https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 15 டிசம்பர், 2022

மணிவிழா - 39

 



ஶ்ரீ:


மணிவிழா - 39


15.12.2022





பிறர் முனையாத புதிய முயற்சிகள் எப்போதும் என்னை உந்துகின்றன. நான் என்னை கண்டடைவது அந்த சூழல்களில். பின்னர் அது கற்றல் மற்றும் அடையாளமாக உருவாகிவிடுகிறது. நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் அதுபோல முயன்றிருக்கிறேன். அவை பெரிய வெற்றிகளை எனக்கு கொடுத்திருக்கின்றன. முதலில் அது உருவாக்கி தரும் கௌரவமும் அதை பின் தொடரும் தருணம் கொண்டுவரும் பங்கமும் என்னை சமன்படுத்தி விடுகின்றன என்பதால் எனது வெற்றிகளை விளம்பரப்படுத்த விரும்பியதில்லை . ஒன்றில் வென்றதும் அதிலிருந்து விலகி வேறொரு தளத்திற்கு சென்று சேர்ந்து விடுவேன். அது எப்போதும் நான் திட்டமிட்டு செய்வதில்லை. மிக இயல்பாக அவை அப்படித்தான் நடந்திருக்கின்றன. வெற்றிகளும் தோல்விகளும் அவை தொடர்ந்து உருவாகும் புரிதல்கள் பெரும்பாளும் நான் தனியே உணரும் என் எண்ணங்கள் மட்டுமே . முயற்சிகளின் போது ஏற்படும் எதிர்மறைப் பலன் என்னுள் எவையும் காலத்தில் வருத்தமாக நீடித்திருப்பதில்லை. உருவாகும் அனைத்தும் ஒரு காலத்திற்கு பிறகு இல்லாமலாகின்றன. ஏன் ஒட்டு மொத்த வாழ்வில் கூட அர்த்தமின்மை உணர்ந்திருக்கிறேன் என்பதால் தருக்கிக் கொள்ள ஒன்றுமில்லை. ஒரு முயற்சி அதன் வெற்றி அப்போதைய தேவைஅதற்கு எதிராக நிற்பவர்களை கடந்து அதை அடைய முயற்சிக்கிறேன். அவர்களை வென்று என்னை நிருவிக் கொண்ட பின்னர் அதை விரோதமாக தக்க வைத்துக் கொள்வதில்லை. பிறர் என் மீது காழ்ப்பாக முனைவது குறித்து கவலை கொள்வதில்லை. வாழ்வின் ஒவ்வொரு பெரு முயற்சியின் போதும் நான் மட்டுமேயாக உணர்ந்த ஒன்று


எண்ணங்கள் எனக்கு வார்தைகளாக வெளிவருவதில் உள்ள சிக்கல் காரணமாக திட்டங்களை சொற்காளால் பிறரிடம் அளக்க என்னால் இயலுவதில்லை. என் வரையில் திட்டமென்பது ஒரு துவக்கத்தை நோக்கி நகர்வது. அது முழுமையடைவது களத்தில் நிகழும் முரணியக்கத்தால். அது உருவாக்கும் இடம் பற்றிய அவதானிப்பு இருப்பதால் அங்கு நிகழும் சிறு சிறு மாற்றங்களை உள்வாங்கி அடுத்தடுத் இடங்களை அடைந்தபடி நகர்ந்து கொண்டிருக்கும். ஆழ்மனம் உணரும் ஒன்று களத்தில் எழுந்து வருவதை பல முறை பார்த்ததினால் களம் என்னை கைவிடாது என உறுதியாக இருப்பேன்


ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவக்கம் மிக பிரமாண்டமாக உருவெடுத்திருந்தது. அதுவரை நிகழ்ந்த வைணவ சம்பிரதாய நிகழ்வுகளில் அது புதிய உச்சம். மரபு சாராத ஆன்மீக நிகழ்வுகள் பல நிகழ்ந்திருந்தாலும் மரபான அமைப்பு அதன் மொத்த விழுமியத்தில் இருந்து விலகாமல் கறாரான பார்வையை முன் வைத்த இடமாக அது இருந்தது. அதன் முதல் சிக்கல் மரபான செயல்பாடுகளில் இருந்த யாரையும் நான் தொடர்பு கொள்ளவில்லை அவர்களின் உதவியை கோரிப் பெறவில்லைவிதிவிலக்கு பெருமாள் ராமாநுஜம். அவரிடம் கூடதிறந்த அரங்கம்பற்றிய கருதுகோளை தெரிவிக்கவே அவரை சந்திக்க சென்றேன.  


துவக்க விழாவிற்கு மூன்றில் இருந்து நான்காயிரம் பேர் கலந்து கொள்ளக் கூடும் என அவதானித்திருந்தேன். விளம்பரம் மிக விரிவாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேடை சுமார் ஆயிரத்தி இருநூறு சதுரடியில் நாற்பது அடிக்கு முப்பது அடி மற்றும் உயரம் ஐந்தடி என தூக்கப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மைதான நுழைவியிலில் இருந்து யார் பார்த்தாலுத்  மேடையும் அதன் பின்னணியில் உள்ள ராமாநுஜர் முப்பதடி உயர உருவப் படமும் விழாவின் பிரமாண்டத்தை சொல்லுபவை . நகர் முழுவதும் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. செய்தித்தாள்களில் விளம்பரம் மற்றும அதனுள் அனைவரையும் சென்று சேரும் படி அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன


துவக்க விழாவன்று மாலை வேளுக்குடி ஸ்வாமி புதுவை வருவது உறுதி செய்யப்பட்டு அவரை அழைத்து வரும் வண்டி காலையிலேயே ஶ்ரீராங்கம் சென்றுவிட்டது. மாலை புதுவை வரும் அவரை லாஸ்பேட்டையில் உள்ள செல்வகணபதி அவர்களின் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடாகி இருந்தது. அவரை வரவேற்க விழாக்குழுவின் முக்கியஸ்தர்களுடன் காத்திருந்தேன். மாலை நான்கு மணிக்கு அவர் புதுவை வந்தார். அவரை வரவேற்று அவருக்கு ஒருங்கி இருந்த அறைக்கு அழைத்து சென்றேன் உடன் அனைத்து நிர்வாகிகளும் வந்திருந்தனர்முதல் சிக்கலாக உருவெடுத்தது வீட்டிற்குள் வேளுக்குடி ஸ்வாமியை அங்கு அமர்ந்து கொண்டு ராம நமத்தை ஜெபித்துக் கொண்டிருந்த விழாக் குழுவின் முக்கிய உறுப்பினரான ஆடிட்டர் கணேசன் ஏதோ ஒரு வகையில் சீண்டியிருக்க வேண்டும் . என்னைக் கண்டதும் அவரது முகம் மலர்ந்திருந்தவரின் முகம் மாற்றமடைந்து.பிறர் அணிவித்த சால்வையை ஏற்றவர் நான் அவருக்கு அணிவிக்க முயன்ற போது அதை விலக்கிஎதற்காக இவ்வளவு பிரமாண்டமாக மேடை இடம் என்ன காரணம் என கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்.


சனி, 10 டிசம்பர், 2022

மணிவிழா - 38

 



ஶ்ரீ:


