https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 3 நவம்பர், 2018

அடையாளமாதல் - 414 * இருத்தலியல் *


ஶ்ரீ:


பதிவு : 414 / 578 / தேதி 03 நவம்பர்    2018

* இருத்தலியல்  * 


எழுச்சியின் விலை ” - 15
முரண்களின் தொகை -01 .






புதுவை அரசியலின் விசை பெருவெளி என்றால் அதில் சண்முகமும் , அவரை தவிர்த்த பிற அனைவரும் அதை சமானமாக நிறை செய்கிறார்கள் . அது பிறிதொரு இணை உலகம் போல என்றாலும் . ஒன்றிலிருப்பது ஒன்றில் இருப்தில்லை . ஒன்றின் நிழல் போல அதிலிருந்து வெளிப்படுவதாக இருந்தாலும் , அது அதுவல்ல . தலைவர் எப்போதும் போல அவர்களுக்குள் எந்த முரண்பாடுமில்லை  என தன்னிறுப்பில் இருந்தார். அது காலத்திற்கு காத்திருப்பது. அவர் அதை வெளிக்காட்ட விழையாது போனதால்  நாராயணசாமி அதை முழுக்க வெளிக்காட்ட தன்னை தனித்து ஒளிவெள்ளப் பாய்ச்சலுக்கு  உட்படுத்தி இயங்க துவங்கியிருந்தார் . சண்முகம் எதிர்நோக்கும் காலக் கனிதலுக்கு இடம் கொடுப்பது ஆபத்து என அவர் உணர்ந்திருக்கலாம். அவர் தனது தலைவரை உய்த்துணர்ந்திருக்க மாட்டாரா என்ன?.

நாராயணசாமி இல்லத்தில் ஆதரவாளர்கள் அடிக்கடி கூடுவதும் பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுமாக , பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது . அவரது அணியில் செயல்பட்ட பாண்டியன் என்னுடன் எப்போதும் உடனிருப்பவன் , அவனது வழியாக தலைவர்களுக்கு உள்ளே நிகழ்ந்து முடிந்த முரண்களை அது துவங்கிய கலத்திலிருந்து  நான் அறிந்திருந்தேன். என்னைவிடவும் பண்டியன் அதை அறிந்திருந்தான் என நினைக்கிறேன் . அதனால் எழவிருக்கும் வெறிடங்களை அவன் அஞ்சினான் .களத்தை என்னால் உருவாக்கிட முடியும் என அறிந்திருந்தான் , அதனாலேயே என்னை  நாராயணப்பிசாமி பக்கம் கொண்டு செல்ல ஒரு முறை நேரடியான பேச்சுவார்த்தைக்கு வரும்போதுதான் நான் தலைவர்களுள் முரண் வெகு விரைவில் வெளிப்பட்டுவிடும் , அதற்கான தருணம் மிக அருகிலிருப்பதாக உணர்ந்தேன்

எனக்கு இது மிகுந்த மனச்ச்சோர்வை கொடுத்தது . செயற்குழு வெற்றியை தொடர்ந்து அமைப்பை தொடர்புறுத்திவதில் கவனம் செலுத்தலாம் என்கிற ஒரு முனையும் , புதிய மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளை நியமிப்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த சமயம் தலைவர்களுள் நிலவும் சமன்பாடு குலைவது , எனது முயற்சியை முற்றாக சிதைக்கக்கூடியது .தலைவர் தன்னிலையை  அறிவதால் வலி பொறுக்கக்கூடியவர் .அவரிடமிருந்து எதுவும் வெளிப்படையகாது ,நாராயணசாமி திராவிட பாணி அரசியலை போல ஒன்றை மேட்கொள்ளுவது அமைப்பின் வழிமுறைக்கு மாறுபட்டது என்றே நினைக்கிறேன்.

அவர் தன்னரசியலில் தன்னை மட்டுமே பிரதானமாக கொண்டிருப்பார் . அமைப்பை வளர்த்தெடுப்பதின் வழியாக தனக்கான பாதையை ஒருபோதும் உருவாக்கிக் கொள்ளமாட்டார் . அது அவருக்கு அவசியமற்றது. தில்லியுடனான அவரது தொடர்பு , மொழி , பொருளாதார போன்றவை அவருக்கு கட்டற்ற பலத்தை வழங்கியிருந்தது. அதை மேலும் வலிமையாக்கியது , சண்முகம் தவிர பிற எவரும் அவருக்கு இணையாக தில்லியில் தங்களின் பலத்தை பெருக்கிக் கொள்ள முயலவில்லை என்பது . அதுவே நாராயணசாமியை தில்லியில் நிலைத்த பலத்துடன் வைத்திருந்தது. தன்கீழ் அணியில்லாதது பலமாகக் கூட அவருக்கு இருந்திருக்கலாம்.

