https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * நடிப்பு சுதேசிகள் *

ஶ்ரீ:



பதிவு : 615  / 805 / தேதி 10 ஏப்ரல்  2022



* நடிப்பு சுதேசிகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 13.





அன்று இரவு நடையின் போது பாபுலாலைப் பார்த்தேன். நலம் விசாரிப்புகள் . பல வருடங்கங்களாக கடற்கரை இரவு நடைக்கு சென்று கொண்டிருக்கிறேன் அவனை பார்த்ததில்லை. தற்செயலாக வந்திருக்கலாம். பாபுலால் இளைஞர் காங்கிரஸில் எனக்கு மிக அணுக்கமானவனாக இருந்தவன்இரவுகளில் சந்தித்து உரையாடி கொண்டிருப்பது அன்றைய வழக்கமாக இருந்தது . மிக உற்சாகமான நாட்கள் . அந்த உரையாடல்களுக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து கூடுவார்கள். பல நேரங்கள் இரவு நெடு நேரம்வரை அது நீண்டு விடுவதுண்டு . பாபுலால் எனக்கு அறிமுகமானது ஒரு விசித்திரப் பின்னணியில். வல்சராஜ் தலைவராக வந்த பிறகு அவர் நியமித்த கமிட்டியில் பாபுலால் 20 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தான். BSNL ஊழியர் தாயகராஜனுக்கு நண்பர் . அவர் வழியாக சண்முகத்தை அறிமுகம் செய்து கொண்டான்அவனது பெயரை தாயகராஜன் வல்சராஜிற்கு சிபாரிசு செய்திருக்க வேண்டும் . நான் பாபுலால் பெயரை நிர்வாகிகள் பட்டியலில் பார்த்திருக்கிறேன் நேரில் அறிமுகமில்லை. வல்சராஜுடன் முதல் முறையாக தில்லி சென்றபோது பல புதிய நண்பர்கள் இளைஞர் காங்கிரஸ் சார்பாக அப்போது தில்லி வந்திருந்தார்கள். அவர்களுடன் பாபுலால் வந்ததாக நினைவு. முருகேசன் தலைமையில் வேறொரு அணியும் அப்போது அங்கு வந்திருந்தது . வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவன் இந்தி சரளமாக பேசி பிறருக்கு உதவி ரயிலில் இருந்த அனைவருக்கும் நெருக்கமானான். கூட்டம் நடைபெறும் போதெல்லாம் அவனுக்கும் அழைப்பு அனுப்பப்படும். ஆனால் எதிலும் கலந்து கொண்டதில்லை. சில வருடங்களுக்கு பின் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலை புதிதாக வந்து இணையும் ஆளுமைகளைக் கொண்டு இன்றையமார்கெட் மதிப்பைகணக்கிட்டுக் கொள்ளவோம். உருளையன் பேட்டை தொகுதி  ஹேமா பாண்டுரங்கம் ஒரு வித்தியாசமான ஆளுமை சற்று கூச்ச சுபாவி. வெளிவட்டார தொடர்பை சரியாக நிர்வாகிக்காதவர் அதுவே அவரை பல கட்சிக்கு துரத்திக் கொண்டிருந்தது . திமுக தொடங்கி பின் மதிமுக சென்று அங்கிருந்து தமாக வில் இணைந்தார். உருளையன் பேட்டை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெல்லும் கனவுள்ளவர் . அது அவரை எந்த இடத்திலும் நிறைவுறாது துரத்திக் கொண்டே இருந்தது


உருளையன் பேட்டை தொகுதி நகர் மற்றும் அதை சார்ந்த உடனடி புற நகர் மற்றும் குடிசை பகுதிகளைக் கொண்டது. இளைஞர்கள் பல வித செயல்பாடுகளைக் கொண்ட குழுவாக இருப்பதால் அவர்கள் அரசியலை நோக்கி இழுக்கப்படுகின்றனர். குற்ற பின்னணியுள்ள இளைஞர்கள் அதிகம் என்பதால் அரசியல் பாதுகாப்பு மற்றொரு அம்சம். காங்கிரஸ் போன்ற மிதவாத கட்சியால் அங்கு தாக்குப்பிடிக்க முடியாது. எனவே அது திரவிட இயக்கங்களின் கோட்டை. அங்கிருந்து காங்கிரஸை நோக்கி வந்த முதல் ஆளுமைஹேமா பாண்டுரங்கரம்”. அவர் தமாக வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த போது பெரும் இளைஞர் கூட்டம் கட்சி அலுவலகத்திற்கு வந்தது . சம்பிரதாயமான இணைப்பு நிகழ்விற்கு பிறகு வந்த கூட்டம் வடிந்து ஹேமா பாண்டுரங்கத்திற்கு அணுக்கமான சிலர் மற்றும் தரைதளத்தில் தேங்கி நின்றிருந்தனர். உருளையன் பேட்டையை்சேர்ந்த எனது அணுக்கன் ஆறுமுகம் ஹேமா பாண்டுரங்கத்ததை என்னிடம் அழைத்து வந்தான் அவர் தன்னை அறிமுகம்செய்து கொண்டார். அவர் பெயர் நான் முன்பு அறிந்திருந்தேன் ஆனால் நேரில் பழக்கமில்லை . அவரது பெயரின் அடைமொழி அந்த கவனிப்பை கொடுத்திருக்கலாம். உருளையன்பேட்டை தொகுதியில் இரண்டு பாண்டுரங்கங்கள் இருந்ததால் ஹேமா ஒயின் நடத்திய பாண்டுரங்கம் கடை பெயர் அவருடன் இணைந்து கொண்டது. அவர் தன்னுடன் வந்திருந்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த போது அதில் பாபுலால் ஒருவன். பெயர் ஒற்றுமையாலும் பார்த்த முகமாக இருந்ததாலும் அவனை விசாரிக்க அந்த பாபுலால் தான் என தெரிந்தது . கட்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இருப்பதே அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும் . அவன் பெயர் இன்னும் கமிட்டில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது குறித்து அவனுக்கே வியப்பு. அதன் பின்னர் என்னுடன் இணைந்து செயல்பட்டான்


பாபுலால் உரையாடல்களில் விருப்பமுள்ளவன் தயக்கமில்லாமல் தனது வாதத்தை முன் வைக்க நல்ல வாசிப்பு இருந்திருக்க வேண்டும் அல்லது அவனது நண்பன் தாயகராஜனுடன் நடந்த உரையாடல்களின் வழியாக அவற்றைப் பெற்றிருக்கலாம். தாயகராஜன் BSNL ல் காங்கிரஸ் தொழிற்சங்க வாதி. ஆரம்பத்தில் கம்யூனிஸ இயக்கங்களில் இருந்து பின் முரண்பட்டு வெளியேறினாலும் புரட்சிகர மார்க்கிய சிந்தனைகளுடன் காங்கிரஸிற்குள் அவற்றை முன்வைக்க அது ஏற்படுத்திக் கொடுக்கும் இடத்திற்காக காத்திருப்பவர்கள். காங்கிரஸில் அப்படி ஒன்று இல்லை என்பது அதன் வினோதம். பல முறை அப்படிப்பட்ட கருத்துக்களை தாயகராஜன் சண்முகத்துடன் அவர் ஓய்வாக இருக்கும் போது உரையாடுவதை பார்த்திருக்கிறேன். அது இன்னொருவர் அந்த அறைக்குள் நுழையும் வரை மட்டுமே நீடிக்கக் கூடியது. பின் சண்முகத்தால் அறிவுரை போல ஒன்று சொல்லப்படு முடிவிற்கு வந்துவிடும் . ஒரு வித உடல் குறுகலுடன் அவர் அதை ஏற்று அமைதியடைந்துவிடுவார். அவர் பொறுத்தவரை சண்முகத்துடன் உரையாடிய திருப்தியில் அன்று சந்திக்கும் அனைவரிடமும் சண்முகத்துடன் விவாதித்ததாக சொல்லும் அரசியல் அவருக்கு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

நவீன இளைஞர்களிடையே சாதி, சமூகமேட்டிமைத்தனம் எல்லாமே உண்டு. அவர்களுக்கு நீதியுணர்ச்சி என்பதே இல்லை என்பது அதிர்ச்சியளப்பது . அவர்கள் குடும்பங்களில் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை அவர்களுள் எதையாவது வாசிக்கக்கூடிய ஓரிருவர் கூட இல்லை. ஆகவே வேறு எந்தவகையிலும் அவர்களுக்கு அறமோ நீதியுணர்வோ அறிமுகமாவதே இல்லை. அசலான இடதுசாரிக் கருத்துக்களை வாழ்வியலாகக் கொண்ட ஒருவர் கூட நான் பார்த்தில்லை . ஏழைகள்மேல் ஒரு சின்ன கரிசனமும் குறைந்தபட்சம் ஏளனம் செய்யக்கூடாது என்ற உணர்வு எல்லாம் கடந்த கால நினைவுகள் போல . அதாவது சென்ற இரண்டு தலைமுறைக்காலம் என் தாத்தா , அப்பாவின் காலம் . அது எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல காந்தியில் தொடங்கி நக்சலைட் இயக்கத்தில் முடிந்த ஒரு யுகம். இன்றைய இளைஞர்களிடம் அந்த நுண்ணுணர்வும் இங்கிதமும் துளிகூட கிடையாது. தனக்கு ஒரு சமூகப்பொறுப்பு உண்டு என்ற எண்ணமே எவரிடமும் இல்லை. சொல்லப்போனால் பிறருக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இதன் நடுவே புரட்சிக்காரர்களாக வேஷம் போடுகிறார்கள். அது ஒரு ரோல்பிளேயிங். ஒரு சைக்காலஜிக்கல் ரிலீஃப். முற்போக்காக புரட்சிக்காரனாக கலகக்காரனாக பாவனைசெய்து அரசாங்கத்தையோ சமூகத்தையோ மதத்தையோ கட்சியையோ வசைபாடினால் ஒரு சின்ன நிறைவு. பிறரிடம் இருந்து நான் வேறுபடுகிறேன் என்கிற ஆனவம் சமன் செய்யப்படுகிறது. பாரதியார் சொல்லும் அப்பட்டமான நடிப்பு சுதேசிகள்.


புதன், 6 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * முயற்சிகளின் வெளி *

 


ஶ்ரீ:



பதிவு : 614  / 804 / தேதி 06 ஏப்ரல  2022



* முயற்சிகளின் வெளி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 12.





1996 களில் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி இறந்த காலத்தில் வசித்துக் கொண்டிருந்த போது நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை முழுமையாக உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆட்சியில் இருக்கும் காலத்தில் கட்சியில்  வேகமாய் இயங்குவதை போல மடமை பிறிதில்லை. அந்த நேரத்தில் அதில் புதிதாக உபயோகமிள்ளதாக எதையும் உருவாக்க முடியாது. அதை செய்ய முயற்சிப்பது முழு வேகத்தில் சென்று சுவற்றில் முட்டிக் கொள்வது.பயிற்சி முகாம் என்கிற வாய்ப்பும் அதை நிகழ்த்த முடியாத முற்றுகையும் அந்த சூழலில் ஏற்படுத்தப்பட்டதால் அரசியல் மாற்றமடையும் முன்னர் அந்த முகாமை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய நிர்பந்தமும் தேவையும் எனக்கிருந்தது . அரசியல் என்பது ஒருங்கிணைப்பின் வழியாக உருவாவது அது மையங்கொள்வதை தடுக்கும் எதிர்ப்பு மனச்சோர்வு அடையச் செய்து விடும். ஆனால் இந்த முறை அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தெளிவாக உணர்த்திருந்தேன் . 1996 களில் ஆட்சியல் அமர்ந்த போதே ஜானகிராமன் தலைமையிலான திமுக அரசு பலவீனமானது . அதன் முதல் சிக்கல் அடுத்து என்ன நிகழ்த்துவார் எனக் கணிக்க முடியாத கண்ணன் அவரது அமைச்சரவையில் இருந்தார். இரண்டு. ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்தும் காங்கிரஸ் அதை கோராது எதற்காகவோ காத்திருப்பது போல விலகி நின்று கொண்டது . இவை அரசியலாளர்களுக்கு புரிவது .அது தவிற வேறு சில சந்தர்பங்களில் அரசு மிக பலவீனமானது என சாமான்யனுக்கும் புரிந்தது . ஒன்று ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ஏறக்குறைய வெற்றி பெற்றிருக்க வேண்டியது ,ஒரு சின்ன இழை பிசகியதால் அன்று அது நடக்கவில்லை. இரண்டு நாராயணசாமி போட்டியிட்ட ராஜ்யசபை தேர்தல் முடிவு . ஆளுங்கட்சி 18 காங்கிரஸ் 9 நடுநிலை 3 என்கிற கள சூழலில் . நாராயணசாமி ஒரு வோட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவை அந்த ஆட்சியின் ஆயுள் பற்றிய கணக்குகளை எல்லோருக்கும் கொடுத்திருந்தது . எனக்கு வேறுவிதமான கணக்குகள் இருந்தன. நான் எனது பழைய தொடர்புகள் அறாமல் புது இளம் ஆளுமைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் இடத்தை உருவாக்கி அவர்களுக்கு அளிக்கும் முயற்சியில் இருந்தேன். அவர்கள் அந்த இடத்தில் நிலை பெற்ற பிறகே எனக்கான இடம் தெளிந்து வரும். நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவராகும் வாய்ப்புகள் இருந்தாலும் அது நிகழும் வரை என்னால் காத்திருக்க முடியாது. என்னைத் தவிர பிறர் எல்லாம் சொன்னார்கள் நான் அடுத்த தலைவர் என்று . இருப்பை தெளிவாக உணர்வது ஆழ்மனம் அங்கிருந்து நம்மை அறியாது செயல்கள் கூர் கொள்கின்றன. அங்கிருந்து ஆழ்மனம் அறிவதை உடல் உணரும் போது செயல்வேகம் கூடுகிறது. என்ன காரணம் என தெரியவில்லை என்னால் என்னை அந்த அமைப்பின் தலைவராகும் வாய்ப்பை உடலால் உணரவே முடியவில்லை . அது இல்லை போலும். இறுதியில் அதுவே நிகழ்ந்தது .


எனகுள்ள நேரம் மிக குறைவானவை . புதிய இளம் ஆளுமைகளுக்கு கட்சியை பற்றிய அறிமுகமும் இதுநாள் வரை இழந்ததும் இப்போது பெறப்போவதும் என்ன வென்று தெரியவேண்டும் . அதில் இருக்கும் அரசியல் சாத்தியக்கூறுகள் பற்றியும்  எப்படிப்பட்ட ஆளுமையாக இருந்தாலும் உதிரியாய் இருந்தால் அடைய ஒன்றுமில்லை.அமைப்பாக திரண்டு நின்றால் மட்டுமே அது எவருடனும் உரையாட பரிமாணமடைய முடியும். ஆனால் அது நிகழும் வாய்ப்பு மிக மிக குறைவானது. அது நடக்க அதிகார அடுக்குகளில் உள்ளவர்கள் அனுமதிக்கப் போவதில்லை . அவர்களை நிராகரித்து மட்டுமே அது நிகழ்முடியும் . இப்போதுள்ள வாய்ப்பு சண்முகம் மட்டுமே. அவர் ஆகச் சிறந்த வாய்ப்பல்ல , அவரே விழித்துக் கொண்டால் இது நடக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்ல. யார்யார் கண்களுக்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி எப்படி பெருள்படும் என என்னால் ஊகிக்க முடியாது . அதைவிட மிக சிடுக்கான இடம். என்னால் அடையாளப் படுத்தபடுபவர்களுக்கு தங்களின் எதிர்காலமென்ன என்பது புரியுமா. அரசியல் களத்தில் பிரித்தாளுதல் மிக பழைய யுக்தி அதற்கு பலியானால் எங்கள் யாரையும் எதுவும் காப்பத்தாது .


இப்படி எந்தப் பக்கமும் சாதகமின்றி உள்ள ஒன்றை ஏன் செய்ய வேண்டும் என பல முறை கேட்டுக் கொண்டதுண்டு . விருப்பமுள்ள துறையில் ஏதாவது செய்யும் வாய்ப்பு தூண்டிலின் புழு அதை கடந்து செல்ல முடியாது அதன் முடிவுகளின் வெளியில் உள்ள ஆகயமும்  அடியாழத்தில் உள்ள இருள் உலகமும் ஒரு ஈர்ப்பு . இது இன்று வரை யாரும் முயற்சிக்காதது இனி இதன் அருகில் கூட இன்னொருவர் வரப்போவதில்லை. நான் வெற்றியின் எவ்வளவு அருகில் நின்று கொண்டிருக்கிறேன் என என்னைத் தவிர பிற யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . அடுத்தவருக்கு எளிதில் புரியவைத்து விட இயலாது இருந்தாலும் இது நிகழ்த்தப்பட வேண்டியது. எனது கற்றலின் காரணமாக எனது செயலூக்கத்தை வழியாக .என்னால் செயல்பாடுகள் வழியாக மட்டுமே முன்னகர முடியும் அதில் வெற்றி பெற இயலாது போனாலும் முயற்சியே எனக்கான நிறைவை தரும் எனது தனி உலகை நான் அங்கு கண்டடைவேன்.


இதை 1996 களில் துவங்கி இருக்கலாம் அவர்களை முன்வைத்து நிகழ்த்திய கூட்டங்களில் தேவையற்ற பிரச்சனை உருவாக்க மாநில நிர்வாகிகள் முயன்றனர் . ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்  இனி கூட்டம் நடத்துவதில்லை என முடிவெடுத்திருந்தேன் . புதிதாக ஒரு அமைப்பாக திரண்டு வருவதற்கு அதற்குள் எதிர்ப்பு குரல் எழுப்புவதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர முயற்சிப்பது மிக எளிய அரசயல் தந்திரம் அதை கடந்து நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ளவர்களின் உலகம் வேறு வகையிலானது . அந்த அக்கபோரில் நான் ஆர்வமல்லாமல் அமைதியன பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமலாகி இயக்கம் நின்று போனது . அடுத்து ஆட்சி மாறும் அறிகுறிகள் தோன்றின . அதை தொடர்ந்து கட்சி மாறுபவர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர் . மாதத்திற்கு இரண்டு நாளாவது பேராவது ஏதாவதொரு  கட்சியில் இருந்து விலகி கங்கிரஸிற்கு வந்து கொண்டே இருந்தனர் . ஒரு இணைப்புக்கு ஆயிரம் பேர் என ஒரு கணக்கு அந்த ஒரு ஆறு மாதத்தில் ஏழெட்டு பேர் இணைந்து விட்டார்கள் எப்படி பார்த்தாலும் எட்டாயிரம் பேர் . ஆனால் தினசரி கட்சி அலுவகத்திற்கு வரும் அதே எட்டு பத்து பேர் தாண்டி எப்போதும் கூட்டம் வருவதில்லை .உள்ளே வந்து சேரும் அனைவரும் புழக்கடை வழியாக வேறெங்கோ வேரொரு உலகிற்குள் சென்று மறைந்து விடுகிறார்கள் போல . அல்லது வந்தவர்களே மீள மீள வந்து கொண்டிருக்கிறார்களா?. புரியாமல் இருந்தது. கட்சியில் இணைந்த முக்கியஸ்தர்கள் மட்டும் டூவீலர் ஓட்டுனர் சகிதமாக வந்திறங்குவார்கள் . கட்சி வளர்ச்சி பற்றி எங்கும் பேச்செழுந்தபடி இருக்கும். கொள்கை பிணைப்பு , பிடிப்பு பற்றி நாம் கூசுப்படி படி பேசுவார்கள் செயல்படுவார்கள் நாம் இவர்கள் அளவு நாம் செயல்படவில்லையோ என நாணும் படி செயல்படுவர்கள் . புதிதாக வந்திணைந்தவர்கள் நம்மை தேடி வந்தால் மட்டுமே நம்முடைய இடம் என்ன என்பது பற்றிய புரிதல் உண்டாகும் . தேசிய தலைவர் பேரை கொண்ட ஒருவர் உணர்வு பூர்வமாக பேசிக் கொண்டிருந்தார் அந்த தேசிய தலைவர் இறந்த தினத்தில் அவர் பிறந்ததால் அவருக்கு அந்த பேர் போடப்பட்டதாக சொன்னார் . அதனால் தான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றார் . நான் வாய் பிளந்தபடி அவர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன் சரியாக இரண்டு வருடத்தில் கட்சியை விட்டு வெளியேறினார் . பின்னர் ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளுக்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை பார்க்கும் போது மௌனமாக கடந்து மட்டுமே செல்ல முடிகிறது.


