https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 15 அக்டோபர், 2020

அடையாளமாதல் * கனவுகளின் மீறல் *

 


ஶ்ரீ:



பதிவு : 540  / 733 / தேதி 15 அக்டோபர் 2020


* கனவுகளின் மீறல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 17.







1990 களின் மத்தியில் சீக்கிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்தப்பிய மணீந்தர்ஜித்சிங் பிட்டா , பஞ்சாப் மாநில சுற்றுப்பயணம் வந்த  பிரதமர் நரசிம்ம ராவின் கண்களில் பட , 45 வயதான அவர் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிகப்பட்டார் . தலைமை பதவிக்கு 40 வயதிற்குள்” என்கிற விதியிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது .பின்னாளில் தீவிர நரசிம்மராவின் ஆதரவாளராக உருவெடுத்து கட்சி அரசியலில் நரசிம்மராவை மையம்படுத்தும் செயல்பாடுகளில் இறங்கினார்  . தில்லியில் நடைபெற்ற அவரது தலைவர் பதவியேற்பு விழாவில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்து கடும் காயங்களுடன் உயிர் தப்பியது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து காங்கிரஸாரின் கவனத்தையும் அவரை நோக்கி ஈர்த்தது .மூப்பனார் , மோதிலால் ஓரா , ஜனார்த்தன் பூஜாரி , ஆஸ்கார் பெர்னான்டஸ் , நட்வர்சிங் போன்ற மூத்த தலைவர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் மீது உள்ள வழக்கமான நிராகரிப்பு மனப்பான்மை மெல்ல விலக்கிக் கொண்டனர் , அது பிட்டாவின் நரசிம்மராவை முன்னிறுத்தும் அரசியல் செய்திட்டத்தை எளிது படுத்தியது .


தலைமை தேர்தல் அதிகாரியாக TN சேஷன் அன்றைய பிரதமர் சந்திரசேகரால் நியமிக்கப்பட்டவர் .தனது பதவிக்காலம் முழுவதும் மட்டுமின்றி ஓய்வு பெற்ற பின்பும் 

சர்ச்சைகுறிய மனிதராக அறியப்பட்டவர் .தேர்தல் துறையின் சட்டங்களை நடைமுறைப் படுத்தியது, மற்றும் தேர்தல் சீர்திருத்த  நடைமுறைகளை அமல்படுத்தியது என இன்றுவரை மாற்றப்பட முடியாத தேர்தல் நெறிகளை கொண்டு வந்தது அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது . இந்தியாவின் அரசியல் அமைப்புகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என நெருக்கடி கொடுந்திருந்தார் , அதற்கான காலக்கெடுவும் அறிவிக்கப்பட்டது .ஆளும் அமைப்புகள் பலவீனப் பட்டிருந்தது அவரது நிலைப்பாடுகளுக்கு உதவியது. காங்கிரஸிற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் உட்கட்சி தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உருவானது .தன்னுடைய நிலைபாடிற்காக எந்த எல்லைக்கும் செல்பவராக அறியப்பட்டவர் . நரசிம்மராவ் மந்திரிசபையில் சீத்தாராம் கேசிரி மீது தேர்தல் சட்டவதிகளுக்கு முரண் என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதக்கூடியவராக இருந்தார்திகைத்த அரசியல் கட்சிகள் சேஷனின் அனுகுமுறை தெரிந்து  உட்கட்சி தேர்தலை  செயல்படுத்தவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின .


இளைஞர் அமைப்பை இந்தியாவெங்கும் தனித்து வளர்த்தெடுப்பது ,மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கடசி நிர்வாகத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்த பார்வை கொண்டவராக அறியப்பட்டிருந்த பிட்டாவின் பிண்ணனியில் நரசிம்மராவ் இருந்திருக்க வேண்டும் .உட்கட்சித் தேர்தல் வர இருப்பது பற்றிய சுற்றறிக்கை விடப்பட்டதும் , சேஷனின் நிலைப்பாடும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதாக இருந்தாலும் . அவை ஏறக்குறைய ஒரே ஆண்டில் நிகழ்ந்தது . அந்த இணைவு ஒரு தற்செயலாக இருக்கும் வாய்ப்பு மிக குறைவு . அரசியல் செயல்திட்டங்களை வலிந்து செயல்படுத்துவது , நிலைப்பாட்டையும் வெளிப்படையாக முன்வைப்பது , அல்லது அதற்கு சாதகமான  சூழலை உருவாக்குவது போன்றவர்றை செய்வதில்லை .கலத்தில் முயங்கி வெளிவரும் முரணியக்க விளைவுகளில் இருந்து தங்கள் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்கிறார்கள் .நரசிம்மராவ் தலைமுறையை சேர்ந்த அனைத்து காங்கிரஸ் தலைவர்களிடமும் பொதுவாக காணப்படும் அம்சம்  . தலைவர் சண்முகத்தின் நடைமுறை வழியாக அதை புரிந்து கொள்கிறேன் .தாங்கள் திட்டமிட்டது நிகழாது போனால் , அடுத்த வாய்புகளுக்கு காத்திருக்க அவர்கள்  தயங்குவதில்லை .


இந்திராகாந்தி முன்னெடுத்த அதே திட்டத்தை நரசிம்மராவ் கையில் எடுத்தார் , அதை ஒட்டி இளைஞர் காங்கிரஸரின் அரசியல்  மாற்றம் வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தது . ஆனால் நரசிம்மராவ் வீழ்ந்த போது அவை கலைந்து போனது.சீத்தாராம் கேசரி தலைவராக இருந்த போது இந்தியா முழுவதும் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் நடந்து சீத்தாராம் கேசரி தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஆனால் தேரந்தெடுக்கபட்ட தலைவர் என்கிற அடையாளமோ அதற்குறிய அரசியல் இடத்தையோ அடையமுடியாமல் வெளியறேற்றப்பட்டார் .

சோனியகாந்தி அதே அனுகுமுறைக்கு சில மூத்த தலைவர்களால் அறவுத்தப்பட்டாலும் , அடுத்து என்ன கவலை கொண்டவராக , வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் பின்னிழுத்து தன்னை முன்னிலை படுத்திக் கொள்வதில் அவசரம் கொண்டிருந்தார் .தனது குடியுரிமை குறித்த சிக்கலினால் வெளிப்படையாக தனது திட்டங்களை முன்வைப்தில் தயக்கமிக்கவாரகவே இருந்தார் .முடிவெடுக்க தயங்கும் மனநிலையால் மன்மோகன்சிங் 10 வருட ஆட்சி கட்சியின் பெரும் சரிவுக்கு காரணமானது .நரசிம்மராவ் போன்ற அனுபவமிக்க தலையில்லாததால் , மன்மோகன்சிங் ஆட்சியின் அவமானகரமான தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டியதாயிற்று .


1996 முதல் 1998 வரை புதுவையில் இரண்டு ஆண்டுகளாக மாநில முழுவதிலும் புதிய இளைஞர்கள் அடையாளம் கண்டறியப்பட்டிருந்தனர் . இளைஞர் காங்கிரஸின் எதிர்காலம் என்கிற கருத்தை முன்வைத்து அதை செயல்படுத்தத்  துவங்கி இருந்தேன் . திடீரென அறிவிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேர்தல் பற்றிய புதிய புரிதலுக்கும் அனுபவத்திற்கும் காரணமாயிற்று .உட்கடசிச் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு குறிப்படத்தக்க பங்கு வகித்தது முற்றும் எதிர் நோக்காத வாய்ப்பு .பல தொகுதிகளில் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது . தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதும் உறுப்பினர் சேர்ககை வழக்கம்போல ஒரு சடங்காக , கண்துடைப்பாக நடைபெறும் என்கிற அலட்சியம் காரணமாக புது உறுப்பினர் சேர்க்கையில் யாரும் முனைப்பு காட்டவில்லை . தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாடு ஓரு செய்தியை தெளிவாக  சொல்லியிருந்தது என்பதால் உறுப்பினர் சேர்ககையில் முழு முணைப்பு காட்டப்பட்டது   . அபைப்பு ரீதியாக இளையத் தலைவர்கள் தெரிவு செய்பட்டிருந்ததால் உறுப்பினர் சேர்கையை மிக எளிதாக செய்து முடிந்திருந்தேன் . அதனடிப்படையில் பல தொகுதிகளில் தலைவர்களை முடிவு செய்யும் இடத்தில் அல்லது தவிற்க இயலாதவர்களாக இளைஞர் காங்கிரஸார் உருவெடுத்திருந்தனர் .


திங்கள், 12 அக்டோபர், 2020

அடையாளமாதல் * சிதைந்த வழி *

 


ஶ்ரீ:



பதிவு : 539  / 732 / தேதி 12 அக்டோபர் 2020


* சிதைந்த வழி



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 16.






அரசியலில் என்னை ஒரு சமன்பாட்டுக் காயாக வைக்க நான் ஒருபோதும் உடன்பட்டதில்லை .அதனால் எழும் பின்விளைவுகளை எதிர்கொள்ளத் தயங்கியதில்லை.

பாலன் என்னை பிறர் எதிரெடையாக வைக்க முயன்ற போது அவரை எதிர்த்து எழுந்து அமைப்பை அவருக்கு எதிராக திரும்பச் செய்தேன் .சண்முகத்திடம் வந்து சேர்ந்த போது அவரின் அரசியல் பாணி தெரிந்தே இருந்தேன்.

அரசியலில் என்மீது அக்கரை கொண்டோர் சொன்னது ஆலமரத்தடியில் புல் கூட முளைக்காது” என்பது. ஒருவகையில் என்னை அவரிடம் ஒப்புக் கொடுத்திருந்தேன் . அரசியலில் முளைப்பது” என் கனவுகளில் கூட இல்லை. அவரது ஆளுமையின் மீது என்கிருந்த ஈர்ப்பு காரணமாக அவர் என்னை அழைத்த போது நான் மறுக்க விரும்பவில்லைஆனால் அவரன்றி பிற எவரும் எக்காலத்திலும் நான் அறியாமல் என்னை பயன்படுத்திக் கொள்ள ஒருபோதும் அனுமதித்ததில்லை.


ஒரு செயல்திட்டதின் துவக்கத்தில் என் உடன் வருபவர்கள், என்னை அதற்கானவனாக நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கின்றனர் .அத்திட்டத்தின் வெற்றிக்கு பின்னர் , எங்கோ அதை என்திறன்” என்பதிலிருந்து என்னை விலக்கிக் வைக்கிறார்கள் .அதன்பின் அவர்களால் என்னை எளிதாக மறுக்க முடிகிறது .இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது என அவதானிப்பதுண்டு.சிறு வயதில் பேச்சு குறைபாடினால் சொற்களுக்கு தவிப்பது பிறருக்கு இளிவரலாக, பரிதாப காட்சியாகிறது. அந்த அவமதிப்பிற்கு அஞ்சி ஒரு கட்டத்தில் பேசுவது முற்றாக நின்று போனது . வீட்டில் தவிர பிற இடங்களில் பேசுவதை நிறுத்தக் கொண்டேன்.பள்ளி ஒரு நரகம் .


1980 களில் நணபர்வட்டம் மிகப் பெரிதாக உருவாகியது . மாலை கடற்கறை எங்கள் கூடுகளமாகியது.35 பேருக்கும் அதிகமானோர் . நான் எனது தயக்கத்தில் இருந்து மெல்ல வெளிவந்து  எனது இடறை கடக்க முயற்சித்தேன் . ஒரு சிறிய யுக்தி கைகொடுத்தது .என்னை எப்போதும் எளிய இடத்தில் வைத்துக் கொள்வது . என்னை பற்றிய பகடியுடனே எனது உரையாடல் எப்போதும் முன்வைப்பது .அது என்னையும் என் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து பார்ப்பதில் குழப்பம் ஏற்படச் செய்து விடுகிறது.நான் என் செயல்பாடுகளில் தலைமை வகிப்பதில்லை .கூட்டு முயற்சியாகவே அதை எப்போதும் முன்வைத்திருக்கிறேன்.எனது செயல்பாடுகளில் அனைவருக்கும் பங்கிருக்க செய்வது ஒரு புள்ளியில் என்னை பிறர் குறைத்து மதிப்பிடச் செய்து விடுகிறது .


ஆழ்மனம் என்னை ஒவ்வொரு கணமும் பிறர் பார்வை வழியாக சுயமதிப்பீடு செய்தபடி இருப்பது என்னை மீறிய செயல்பாடாக உருவெடுத்தது . என்னை அதிலிருந்து விலக்கிக் கொள்ள முடியவில்லை. அது ஒரு கடும் விசை.அது எப்போதும் என் இடத்தை ,என் இடறை, பிறர் என்னை எப்படி அனுமானிக்கிறார்கள் என முடிவு செய்தபடி இருப்பதை உணர்கிறேன் . அவமதிப்பை அதிலிருந்து எழும் வலியை எப்போதும் அஞ்சினேன்  .சிறுவயது முதலே என்னை அழுத்தி அதுமட்டுமே என்னில் இருந்து எழுந்திருக்கிறது .

அதுவரை் பெற்ற அவமதிப்பை கடந்து செல்ல இது எனக்கொரு உத்தியாக ஆழ்மத்திலிருந்து உருவாகி இருக்கலாம் .அது கடும் வலிகளில் இருந்து வெளிவர அதன் பின்னே உள்ள நிதர்சனத்தை அறிந்து கொள்ள முயல்கிறேன் . என் கற்றல் அந்த வலியில் இருந்தே துவங்குவது ஆகையால் வலி இனிது” .ஒரு போதும, கசப்படையாதிருக்க முயல்கிறேன்.


கண்ணன் பாலன் அரசியல் ரீதியாக தோற்ற இடங்களை அறிந்திருந்தேன் . இருவரும்  ஒரே விழைவின் இரு முணைகள் .வல்சராஜை சண்முகத்திற்கு நிகரான அரசியல் சூழ்ச்சியாளராக வைப்பேன். ஆனால் தலைமைப்பண்பு  என்பது வேறுவிதமானது .வல்சராஜிற்கு தன்னை தாண்டிய விஷயத்தில் ஆர்வமில்லை.


புதுவையின் காங்கிரஸில் அடுத்த அரசியல் தலைமுறை உருவாகி வரகூடிய சந்தர்ப்பத்தை என்னால் பார்க்க முடிந்தது .இளைஞர் காங்கிரஸாரை சண்முகம் அஞ்சினார்.அதற்கு அடிப்படையாக சில காரணங்கள் இருந்தன.இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் தலைமையும் அதன் நிர்வாகிகளும்  மாநில கட்சித் தலைமையால் நியமிக்கப்படுவதில்லை . அவர்கள் தில்லியில் உள்ள அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவர்கள் .நியமிக்கும் அதிகாரம் இல்லாமையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முடியாது என்பதால் மாநில இளைஞர் காங்கிரஸ் கட்டற்ற சக்தியாக உருவெடுத்தது. அதன் தலைமையின் மீறல் மனப்பான்மை இளைஞர்களை ஈர்ப்பதாக இருந்தது


1975 களின் துவக்கத்தில் இந்திராகாந்தி தனது அரசியலை முன்னகர்த்த அவருக்கு ஒரு படைத் தேவைபட்டது சஞ்ஜை காந்தியின் இளைஞர் காங்கிரஸ் அதை மிக கச்சிதமாக செய்து கொடுத்தது . அதற்கு பரிசாக  அதன் நிர்வாக சட்டத்தை தளர்த்தி அதை காங்கிரஸிற்கு நிகர் அமைப்பாக தனித்து செயல்படும்படி உருவாக்கினார்.அகில இந்திய தலைமையின் இந்த முடிவு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாக உருவெடுக்க வைத்தது .


அது வாரிசு அரசியலை , பொருளியல்  பலத்தை முன்வைப்பவர்களை நிராகரித்து தொண்டர்களால் அடையாளம் காணப்படும் தலைவர்களின் நிரை எழுந்தது வர வழிவகுத்தது . அகில இந்திய காங்கிரஸின் அமைப்பிற்குள் செல்ல , தேர்தலில் தனி ஒதுக்கீடு பெற அது தனியான வழியை உருவாக்கிக் கொண்டது  .ஆரம்பம் முதலே மூத்த தலைவர்கள் இதை விரும்பவில்லை, மறைமுக எதிர்ப்பு தீவரமாக இருந்தது . ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை உடைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர்.1996 களில் இறுதியில் நரசிம்மராவ் வீழ்ந்ததும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சிதைக்கத் துவங்கினர்.


வியாழன், 8 அக்டோபர், 2020

அடையாளமாதல் * ஊழ்,செயல்,கற்றல் *

 .


ஶ்ரீ:



பதிவு : 538  / 731 / தேதி 08 அக்டோபர் 2020


* ஊழ்,செயல்,கற்றல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 15.






ஆழுள்ளம் படைபூக்கம் வழியாக நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் எனக்கான வழியை கண்டடைந்திருக்கிறது அதன் மூலமே நான் செயல்படும் விழைவை அடைந்திருக்க வேண்டும் . வாழ்நாள் முழுவதும்  எனது கற்றல் அதிலிருந்தே நிகழ்ந்திருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.நான் பெருந்திட்ட வாதத்தை முன்வைப்பவன் , தற்செயல்களை நிராகரிக்கிறேன் .பெருந்திட்டம் என்னவென்று எவராலும் சொல்லிவிட முடியாது .ஆனால் தனிப்பட்ட ஒருவரின் வாழ்வில் நிகழும் அனைத்தும் ஒருங்கினைக்கப்பட்டு கூட்டு நனவிலியில் அல்லது ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது என எண்ணுகிறேன். ஒன்று அடுத்த ஒன்றை தொடர்புறுத்துவது அங்கிருந்து நிகழலாம்.


எனக்கான தேடல் என்னாழுள்ளத்தில் இருந்து எழுந்திருக்கலாம் .எனது தேடலை நான் முதலில் அப்படித்தான் புரிந்து கொண்டேன் .ஆனால் ஒரு புள்ளியில் அது எனது தந்தை கொண்ட தேடலின் மிச்சல் என புரிந்து கொண்ட போது திகைப்படைந்தேன்


இயற்கை பெரு நதியின் விசையால் அனைத்தும் ஒருக்கமாகின்றது .அது தனிமனிதனுக்கு சொல்ல ஒன்றுமில்லை.சில புள்ளிகளை இணைத்து அங்கிருந்து வாழ்வியலின் அர்த்தம் கொள்ள முயலவதைப் போல அபத்தம் பிறிதொன்றில்லை.எனக்கு அது என்ன சொல்ல வந்தது என புரிந்து கொள்ள விழைவதில்லை


முயற்சித்த அனைத்திலும் பெரும் வெற்றியை மட்டுமே அடைந்திருக்கிறேன் .அது நான் ஈடுபட்ட துறையின் முதன்மை ஆளுமைகளுக்கு பக்கத்தில் கொண்டு என்னை நிறுத்தியிருக்கிறது .அது வியாபாரமாக, அரசியலாக , ஆன்மீக இயக்கமாக, முற்றும் தொடர்பில்லாது சட்டென எழுந்த இலக்கியமாக, எனக்கான அடையாளத்தை அது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது .ஏற்ற இறக்கங்கள் வழியாக நிகழ்ந்த கற்றலை இங்கு தொகுத்து அடுக்கி எழுதி எழுதி என்னை புரிந்து கொள்ள முயலும் இந்த வளைப்பூ மூலம் ஆழ்மனத்துடன் உரையாட முயல்கிறேன்.


ஒரு செயலில் இறங்கத் தீர்மாணிப்பது என்னுள் எப்படி நிகழ்கிறது என நான் இன்றுவரை அறிந்ததில்லை . அந்த நோக்கி    உடனே சென்றுவிடுவமில்லை . அதை நிகழ்த்துவதை குறித்த ஆழ்ந்த விழைவை எனக்குள் உருவாக்கி கொள்வது மட்டுமே நான் செய்வது .ஒரு கனவுபோல அதை மெல்ல மெல்ல விரித்தெடுத்து அதைப்பற்றிய கருத்தியலை உருவாக்கிக் கொள்வதுடன் அதை செயல்படுத்துவதற்கான நெறியையும் உருவாக்கி கொள்வதை பற்றிய கனவை வளர்த்துக்  கொண்டு  காலத்திற்கு காத்திருப்பது மட்டுமே நான் இயற்றக்கூடியது .


ஆழ்ந்த விழைவினாலோ , ஊழின் ஆடலோ இன்னதென அறிந்து கொள்ள முடியாத அதன் கதவுகள் மெல்லத் திறப்பதை ஆச்சர்யத்துடன் பார்திருக்கிறேன்.அது நிகழும் காலம்வரை பொறுத்திருப்பது எனது வழமையாக இருந்திருக்கிறது .சில கனவுகளாக மட்டுமே எஞ்சி விடுவதும் உண்டு .எந்த ஒரு இலக்கும் தனிமனித முயற்சியில் கைவருவது சாத்தியமில்லை என உணர்ந்திருக்கிறேன் . அது முற்றும் ஒத்திசைவு கொண்ட குழுக்களால் நிகழ்வது .அதன் பாதையும் சக பயணிகளும் ஒத்த கருத்துடைய சிலரும் வழித்துணையாக வந்து வந்து சேர்ந்து கொள்வதை திகைப்புடன் பார்த்திருக்கிறேன்.அதன்பின் அதன் விசையால் உள்ளிழுக்கப்பட்டு செயல் நோக்கி உந்தப்படுவது நிகழ்கிறது.


புதிய முயற்சிகள் அதற்கான அறைகூவலுடன் எழுந்து வருகின்றன . ஆழ்மனம் எங்கோ சீண்டப்பட்டு அந்த அறைகூவலை எதிர்கொள்வதை எப்போதும் காலம் நிகழ்த்துகிறது  என அதற்கு என்னை ஒப்புக் கொடுப்பது மட்டுமே என் செயல் துவக்கமாக இருந்திருக்கிறது . ஒருமுறை  ஆழ்ந்து யோசித்து அதில் ஈடுபடுவது என முடிவெடுத்தவுடன் அங்கிருந்து திரும்புவதற்கான வாய்ப்பு எனக்கு நிகழ்வதில்லை. அல்லது எனது தன்னகங்காரம் அதை பார்க்க விடுவதில்லை.பின் ஒருபோதும் அச்செயல் இருந்து  பின்வாங்கியதில்லை . அந்த பாதை என்னை விலக்கும்வரை.


எல்லா வாய்ப்புகளிலும் எனது கோட்பாடு ஒன்றே . எனக்கானவர்கள் என  நான் எவரையும் உருவாக்கிக் கொண்டு சென்றதில்லை  . அத்துறையைச் சேர்ந்தவர்கள் தானாக என்னுடன் ஒருங்கித் திரள்வது .அவர்களை என் துணையாக எடுத்தபடி எனது பயணத்தை தொடர்ந்திருக்கிறேன். வெற்றிக்கு பிறகு  கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ளவது சமரசங்களின் வழியாக மட்டுமே நிகழ்வது

சமரசங்களுக்கு நான்  உடன்படுவதில்ல உடன் வந்தவர்கள் கிடைத்ததை தக்கவைக்கும் முயற்சியில் சமரசத்திற்கு உடன்படுவது குறித்த அழுத்தம் கொடுப்பது நிகழ்ந்து விடுகிறது .எனது மறுப்பு அந்த சூழலில் நான் அவர்களுக்கு தேவையற்ற எடையாக தோன்றிவிடுவதுண்டு


அல்லது ஒரு செயல் துவக்கத்தில் என்னை அதற்கானவனாக பார்வையை உருவாக்கிக் கொள்பவர்கள் பிறகு எங்கோ அதை திறன் என்பதிலிருந்து என்னை விலக்கிக்கொள்கிறார்கள்.இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது என அவதானிப்பதுண்டு .

புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...