வெண்முரசு கூடுகை. 83 . வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல் “வெய்யோன்” பகுதி 6 பேசு பொருள் “விழிநீரனல்” என் உரையாடலின் எழுத்து வடிவம்.
எளியோரின் கண்ணீரால் உருவாகும் வஞ்சம் என்கிற சாமான்ய இதற்கு அர்த்தம் பொருந்தாது என நினைக்கிறேன்.மகாபாரத விடுபடல் மற்றும் உள்ளடுக்குகளை Sub text வழியாக முன்வைக்கவே வெண்முரசு எப்போதும் முயல்கிறது. இந்தப் பகுதி முழுவதும் கர்ணனின் உளவியல் பற்றியது. மிக நுட்பமாக Sub text வழியாக சொல்லிச் செல்கிறது.
Sub text என நான் புரிந்து கொள்வது சிக்கலான அரசியல் ரீதியில் கர்ணனின் இடம் , நட்பென வரும் போது மட்டுமே அது விரிகிறது. துரியனுக்கு முத்தவனாக தார்தராஷ்டன் வரை உள்ள அவனுக்கான அங்கீகாரம். சகுனி கர்ணனுக்கு தரும் இடம். அனைத்திற்கும் வெளியே கர்ணன் தன்னை வைத்துள்ள இடம். அத்தனை இடத்திலும் ஊடுபாவாக சொல்லப்படாத ஒரு சொல் கர்ணனை செலுத்துகிறது அல்லது தடுக்கிறது . அது என்ன என்று கேட்டுக் கொண்டால் விலகும் திரை
நாக அன்னை அவனது மறைந்துபோன உண்மை மற்றும் வஞ்சக நிழல்களை வெளிக்கொண்டு வருகிறார்.விழி அதை மறக்கும் கண்ணீர் அதனால் அனையாத அனல். மனம் இயங்கு முறை அதன் விசை மனித எல்லையை கடந்தது. அதை சார்ந்த நுட்பமான உளவியல் பற்றியது இந்தப் பகுதி.தாயால் கைவிடப்பட்டவன் என்கிற ஒன்றை கடந்து தன்னை தொகுத்து கொள்ள இயலாமை என்கிற மிக எளிய உளச்சிக்கலில் கர்ணன் இருகின்றான என கேட்டுக் கொண்டால் அதற்கு ஆம் இல்லை என இரண்டும் பொருந்தி வரும் . மகாபாரதத்தில் தாயாலும் தந்தையாலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் வரிசை மிகப் பெரியது. அவர்கள் அனைவரும் முக்கிய ஆளுமைகள் .வியாசர் , துரோனர் ,அம்பை சத்தியவதி ,மானசாதேவி பராசரர் யயாதியின் மகன்கள் (புரு தவிர) கண்ணனே கூட ஒருவகையில் கைவிடப்பட்டவனே .ஆனால் அவர்கள் யாரும் நிலையழியாமல் வென்று முன் செல்கிறார்கள் செல்கின்றனர்.
கர்ணனின் வன்மம் அல்லது உளவஞ்சம் அது என்பதால் அதை சார்ந்து அலைக்கழிப்பு என்பது என்ன? அதிலிருந்து வெளி வர அவன் முயல்வது அவனது ஆழ்மனதிற்கு எதிரானது. ஒரு வகையில் மூர்க்கமானதும் கூட. காரணம் கர்ணன் எப்போதும் பிறரின் ஆட்டக் காய்,தன்னளவில் முழு திறன் இருந்தாலும் அது சமயத்தில் உபயோகமற்றுப் போகும் என்கிற தீயூழ் பெரும் பலவீனம்.அவனது குரு கர்ணனின் குலத்தை கேட்டு வலியுறுத்துவது கூட இந்த உளச் சிக்கலில் இருந்து அவனை மீட்டு வெளிக் கொண்டு வர ஆனால் அவன் வர மறுக்கிறான் . குருவின் சாபம் பெருவது இங்கு . உலகில் ஒருவர் கடக்க இயலாதது மனம் மற்றும் அதன் இயங்கு விசைக்கு ஆதாரமான விதை. சில வகை விதைகள் முளைப்பதை தாமதப்படுத்தி தனது கருக்கொண்ட மாபெரும் விருட்சத்திற்கு ஏற்ப வேர்களை ஆழத்தில் செலுத்துகிறது. அது போல் கர்ணனின் வஞ்சம் அவனிறியாத ஆழம் கொண்டது. “ரீங்காரமென்பது சொல்லென ஆகாத ஒலி”என்பது கர்ணனின் ஆழுள்ளத்தில் இருக்கும் அவனறியாத அல்லது அறிந்து கொள்ள விரும்பாத வெளிவர வாய்ப்பிருந்தும் ஏற்க மறுத்த வஞ்சம்.
