இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
திங்கள், 22 அக்டோபர், 2018
வியாழன், 18 அக்டோபர், 2018
அடையாளமாதல் - 411 * நிகர்நிலை பயிற்சி *
ஶ்ரீ:
பதிவு : 411 / 573 / தேதி 18 அக்டோபர் 2018
* நிகர்நிலை பயிற்சி *
“ எழுச்சியின் விலை ” - 12
தலைமையேற்று வழி நடத்துவது நாளும் தன்னம்மிக்கையை கோருவது , ஒவ்வொரு முறையும் தமக்கே தாம் என மீள மீள சொல்லிச் சொல்லி வகுத்துக் கொள்வது, அது வந்தேறி என்பதால் பிறர் நம்மீது கொள்ளும் நம்பிக்கையினூடாக நாளும் பெருகி வளர்வது போல நாளும் அதை குலைக்கும் பிறிதொன்று நிகழும் போது சிதைவுறுகிறது , அப்போது தனக்கு நிகரான பிறரின் பலம் , வாய்ப்பு குறித்த அச்சம் எழுவது தவிற்க இயலாதது .அந்த நிலையில் தன்னைச் ஏதாவதொரு வகையில் சார்ந்திருப்பவர்களை தன்னை சூழ அமைத்துக் கொள்வது பாதுகாப்பு என்கிற உணர்வைத் தருவதாக தோன்றலாம் . ஆனால் அது மிகை நம்பிக்கை . எண்ணவியலாத கணத்தில் அவை நம்மை விட்டு நழுவிச்செல்பவை , ஒரு முறை நழுவுமானால் அதிலிருந்து மீண்டு எழும் வாய்ப்பையும் இல்லாமலாக்கி விடுகிறது. பாலன் அமைப்பில் நிகழ்ந்த அந்த சீரழிவை நேரடியாக பார்த்தேன் . அவர் அதை இன்னும் திறமையாக, சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்கிற எண்ணம் ஒவ்வொரு முறையும் ஆற்றாமையாக எனக்குள் எழுந்ததுண்டு . ஆனால் இன்று அதையே வேறு கோணத்தில் பார்க்கையில், அன்று பாலன் அதை முயற்சித்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதே யதார்த்தம் என இப்போது நினைக்கிறேன் . அதற்கு அடிப்படை ஆதார பலம் நுட்பமான பிறிதொன்றாக மாறுகிறது .
தலைமைப்பண்பு என்பது ஆளுமையை ,திறமையைக் குறித்து சொல்லப்படுவதாக இருந்தாலும் . ஒருவர் பதவிக்கு வருகிறபோது அவரைப் பற்றிய புரிதலில் பிறிதெல்லோரும் மனத்தால் ஒருவருடன் ஒருவர் உரையாடாமரேயே அவர்களுக்குள் இணைந்து ஏதோ ஒருவகையில் அதிலிருந்து ஒன்றுபோலவே அனைவரும் ஆழ்ந்த நம்பிக்கையை பெற்றுக் கொள்கிறார்கள் . இதை தர்க்க ரீதியாக விளக்கிட முடிவதில்லை. கண்ணன் , பாலன் இருவரும் ஏறக்குறைய ஒரே பொருளாதார, சமூகப் பிண்ணனியிலிருந்து எழுந்தவர்கள். மாநில மூத்த கட்சி தலைவர்களிடம் கண்ணனுக்கு இருந்த வெளித் தெரியாத மனஏற்பு பாலனுக்கு கிடைக்கவில்லை . மாறாக பாலன் எங்கும் எள்ளுக்கு உள்ளானார் .
