங்களில் என்னை முன்நிறுத்தி இருந்தது , அதை விரும்பாததும் அதன் பொருட்டே நிகழ்ந்திருக்க வேண்டும் , பின்னர் அதை நோக்கி நான் இழுக்கப்பட்டேன் .அவை நான் அறியாமல் என்னை சுற்றி மெல்ல உருவாகி வந்தவை . நான் அதை நட்புவட்டம் விரிவடைவதாக பிழை புரிதலில் இருந்தேன். சில காலத்திற்கு பிறகு கட்சி அலுவலகத்தில் சந்திக்கும் பாலனுக்கு அனுக்கமானவர்கள் பலர் என்னை என் வீட்டில் வந்து சந்திப்பது நிகழத் தொடங்கியது .ஒரு முறை வந்து என்னை சந்திப்பவர்கள் பிறதொரு சமயம் வரும்போது புதிதாக சிலரை உடன் அழைத்து வரத் துவங்கினர் . அது என் நட்பு வட்டம் விரிவடைவதல்ல , அது அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நான் எங்கோ தேவைப்படுகிறேன் அது அவர்களின் நுண்ணிய அரசியல் செயல்பாடு .நெடுநாள் கழித்தே அதன் தீவிரத்தை அறிந்து கொண்டேன் .அடிப்படையில் எனக்கான இடம் உருவாகி வருவதற்கு பாலன் என் மீதான கனிவு முக்கியமாக இருந்தது . மேலதிகமாக அதற்கு  சுப்புராயன் காரணமாக இருந்திருக்கலாம் . சுப்புராயன் என்னிடம் மிக மரியாதையாக நடந்து கொண்டார், பாலனை கடந்து எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது .அரசியல் புரிதலின் பொருட்டே வகைப்படுத்தப் படுவது . அது மெல்ல இளைஞர் காங்கிரஸில் என்னை தவிற்க முடியாதவனாக உருவாக்கி இருக்க வேண்டும் .


வெள்ளி, 1 ஜனவரி, 2021

அடையாளமாதல் * கொள்வதும் விளைவதும் *

 



ஶ்ரீ:



பதிவு : 555  / 745 / தேதி 01 ஜனவரி  2021


* கொள்வதும் விளைவதும்




ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 33.






காலம் யாருக்கும் தன்னை மீறும் ஒன்றை எப்போதும் அளித்ததில்லை . மீறுபவர்களுக்கு தன்னுடைய போக்கால் நிதானமாக காத்திருந்து பதில் சொல்லுகிறது . அவை பல கோணங்களைக் கொண்டது . அறிய முயலும் சிலருக்கு அது கால பரிமாணத்தில் புதுப்புது அர்த்தங்களை, கணக்குகளை, உருவாக்கி கொடுத்துக் கொண்டே இருக்கிறது . முடிவிலி போல .தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி அதிரடித் தலைவராக அறியப்பட்டவர் . திரவிட பாணி மற்றும் காங்கிரஸ் கலவையாக இருந்தார். தன்னுடைய நிலைப்பாட்டால் அவர் அத்தனை காலம் தமிழ காங்கிரஸ் கட்சி தலைவராக நீடித்ததே ஒரு சாதனை என்றே நினைக்கிறேன் . காரணம் காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி அரசியலை செய்ய இயலாதவர்கள் . காங்கிரஸ் இந்திய அரசியல் நிலப்பரப்பின் பல கருத்துக்கள் அவற்றின் நிலைப்பாடுகளினாலான முரணியக்கத்தின் வெளிப்பாடுகள். அதை தனி ஒருவர் தன்னைப் பிரநிதிப் படுத்திக் கொள்ள இயலாது . அவர்களால் கண்ணுக்கு எட்டாத விஷயங்களில் தங்களது கூரிய கருத்தை ஒரு போதும் முன்வைக்க முடியாது . அவ்வாறு முன்வைத்தவர்கள் தாங்கள் முன் வைத்த கருத்தினாலாலேயே அடித்துச் செல்லப்பட்டனர். இந்திய சுதந்திர போராட்டத்தை காந்தி அப்படி ஒரு போதும் முன்வைக்கவில்லை . ஒரு கருத்தியலை மையமாகக் கொண்ட போராட்டம் பொது வெளியில் வைக்கப்பட்ட போது அதன் திசை மெல்லத் திரண்டு தன்னைத் தானே வழிநடத்தி கொண்டு , வழியில் பல மாற்றங்கள் செய்ப்பட்டு முன்னகர்ந்திருக்கிறது . அதற்கான வழிகளை காந்தி கண்டடைந்து கொண்டே இருந்தார் .பத்திரிக்கைகள் எப்போதும் தனது தலைப்பிற்கு ஏற்ற ஓரிரு வரி செய்தியாகளையே தலைவர்களிடம் எதிர்பார்க்கின்றன ஆனால் அது இட்டுச் செல்லும் இடம் என்ன என அறிந்தவர்கள் அத்தகைய அரசியலை முன்வைப்பதில்லை . அதிரடி அரசியலையே எப்போதும் பத்திரிக்கைகள் சார்ந்திருப்பது . தமிழக பத்திரிக்கையாளர்கள் திரவிடப்பாணி கருத்தால் கொண்டு செல்லப்படுபவர்கள் . அவர்களுக்கு பரபரப்பான செய்திகளே தேவைப்படுபவை. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சித் தலைமைக்கு கீழ் உள்ள பல மாநிலத் தலைவர்கள்  அவற்றை ஒருபோதும் கொடுக்க முடியாது , என்பதோடு அந்தபாசாங்கைதஒருபோதும் நம்பியவர்கள் இல்லை . சண்முகம் கட்சியின் தலைவராக அவரை மிளிரச் செய்தவை அவர் தன்னை இருத்திக் கொண்டவிதம். மூப்பனார் போன்ற தலைவர்களும் அதில் சறுக்கலை சந்தித்தார்கள் . தேசிய அரசியல் நிலைப்பாடுகள் அதன்கச்சாப் பொருளானதகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அவற்றைப் மையப்படுத்தி அறிந்து கொள்ளும் ஒரு மாநிலத் தலைமை  எப்போதும் தில்லி தலைமையிடத்தை ஒட்டிய கருத்தியலுடன் தான் இருப்பதை பாதுகாப்பது என எப்போதும் நம்புவது .1990 களில் அது வழக்கொழிந்து போனது. இருந்தும் அரசியல் என்பதே தகவமைதலை அடிப்படையாக் கொண்டது என தனது இறுதிக் காலம் வரை உறுதியாக நம்பினார் . செய்தித் தாள்களை ஆவணங்களாக பாவிக்கும் போக்கை மூப்பனார் மற்றும் வாழப்பாடியிடமும் பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் பார்வைக்கு சாதாரன செய்திகளாகத் தென்படுபவைகளுக்கு உள்ளே அவர்களுக்கானதை கண்டெடுப்பது பற்றி சண்முகம் சொன்னதை நினைவுறுகிறேன். அவை மாநில அல்லது தேசிய அளவில் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை கணிக்க இயல்வது . அரசியலின் அத்தனை சாத்தியங்களை கொண்ட அதன் நீள் முரணியகத்தின் மைய விசையில் தனக்கான இடத்தை நொய்மையாக ஆனால் உறுதியாக வைத்துக் கொண்டார். அது சமரசப்புள்ளியா என்றால இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும் . அது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது உணர மட்டுமே முடிவது .