முதல் பகுதியில் துரியன் அன்றில் வாழும் மிக எளிய, விரிந்து உள்ளம் கொண்டவனாக தன்னை முன்னிறுத்தும் இடம். உணர்வு பெருக்கின் அடிப்படையில் செயல்படுபவன். இந்தப் பகுதியில் வாரி கொடுப்பவனாக தன்னை முன்னிறித்தி அடைய நினைக்கும் பெருமை எளிய மனதை ஆனால் அதை தீவிரமாக செய்பவனாக காட்டப்படுகிறான். இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நவீன யுகம் நோக்கி நகரும் கட்டுமானத்தை பார்த்து திகைப்படைகிறான். பரிசு பொருள்களின் நிரை அவனை சீண்டுகிறது. அவனின் மன வரிவு உடையும் போது அவமானகரமாக தோன்றி அதன் மறு எல்லையான சீற்றம் காழ்ப்பு போன்ற உணர்வுநிலையை அடைகிறான்.
தன்நிலை மறந்து, துரியோதனன் கொண்டு செல்லும் பரிசு் பொருட்கள் மற்றும் தேவயாணியின் கிரீடம் போன்றவை கர்ணனின் மனதில் இனம் புரியாத கசப்பை உருவாக்குகிறது. தேவையாணியின் கிரீடத்தை கர்ணன் அவையில் எழுந்து அறிவித்து அளிக்க வேண்டும் என துரியன் சொல்லும் போது சீண்டப்படுகிறான் . வழக்கம்போல் தான் சொல்ல நினைத்ததை சொல்லாமல் விடுகிறான். எதன் பொருட்டு என வகுத்துக் கொள்ள இயலாமல் அடையும் நிலையழிதலை இரண்டாம் பகுதியில் காட்டப்படுகிறது. ஒளிரும் கவசத்திற்கு பின்னால் கல்லென கணத்து கிடக்கிறது அவனது மனம்.
நாக அன்னை கர்ணனுக்கு புரிய வைக்க முயலும் இடம் அதை அவனது வஞ்சனையாக எடுத்து வைக்கப் படுகிறது . நாக அன்னை தன் வஞ்சனையை புறந்தள்ளி அவனை தங்களில் ஒருவனாக கருதி அவனுக்கு உகந்த ஒன்றை சொல்ல விழையும் போதும் வெறும் விழிமயக்கு என அதை கர்ணன் நிராகரிப்பது அவனது ஆழுள்ளம் அவனை மீறிய வஞ்சத்தை வெளிப்படுத்துகிறது. அவனுள் கிடக்கும் அந்த விதையின் பிரமாண்டத்தை அவன் அறியவில்லை.
“நீ அறிந்தாய். நீ எதை அறிந்தாயோ அது உண்மை.
அதை மறைத்தது தான் வஞ்சம்”
- இங்கு வஞ்சம் என்பது செயலல்ல, உண்மை அறிந்த பின் அதை மறைக்கும் உளச்சதியென கர்ணனுக்கு புரிய வைக்கிறாள்.
அதுவரை அவன் கொண்ட அலைக்கழிப்புகள் அனைத்தும் அர்த்தமற்றவையாக இங்கு உருவெடுக்கிறது. கர்ணன் ஒரு போர் தெய்வம் மட்டமே அங்கு ஒருமை படும் மனம் பிற அனைத்து சூழலிலும் பிளவுபட்டே நிற்கிறது. அவன் நாகர்களை அனுகுவது பாண்டவர்களுக்கு எதிராக கிடைக்கும் என ஊகிக்கும் சந்தர்ப்பம். அது நிகழாத போது மீண்டும் பிறிதொரு வாய்ப்பிற்கு ஜராசந்தனை நோக்கி நகர்கிறான். மானுட மனதை கொக்கை குறியீடாக கொண்டு அதன் நீந்துதலை துயரத்தை கர்ணனை நோக்கியதாக கூறப்பட்டிருப்பது கவித்துவமானது. பறத்தல் அதன் விடுதலை.இந்த பகுதியின் இறுதியில் மானுடர் உலகிற்கு வெளியே அவர்களை பொருட்படுத்தாத நாகர் உலகம் தங்களுக்கான உலகில் தங்களின் நாக வேதம் புராணம் தொன்மம் என நிறைந்தும் அங்கிருந்தே தங்களது எதிரிகளையும் கண்டடைகிறார்கள். உலகின் விரிந்த புலத்தில் வாழும் உலகில் மனிதன் ஒரு சிறு கூறு மட்டுமே என எடுத்துவைக்ப்படுகிறது.