காங்கிரஸ் கட்சி அமைப்பும் அதன் மாநிலத் தலைமையும் பாலன் தலைமையிலான இளைஞர் காங்கிரசுக்கு எதிர்ப்பாக இருந்தது புதிதல்ல, கண்ணன் தலைமையை இதைவிடக் கடுமையாக கையாண்டது , கண்ணனால் அவற்றைக் கடந்து எழுந்து வர இயன்றது . அவரது எழுச்சிக்கு தேர்தலில் வென்றது ஒரு காரணம் மட்டுமே அதை கடந்தும் அவரால் தன்னை ஸ்தாபித்துக்கொண்டிருக்க முடியும் என்றே நினைக்கின்றேன் . ஆனால் அந்த வெற்றி அவரை கடைசி வரை அலைக்கழித்தது என்பதுதான் முரண்நகை. அந்த கால கட்டத்தில் அமைப்பை நடத்தும் பொதுத்தன்மை அவரிடமிருந்து முற்றாக விலகி இருந்தது . அவ்வப்போது கிடைத்த சில வெற்றிகள் அவரின் கடைசி சக்திவரை உறிஞ்சிகொண்டது.
கண்ணனுக்கு கிடைத்த குறுகிய கால வெற்றி கூட பாலனுக்கு கிடைக்காமலானது. எந்த தொகுதியிலும் கட்சி சார்ந்த பொது ஆதரவை தளத்தை அவரால் பெற முடியவில்லை . அது அமைப்பை குறுங்குழுவாக்கி நடத்திச் செல்வதை நோக்கி அவரை திருப்பி விட்டது. கட்சியின் அடிப்படை மூத்த தலைவர்களே அமைப்பின் பலம்.அதை மிக சரியாக வளர்த்தெடுத்து , கைக்கொண்டிருந்த வரை நிலைத்த தலைமையை கொடுக்க இயலும் என்பதற்கு சண்முகமே உதாரணம் . அவர் சுமார் முப்பதாண்டு காலத்திற்கு மேலாக கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கு அது போன்ற புரிந்து கொள்ள இயலாத நிகர் செய்யப்பட்ட ஆதார பலம் காரணமாக இருக்கலாம் .
ஆரம்ப காலத்தில சண்முகமும் எதிர்பில்தான் வளர்ந்தார். கண்ணனுக்கும் பாலனுக்கும் சொல்லப்பட்ட அதே குறைவுபாடுகள் அவருக்கும் இருந்தது . ஆனால் தனது செயல்பாட்டினாலும்தளர்ச்சி அடையாத அரசியல் நிலைப்பாட்டினாலும், தொடர் நிலைத்த வெற்றிகளையும் , பின்னர் அவரது அரசியல் எதிர்கள் அனைவரும் அஞ்சுகிற நிலையை அடைந்து , தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் . அதற்கு அவர் உருவாக்கிக் கொண்ட மேலிட தொடர்பும் செல்வாக்கும் பெரிதும் உதவின என்றாலும் , தனது செல்வாக்கை மிக கூர்மையான தருணங்களில் மட்டுமே தனக்கு சம பலமுள்ள, தன்னுடன் முரண்பட்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தினார் . அது பதவியை தக்க வைத்துக் கொள்ளும் யுக்தியாக மட்டுமே என நினைக்கிறேன் .
அவர் கருத்தியல் ரீதியாக உட்கட்சி அமைப்பை சரி செய்ய எல்லோருடன் அவர் நிகழ்த்திய தொடர் உரையாடல்களையும் , அவர்களை அனுசரித்து எடுத்த சில முடிவுகளின் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் . இந்த இடத்தில் சண்முகம் , கண்ணன் மற்றும் பாலன் மூவரையும் இணைத்து அரசியலின் செயல்படு முறை பற்றிய கருத்தியலை அடையமுடியுமா என பார்க்கிறேன்.
மூவருக்கும் கட்சி ரீதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் செயல்பாடுகளின் பின்னால் கோட்பாடுகள் இருந்திருக்க வேண்டும் . பிற இருவரையும் கடந்து சண்முகம் நீண்ட நாட்கள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கு , எந்த கோட்பாடுகளை முன்னிறுத்தினாரோ அவைகளை முழுமையான நம்பிக்கையுடன் கைக்கொண்டது முக்கியமான காரணம் என நினைக்கிறேன். ஆனால் தனது இறுதி நாட்களில் அவரும் அதை கைவிட்டார். கோட்பாடுகள் இரக்கமற்றவைகள் போலும் அவை யாருக்கும் சலுகைகளை வழங்குவதில்லை . சண்முகமும் தன்னை கோட்பாடுகளுக்கு அப்பால் வைக்க முயன்றபோது அது அவரை முற்றிருளில் கொண்டு விட்டது .
