https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 2 மே, 2018

அடையாளமாதல் - 324 * எளிய சடங்கு *

ஶ்ரீ:


பதிவு : 324 / 494 / தேதி :- 02 மே  2018



* எளிய சடங்கு *





நெருக்கத்தின் விழைவு ” - 19
விபரீதக் கூட்டு -04.






கார் இன்ஜினில் பழுது ஏற்பட்டு சென்னை  திண்டிவனம் சாலையில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை சென்னையிலிருந்து புதுவை திரும்பிக்கொண்டிருந்த ஆனந்த பாஸ்கர்  கண்டது ஒரு தற்செயல் நிகழ்வு . ஆனால் அரசியலில் தற்செயல்என்கிற ஒன்று இருப்பதாக நம்பப்படுவதில்லை. அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்றும் , அதற்கு காரியத்தை கர்ப்பிப்பது , பல அடிப்படை கோட்பாடு . ஆனந்த பாஸ்கரன் அரசியலாளர் இல்லை எனவே அவருக்கு இத்தகைய கோட்பாடுகள் இருப்பதை யாரும் சொல்லியிருக்கவில்லை . சொல்லியிருந்தாலும் அவர் அதை ஏற்றுக்கொள்பவரல்லர் என்பது வேறு விஷயம் .

தனது ஆளுமையால் ஒரு ஸ்தானத்தை அடைந்து அங்கிருந்து பிறிதொரு விழைவின் பொருட்டு அரசியலுக்கு வந்தவர் . அவர்களை போன்றவர்களுக்கு நடைமுறை அரசியலை ஒருபோதும் கற்றுக்கொடுத்து விட முடியாது . அதற்கு முயற்சிப்பவன் வலிந்து ஆபத்தை வரவழைத்துக்கொள்பவன் . அவர்கள் நிகழ் அரசியலில் பெறும்பாலும் வெற்றி பெறுவதில்லை, அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,நான் பிரதானமாக நினைப்பது , தங்களுக்கு மேம்பட்டு ஒருவரை அவர்களால் ஒருகாலமும் தங்கள் தலையால் சுமக்க இயலாது . அதனால் தங்களுக்கு தலைமை என்கிற ஒன்றை அவர்களால் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது

ஒரு கட்சி தலைமைக்கு நான் இதை கொடுத்தேன்  அது அதைக் கொடுத்தது என்கிற வர்த்தகத்தை தாண்டி, அவர்களால் யோசிக்க இயலுவதில்லை . தனக்கு மேலான ஒரு தலையையை கற்பித்துக்கொள்ளவே  அவர்களால் இயலாத போது , “தலைமை என்று ஒன்று உண்டு அதற்கு தலையை வைத்து கட்டுப்படவேண்டும்போன்ற கருதுகோள்கள் அவர்களுக்கு இளிவரலை ஏற்படுத்துபவை .

தங்களுக்கு உள்ள இயல்பான குணத்தை அல்லது தான் இப்படித்தான் என பிறிதெவரிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டி அதைத் தனது தனித்தன்மையாக தருக்கிக்கொள்ளும் வாய்ப்பை அவர்களால் தவிர்க்க இயலுவதில்லை . அப்படித்தான் சண்முகம் ரோட்டில் நின்று கொண்டிடுந்த போது, அவரை பார்த்தும் பார்க்காத்து போல கடந்து செல்ல இயலவில்லை

தான் ஒரு அணியில் இருப்பதும், அதன் எதிரணித் தலைமையுடன் இணைத்து பார்ககும் பிறிதெவருக்கும் ஒரு திடுக்கிடலை அது  ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை . உட்கட்சி அரசியலில் மாற்றுத் தரப்புடன் தொடர்பை பேணுவது தற்கொலைக்கு சமமானது என்கிற கருதுகோளை அவர் அறியாதது வியப்பில்லை . அப்படியே அறிந்திருந்தாலும் அது தன்னை போன்றவர்க்களுக்கானது அல்ல என்கிற எண்ணம் ஓங்கி நிற்பதை மாற்றிக்கொள்ள முடியாது

பிறர் அதை எடுத்து சொன்னாலும்  தங்களது இயல்பான ஆணவத்தால் அதற்கு கட்டுப்படாது அதை மீறத் தயங்க மாட்டார்கள் . சண்முகத்தை அவரது வீட்டில் கொண்டு தனது காரில் இறக்கி விடுவதை பார்க்கும் பலரும் , பலவிதமான யூகங்களை உருவாக்கி கொள்வார்கள் என்பதை பற்றி அவர் கவலைப்படவில்லை . அவரை பொருத்தவரை. யாராவது கேட்டால் அதற்கான பதிலை சொல்லிவிட்டால் போகிறது என்கிற எளிய கோட்பாட்டை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அரசியலில் எளிய பதிலை தரக்கூடிய எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை . “புரிந்து கொள்ள  படுகிறது”.

செவ்வாய், 1 மே, 2018

அடையாளமாதல் - 323 * மாறுபடும் பார்வைகள் *

ஶ்ரீ:




பதிவு : 323 / 493 / தேதி :- 01 மே  2018


* மாறுபடும் பார்வைகள் *


நெருக்கத்தின் விழைவு ” - 18
விபரீதக் கூட்டு -04.





