https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 27 ஜூன், 2021

அடையாளமாதல் * விளையாடால் *

  


ஶ்ரீ:



பதிவு : 579  / 769 / தேதி 27 ஜூன்  2021


* விளையாடால்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 57.





அரசியல் உச்ச நகர்வு நிகழ்வது அதன் இறுதி கணம்வரை உறுதியானவையல்ல . பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் உருவாகும் ஊகம் அவரவர் நம்பிக்கையாக மாற்றமடைந்து பிறரின் கருத்தியலுடன் முரணியக்கங் கொள்ளத்துவங்கிய பிறகு  மெல்ல தன் களத்தை அடைகிறது. அரசியல் முதலில் அவர்களின் ஆழ்மனங்களில் நிகழ்ந்து பின் அனைவரையும் இணைத்து ஒற்றை மனப்பரப்பாகி யாரும் எண்ணியிராத ஒன்று அதன் உச்ச கணத்தில் உயிர்கொள்கிறது . அது குமுகத்தின் உறுப்புகள் எளிய மானுடர்களைக் கொண்ட சமூகத்தின் ஆழ்மனம் அன்றாடத்தில் உழலும் அவர்களின் ஊகிக்கமுடியாத கோணத்தை முன்வைப்பதாக இருந்தும் அதன் உறுப்பான அவர்களை அது பரவசம் கொள்ள செய்கிறது ஏற்புடையது, ஏற்க இயலாதது என இரட்டை உணர்வுகளில் இருந்து அதன் மேல் புதுப்புதுக் கணக்குகள் சென்று அமர்ந்து கொண்டே இருப்பதை  திகைப்புடன் பார்த்திருக்கிறேன். அனைவரிடமும் தொடர்ந்து சலிப்பில்லாமல் உரையாடும் சண்முகம் அவர்கள் முன்வைக்கும் மிகை கணக்குகளில் இருந்து தனது பாதையை கண்டடைபவராக இருந்திருக்க வேண்டும் . இல்லையென்றால் சாமான்யனுடனான கணக்கில்லாத  உரையாடல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதோடு வீண் நேர விரையம் . உரையாடலை எந்த சூழலிலும் தக்கவைத்துக் கொள்ளும் சண்முகம் கசப்படையாத சிந்தனையை தனது அரசியல் வழிகாட்டியாக கொண்ட காந்தி மற்றும் காமராஜர் போன்றவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் . முதன்மை இடத்தில் உள்ள தலைவர்கள் தங்களின் கணக்கு ஊகம் போன்றவற்றின் நிகழ்சாத்தியத்தை அந்த உரையாடலில் இருந்து அடைகிறார்கள் பின் அவர்கள் அதிலிருந்து தங்களுக்கானதை மிக தெளிவாக வரையறை செய்து வைத்துக் கொள்கிறார்கள் . அதுவரை அனைத்து அரசியல் ஊகமும் நம்பிக்கையும் அனைத்தும் தகவல்களினாலான குப்பைக் குவியல்கள் மட்டுமே. அரசியலில் முடிவுகள் அதிலிருந்து எட்டப்பட்டு செயல்படுத்தப்படுவதில்லை , அவை யாரும் எதிர்பாராமல் முடிவுறுபவைகள் , பின்னர் இறுதியில்ஏக மனதானதீர்மானங்களாவதுண்டு . 1991 புதுவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்தல் கிட்டதட்ட அப்படி நடந்ததுதான்.