தில்லியின் யதார்த்த அரசியலை தமிழக தலைவர்கள் அறிந்ததை போல இங்குள்ளவர்கள் தெரிந்திருக்கவில்லை. மாநிலத்தின் எல்லா ஆளுமைக்கும் எதிராக எழுந்து வரும் இணையாளுமையை தில்லி ஒருபோதும் நிராகரித்ததில்லைஇங்குள்ள அரசியலாளர்கள் வெளி மாயையினால் பீடிக்கப்பட்டு தங்களுக்கான இடத்தை தில்லி தலைமையிடம் கேட்டுப் பெற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை
தில்லியில் நின்று அரசியல் களமாட நிறைய பொறுமையும் , நிதானமும் தேவை. துரதிஷ்டவசமாக சண்முகம் மாநிலத்தில் உள்ள எவரையும் தில்லியை அனுக விடவில்லை. அதனால் தில்லி மண்ணில் புதுவையைச் சேர்ந்த யாரும் வேர் விட இயலவில்லை . அதனால் அமைப்பு குறுகிய வட்டத்திற்குள் சூழல வேண்டிய நிரபந்தம் அதனால் பின் எப்போதுமாக இழந்ததை பெற இயலாமலேயே போனது.

தமிழகத்தில் காமராஜர் ஆளுமையின் கீழாக செயல்பட்ட மாநில தலைவர்களுக்கு தில்லியை அனுக வேண்டிய தேவை எழவில்லை . அனைத்திற்குமான தீர்வை காமராஜராலேயே கொடுக்க முடிந்தது. அவரது இறுதிக் காலத்திலும், பின்னர்  அவருடைய மறைவிற்குப் பிறகும் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிறைக்க இயலவில்லை. 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொடுக்கக்கூடி மாநிலம் என்பதாலும் , தில்லி தலைமைக்கு இணையான சொத்துக்கள் மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு இருந்ததாலும் , தில்லி தலைமை நேரடியாக தமிழக அரசியலில் தலையிட வேண்டிய சூழல் வந்தது . அதன் பிறகே பல தலைவர்களை அது அடையாளம் கண்டது , அதை தொடர்ந்து அவர்களால் வளர்கப்பட்டு எழுந்த இணை ஆளுமைகளின் பெருக்கத்தை இன்றுவரையிலும் தில்லி தலைமையினால் கட்டுக்குள் கொண்டு முடியவில்லை .

ஆனால் கட்சி அரசியலில் ஆரோக்கியமான ஒன்றாக நான் நினைப்பது இதைத்தான்  பெரும் வல்லமையோடு இருந்த மூப்பானாருக்கு எதிராக வாழப்பாடி வளர்ந்து வர முடிந்தது . புதுவைக்கு அந்த வாய்பபு கிடைக்கவில்லை . அதற்கு இரண்டு காரணங்களிருக்கலாம் . ஒன்று புதுவையுள்ள அரசியலாளர்கள் கட்சி அரசியலின் நுடப்மான செயல்படு தளத்திற்குள் வர விரும்பாது , தேர்தல் அரசிலை மட்டுமே கொண்டவர்களாக இருந்தனர் . இரண்டு புதுவை போன்ற ஒரு சிறு மாநிலம் எப்போதும் தமிழகத்துடன் இணைத்தே புரிந்து கொள்பட்டது. மிகவும் பிழையான ஒரு புரிதல் , தமிழகத்திற்கு புதுவைக்குமான நுண்ணிய வேறுபாடுகளை புரிந்து கொள்ளவது சிக்கலானது . வெளிப்படையாக தெரிவது தமிழகத்தில் கங்கிரஸ் ஆட்சி இழந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும் புதுவையில் திரவிட அரசிலுக்கு இணையாக மதிப்புள்ளதாக காங்கிரஸ் இருந்தததற்கு அந்து வேறுபாடுகளே காரணம் . இனி அது தொடர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். கால மாற்றத்தை யாராலும் கணிக்க இயலாது .

