https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

அம்மாவை யார் நரகத்தில் தள்ளியது?


அம்மாவை யார் நரகத்தில் தள்ளியது .








யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவுதுயரம் இல்லாதவன்’


வயதினால் மற்றும் ஸ்தானத்தனால் பெரியவர்களுக்கு ,வயோதிகம் இயற்கையின் கொடை என்பதை மறந்தால் அவர்கள் மறுபடியும் வாழ்தல் எனத்தொடங்கி நரகத்தை நோக்கி நகருகிறார்கள்.

தன் முதிரா இளமையில் மறுக்கப்பட்டதை மீட்டெடுத்தல் என தொடங்குகிறது அவ்வாழ்வு. கால மாற்றத்தை உணராமல் அடுத்தத் தலைமுறையினரின் விழுமியத்தை புரிந்து கொள்ள முடியாது.அதை அறியாது தன் அடுத்த தலைமுறைக்கு அறிவுரையை தொடங்கி மதிப்பிழந்து போகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரிவதில்லை .தன் அடுத்த தலைமுறையினர் வாழ்வின் மூன்றில் இரண்டு பகுதிகளை கடந்தவர்கள்,இல்லறம் அவர்களை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறது என்று.

பெரியவர்கள் தன் இடம் உணராது பிறர் வாழ்கையில் தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் நடத்த முயல்கிறார்கள், அறிவுரைகளை வழங்குகிறார்கள்.அதை பெறமறுப்பவர்கள் இன்றைய நவீன உலகின் நடைமுறை யதார்த்தம் அறித்தவர்கள்.தரக்க ரீதியன்றி அவர்களை வெல்ல முடியாது.

ஸ்வதர்மத்தை உயிரென சிலர் கடைபிடித்தாலும்,நிர்பந்தமும் தேவையுமே அனைவரையும் அதில் நிற்கவைக்கிறது என்பது உலக வழக்கு .இவை இரண்டும் அவசியமில்லாத போது அனைத்து தர்மங்களுக்கும் மீறப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தனக்கென ஓர் இடத்தை நோக்கிய நகர்வு தொடங்கிவிடுகிறது. தன் புகுந்த வீட்டில் தனக்கான நியாமான இடத்தை விரும்பும் இவர்கள் தன் பிறந்த வீட்டின் சிடுக்களுக்கு பெரும்பாலும் தவறான வழிகளை காட்டுகிறார்கள்.

பிறந்த வீட்டில் தாய் தந்தை இருவர் இருப்பது அல்லது இருவரில் ஒருவர் இருப்பின் சூழ்நிலை மாறுபடுகிறது 

தாய் தந்தை இருவரும் இருப்பின் பெரும்பாலும் சகஜநிலையே பேணப்படுகிறது.ஆனால் தந்தை மட்டும் என்றால் அது மருமகளைப்பொறுத்தது அவர் நியாய உணர்வு உள்ளவர் எனில் சராசரி குடும்ப பிரச்சனை கொதிநிலைக்கு வருவதில்லை ஆனால் தாய் மட்டும் மிச்சப்பட்டவர் எனில் , பிறந்த வீட்டு பெண்களின் பங்கினால் பூசல்கள் உச்ச நிலைக்கு வந்து விடுகிறது.

வயோதிகத்தின் காணமாக சமூக மான அவமானங்களின் தாக்கம் இல்லாமையாலே அவர்கள் மரபான விஷயங்களில் இருந்து விலகிவிடுகின்றனர். பெயர்தி அல்லது பெயரர்க்களின் காதலுக்கு பெரும்பாலும் பாட்டியின் ஆதரவு இருக்கும் என்பது கண்கூடு. காதலுக்கு ஆதரவு இது புரிந்து கொள்ளக்கூடிய அல்ல இது சமுகத்திறகு பதில் சொல்லவேண்டிய பொறுப்பில்லாமயாலே

உடல்சார் நலனுக்கும் நவீன மருத்துவமும் சிலரின் ஜீவனை காபாற்றிக் கொடுத்தாலும்,பல நடுத்தர வயது மற்றும் நடுத்தர வர்ககத்தின் பிராணனை வாங்கிவிடுகிறது.நவீன மருத்துவம் வரமா? சாபமா? 

நவீனத்துவம் உலகியல் வாழ்வை மறுமதிப்பீடு செய்ய வைத்துள்ளது மரபான விஷயங்களில் சிக்குண்டவர்களுக்கு அது நரகத்தையே பரிசளிக்கிறது.அதை உதாசீனமாக கருதுகையில் தன் நரகத்தை தாங்களே சிருஷடக்கத் தொடங்குகிறார்கள்.

அவர்களின் நரகம் மிக பிரம்மாண்டமானது அதை உருவாக்கி எடுக்க தனி மனிதர் உழைப்பு போதுமானவை அல்ல. சிலர் உதவிக்கு வருகிறார்கள்.

அவர்களின் மாயக்காயங்களுக்கு மருந்திடுகிறார்கள், மற்றும் அதை நக்கிக்கொடுப்பதின் வழியே அதை ஆற்றாது பெருகவைக்கிறார்கள் 

யாருக்கு எதிர்வினையாக இதை முன்னெடுக்கின்றனரோ அவர்களுடன்   நேரிடையாக தொடர்பு கொள்ளும் நிமிடம் அந்நரகத்திற்கு வாசல் திறக்கப்டுகிறது. அவர்கள் செய்வது என்வென்று அறியாது அதில் தன் அம்மாவை தள்ளுகிறார்கள்.



.

.

.



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...