திங்கள், 15 அக்டோபர், 2018
அடையாளமாதல் - 410 *வெளிப்படும் முகங்கள் *
ஶ்ரீ:
பதிவு : 410 / 573 / தேதி 15 அக்டோபர் 2018
*வெளிப்படும் முகங்கள் *
“ எழுச்சியின் விலை ” - 11
கட்சித் தலைவர்களாக பொறுப்பிற்கு வருபவர்கள் எப்போதும் அனுக்கர்களையே தங்களது கமிட்டியில் கொண்டு வருவார்கள். அது கமிட்டியை செயல்பாட்டில் வைப்பது என்பதால் ஒரு வகையில் சரியானதும் கூட . தனக்கு கட்டுப்படாத ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு யார்தான் என்ன செய்ய முடியும் , ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஒரு வழமை உண்டு , குறிப்பிட்ட அளவில் மாற்று கருத்துடையவர்களையும் ஒதுக்கீடு என்கிற வகைமையில் அதில் உள்புகுத்துவார்கள் . அது இரண்டு விதமான பலன்களை கொடுப்பவை ஒன்று உட்கட்சி ஜனநாயகம் காக்கப்படும் . இரண்டு, பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டவர்கள் யாரையும் விட்டு விடாது அமைப்பை சரியான திசைக்கு அழைத்து செல்ல உதவும் என்பது கட்சியின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று என்பது பிறிதொரு காரணம் .(மேலிடத்திற்கு எங்கும் யாரும் தனித்த தலைமையாக எழலாகாது என்கிற எண்ணமிருக்குமோ என்மோ).
எனது பாணியும் அதைப் பின்பற்றி, நான் எனது அனுக்கர்களை மட்டுமே கமிட்டியில் கொண்டு வருவேன் என்கிற எண்ணம் எனது எதிர்நிலையாளர்களுக்கு இருந்திருந்தால் அதில் வியப்பில்லை . நான் யாருக்கும் கட்டுப்படாத போக்குள்ளவன் என்பது ஒரு இயல்பு, அதையே எல்லாவற்றிலும் செய்ய முனைவேன் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு அதுபோல ஒன்றை அமைத்துக்கொண்டு அல்லாட எனக்கு விருப்பமில்லை . அவர்களுக்கு எனது கமிட்டியில்இடம் கொடுப்பது வேறுமாதிரியான திண்டாட்டம் என்றாலும் , எனக்கு அந்த எண்ணம் இல்லாததற்கு பாலன் கமிட்டியில் கிடைத்த பாடம் போதுமானது. திறனற்ற குழுவை கொண்டதாக ஒரு கமிட்டி அமையுமானால் அதன் தலைமைக்கு அதனினும் கேடு பிறிதில்லை. செயல் திறனற்றவர்களுக்கு , தங்களை தக்க வைத்துக் கொள்ள இரண்டு வழிமுறைகள் மட்டுமே சாத்தியப்படுவது. ஒன்று கூச்சமில்லாத ஓயாது தலைமை துதிபாடுதல் அல்லது பிரறை எப்போதும் போட்டுக் கொடுப்பது. இது ஆரோக்கியமான கருத்திற்கு வழியே இல்லாதுசெய்துவிடும் .