கர்ணனின் மனநிலையை புரிந்து கொள்ள இரண்டு எல்லைகள் காவிய லட்சணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
1.அர்ஜூனன்/ கர்ணன் இருவரின் ஒப்புமை
2. ஆண் / பெண் தன்மை ஏறப்பட்டவர்களாக வைக்கப்பட்டிருப்பது.
காவியத்தில் இரண்டு நிகர்நிலை பாத்திரம் இடம் கொடுக்காது. அவற்றின் பேதங்கள் மற்றும் போதாமைகள் பற்றி சொல்லியாக வேண்டும் என்பதும் அதன் காவிய லட்சணங்களில் ஒன்றாக இருக்கலாம். இருவருக்கும் பொது அம்சம் தாயை குறித்து ஏங்குபவர்களாக இருவரும் முன் வைக்கப் படுகிறார்கள். வித்தியாசம் அதை கடந்து சென்று வெல்பவனுக்கும், உழல்பவனுக்குமான வேறுபாடுகள் கொண்டதாக உருவாகி வருகிறது. இவர்களை ஆண் மற்றும் பெண் தன்மை ஏறிடப்பட்டு மேலதிகமாக ஒளிர்பவர்களாக எடுக்கலாம் என நினைக்கிறேன்.
இந்த இடத்தில் தம்ஸன் பிறதொரு கோணத்ததில் பூடகமாக அவனுடன் எப்போதும் அவனுக்கு எதிர் வலியாக காட்டப்படுகிறான்.கர்ணனின் உடல் வழியாக நுண்சொல் பெற்றும் அவனது குருதியின் பசையால் இறகு ஒட்டி விண்னேகும் வாய்ப்பை இழந்தவனாக சொல்கிறான் -ரத்தம் ஒரு தடை. - குறியீடு- ஞானம் மற்றும் தீர்மானம் பற்றியது தாய் பற்றிய நினைவுகளை கிளர்வதற்கு தம்ஸனின் வருகையும் ஒரு குறியீடு. ஒரு வகை புனர் ஜென்ம நினைவுகளின் மீட்டல்.
உடல் எனும் பிரபஞ்ச வெளிக்குள் தம்ஸன் நுழையும் தருணம் கவித்துவமானது். அங்கிருந்து பெண்கள் பற்றிய நினைவுகளை கிளர்ந்தெழச் செயகிறான். உடல் பஞ்ச பூதங்களில் மண்னை குறிப்பது. மனம் சந்திரனை தொட்டு பெண்னின் வடிவமாக பார்க்கப்படுவதால் கர்ணன் பிறவி தோரும் சந்தித்த அத்தனை பெண் வடிவங்களை அவன் நினைவு கூர்கிறான்.
நிறைவாக
குந்தியின் நேரடி அழைப்பு கர்ணனை பல வித எண்ணங்களை உருவாக்குகிறது. தம்ஸன் கனவு வருகை கர்ணனின் பிறப்பு மற்றும் அதுபற்றிய அவனது எதிர்மறை எண்ணங்களை பற்றிய குறியீட்டை அவனுக்கு கொடுக்க முயல்கிறது
- தாய் என்பவள் எல்லையற்றவள் அவளை இயக்கும் தெய்வங்கள் மட்டுமே அவள் செயல்களை அறிவது . அதை வகுப்பது மாநுட எல்லைக்கானது அல்ல என்பது தம்ஸன் சொல்லும் செய்தி
- “கியாதி, புலோமை,ரேணுகை, அம்பை, பிருதை, திரௌபதி…என பிறந்திறந்து ஆடி முடித்து அவள் சென்ற அடிச்சுவடுகள் எஞ்சும் வெறும் வெளி ஒன்றுள்ளது” …“நதி” எனும் கருவி வழியாகக் கூறும் கவியுரு.
சட்டென தோன்றும் விஷ்ணுவின் அங்க வர்ணனைகள் பாஞ்சாலிக்கும் பொருந்து படி ஏறக்குறைய கர்ணனுக்கு கிடைத்த விஸ்வரூப தர்சணம்.
“தர்மம்” என்பது வெளியில் தரிசிக்க வேண்டிய ஓர் உண்மை அல்ல,அது ஒருபோதும் புற வெளியில் நிகழாது என்பதால் அவன் அகத்தில் நிகழ்கிறது. ஆனால் கர்ணனை உலகியலில் மட்டுமின்றி ஆன்மீக குருடனாகவும் காட்டப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக