https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 30 மார்ச், 2024

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

 புதுவை கூடுகையில் எனது உரை



  1. செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம். அதன் வழியாக நேர் அல்லது எதிர்மறையாக வளர்கிறது. அதன் முடிபுகள். உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது நமது முடிவாக காலத்தில் நீண்டு விடுகிறது. மனம் மட்டுமின்றி புலன்களும் ஒரு ஊகம் மட்டுமே பிரம்மமே அதன் இறுதியை அறிகிறது.அவர்கள்கதைகளால் உண்ணப்படுபவர்கள்.
  1. வாழும் காலத்தில் பரு ஒளியால் உருவாகி பின் நிற்கும் நிழலை போல வாழ்நாள் புகழ் அல்லது இகழும் ஒரு நிழலைப் போல இங்கே விழுந்து கிடக்கிறது
  1. ஊழ்கம் தன் எல்லைகளை தீர்மானித்து பின் வழிகளை சொல்லுகிறது. ஒவ்வொருக்கும் அது தனித்தது.அது உள்ளம் என்பது நீயல்ல என்பதை முதலில் விளக்குகிறது. பட்டில் பொதிந்த கருங்கல் என.
  1. கூட்டு நனவிலி பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அது உலகின் அனைத்து உயிர்களுக்குமானது. ஊழ்க முயற்சியில அன்னை நாரையின் விழிகளில் தெரிவதை பார்த்து அஞ்சி விலகுகிறாள். அது அவள் ஆற்றிய நாரை கொலைகளை நினைவுறுத்துகிறது. பெண் என அவன் வெளிப்பட்டு அவற்றின் அன்னையாவதுடன் அவளது ஊழ்கம் நிறைவுறுகிறது
  1. இடம் மாறுவது ஆண் பெண் என பிரிந்து விடுகிறது. பெண் என குவியும் போது ஆண் என சிதறி பரவுகிறது
  1. அன்னையின் அன்பை முதலில் பெறாதவன் எப்போதும் திறன் மிக்கவன். அவனது அகப் பயணம் அங்கிருந்து துவங்குகிறது










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...