அனைத்தையும் எல்லா நேரமும் திறம்பட , சரியாக செய்ய எந்த ஒரு தலைமையாலும் முடியாது . மாற்றுத் திறனும் வாய்ப்பும் உள்ள அமைப்பாக இருந்தால் மட்டுமேதலைமை அதை சரியான இலக்கை நோக்கி செலுத்த இயலும் . திறன் இல்லாத அமைப்பை நடத்தி செல்வதை காட்டிலும் தலைமைக்கு வதை பிறிதொன்றில்லை. தலைமை தனியாளுமையின் குணம் என்றாலும் பொறிகள் நிறைந்த அரசியலின் , அனைத்து கூறுகளையும் கருத்தில் கொள்வது தனியொருவனருக்கு சாத்தியமில்லாதது ஒரு விதமான கூட்டு முயற்சி , மாநிலம் முழுவதும் பிரதிநிதித்துவப் படுத்தும் கமிட்டி வெற்றிகரமாக அமைந்து விட்டால் . நிகழ் அரசியலின் நிலை குறித்த தரவுகளுக்கு பஞ்சமிருக்காது. அதை கொண்டு தனக்கோ தனது திட்டங்களுக்கோ எழும் சிக்கலை எதிர்கொள்ளவும் அதை முறியடிக்கும் வாய்ப்பை அது பெருக்கிக் கொடுத்து விடும்.உத்தேச கமிட்டியில் எனது அணுக்கர்களில் அசலான தனித்திறமை உள்ளவர்கள் முதல்மை இடம் பெற்றார்கள் . மற்றவர்கள் எனக்கு கட்டுப்படாதவர்களாக இருந்தாலும் , முக்கியமான பிற ஸ்தானத்தில் அவர்களை அமர்த்தினேன் , அமைப்பிற்குள் எனது அணுக்கர்களே முக்கியத்துவம் பெறுவார்கள் என்கிற எண்ணம் முற்றாக தகர்க்கப்பட வேண்டும் என விழைந்தேன் .
அரசியலில் தனித்த அடையாளங்களுடன் முகம் எழுவது இன்றியமையாதது என நினைக்கிறேன். அதுவே செயல்படும் முறைப்பற்றிய முன்வடிவத்தை உருவாக்கிவிடும். அரசியலில் சிலருக்கு மட்டுமே உச்சநிலையை அடைவதற்கான வாயப்பு கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்புகளில் உள்ள சிடுக்குகளை கற்றுக் கொள்வதற்குள்ளாக , காலம் முடிந்து விடுகிறது , அதனாலேயே பலர் சொற்ப்ப காலத்திற்கே அங்கே நிலை கொள் இயலுகிறது . வெகு சிலர் மட்டுமே காலம் துணைக்க தங்களது செயல்திறனால் கூடுதல் காலம் அதில் நீடிக்கிறார்கள். . அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் அடையாளம்உருவாவதை அறிந்து கொள்ள முடிகிறது. அரசியலில் பதவிகளை பெறுவதைவிட தனக்கான முகம் அடைவதுதான் மிக சிக்கலானது. முகமுள்ளவர்களுக்கு மீண்டும் , மீண்டும் வாய்ப்புகளைப் பெற்று அடுத்தவருக்கான வழியை மறிக்கிறார்கள் .
அனைத்தையும் எல்லா நேரமும் திறம்பட , சரியாக செய்ய எந்த ஒரு தலைமையாலும் முடியாது . மாற்றுத் திறனும் வாய்ப்பும் உள்ள அமைப்பாக இருந்தால் மட்டுமேதலைமை அதை சரியான இலக்கை நோக்கி செலுத்த இயலும் . திறன் இல்லாத அமைப்பை நடத்தி செல்வதை காட்டிலும் தலைமைக்கு வதை பிறிதொன்றில்லை. தலைமை தனியாளுமையின் குணம் என்றாலும் பொறிகள் நிறைந்த அரசியலின் , அனைத்து கூறுகளையும் கருத்தில் கொள்வது தனியொருவனருக்கு சாத்தியமில்லாதது ஒரு விதமான கூட்டு முயற்சி , மாநிலம் முழுவதும் பிரதிநிதித்துவப் படுத்தும் கமிட்டி வெற்றிகரமாக அமைந்து விட்டால் . நிகழ் அரசியலின் நிலை குறித்த தரவுகளுக்கு பஞ்சமிருக்காது. அதை கொண்டு தனக்கோ தனது திட்டங்களுக்கோ எழும் சிக்கலை எதிர்கொள்ளவும் அதை முறியடிக்கும் வாய்ப்பை அது பெருக்கிக் கொடுத்து விடும்.உத்தேச கமிட்டியில் எனது அணுக்கர்களில் அசலான தனித்திறமை உள்ளவர்கள் முதல்மை இடம் பெற்றார்கள் . மற்றவர்கள் எனக்கு கட்டுப்படாதவர்களாக இருந்தாலும் , முக்கியமான பிற ஸ்தானத்தில் அவர்களை அமர்த்தினேன் , அமைப்பிற்குள் எனது அணுக்கர்களே முக்கியத்துவம் பெறுவார்கள் என்கிற எண்ணம் முற்றாக தகர்க்கப்பட வேண்டும் என விழைந்தேன் .