மணிவிழா - 38


10.12.2022



* கற்பனை  *





ராமாநுஜர் ஆயிரமாவது அண்டு விழாக்குழுவை நான் அமைப்பது பற்றிய தருணம் பின்னால் உருவானதுதான் என்றாலும் அதற்குள் நான் வந்தது ஒரு விந்தையான நிகழ்விற்கு பிறகு. வேளுக்குடி ஸ்வாமியின் கிஞ்சித்காரத்தின் புதுவை தன்னார்வளர் தொண்டர் பரகாலன் வேளுக்குடி ஸ்வாமியின் ஶ்ரீரங்க இல்லத்தின் கிரஹப்பிரவேசத்திற்கு சென்றிருந்தார். நிகழ்வு நிறைவாக முடிந்த பிறகு ஓய்வாக அமர்ந்திருந்தவர். தனது பாணி வேடிக்கையாய் பரகாலனிடம்ஏன் என்னை புதுவைக்கு அழைக்க மாட்டேங்கிறீர்என்று கேட்க. நீண்டநாட்கள் அது பற்றி யோசித்திருந்த பரகாலன் புதுவை வைணவர்களின் இடையே நிலவும் பூசலால் அனைத்து ஆன்மீக செயல்பாடுகள் முற்றாக இல்லாமலாகி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்றார். வேளுக்குடி ஸ்வாமி புதுவையில் அவரது தந்தை காலம் முதல் செயல்பாட்டில் இருந்து குடும்பம் சிலவற்றை குறிப்பிட்டு சொல்லி அவர்களுக்கு என்னவாகியது என்றதற்கு, அவர்களில் பலர் மண்மறைந்தனர் என்றார். அவர்குறிப்பிட்ட கேட்டறிந்த சிலரில் என் தந்தையும் ஒருவர். பிறகு அவர்களின் குடும்பம் பற்றி கேட்டபோது என்னைப் பற்றி அவருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் திரும்பவும் வைணவ ஆன்மீக செயல்பாடுகள் புதுவையில் துவங்க வேண்டும் என்றால் நான் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என சொல்லப்பட்டது. அதில் உள்ள சிக்கலைப் பற்றி பல முறை பேசிய போதும் எனது ஆர்வமின்மை் அவருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னை அழைத்துக் கொண்டு திருகண்ணபுரம் வரச் சொல்லியிருக்கிறார்


அந்த நிகழ்விற்கு ஒரு வருடம் முன்பாக அயோத்தி யாத்திரை ஜீயர் ஸ்வமிகளுடன் சென்ற போது ஆயிரமாவது ஆண்டு விழா குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் அனைவரிடமும் இருந்தாலும் அதன் கேட்கும் கடின செயல்பாடுகள் காரணமாக யாரும் அதை முன்னெடுக்க விழையவில்லை. முயன்ற சிலரும் அதை சிறிய அளவில் துவங்கி பின் நடத்திச் செல்வதில் உள்ள சிக்கல் காரணமாக கைவிட்டிருந்தனர். அந்த முயற்சிகள் தோல்வியடையும் வாய்புகளை அதிகம். வென்றிருந்தால் ஆச்சர்யம். காரணம் அதை வழக்கம் போல மரபார்ந்த தளத்தில் துவங்கினர். முன்பே பலவித ஆன்மீக நிகழ்வுகளுக்கு மத்தியில் மேலும் ஒன்றென ஆகியது. நிதி உதவி செய்யும் சிறு குழு மேலும் அழுத்ததற்கு உள்ளானதால் நீர்த்து போனது. அதன் காரணமாகவே நான் அதை வேறு விதமாக வடிவமைக்க முயன்று கொண்டிருந்தேன்


என்னிடம் ஜீயர் ஸ்வாமிகள் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம பற்றறி பேசிய போது அதை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றிய முன்பே அவதானித்திருந்த எனது எண்ணத்தை அவருக்கு சொன்னேன். அகில இந்திய அளவில் அதற்கான முயற்சிகள் துவங்கப்பட வேண்டும் என்கிற கருத்து அவரை திகைக்க வைத்திருக்க வேண்டும். அதை எனது வீன் கற்பனை என நினைத்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.என் திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக அவருக்கு முதலில் தோன்றினாலும் அது பற்றிய மிக விரிவான வரைவு அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனால் அதை வழமையான முறையில் துவங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். முதல் கட்டத்தில் நான் நினைத்த வடிவத்தை அது அடையவில்லை என்பதால் அதற்கான முயற்சியை கைவிட்டாலும் எண்ணத்தை விடவில்லை அதற்கான சூழல் பிறகு உருவாகும் என்கிற நம்பிக்கை இருந்தது . அதுவரை பிறர் முயன்ற எந்த முயற்சிக்கும் நான் உடன்படவில்லை. அதற்கான காரணத்தை அவர்களிடம் விளக்கவில்லை. அதை புரிய வைப்பது எளிதல்ல. அதற்கு அலாதியான கற்பனை அவசியம்


அடையாளமாதல் * சில காலம் ஒளிர்பவை *

 


ஶ்ரீ:



பதிவு : 652  / 842 / தேதி 10 டிசம்பர்  2022



* சில காலம் ஒளிர்பவை  * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 47 .






