https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 1 மே, 2023

பிறந்த போது. - நெகிழன் —

 




பிறந்த போது

பொக்கை வாயோடு இருந்தேனாம்

அதை நான்

பார்க்கவுமில்லை

நினைவிலுமில்லை

எனவே

மிக உறுதியாக நம்ப மறுத்தேன்

இன்றோ

அசந்த நேரத்தில்

கண்ணாடி காட்டிவிட்டது

இப்போது

கட்டிலுக்கடியில்

ஒளிந்துகொண்டிருக்கிறேன்

நன்றிகெட்ட கொசுக்கள்

கத்தி கத்தி

கடித்து கடித்து

மாட்டிவிடப் பார்க்கின்றன.


- நெகிழன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...