அரசியலில் தனித்த அடையாளங்களுடன் முகம் எழுவது இன்றியமையாதது என நினைக்கிறேன். அதுவே செயல்படும் முறைப்பற்றிய முன்வடிவத்தை உருவாக்கிவிடும். அரசியலில் சிலருக்கு மட்டுமே உச்சநிலையை அடைவதற்கான வாயப்பு கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்புகளில் உள்ள சிடுக்குகளை கற்றுக் கொள்வதற்குள்ளாக , காலம் முடிந்து விடுகிறது , அதனாலேயே பலர் சொற்ப்ப காலத்திற்கே அங்கே நிலை கொள் இயலுகிறது . வெகு சிலர் மட்டுமே காலம் துணைக்க தங்களது செயல்திறனால் கூடுதல் காலம் அதில் நீடிக்கிறார்கள். . அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் அடையாளம்உருவாவதை அறிந்து கொள்ள முடிகிறது. அரசியலில் பதவிகளை பெறுவதைவிட தனக்கான முகம் அடைவதுதான் மிக சிக்கலானது. முகமுள்ளவர்களுக்கு மீண்டும் , மீண்டும் வாய்ப்புகளைப் பெற்று அடுத்தவருக்கான வழியை மறிக்கிறார்கள் .
என்னை மட்டுமே சார்ந்திருந்த எவரையும் விட்டுவிடாமல் அனைவரையும் இரண்டாம் அல்லது முன்றாம் நிலைக்கு கொண்டுவந்த போது அவர்கள் என்மீது வருத்தமடைந்தார்கள் . எதிர்பார்த்ததுதான் . அதை அவர்கள் எடுத்துப்பேச முயன்ற போது எனது கடுமையான எதிர்ப்பினால் ஆரம்பத்திலியேயே அதை தவிர்க்க முயற்சித்தேன் . பதவியை எனது அணுக்கர்களுக்கு மட்டும் முதல்மை பொறுப்பு தரமுடியாது அது செயல்பாட்டை பாதிக்கும் என்பது பற்றி அவர்களுக்கு விளக்க பெரும் முயற்சி எடுத்தேன் . எதுவும் அவர்களுக்கு அது புரியப்போவதில்லை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
புதிய பதிவுகள்
மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *
ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை சென்றடைய இயலும்...
-
ஶ்ரீ : மணிவிழா - 82 07-08-2026 * அபௌர்ஷேயம் * ரிஷிகேசத்தல் இருந்து திரும்பிய பிறகு உருவான மனநிலை என்பது கூட ஒருவித ...
-
ஶ்ரீ : பதிவு : 699 / 888/ தேதி 08 ஆகஸ்ட் 2026 * மனசாட்சி * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 96. திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு...
-
ஶ்ரீ : மணிவிழா - 80 05-08-2026 * தடையின் விளையாட்டு * தத்துவத்திற்கான இடம் வாழ்வியலில் எங்கு பயன்பட்டிற்கு வருகிறது...
-
ஶ்ரீ : பதிவு : 698 / 887/ தேதி 07 ஆகஸ்ட் 2026 * கனவை நிகழ்தல் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...
-
ஶ்ரீ : பதிவு : 700 / 889/ தேதி 09 ஆகஸ்ட் 2026 * முடிவுறாத துவக்கம் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...
-
ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை சென்றடைய இயலும்...
-
ஶ்ரீ: பதிவு : 385 / தேதி :- 13 ஜனவரி 2018 அழைப்பிதழ் புதுவை வெண்முரசு 11 ஆவது கூடுகை அன்புள்ள நண்...