செவ்வாய், 29 மார்ச், 2022

அடையாளமாதல் * கேளாச் செவி *

 




 

ஶ்ரீ:



பதிவு : 613  / 803 / தேதி 29 மார்ச்  2022



* கேளாச் செவி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 12.





1996 தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு லக்ஷ்மிநாராயணன் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து சண்முகத்தை சந்தித்தது கண்ணன் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கான சீட் பற்றியது என்றனர் . அப்போது மேலிடப் பார்வையாளாராக காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஜனார்தன பூஜாரி புதுவையில் இருந்தார் . காங்கிரஸின் நிர்வாக சிக்கலுக்கும் மேலிட பார்வையாளர்கள் சரியாக செயல்பட முடியாமைக்கு இருக்கும் தடை, மொழி. இங்குள்ள உண்மையான கள நிலவரத்தை கட்சி அமைப்பினர் தொண்டை கிழியஉரையாடினாலும்அதன் வழியாக அவர்கள் அடைய ஒன்றுமில்லை . சுவருடன் பேசுவது போல. இடையே நிற்பவர் முழு நிலவரத்தையும் வேறு திசைக்கு கொண்டு செல்ல முடியும் . இந்தி பேசாத மாநிலங்களில் கட்சி அவர்கள் அறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் குமுறிக் கொண்டிருப்பது அவர்களை சென்று சேராது . காங்கிரஸின் இந்த நிரந்தர ஊமைத்தனம் திராவிட அரசியலால் விளைந்தது . ஆந்திர கர்நாடக மாநிலங்களில் இந்த சிக்கல் இல்லை அவர்கள் பல மொழி பேசக் கூடியவர்கள் . ஜனார்தன பூஜாரி கர்நாடகத்தைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தமிழ் புரிந்து கொள்ள முடிந்தது .சண்முகத்திற்கு மிக அனுக்கமானவராக அறியப்பட்டவர். ஜனார்தன பூஜாரி மீது சண்முகத்தில் செல்வாக்கு என்ன என்பது எனக்குத் தெரியாது . ஆனால் கண்ணன் அவரை நேரில் சந்தித்த போது அவரிடம் மிக கறாராக நடந்து கொண்டது சண்முகம் சொன்னதால் என பேசப்பட்டது எவ்வளவு உண்மை என தெரியவில்லை