1999 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி நாராயணசாமிக்கும் எனக்கும் உருவான மோதல் என் அரசியலை முற்றாக திசை திருப்பி முட்டு சந்திற்கு கொண்டு விட்டது . “வில்லங்கம்அதற்கு முதன்மை காரணம். நாராயணசாமிக்கு எதிராக மேலிடத்திற்கு புகார் அளிக்கச் தலைவர் என்னிடம் சொல்லச் சொன்னதாக வில்லங்கம் என்னிடம் கூறிய போதுஅதை தலைவர் நேரடியாக என்னிடம் சொல்ல என்ன தயக்கம் அவருக்குஎன்றேன். அரசியல் இதை போல உருவாகும் இடைவெளிகளை பயன்படுத்தி அதன் திசையை திருப்புவதை அறிந்திருக்கிறேன். வில்லங்கம் அதில் நிபுணர்.


சண்முகம் நாராயணசாமிக்கு எதிராக தனது கருத்தை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறேன். நானே நாராயணசாமி இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பாண்டியனைக் கொண்டு சிதைக்கிறார் என்கிற எனது மன வருத்தத்தை அவரிடம் பகிர்ந்த போது கூட பொருத்திருக்க சொன்னார். நான் நாராயணசாமிக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்பதும் வாய்ப்பு கிடைத்தால் அதை வெளிப்படையாக காண்பிக்கவும் அவரை எதிர்க்கவும் நிற்கவும் எனக்குத் தயக்கமில்லை என்பதையும் அறிவார். நாராயணசாமி சண்முகம் மோதலில் முதலில் பாதிப்படைந்தவன் நான் என்கிற வருத்தம் அதற்கு காரணம். இந்த மக்களவை தேர்தலில் பர்வையாளரிடம் சண்முகம் நாராயணசாமிக்கு எதிராக என்னை புகாரளிக்க சொன்னால் அதை செய்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை ஆனால் அது சண்முகம் நேரடியாக என்னிடம் சொல்லக்கூடியவர். அரசியலில் இந்த இடத்திற்கு வில்லங்கத்தை அவர் ஒரு போதும் பயன்படுத்த மாட்டார். நான் வெளிப்படையாக வில்லங்கத்தை மறுதளித்தது அவரை சீற்றம் கொள்ள செய்தது. மறுநாள் அதை வேறு வகையில் தீர்த்துக் கொண்டார்.


அதை ஊழின் தருணம் என்று சொல்வதைத் தவிற அங்கு வேறு எந்த சொல்லும் அங்கு வந்து உட்காராது. தில்லியில் இருந்து  1998ல் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை தெரிவு செய்யும் பார்வையாளரை சென்னையில் இருந்து புதுவைக்கு அழைத்து வரும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. காரில் வரும் அந்த 3:00 மணி நேரத் தனிமை புதுவை குறித்து அனைத்து உள்விஷயங்களையும் அவருக்கு சொல்லும் வாய்ப்பைத் தருவது. என்ன காரணத்தினாலோ நான் அமைதி இழந்திருந்தேன். இது போல மேலிட பார்வையாளர்கள் பலரை பார்த்தாகி விட்டது. ஒரு மன்றாட்டு போல ஒவ்வொரு முறையும் முன்வைக்கப்பட்டு சரி செய்து விட போவது போலவும் இனி எல்லாம் சுகம் என்கிற பரபரப்பு எனக்குள் முற்றாக அடங்கி பல காலமாகிறது. அடுத்த நாள் அவருடன் புதுவை நோக்கிய பயணம் எனக்குள் எந்த ஆர்வத்தையும் உருவாக்கவில்லை. அரசியல் முடிவுகள் எங்கோ எவராலோ என்ன காரணத்திற்காகவோ எடுக்கப் படுகிறது. அதை புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதன் அதீத உள் விளையாட்டால் நம்பிக்கை இழந்திருந்தேன்


