https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 45 இளைஞர் காங்கிரஸ் இயக்கமுறையின் வீழ்ச்சி.

ஶ்ரீ:


அடையாளமாதல் - 45
இளைஞர் காங்கிரஸ் இயக்கமுறையின் வீழ்ச்சி
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 18
அரசியல் களம் - 16





இன்றைய அகில இந்திய கட்சி நிர்வாகப் பொறுப்பாளர்களில் எண்பது சதம் முன்னாள் இளைஞர் காங்கிரசின் நிர்வாகிகளே . அதற்கு காரணம் சஞ்ஜய் காந்தியின் கட்சி அரசியல் வழிமுறை , மற்றும் அதற்கான தேவை அதை ஒட்டிய கட்சி நிர்வாக சீர்திருந்தங்கள் முக்கிய கரணமாக இருந்தன. இன்று அந்த இயக்கமுறை நிலையழிந்து விட்டது . அதன் அரசியல் பகிர்மான முறை சுயநலத்தால், உள்ளூழலால் இரண்டு வழிகளில் உருக்குலைந்தது

ஒன்று; மாநில காங்கிரஸ் அமைப்பு அதை எதிரியாக பாவித்து அனைத்து தரப்பிலும் ஒதுக்கி மெலியவைத்தது . தன்னுடைய எதிர்கால அரசியல் விழுமியத்தை நோக்கி கட்சி செயல்பாடுகள் திட்டமிட வேண்டிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் , பிழைத்திருக்க வேண்டி தனிநபர்கள் கைகளில் வீழ்ந்து அவர்களுக்கான ஆதாயமிக்க  ரீதியில் செயல்பட துவங்கினர் . இது அவர்களது முற்றடையாளத்தை நாசமாக்கியது. செய்ததற்கான கூலியை  கையேந்தி இறைஞ்சும் வெற்று கூலிக்காரர்களாக்கி கட்சிக்காரர்கள் என்கிற அடையாளத்தை முற்றாக அழிந்து.

இரண்டு; இளைஞர் காங்கிரசின் தலைமைப்பொறுப்பு அந்ததந்த மாநில காங்கிரசின் பிரமுகர்கள் வாரிசுகளுக்கு அல்லது அவர்களின் அடிமைகளுக்கு தாரைவார்க்கப்பட்டது . சாமாண்ய குடும்பத்திலிருந்து எழந்து வரவேண்டிய இளம் தலைவர்களுக்கானது இளைஞர் காங்கிரஸ் அமைப்பு

அது நட்பை அடிப்படையாக கொண்டு  செயல்பாடுகளால் தொடர்புறுத்தி , வளர்ந்து வரவேண்டிய அடுத்த தலைமுறைக்கானது . அதுவே அவர்களை சராசரி நடைமுறை அரசியலுக்கு எதிராக எழும் சிந்தாந்த அரசியல் சூழலுக்கு இட்டுச்செல்வது . அது தகுதி உடைய தனி தலைமையுடன் கூடிய அமைப்பாக உள்நுழைந்த அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னிருத்துவது. நிச்சய வெற்றிக்கு வழிவகுப்பது.

பொதுமக்கள் என்கிற ஜனசமுத்திரத்தின் பொங்கும் உபரி நீர் நிலப்பகுதிகளில் ஒதுங்கி, தனித்தன்மையுடன் இருந்து ,அவசியம் ஏற்பட்ட காலத்தில் அதனுடன் எளிதில் கலக்க கூடியவர்கள் போன்ற அரசியல் தலைவர்கள் உருவாகி நிலைபெற்றிருந்தனர். ஆனால் இன்று அதே உபரி கழிவுநீராக உறுமாறி உபரியாகி நிலப்பகுதிகளில் ஒதுங்கி கடலையும் நிலத்தையும் பாழ்படுத்துகிறது.

அதன் காரணமாக அரசியல் பொதுசமூகத்தை பிரதிபலிக்கும் தன்மையை இழந்ததால் , அவர்களின் நம்பிக்கையை முற்றாகவே இழந்தனர். இது தவிற்கவியலாத ஒரு அரசியல் இயற்கையின் கோட்பாடு. ஆனால் தகுதியான இளைஞர்கள் தங்களின் சமூக அக்கரை சார்ந்த அரசியலில் இருந்து தனக்கான அரசியல் சூழல் மற்றும் அடையாளத்தை  வளர்த்தெடுக்க உகந்த மண் இதுவன்றி பிறிதில்லை என அறியார், என்பது சோகம் .