கண்ணன் சபாநாயகராக பதவியில் யாருக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டது முதல் பிரதமர் வரை சென்ற பஞ்சாயத்து , பின் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிற முடிவு பிறகு தில்லி மேலிடம் அவரை சட்டமன்றத்திற்கு வர வேண்டியதில்லை என அறிவுறுத்தியது என அவரது ஐந்து வருட கடந்தாக கால செயல்பாடு அவருக்கு நினைவுறுத்தப்பட்டு ஏன்? என விளக்கம் கேட்க்கப்பட்டது . ஒருவருடம் அமைதியாக இருந்து தேர்தல் அறிவிக்க இருக்கும் நேரத்தில் அவர் நடத்திய பேரணி புதுக் கட்சி துவங்கும் நோக்கம் கொண்டதாக எல்லோராலும் அறியப்பட்ட பின் இந்த சீட்டு கேட்கும் ஆட்டத்தினால் ஆவதென்ன? . இறுதி ஒரு வருட காலம் துணை சபாநாயகர் Av. சுப்பிராமணியம் அந்த  சட்டமன்ற காலம் இறுதிவரை அமர்ந்து முடித்துக் கொடுத்தார் . ஜனார்தன பூஜாரி கண்ணனுக்கான சீட்டே சிக்கல் என்பது போல நடந்து கொண்டார் . சண்முகம் தலையிட்டு ஏதாவது செய்வார் என்கிற நம்பிக்கையில் லக்ஷ்மிநாரயணனிடம் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சீட்டு என கோரிக்கை வைத்தார். அது குறித்து பலமான அலர் நிலவியது. அவர் 5 சீட்டு இல்லை 7 கேட்டார் என . அப்படி இல்லை தனக்கும் லக்ஷ்மிநாராயணனுக்கும் மட்டும் கேட்டார் என்றனர் . சண்முகம் கண்ணனுக்கு மட்டும் என்றால் தன்னால் மேலிடத்தை சமாதானப்படுத்த இயலும் என கூறி விட்டார் . அதன் பிறகு அண்ணா திடலில் கூட்டம் கூட்டி தன்னை  தமாக வின் புதுவை கிளைத் தலைவராக அறிவித்துக் கொண்டார் . இதில் வேடிக்கை அதுவரை மூப்பனார் தில்லியில் இருந்தார் .தாமாக துவங்குவது பற்றி அவருக்கே அப்போது தெளிவான திட்டமிருந்ததாகத் தெரியவில்லை. அந்த வாரம் சென்னை திரும்பினார். அந்த ஒருவருட காலம் காங்கிரஸ் அரசியலை வழக்கம் போல குழுப்பி அடித்தவர் ரஜினிகாந்த். தேர்தல் நேரத்தில் அமெரிக்கா சென்றுவிட்டார். கடைசி நிமிடங்கள் முப்பனாருக்கு சாதகமாக இல்லை. அவரால் காங்கிரஸை திமுக நோக்கி கொண்டுவர இயலவில்லை. இருக்கும் கூட்டணியை தக்கவைக்க காங்கிரஸ் அதிமுக வுடன் தேர்தல் கூட்டு என அறிவிப்பு வெளிவந்தது .


அந்த சூழலில் அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் ஜெயலிலாதவிற்கு எதிரான அறிக்கை தமிழ்நாட்டில் புது அத்தியாயம் துவங்கி வைத்தது . அல்லது இது துக்ளக் சோ போன்றவர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கலாம். துக்ளக் சோ கலைஞர்  மூப்பனாருக்கு இடையே பல சுற்றி பேச்சு வார்த்தைக்கு பின்னர்  பல்வேறு அரசியல் சூழலை கணக்கில் எடுக்கப்பட்டு பின்னர் தமாகா  துவக்கப்பட்டது . அந்த தேர்தலின் இறுதுவரை கண்ணன்சொல்லிக் கொண்ட தாமாகசார்பாக மூப்பனார் எங்கும் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை .கடலூரில் இருந்து சென்னை போகும் வழியில் ஒரு இரவு புதுவை ஆனந்தா இன்னில் தங்கினார் . அந்த ஹோட்டல் அமைந்துள்ள கண்ணனின் காசுகடை தொகுதியில் அவர் பிரசாரம் செய்யாத மர்மம் அனைவரும் அறிந்தது .திமுக தலைமையிலான ஆட்சியிலிருந்து கண்ணன் பாதியில் கழன்று விடுவார் என்பது மூப்பனார் உட்பட எல்லோருக்கும் தெரிந்திருந்தது ஆனால் அது எப்போது நிகழும் என்பது கேள்வி


காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு அதற்கு கண் காது என எந்த புலனும் இயங்காது . அதற்கே உரிய சிக்கலும் தீர்வும் இயங்கு விசையும் வேறானவை அதில் எந்த புற நியாயங்களையும் கொண்டு வைக்க முடியாது. கட்சி உறுப்பினர்களுக்கும் அதற்குமான உறவு அறுந்து போய் , அந்த ஆட்சிகாலம் முடிவுறும் வரை அது அப்படியே நீடிக்கும். முற்றும் எதற்கும் சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் அனைத்து இடத்திலும் குவிந்து கிடக்கும். ஆனால் அதில் உள்ள நியாயம் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் புதுவை காங்கிரஸின் ஊழ் நெறிப்படுத்தப்பட்ட கட்சி ஆட்சி அமைப்பு என ஒன்று இல்லாதது பெரிய சிக்கல் . அப்படி அது போல ஒன்று அமைய யாரும் விரும்பவில்லை ,அதன் காரணம் வெளிப்படை. கட்சியில் இருந்து உருவாகிவரும் அரசு என்பது தமிழகத்தில் திராவிட இயக்கம் போல தொகுதிக்கு இவர் என எவரும் வகை செய்யப்படுவதில்லை . தேர்தல் நேரத்தில் வந்தடையும் ஒரு சிலருக்காக அது அப்படி வைத்துக் கொள்ளப்பட்டது . இங்கு முற்றதிகாரம் கொண்ட மாநில தலைவர் என ஒருவர் உருவாகிவிட முடியாது. தலைவர் என்பவர் பல குரல்களை கையாளத் தெரிந்தவர் மட்டுமே. அவர் அந்த வெவ்வேறு குரல்களை ஒன்றிணைக்கும் சமரசப்புள்ளி. அவர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓயாத உரையாடலில் இருந்தாக வேண்டி இருக்கிறது . அதில் கிடைக்கும் சந்தர்பத்தில்  தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கி தன்னை நிலைகொள்ளச் செய்ய அவருக்கு கட்சி மேலிடம்கருணைகொள்கிறது . அதையும் சத்தமாக செய்ய இயலாது . உரியது என்றாலும் அது பிறர் பார்க்க செய்து கொள்ள முடியாது . இந்தியா முழுவதும் இதுதான் நிலையா? என்றால் ஆம் ஆனால் மொழி ஒரு தடையாக இல்லாத மாநிலங்களில் ஒரு மாநில தலைவருக்கு இணையாக தில்லி கட்சி பொறுப்பாளர்களே மடை கட்டுகிறார்கள் தலைவர்கள் அனைவரும் தங்கள் கணக்கை மட்டும் மிக அழுத்தமாக முன்வைக்கிறார்கள் 

 

ஆட்சியை எந்த வகையிலும் கட்சி சார்ந்திருக்க முடியாது அதன் ஆட்ட விதிகள் வேறு உலகை சேர்ந்தவை. கட்சி அரசியல் அதிகாரம் என்பது ஆட்சியில் இருப்பது ஒரு அடையாளம் மட்டுமே. அதை செயல்படுத்த சட்டமன்றத்தை கடந்து வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது அதற்கு கேட்கும் செவிகள் அதற்குறிய ஒலியமைப்புகள் கொண்டது . கட்சி முக்கியஸ்தர்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர் நோக்குவது மடமை ,அது இயல்வதல்ல. கட்சி செயல்பாடு ஒருவகை முக்கோண அமைப்பு கட்சி ஆர்வலர் , கட்சி அமைப்பு , அரசு அதிகாரிகள். இதில் பொது மக்கள் குறித்து பேச சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சி அமைப்பாக இருந்தால் அது தனக்காகவும் அதிகார அமைப்புடன் பேச முடியும். அது அரசானாலும் அரசாங்கமானலும் .


புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...