முதல் நாள் இரவு சென்னையில் நான் நாராயணசாமியை சந்தித்துவிட வேண்டும் என்பதில் மாறன் தீவிரமாக இருந்தான். திடீரென நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என சொல்லுகிறன் எனத் தெரியவில்லைஒரு வகையில் அவன் சென்னையில் என்னுடன் தங்கியது இதை சொல்வதற்காக என நினைத்தேன்அதன் பின்னணி என்னவாக இருக்கக் கூடும் என இதுவரை அவதானிக்க முடியவில்லை. இங்குமங்குமாக சில விடுபட்ட தகவல்களை ஒருவாறு அன்று தொகுத்துக் கொண்டேன். சண்முகம் அறியாத நாராயணசாமியுடனான தனது நல்லுறவை அவன் உத்தேசிக்கிறான். அது விபரீதமான ஒன்று என்னாலும் அவன் அரசியல் நீதியாக இழக்க ஒன்றுமில்லை. இதன் விளைவாக சண்முகம் மாறனை புதுவையில் இருந்து வெளியேற்றினால் கூட அவன் அதுவரை பெற்ற லாபங்கள் போதுமானவை என்கிற இடத்திற்கு வந்து சேர நினைத்தான். தன் முன் திறந்து வைத்திருக்கும் அனைத்து அரசியல் கிறுக்குத்தனங்களையும்  சேரவே இயலாத சிலவற்றை பொருத்தி பலன் பெறுவது பற்றிய கற்பனையில் இருந்தான். பெருளியல் உதவி நீதியாக நாராயணசாமியிடம் ஏதாவது பேசியிருக்கலாம். அரசியலுக்கு சம்பந்தமில்லாத சிலர் தங்களுக்கான இடைவெளிகளை உருவாக்கி அதில் புகுந்து தங்களை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்து விடுவார்கள். நாராயணசாமி மறனை உபயோகப் படுத்திக் கொள்ளும் இடத்தில் இல்லை என்றாலும் தானகா வந்து விழும் கருவிகளை அவர் தடை செய்ய நினைக்காத து அரசியலில் புரிந்து கொள்ளக் கூடியது. நாராயணசாமி தான் புதுவையில் இல்லாத சந்தர்பங்களில் இங்கு நிகழ்பவை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வமுள்ளவர். அவரது அரசியல் தகவல்களினால் ஆனது. அதை ஒட்டி தனது கருக்களை அவர் எப்போதும் உருவாக்கிக் கொள்வார். யாருடனும் தனிப்பட்ட நட்ப வளையத்தை அது உருவாக்க விடாது என்பதால் அவர் யாருடனும் தன்னை உணர்வுபூர்வமாக இணைத்துக் கொள்வதில்லை. அதனால் யாருடன் இருந்தும் எந்த தயக்கமும் இன்றி தனது அரசியல் கணக்கின் பொருட்டு துண்டித்துக் கொள்ளவும் கூச்மில்லாமல் யாருடனும் இணைந்து கொள்ளவும் முடிவது அவரது அரசியல் வெற்றியாக அவரால் கருதப்பட்டிருக்க வேண்டும்.