வியாழன், 1 நவம்பர், 2018

அடையாளமாதல் - 413 *இணை உலகம் *

ஶ்ரீ:


பதிவு : 413 / 576 / தேதி 01 நவம்பர்    2018

*இணை உலகம் 


எழுச்சியின் விலை ” - 14
முரண்களின் தொகை -01 .




மாறி வருகிற அரசியல் சூழலையும் அதனால் எழவிருக்கும் விளைவுகளையும்  பிறிதெவரையும் விட எனது அனுக்கர்கள் முதலில் உணர்ந்திருந்தார்கள்  என நினைக்கிறேன் . அவர்கள் அமைப்பின் புதிய பதவிகளுக்கு தங்களுக்கு நெருக்கமானவர்களை உட்புகுந்த காட்டிய ஆர்வம் என்னை அப்படி சிந்திக்க வைத்தது . அது ஒரு அபிப்ராயம் போல என்னிடம் சொல்லப்படும் என்றுதான் நான் முதலில் யூகித்திருந்தேன் , ஆனால் நிர்பந்தித்து கருத்தால் என்னை சுற்றி வளைப்பார்கள் என நினைக்கவில்லை. என்னைப் பற்றிய சரியான புரிதலை அவர்கள் உருவகிக்க நான் இடம் தரவில்லை என்பதை அது காட்டியது என்கிற முடிவிற்கு வந்ததும்  , சரி அது அப்படியனால் என்னைப் பற்றிய புரிதலும் எனது இலக்குகளும் அவர்களுக்கு இங்கிருந்து தொடங்கி வேண்டும் என முடிவு செய்தேன் .

எனது அரசியல் என்னை நிலைபடுத்திக் கொள்வதை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல . அது அஅரசியலின, ஆரம்ப கால பால விளையாட்டு. அதன் உட்பக்கம் என்ன எப்பதை அறிந்த கசப்பு , இனி ஒருநாளும் அதை நோக்கி பயணிப்பதில்லை என்கிற தெளிவை எனக்கு கொடுத்திருந்தது. அதை இவர்களிடம்  என்னால் விளக்கிக் கூற இயலாது , ஒரு கட்டத்திற்கு அப்பால் அது நடிப்பாக பார்க்கப்படலாம்  , தத்துவங்களுயுமகோட்பாட்டு அரசியலையும் சொல்வது கைசரக்கில்லாதவனின்  பாதை என்றே புரிந்து கொள்ளப்படும் .

அவர்கள் சிபாரிசு செய்த நபர்களைவிட நான் நியமிக்க நினைத்திருந்தவர்கள் வேறு வகையானவர்கள் . அது அவர்களுக்கும் தெரியும் . காரணம்  அனைவரிடமிருந்து எழுந்து வந்தவர்கள் .அவர்களுக்கு மத்தியில் புழங்கியவர்களேஎவ்விதத்திலும்  பிற எவருக்கும் ஈடு இல்லாதவர்கள் . இருந்தும் தங்களின் பரிந்துரையை நான் ஏற்க வேண்டும் என எனது அனுக்கர்கள் தங்களின் அரசியலை என்னிடமிருந்தே துவக்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது
பரிந்துரைகள்  வெளிப்படையாக மறுத்தால்  அது அவர்களை வேறு திசைக்கு இட்டுச் செல்லக்கூடும் . அதனால் எழும் முரண்களை அவர்களுக்கு நான் சொல்லி புரியவைக்க முடியாது. காலம் அதை செய்யும் . அப்போது அவர்களாகவே தங்கள் முரண்களைக் களைந்து கடந்து வர நான்  காத்திருக்க. என்னை பொறுத்தவரை அனைவருக்கும் நான் உருவாக்க நினைத்த அமைப்பில் ஒரு இடம் கொடுக்கப்பட்டது , கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து அவர்கள் விழையும் இடத்திற்கான பாதையும் இருக்கிறது.

என்னால் முக்கிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சிலரும் கூட  தங்களை இன்னும் உயரத்தில்  கொண்டு நான்  வைத்திருக்க வேண்டும் என விரும்பினார்கள் , அது சாத்தியமில்லாதது . கட்சிப் பதவி என்பது அரசாங்க உத்யோகம் போல ஒரு சட்டக வரைமுறைக்கு உட்பட்டதல்ல , தங்களின் சாமரத்தியத்தால் தங்களுக்குள் உறையும் அழகியலால் , யாரால் எவ்வளவு தூரம் அதை விரித்தேடுக்க முடியுமோ அதன் எல்லைகளையும் அது தாண்டி விரியக்கூடியது , அழகியலும் கற்பனை வளத்தாலும் அதை விரித்தெடுக்க முடியும் சிந்தனை வறண்டவர்கள் மட்டுமே எது கொடுக்கப்படுகையிலும் அனைத்தும் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் . அது தன்னம்பிக்கை இல்லாதவன் பாதை

அனைத்து கமிட்டிகளையும் மிக குறுகிய காலத்தில் ஒருங்கி அதற்கான வரைவு தயாரான பிறகு அதுபற்றி தலைவரிடம் பேச ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன் . ஒவ்வொரு செயலுக்கு ஒருக்காரணமும் சூழலும் தேவை என நினைப்பவர் , அவர் பொறுத்தவரை தான் நினைத்ததைவிட நிகழ்ந்த செயற்குழு கூடுகை சிக்கலில்லாது முடிந்தது , அத்துடன் அவருக்கான இடர் தீர்ந்துபோனது , அதில் எனது  மேலதிக செயல்பாடு சிக்கலை வலிந்து அழைப்பது . அவருக்கான சிக்கல் வேறு தளத்தில் முளைவிடத் துவங்கியிருந்தது.

ராஜ்யசபை தேர்தலுக்கு பிறகு தலைவருக்கும் நாராயணசாமிக்கும் கருத்து முறைப்பாடு வெளிப்படையாக தெரியாதுபோனாலும் அனைவராலும் அது மிக ஆழத்தில் உணரப்பட்டது . அந்த ராஜ்யசபை தேர்தலில் ஒரே ஒரு வோட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார் நாராயணசாமி. ஜெயலலிதாவின் அதிமுக தன்னை ஆதரிக்காத்தால் தோல்வியுற்றார்  நாராயணசாமி. அவர் வெற்றி பெற்றிருந்தால் ஜானகிராமன் தலைமையிலான திமுக கூட்டணி அரசு கவிழ்ந்நிருக்கும். சண்முகத்தின் உத்திழைப்பு கிடைக்காததால் தனது தோல்வி நிகழ்ந்தது என்பது அவரது எண்ணமாக இருந்தது . அதற்கு பின்புலமாக முதலியார் ஜாதி அரசியல் இருந்தது என்பது வெளிப்படையான குற்றச்சாட்டாக இருந்து கொண்டிருந்தது

சண்முகம் ஒத்துழைக்கவில்லை , அது உண்மையாகக் கூட இருக்கலாம். தன்னை தற்காத்து கொள்ள அரசியலில் யாருக்கு என்ன வரைமுறை என சொல்லப்படவில்லை. அவரவர் தங்கள் எண்ணத்தால் , சாமர்த்தியத்தால் , வாய்ப்பால் அதை விரித்தெடுக்கின்றனர். இதில் யார் சரி யார் தவறு எனக் கூறுவது சாத்தியமில்லாதது . நாராயணசாமி எண்ணியது போல சண்முகம் ஜெயல்லிதாவுடனான தனது தொடர்பை பயண்படுத்த மறுத்தார் என்பது உண்மை என்றாலும் , அதை தனக்கான சண்முகத்தின் துரோகம் என அவர் நினைத்திருந்தால் அது சரியானதுமாக கூட இருந்திருக்கலாம் . ஆனால் நிகழ் அரசியலில் எது சரி எது தவறு என அவரவர் மனசோட இயல்பில் எழுவது , மூன்றாம் நபருக்கு அதில் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இதன் பின்னர் நாராயணசாமி தனித்து இயங்க துவங்கினார் , அவரது இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் அடிக்கடி கூடுவதும் சில செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுமாக , அங்கு பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது . தலைவர் எப்போதும் போல அவர்களுக்கு எந்த முரண்பாடுமில்லை  என்பதுபோல தன்னிறுப்பில் இருந்தார் , அவர் சுபாவம் அது. அதற்கு எதிர்மறையாக எதையும் முன்வைக்க விழையும் பிறிதொரு தலைமை .


புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...