புதுவை சுதந்திரப் போராட்டம் குறித்து தலைவர் தனது அனுபவங்களை அதிலிருந்து உருவான ஆழமான கொள்கைகள் பற்றி தனது தனிப்பட்ட உரையாடலின் போது சொன்னவற்றை முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் . குபேர் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கையை முன்வைக்கும் ஒவ்வொரு முறையும் பழைய சம்பவங்களை சொல்லி அந்த கோரிக்கையை ஏற்காது அவற்றை மறுத்துக் கடந்து செல்வதும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையும் சிரிப்பையையும் வைத்து அவர்கள் எழுந்து செல்வதை பல முறை பார்த்திருக்கிறேன் . அவர்களது கோரிக்கை சண்முகம் உயிரோடு இருந்த காலம் வரை நிகழவேயில்லை . நான் அறிந்து இந்த கோரிக்கை 1996 களில் மிக தீவிரமாக முன்வைக்கப்பட்டவைகள் . 1996 முதல் அவர் 2013 அவர் மரணமடையும் வரை சுமார் 17 வருடங்களில் அவரது அரசியல் உச்சகட்ட ஏற்றமும் இறக்கமும் கண்டவை 2006 களில் அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகும் இந்த கோரிக்கை பல முறை முன்வைக்க்கப் பட்டது. ஆனால் தலைவர் சண்முகமுகத்தின் எதிர் கருத்தியல் குறித்த அச்சம் விலகவேயில்லை என்பதும் அவரை கடந்து செல்ல அரசு தயங்கியதையும் அறிந்து கொள்ள முடிகிறது . அவர் 2013 மரணமடைந்த பிறகு 2014 களில் ரங்கசாமி முதல்வராக வந்த போதுதான் அந்த கோரிக்கை நிறைவேறியது . ஒருவேளை தலைவர் சண்முகம் உயிரோடு இருந்திருந்தால் அது நிகழாது போயிருக்கும் என்பதிலிருந்து அது அவரது பிடிவாதம் என்பதை விட அவர் முன்வைத்த கேள்விகளுக்கு யாராலும் இறுதிவரை பதில் அளிக்க இயலவில்லை என்பதே பிரெஞ்ச் இந்திய விடுதலை போராட்டத்தை பிறதொரு அழுத்தமான கோணத்தை பார்க்க முடிகிறது  .

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 96 அழைப்பிதழ்