கண்ணன் முன்மொழியப்பட்டு ஏறக்குறைய முதல்வர் தேர்வு நிகழ்ந்து முடியும் தருவாயில் மண்ணாடிப்பட்ட ராஜாராம் ரெட்டியார் எழுந்து தானும் முதல்வர் பந்தயத்தில் இருப்பதாக சொன்னபோது அங்கு கூடியிருந்த அனைவரும் ஒரு சொல்லில்லாது திகைத்தார்கள், அவர்களுள் சண்முகம் அணியினரும் இருந்தனர். அது போல ஒன்று நிகழும் என அனைவருக்கும் தெரியும் சண்முகத்தின் தரப்பிலிருந்து கூட அதை ஒரு நாடகீயத் தருணமாக  ஊகித்திருந்தனர்,அந்த இறுதிக் கணம் எழுந்தது வந்த போது அதை துவக்கி வைத்தவரையும் அவர் முன்வைத்த விதமும் அதிலுள்ள அதீத ஒழுங்கைத்தான் அங்கு  யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண்ணன் ஏற்கத்தக்கவரல்ல என பல கோணத்தில் மறுத்து எழுபவார்கள் என  எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு மத்தியில் சண்முகத்தின் அணியினரும் திகைத்து அமர்ந்திருந்ததை கண்டபிறகே கண்ணன் உட்பட அனைவரும் அந்த ஆடலின் நுட்பம் புரிந்து அதிர்ந்தனர்.மண்ணாடிப்பட்டு ராஜாராம் ரெட்டியார் அதிகம் பேசாத அமைதியானவராக அறியப்பட்டவர் முதன்முறையாக சட்டமன்றம் செல்பவர்நிகழ்வில் துவக்கத்தில் இருந்து தான் போட்டியில் இருப்பதாக வைத்தியலிங்கம் சொல்லவில்லை . கண்ணன் விலக்கப்படும் போது அந்தக் கணி நழுவி தானாக தன் கைகளில் விழும் என அவர் நினைத்திருக்கலாம். அதுவரை மரைக்காயர் ஊகித்திருந்தது வைத்திலிங்கமும் உணர்ந்திருக்க வேண்டும் . ஆனால் நடக்காது என்கிற ஏமாற்றம் அவருக்கு இருந்திருக்க வேண்டும் . ராஜாராம் ரெட்டியார் வைத்தியலிங்கத்தின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்தால் சண்முகம் வைத்திலிங்கத்தை ஏற்கவில்லை என அறிவித்துவிட்டார். என்பது அங்கிருந்த அதிர்வை கூட்டியது . புதுவையில் ரெட்டியார் சமூகம் பொருளியல் ரீதியில் பலம் பெற்று பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை முடிவுசெய்பவர்கள் . அவர்களில் ஒருவரை சண்முகம் முன்வைத்தது சிறந்த அரசியல் சூழ்தல். முதல்வர் பதவிக்கு தகுதி அல்லது முன்னனுபவம் என்பது அவசியமில்லாததாக  அது வழிகாட்டுபவரை முன்வைப்பது நிகழ்வது என்கிற செய்தி உரக்க வைத்தியலிங்கத்திற்கும் சொல்லப்பட்டது. அதுவரை 1985 காங்கிரஸ் ஆட்சியில் கண்ணன் , வைத்தியலிங்கம் இருவரும் அமைச்சராக இருந்தனர் என்பதால் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே முதல்வர் வேட்பாளராக போட்டியிட முடியும் என்கிற தகுதி ரத்து செய்யப்பட்டு வைத்திலிங்கத்தை அனைவருக்கும் மத்தியில் கொண்டுவைத்தார் . கண்ணனை மறுப்பதானல் வைத்திலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் தனக்கில்லை என்பதுடன் அவருக்கு தனது ஆதரவில்லை என சண்முகம் அறிவித்தது கூடி இருந்த அனைவரையும் குழுப்பத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது . அது எளிய அரசியல் ஆடலை முன்வைக்கவில்லை. சண்முகம் தேர்தலில் தோற்ற பிறகு அவரில்லாத அரசு அமைய இருக்கிற சூழலில் அதுவரையிலும் அணியாக இருந்தவர்களை சிதறடித்ததிருந்தது முதல்வராக சண்முகம் இல்லாத நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாடுகளை தாங்களே எடுக்க முடிவு செய்திருந்தார்கள் என்கிற உளவுச் செய்தியால் யார் எந்தப்பக்கம் இருக்கிறார்கள்  என முதன்மை தலைவர்கள் சண்முகம் , மரைக்காயர் இருவரும் அந்த அறுதிக் கணக்கை அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்திருந்தார்கள் . சட்டமன்ற உறுப்பினர்களில் தங்கள் தனிப்பட்ட ஆதரவாக முதல்வரை அனுகுவார்கள் என்கிற நிலையை உருவானால் அவர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பையும் அதற்குறிய பேரத்தையும் தனித்து நடத்த முயற்சிப்பவராக அறியப்படுவார்கள் . அதுவே நிகழும் என கண்ணனும் கணக்கிட்டிருந்தார் . அந்த நிலையே அவருக்கு சாதகமானதும் . எனவே எதுவும் நிகழும் என சண்முகம் முடிவு செய்திருக்க வேண்டும். வைத்திலிங்கத்தை ஆதரித்தால் மரைக்காயருடன் அனைத்தையும் பங்கிட நேரிடும் என அவர் கணக்கிட்டிருக்க வேண்டும். இந்த நகர்வில் முதலில் அடிப்பட்டது மரைக்காயர் . சண்முகமும் அதைத்தான் மூன்று வகையிலான நகர்வாக  கணக்கிட்டிருக்க வேண்டும்


ராஜாராம் ரெட்டியாரின் அறிவிப்பு எதிர்நோக்காத கோணத்தில் இருந்து வந்ததால் அதிர்ந்து போன கண்ணன் அவரை சமாதானம் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை . அது முதலில் பேரத்திற்கான கதவுகளை திறந்து வைப்பது என அவரால் பிழையாக பார்க்கப்பட்டது . வெகு விரைவில் அப்படி அல்ல என்கிற இடத்தை அடைந்தார் . ஒன்றுக்கு மேற்பட்டவர் எழுந்ததால் மறுமுடிவை எட்டவும் தில்லிக்கு தகவல் சொல்லவும் மற்றும் முண்ணனி தலைவர்களின் கணக்கை அறிந்து கொள்ள அந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது . சிறிது நேரத்திற்கு பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது . எங்கும் பரப்பான சூழல் . கூட்டம் நடந்த இடம் உப்பளம் அரசு விருந்தினர் மாளிகை . மூன்று புறம் தங்கும் அறைகளால் சூழப்பட்ட இரண்டடுக்கு கட்டிடம் மத்தியில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்கு அதிகமான இடம் கார் நிறுத்தத்திற்கு என்றாலும் கார் உரிமையாளர்கள் அங்கு ஒரு போர்காட்சியை எதிர்பார்த்து அஞ்சி அனைத்து வண்டிகளையும் விருந்தினர் மாளிகைக்கு வெளியே சாலையில் நிறுத்தி இருந்தனர். கலவரம் முற்றினால் தப்பி செல்ல அது சிறந்த வழியாக தோன்றியிருக்கலாம் . கார்கள் சாலையை இரு பக்கமும் அடைத்து நிரப்பப்பட்டதால் ரயில்வே நிலைய நீர்தேக்க தொட்டியிருந்து தொடங்கும் சாலை பின்னர் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம் வரையிலும் அடைத்து நிரப்பப் பட்டிருந்தது. அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பிதுங்கிய கூட்டம் சாலை முழுவதுமாக ஆக்ரமித்திருந்து. அங்கிருந்து டீ , சிகிரெட்டுக்கு சிதறிய கூட்டம் உள்ளே வருவதும் போவதுமாக சுற்றியிருந்தவர்களைக் கலக்கிக் கொண்டிருந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...