நாராயணசாமியின் போக்கையும் அவரது அரசியல் தந்திரங்களை நான் மாறனுக்கு பல முறை சொல்லியிம் அவன் என்னை பொருட்படுத்தவில்லை. அவனை முட்டாள் என சொல்லமாட்டேன். அவனுடைய கணக்கில் நான் சொன்ன அனைத்தும் பொருளற்றவையாக அவன் நினைத்தான். தனது விளையாட்டில்  அவன் தரப்பு சீட்டாக என்னை அன்று இறக்க தீர்மானித்திருக்க வேண்டும். இரவு உணவிற்கு முன்பு நாராயணசாமியுடன் பேசியதை சொன்னான். தில்லியில் இருந்து நாராயணசாமி சென்னைக்கு வருவதாக சொல்லியிருந்ததையும் விமான நிலையத்தின் பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. அந்த விடுதியில் எங்களுக்கு இரவு உணவும் தங்கும் அறையும் ஏற்பாடாகி இருப்பதாக மாறன் சொல்லியிருந்தான். நான் அங்கு தங்குவதை விரும்பவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் மூத்த நிர்வாகி விநாயகமூர்த்தியை உடுப்பி பவனில் தனியாக வட்டு செல்ல முடியாது. ஏன் அந்த விடுதி என நினைத்துக் கொண்டேன். அன்று இரவு அவர் அந்த விடுதியில் தங்க ஏற்பாடாகி இருக்கலாம். எனக்கும் அவரை சந்திப்பதில்  மனத்தடை இருந்தாலும் சந்திப்புகளை நான் எப்போதும் தவிற்த்ததில்லை. நிரந்தர விமான பயணத்தில் இருக்கும் அவருக்கு கால நேரம் கணக்கில்லாமல் பயணிக்கும் போது

ஒவ்வொரு முறையும் புதுவை செல்ல அங்கு தங்கிச் செல்வது வழக்கம் இருக்கலாம். அந்த விடுதியில் சந்திப்பது பிறரை பலவீனர்களாக்கும் என அறிந்திருக்கலாம். அரசியலில் சட்டென கொண்டு வைக்கப்படும் தேவையற்ற ஆடம்பர சொகுசு மற்றும் கேளிக்கை ஒருரை அடிமையாக்க வல்லது என்கிற எண்ணம் எழுந்த போது அவரை அங்கு சந்திக்க வேண்டாம் என முடிவு செய்நிருந்தேன்


இரண்டு நாட்களுக்கு முன்பு மாறன் நாராயணசாமியிடம் பேசிய போது என்னைக் குறித்தும் பேசியதாக சொன்னான். புதுவை அரசியல் பலவாறு பிரிந்து கிடப்பதை குறித்து அனுடன் பேசியிருக்கிறார் . தலைவருக்கும் அவருக்கும் இடையே உறவு சீர்கெடுக்க சிலர் தீவிரமாக முயற்சித்துக் கவண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். இந்த தகவலை அவன் என்னிடம் சொன்ன பிறகு அவருடன் பேசுவது குறித்து நான் ஆர்வமிழந்தேன். நாராயணசாமி சண்முகத்திடன் மோதல் போக்கை நீண்டகாலத்திற்கு முன்பே துவங்கி இருந்தார்  அவருக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை என்பது சிறிது அரசியல் தெரிந்த யாருக்கும் புரியும் எளிய கணக்கு. மாறனை அவர் திசை திருப்புகிறார் அதற்கு மாறன் இரையாகிறான். அல்லது அவன் அவருக்கு சாதகமாக சிவற்றை நிகழ்த்த விரும்புகிறான். அதில் ஒரு முணை என்னை அவருடன் பேச வைப்பதாக இருக்கலாம். ஆனால் அன்று இரவு மாறன் நாராயணசாமியை தொடர்பு கொண்ட போது அவர் ஹைதராபாத்தில் இருந்தார் முக்கிய கட்சிப்பணி தவிற்க இயலவில்லை நாளை புதுவையில் சந்தித்து பேசிக் கொள்வோம் என்றார். அதற்குள் எனக்கு புதுவையில் இருந்த நாராயணசாமி குறித்து எதிர்மறை செய்திகள் வரத் துவங்கி இருந்தன. அன்று அவரை சந்திக்காமலானது ஊழின் கணக்கு அவை அனைத்தையும் அந்த அடுத்த நாள் மாற்றித் துவக்கி வைத்தது.

புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...