சண்முகம் தனது செயல்பட்டால் காங்கிரஸ் கட்சி தலைமை பதவி பஞ்சப் பராரிகளுக்கு ஏற்பது என்கிற ஒரு தோற்றத்தை தனது பாணியாக வைத்திருந்தார் , அதன் மீது ஒவ்வாமை கொண்ட மேல்மட்ட அரசியளாலர்கள் அனைவருக்கும் சண்முகம் என்றாலேயே ஒரு மனவிலக்கம் கொண்டனர் . ஆனால் 2001ல் சண்முகம் முதல்வராக அமர்ந்த போது , இந்த எளிமையான அனுகுமுறையை தொடர்புறுத்தும் அமைப்பு சிதைந்து போனதாலோ, அல்லது அது அவரது இயல்பாக இல்லாததாலோ , அப்போது அவர் அடைந்த அரசியல் வீழ்ச்சியிலிருந்து பின் ஒருபோதும் மீள இயலாது போனது. வளர்ந்து விட்ட ஒருவரின் அரசியல் பலம் எப்போதும் கைநழுவ கூடியது மட்டுமன்றி, அனுபவம் என்பது வீழ்ச்சியிலிருந்து ஒருவரை காப்பாற்றும் காரணியன்று என்கிற புரிதலை அடைந்தேன். ஊழ் அனைத்தையும் மாற்றி அமைத்து நகைக்கக்கூடியது .

சமூக அந்தஸ்துள்ளவர்கள் . பொருளியல் பின்புலத்தினால் கட்சிக்குள் நுழைந்து சட்டமன்றத்திற்கு செல்பவர்கள் , தங்கள் தொகுதியை சார்ந்தவர்களை தவிர்த்து பிறருக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டியதில்லை என்கிற மனப்பான்மை ஒரு  நோயை போல அடைபவர்கள் . இது கட்சியின் அடித்தளத்தை சீரழிப்பது . ஒருவரின் வெற்றி மட்டுமே  கட்சியை ஆட்சியில் அமர்த்துவதில்லை , அதற்கு  பதினைந்து உறுப்பினர் தேவைப்படுகிறார்கள் .இந்த மனநிலையைத்தான் கட்நிக்கு பினபுறமாக நுழைந்த வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினர்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன்

இதுவே அமைப்பை சட்டமன்றக் கட்சி மற்றும் தொகுதி அமைப்புக்களாக பிரித்து ஒன்றுடன் ஒன்று எப்போதும் முரண்பாட்டு நிற்க வைத்துவிடுகிறது . மோசமான உரசல்கள் ஏற்பட்டாது மாநில தலைமை இவற்றில் எப்போதும் எண்ணெய் இட்டு , தன்னையும் கட்சியையும் காப்பாற்றி உரசல்களை தவிர்த்தாலும் , ஒரு கட்டத்தில் அனைத்து தரப்பிற்கும் கட்சித்தலைமையின் மீது அவநம்பிக்கையை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க இயலாது , தலைமை அதற்கு பலியாகிறது

ஒவ்வொரு தரப்பிறகும் தாங்கள் கட்சி தலைமையால் ஏமாற்றப்பட்டதாக ஒரு குற்றசாட்டு எப்போதும் கைவசம் இருக்கும். ஆனந்த பாஸ்கருக்கும் அப்படி ஒன்று 1989 தேர்தலின் போது நிகழ்ந்தது , ஒரு புள்ளியில் மரைக்காயரை வெறுத்து சண்முகம் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாலும் , அவருக்கு சண்முகத்தின் மீதுள்ள அதிருப்தி எப்போதும் கசப்பாக வெளிப்பட்டு விடும்

ஆனந்த பாஸ்கரும் தனது பொருளியில் பலத்தால் திடீரென கட்சியில் இணைந்தவர் , அதன் பின் தனக்கான தொண்டர் அமைப்பை உருவாக்கிக் கொண்டார் .  கட்சிக்குள்நுழைந்ததும் சண்முகம் அவருக்கு இயல்பில் அந்நியமாய் தெரிந்ததில் வியப்பில்லை , அதனாலேயே சண்முகத்தை வெறுத்தார் . பிறிதெல்லாரையும் போலமரைக்காயரையே தனக்கு உகந்த தலைமையாக புரிந்திருந்தார் . 1989 சட்டமன்ற தேர்தலின் போது , பல்வேறு அரசியல் காரணங்களுக்காக , சில பேரங்களின் அடிப்படையில் மரைக்காயர் ஆனந்த பாஸ்கரனின் பெயரை தனது பரிந்துரை கடிதத்தில் சேர்த்தும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்  கடைசீ நேரத்தில்  கழற்றி விடப்பட்டு சுப்ராய கவுனடர் வேட்பாளராக தலைமையால் அறிவிக்கப்பட்டார். அதிர்ந்து போன ஆனந்த பாஸ்கர் தேர்தல் அரசியலின் பிறிதொரு முகத்தையும் , அரசியல் என்பது ஒருவருக்கு கௌரவத்தை மட்டுமின்றி , தனது அனுக்கர்கள் மத்தியில் இளிவரலை ஏற்படுத்த வல்லது என்பதை புரிந்த போது சண்முகம் மீது கட்டுப்படுத்த முடியாத காழ்பபை அடைந்தார்.

பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சென்னையிலிருந்து புதுவை திரும்பிக் கொண்டிருந்த ஆனந்த பாஸ்கரன் , வழியில் பழுதாகி நிற்கும் கர்ருக்கு அருகில் நின்றிருக்கும் சண்முகத்தை கண்டு , தனது காரில் அவரை புதுவையில் கொண்டு விட, இதிலிருந்து மரைகாயருக்கும் ஆனந்த பாஸ்கருக்கும் உருவான பூசல் , இறுதியில் அவரை சண்முகம் தரப்பெடுக்க வைத்தது ,ஊழின் வினோதம்.

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

    ஶ்ரீ : பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்   2026 * கனவை நிகழ்தல் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...