இது உண்மையில்லை வழக்கொழிந்து விட்டது என பிதற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு  பிடறியில் அடித்தார் போல் . இல்லை இன்றும் அது உயிர்ப்புடன் இருக்கிறது என நிரூபித்தது சமீபத்தில்  சென்னை இளைஞர்கள் நடத்திய "ஜல்லிக்கட்டு போராட்டம்". உலகவரலாற்றில் இதுவரை நிகழாதது .அந்த ஜனசமுத்திரத்தை பார்த்த அனைத்து கட்சிகளும் பயந்து விக்கித்து நிற்கின்றனர்.அந்த இளைஞர்களுக்கான தலைமையை கொடுக்க லாயக்கற்றவர்கள். அவர்கள் இப்போதும் புரிந்து கொள்ளவில்லை , எந்தளவு அவர்களிடமிருந்து விலகிவந்துவிட்டார்கள் என்பதை.

இன்றைய இளைஞர்களும் அரசியல் விழைவால் பெரும் பொருளினால் முன்னிருந்தப்படும் சந்தரப்பவாத அரசியலில் அவர்களுக்கான நிகழ்விடத்தை தேடுகிறார்கள்.அவர்களுக்கு அங்கு இடமேயில்லை. அது ஒருகாலமும் அவர்களின் விழுமிய பாதைக்கு கொண்டு செல்லாது .


பொருளியல் சார்ந்த அரசியல் ஒரு வியாபாரம் ,அதில் லாப நஷ்ட கணக்கிற்கு மட்டுமே இடம் அதற்காக எதையும் விட்டுக்கொடுப்பவர் நாளை எதை எதற்கு விட்டுக்கொடுப்பார் என்பதற்கு யாரும் உத்திரவாதமில்லை. அவர்கள் மிக ஆபத்தானவரகள் ஏனெனில் அவர்கள் அரசியல் கழிவுகள் .

அடையாளமாதல் - 44 தலைமைப்பண்பும் மாநில கட்சியரசியலும்

ஶ்ரீ:


அடையாளமாதல் - 44
தலைமைப்பண்பும் மாநில கட்சியரசியலும் 
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 17
அரசியல் களம் - 16


கட்சியரசியல் அமைப்பு சண்முகம் தலைவராக நீடித்தவரை வலுவாக இருந்ததற்கு அவர் வைத்திருந்த  இரண்டு கட்ட அமைப்புமுறையும் அதற்கு அவரின் தெளிவான சூத்திரமும் அடிப்படைக் காரணிகள் .அவருடைய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட முறையிலும் அமைப்பிலும் ஒரு ஒழுங்கும் தர்க்க ரீதியில் அதை விளக்கும் வழிவகைகளையும் கொண்டிருக்கும் .

அவரின் நிர்வாகிகளின் நியமனம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் , ஜாதிரீதியிலும், மதரீதியிலும் , வர்க மற்றும் சமூகத்தை பிரதிநிப்படுத்தும் வகையில் மிக நுட்பமாக நெய்யப்பட்டிருக்கும்

நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் எழுபது சதம் மிக மிக சாமான்யர்கள். பலவருடமாக கட்சியில் இருப்வர்கள் , எளிய குடும்ப வாழ்கைமுறையை கொண்டிருப்பதுடன் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமானவர்கள் .ஒருகாலமும் அதற்கு எதிராக திருப்பாதவர்கள்

பல சோதனையான காலகட்டத்தில் கட்சியிலிருந்து வேகமாக பலர் பலகாலமாக  வெளியேறிக் கொண்டேயிருந்தும் , கட்சி உடைந்தத்தாக ஒரு தோற்றத்தை எவராலும் இன்றுவரை உருவாக்கவே முடியவில்லை

சட்டமன்ற உறுபினர் மற்றும் அமைச்சர் கனவோடு கட்சிக்கு வரும் பொருளியல் பலமுள்ளவர்கள், தொகுதியில்  வெற்றிவாய்ப்புள்ளவர்களின் , ஆட்சி அதிகார பதவிக்கான  கோரிக்கைகளில்  என்னென்ன விட்டுக்கொடுக்க முடியுமோ அனைத்தையும் கொடுக்கத் தயங்காத சண்முகம் , அவர்கள் கேட்கும் சிறிய  கட்சி பதவியை மட்டும் விட்டுத்தரவேமாட்டார்.

அதனால் கட்சி அமைப்பு, ஆளும் அரசு தனக்கு கட்டுப்பட்டது என்கிற நினைப்பில் அது செயல்படும். ஓரளவிற்கு சட்டமன்ற வளாகத்தில் தலைநிமிர்வாக அவர்களை காண இயலும். அதனுடைய எந்த பலனும் தங்கள் வாழ்வியலில் பிரதிபலிக்காது போனாலும் . அவர்களுக்கு கட்சிகாரன் என்கிற அடையாளமே போதுமானது

இன்று இவர்கள் காணாமலாகி வருவது கட்சிக்கு நல்லசேதி இல்லை . இத்தகையவர்கள் வலுவுடன் இருந்ததாலும் , ஏற்படும் சங்கடங்களை சொன்னால் ஏனென கேட்க ஒரு தலைமை தயாராக இருந்ததாலும் , இரண்டு அரசியல் அமைப்பும் ஒன்றுடன் ஒன்று ஆரோக்கியமாக அனைத்து இடத்திலும் மோதுக்கொண்டே இருக்கும்

இது தேர்தலரசியல் நேரம் . அவர்கள் கட்சி சித்தாந்த அனுகுமுறையற்றவர்கள் , வெளிபடையாக வன்முறைக்கு துணியும் கூட்டம். கட்சி வட்டாரத்தில் எந்நேரமும் இது காழ்ப்பாக எல்லோரிட இருந்து கசிந்தபடியே இருந்தது.

எங்கும் எவர்வாயிலும் இளைஞர் காங்கிரசின் தாக்குதல் நடபெறலாம் என்பது  செய்தியானது . ஒரு களியாட்டு போல அனைவரும் அதை உள்ளூர எதிர்பார்க்க துவங்கினர் . ஒரு ஆதிவாசி அனைவருள்ளும் வண்மத்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் போலும்.பிற கட்சிகளின் செயல்பாடு இதன் எதிர்நிற்க இயலாமல் சுருண்டன. காங்கிரஸ் பலம்பெறத்துவங்கியது போல தோற்றம் கொண்டதும் அணிகள் இருபக்கமும் திரளத்தொடங்கினர்.

ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியிலும் இதுபோன்ற சம்பவம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றபோது , கட்சிஅலுவலகம் ரணகளமாகியது அனைத்து முக்கிய தலைவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர் . செய்தியின் வீர்யம் தில்லி தலைமையை எட்டியதும் , ரகளையில் ஈடுபட்டவர்களின் பெயர்களை தில்லி தலைமை கேட்டுப்பெற்றது.

ஒழுங்கு நடவடிக்கைகையில் அனைவரும் நீக்கபடுவார்கள் என்கிற எதிர்பார்பு தீவிரமடைய. தில்லி அந்த அனைவருக்கும் சீட் கொடுக்க சொல்லிவிட்டது நல்ல நகைமுரண். இதற்குபின்னால் உள்ள அரசியல் கணக்குகளே தேர்தலரசியலை முடிவு செய்பவை

அந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இல் 41 வெற்றிபெற்றது. ஆனால் அந்நிகழ்வினால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் 1983 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 294 தொகுதியில் 60 வெற்றிபெற்று அவமானகரமான தோல்வியை எதிர் கொண்டது.அதன் பிறகு அந்த வீழ்ச்சியிலிருந்து மீள வெகுகாலமாகியது.


இளைஞர் காங்கிரஸ் அமைப்பு மிக வெற்றிகரமாக இயங்கிய வரலாறு எந்தக்கட்சிக்கும் இல்லை . மாநில கட்சிகளில் அது ஒரு கோமாளித்தனமானது .மாற்று தேசிய கட்சிகளில் இன்று நடைமுறைக்கு சாத்தியமாகவில்லை , ஆனால் ஆனால் அகில இந்திய காங்கிரசின் இன்றைய பரிபவத்திற்கு இளைஞர் காங்கிரசின் அமைப்பு முறை சீர்குலைத்ததே முக்கிய காரணம். ஏனெனில் அது நாற்றங்கால் போன்றது ,நாளைய விளைச்சலுக்கு வேண்டியது. "விறைநெல் தளிகைக்கு போன கதையாகயது."

புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...